செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தா(சே)ய்

தேசியக் கொடி
இந்தியத் தாயின்
தொப்புள் கொடி .

அடையாளங்கள்

பிசைந்து வைத்த

மதிய சாப்பாட்டில்

மனைவியின் கைரேகை

பங்கு

பாகப்பிரிவினை
கூட குறைவாய் உடைக்கப்பட்டிருந்தது
கடலைமிட்டாய்

காயா? பழமா ?

கைக்குலுக்கிக் கொண்டன
மதிற்சுவற்றின் இருபுறமும் வளர்ந்த மரங்கள்
இருவீட்டு பகைமறந்து

சனி, 14 ஆகஸ்ட், 2010

மூவர்ணம்

திருமதிகள் கொடுத்த
குங்குமமும்
விதவைகள் உடுத்திய
வெள்ளாடையும்
பாட்டாளிகள் பயிர்செய்த
பச்சையும் ...

இந்த வண்ணங்களால் ஆனது...

கறை நல்லது

தாத்தாக்கள் சிந்தியதை
ஞாபகப்படுத்தியது
பேரனின் சீருடையில்
படர்ந்த குருதி.

கொடிகுத்தியபோது
சட்டையையும் தாண்டி
பின்னூசி
மார்பை பதம்பார்த்தபோது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

விழா

வற்றிப்போன
நதியின் பாதைகளில்
மினரல்நீர் வார்க்கப்பட்டு
விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஆடிப்பெருக்கு.