துண்டு துண்டாய்
வெட்டப்பட்டது மரம்
முண்டமானது
மனிதன்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
வள்ளல்களும்
அன்று வனங்களுக்காக
வாகனம் தந்தார்கள்
பாரி வள்ளல்கள்
இன்று வாகனங்களுக்காக
வனங்களை கொன்றார்கள்
பாரில் வள்ளல்கள்
வாகனம் தந்தார்கள்
பாரி வள்ளல்கள்
இன்று வாகனங்களுக்காக
வனங்களை கொன்றார்கள்
பாரில் வள்ளல்கள்
'அப்பா' என்றொரு குழந்தை
கழுவப்பட்டிருந்த பின்னும்
கழுவப்படாமலே இருந்தது
மலம் கழித்திருந்ததன்
அடையாளங்கள்...
கண்பார்வை குறைந்துபோன
எழுபதுவயது
தந்தையின் குறைக்கு
முகம்சுளிக்காமல்
நுழைகிறேன்
வீட்டின் கழிவறைக்குள்
கழுவப்படாமலே இருந்தது
மலம் கழித்திருந்ததன்
அடையாளங்கள்...
கண்பார்வை குறைந்துபோன
எழுபதுவயது
தந்தையின் குறைக்கு
முகம்சுளிக்காமல்
நுழைகிறேன்
வீட்டின் கழிவறைக்குள்
பூவிழுந்த .....
என் முகத்தில்
படரும் உணர்விழைகளை
வாசிக்கும் அளவிற்கு
விழிகள் பிரகாசமாய் இல்லை
என் அன்னைக்கு....
இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்
என் மொழிகளை
செவிகளில்
பார்த்து.பார்த்து..
படரும் உணர்விழைகளை
வாசிக்கும் அளவிற்கு
விழிகள் பிரகாசமாய் இல்லை
என் அன்னைக்கு....
இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்
என் மொழிகளை
செவிகளில்
பார்த்து.பார்த்து..
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
ஒலியும் ஒளியும்
வானொலி நண்பர்கள் சிலரும்
தொலைகாட்சி தோழிகள் சிலரும்
ஓய்வுபெற்று வீட்டிலிருக்கும்
அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்
பெற்ற பிள்ளைகள்
தூர தேசங்களில் ...
காலவினாடி கண்களில் சுழன்று
செவிகளில் ஒலிக்கிறது.
தொலைகாட்சி தோழிகள் சிலரும்
ஓய்வுபெற்று வீட்டிலிருக்கும்
அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்
பெற்ற பிள்ளைகள்
தூர தேசங்களில் ...
காலவினாடி கண்களில் சுழன்று
செவிகளில் ஒலிக்கிறது.
இரை
பசித்திருக்கும்
கால நாகத்தின்
வாயில்...
நாவினை
ரப்பர் இழைப்போல நீட்டி
இரைதேடும்
தவளை
கால நாகத்தின்
வாயில்...
நாவினை
ரப்பர் இழைப்போல நீட்டி
இரைதேடும்
தவளை
மரமும் மறமும்
துண்டு துண்டாய்
வெட்டப்பட்டது மரம்
முண்டமானது
மனிதன்.
வெட்டப்பட்டது மரம்
முண்டமானது
மனிதன்.
வள்ளல்களும் கஞ்சன்களும்
அன்று வனங்களுக்காக
வாகனம் தந்தார்கள்
பாரி வள்ளல்கள்
இன்று வாகனங்களுக்காக
வனங்களை கொன்றார்கள்
பாரில் வள்ளல்கள்
வாகனம் தந்தார்கள்
பாரி வள்ளல்கள்
இன்று வாகனங்களுக்காக
வனங்களை கொன்றார்கள்
பாரில் வள்ளல்கள்
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
மறக்கமுடியவில்லை
பழைய நினைவுகளோடு
புதிய வீட்டில்
நடந்தவைகளை தூசிதட்டிக்கொண்டிருக்கிறேன்.
புதிய வீட்டில்
நடந்தவைகளை தூசிதட்டிக்கொண்டிருக்கிறேன்.
அம்மணம்
நிழல் உடுத்தாத
நிர்வாண பூமி
"வெட்கமில்லாமல் ?"
நிர்வாண பூமி
"வெட்கமில்லாமல் ?"
பிறவி பிழை
இரண்டாவது முறையாக
கொல்லப்பட்டான்'அசோகன்'
சாலையோர மரமாய்
மறுபிறவி எடுத்ததால்.
கொல்லப்பட்டான்'அசோகன்'
சாலையோர மரமாய்
மறுபிறவி எடுத்ததால்.
நெடுஞ்சாலைகளில்...
மேலே
பட்சிகளும் இல்லை
கீழே மனிதர்களும் இல்லை
மரங்களின் படுகொலைக்குப்பிறகு.
பட்சிகளும் இல்லை
கீழே மனிதர்களும் இல்லை
மரங்களின் படுகொலைக்குப்பிறகு.
அழகாயுதம்
கேடயம் பிடித்தது
பசுமை வேட்டைக்கு எதிராக
தோகைமயில்
பசுமை வேட்டைக்கு எதிராக
தோகைமயில்
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
புண்
ஆரவாரங்களுடன்
கோடிக்கணக்கான கட்சிக்கொடிகள்...
இருந்தாலும்
அமைதியாய் நிதானமாய்
தன் கைகளால்
இடைவிடாமல் விசிறிக்கொண்டே இருக்கிறது
தேசியக்கொடி....
சீழ் வைத்திருக்கும்
அடிமைப்புண்ணை ஆற்ற...
கோடிக்கணக்கான கட்சிக்கொடிகள்...
இருந்தாலும்
அமைதியாய் நிதானமாய்
தன் கைகளால்
இடைவிடாமல் விசிறிக்கொண்டே இருக்கிறது
தேசியக்கொடி....
சீழ் வைத்திருக்கும்
அடிமைப்புண்ணை ஆற்ற...
தேச(க)பக்தி
'அம்மா.....................'
'அப்பா.......................'
'வந்தே மாதரம்.....'
வலிகளின் மொழிகள்
'அப்பா.......................'
'வந்தே மாதரம்.....'
வலிகளின் மொழிகள்
இனிப்புகள் கசப்பை ஞாபகப்படுத்தும்
சுதந்திர தினவிழாவை
வேடிக்கை பார்க்கச்சென்ற
ஏழை சிறுவனுக்கு இலவசமாய்
கிடைத்தது
மூன்றுவேளை உணவாய்
மூன்று மிட்டாய்.
நாள் முழுவதும்
இனித்துக்கொண்டே இருந்தது
இரைப்பை
வேடிக்கை பார்க்கச்சென்ற
ஏழை சிறுவனுக்கு இலவசமாய்
கிடைத்தது
மூன்றுவேளை உணவாய்
மூன்று மிட்டாய்.
நாள் முழுவதும்
இனித்துக்கொண்டே இருந்தது
இரைப்பை
சுதந்திர உரையாற்றினார்
புலனாய்வுத் துறை
இந்திய நகரங்களை
சல்லடையாய் சலித்தெடுக்க
ராணுவத் துறை
மனிதக் கேடயமாகி
நெடுஞ்சாலை எங்கும் நின்றிருக்க
குண்டுதுளைக்காத
கண்ணாடி கூண்டுக்குள் இருந்தபடி
பாரதப்பிரதமர்
சுதந்திர உரையாற்றினார்
சுதந்திர உரையாற்றினார்
இந்திய நகரங்களை
சல்லடையாய் சலித்தெடுக்க
ராணுவத் துறை
மனிதக் கேடயமாகி
நெடுஞ்சாலை எங்கும் நின்றிருக்க
குண்டுதுளைக்காத
கண்ணாடி கூண்டுக்குள் இருந்தபடி
பாரதப்பிரதமர்
சுதந்திர உரையாற்றினார்
சுதந்திர உரையாற்றினார்
சுதேச பரதேசிகள்
அந்த குளிரூட்டப்பட்ட
உணவகத்தில்
பெப்சி ,கோககோலா திரவங்களும்
பீட்ஸா ,பர்கர்
தின்பண்டங்களும்
சுவைத்தபடி...
ரேபான் கண்ணாடியும்
பீட்டர் இங்கிலாந்து சட்டையும்
அணிந்த இந்திய இளைஞர்கள்
சுகமாக கொண்டாடனார்கள்
சுதேச விழாவை .
உணவகத்தில்
பெப்சி ,கோககோலா திரவங்களும்
பீட்ஸா ,பர்கர்
தின்பண்டங்களும்
சுவைத்தபடி...
ரேபான் கண்ணாடியும்
பீட்டர் இங்கிலாந்து சட்டையும்
அணிந்த இந்திய இளைஞர்கள்
சுகமாக கொண்டாடனார்கள்
சுதேச விழாவை .
விலங்கு
நேற்று இரும்பு விலங்குகள்
இன்று பொன் விலங்குகள்
எப்போது பூ விலங்குகள்
நம் பாரதமாதாவிற்கு...?
விலங்குகள் இருக்கும் வரை
விலங்குகள் இருக்கும் .
இன்று பொன் விலங்குகள்
எப்போது பூ விலங்குகள்
நம் பாரதமாதாவிற்கு...?
விலங்குகள் இருக்கும் வரை
விலங்குகள் இருக்கும் .
தா(சே)ய்
தேசியக் கொடி
இந்தியத் தாயின்
தொப்புள் கொடி .
இந்தியத் தாயின்
தொப்புள் கொடி .
அடையாளங்கள்
பிசைந்து வைத்த
மதிய சாப்பாட்டில்
மனைவியின் கைரேகை
மதிய சாப்பாட்டில்
மனைவியின் கைரேகை
பங்கு
பாகப்பிரிவினை
கூட குறைவாய் உடைக்கப்பட்டிருந்தது
கடலைமிட்டாய்
கூட குறைவாய் உடைக்கப்பட்டிருந்தது
கடலைமிட்டாய்
காயா? பழமா ?
கைக்குலுக்கிக் கொண்டன
மதிற்சுவற்றின் இருபுறமும் வளர்ந்த மரங்கள்
இருவீட்டு பகைமறந்து
மதிற்சுவற்றின் இருபுறமும் வளர்ந்த மரங்கள்
இருவீட்டு பகைமறந்து
சனி, 14 ஆகஸ்ட், 2010
மூவர்ணம்
திருமதிகள் கொடுத்த
குங்குமமும்
விதவைகள் உடுத்திய
வெள்ளாடையும்
பாட்டாளிகள் பயிர்செய்த
பச்சையும் ...
இந்த வண்ணங்களால் ஆனது...
குங்குமமும்
விதவைகள் உடுத்திய
வெள்ளாடையும்
பாட்டாளிகள் பயிர்செய்த
பச்சையும் ...
இந்த வண்ணங்களால் ஆனது...
கறை நல்லது
தாத்தாக்கள் சிந்தியதை
ஞாபகப்படுத்தியது
பேரனின் சீருடையில்
படர்ந்த குருதி.
கொடிகுத்தியபோது
சட்டையையும் தாண்டி
பின்னூசி
மார்பை பதம்பார்த்தபோது.
ஞாபகப்படுத்தியது
பேரனின் சீருடையில்
படர்ந்த குருதி.
கொடிகுத்தியபோது
சட்டையையும் தாண்டி
பின்னூசி
மார்பை பதம்பார்த்தபோது.
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
விழா
வற்றிப்போன
நதியின் பாதைகளில்
மினரல்நீர் வார்க்கப்பட்டு
விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஆடிப்பெருக்கு.
நதியின் பாதைகளில்
மினரல்நீர் வார்க்கப்பட்டு
விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஆடிப்பெருக்கு.
பளார் பளார்
தண்ணீரை
கொஞ்சம் கொஞ்சமாய்
வீசம்வைத்து கொன்றதால்
எதிர்படுகிற
அனைவரின் கன்னங்களில்
ஓங்கி அறைந்தபடி
கொலை வெறிபிடித்து
ஓடிக்கொண்டே இருக்கிறது...
அதன் தோழனான
ஆடிக்காற்று.
கொஞ்சம் கொஞ்சமாய்
வீசம்வைத்து கொன்றதால்
எதிர்படுகிற
அனைவரின் கன்னங்களில்
ஓங்கி அறைந்தபடி
கொலை வெறிபிடித்து
ஓடிக்கொண்டே இருக்கிறது...
அதன் தோழனான
ஆடிக்காற்று.
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
விசிறிகள்
வளிமண்டலத்தை
தூசி தட்டுகின்றன
ஆகாயத்தில் சிறகடித்தபடி
பறவைகள்.
தூசி தட்டுகின்றன
ஆகாயத்தில் சிறகடித்தபடி
பறவைகள்.
தேனுறக்கம்
வழக்கத்திற்கு மாறாய்
முகம் புதைத்து படுத்தபோதுதான்
உணர்ந்துகொண்டேன்
தித்திப்பை
பூவின் எச்சிலும்
பூவையின் எச்சிலும்
படிந்திருக்கக்கூடும்
அந்த
தலையணையில்
முகம் புதைத்து படுத்தபோதுதான்
உணர்ந்துகொண்டேன்
தித்திப்பை
பூவின் எச்சிலும்
பூவையின் எச்சிலும்
படிந்திருக்கக்கூடும்
அந்த
தலையணையில்
தண்ணீரும் கண்ணீரும்
தண்ணீர் வற்றி
வெறுமையாய் மீன்தொட்டி
அதனுள்
நீந்திக்கொண்டே இருக்கிறது
மனம்.
வெறுமையாய் மீன்தொட்டி
அதனுள்
நீந்திக்கொண்டே இருக்கிறது
மனம்.
சாளரம்
உள்நுழைந்த சூறைக்காற்று
திறந்துவிடுகிறது
மேற்கூரையை
அடடா
வானில் அழகாய்
விண்மீன்கள்.
திறந்துவிடுகிறது
மேற்கூரையை
அடடா
வானில் அழகாய்
விண்மீன்கள்.
திக்குத்தெரியாத காட்டில்
நுழைந்த பின்
வழிதெரியாமல் முழிக்கின்றன
என் விழிகள்.
உன்
கன்னங்கரேலென்ற
கூந்தல் வனத்தினுள்...
வழிதெரியாமல் முழிக்கின்றன
என் விழிகள்.
உன்
கன்னங்கரேலென்ற
கூந்தல் வனத்தினுள்...
மெய்யெழுத்து
காகிதமும் கிடைக்கவில்லை
எழுதுகோலும் இருக்கவில்லை
கவிதை வர எத்தனித்த நேரம்...
இருந்தபோதும்
ஒரு வழியாக
கவிதை எழுதி முடித்தேன்.
அவள் விழிகளின் மைதொட்டேன்
என் விரல்களை தூரிகையானது .
அவளது தோள்கள்
கவிதை காகிதமாகியபோது.
எழுதுகோலும் இருக்கவில்லை
கவிதை வர எத்தனித்த நேரம்...
இருந்தபோதும்
ஒரு வழியாக
கவிதை எழுதி முடித்தேன்.
அவள் விழிகளின் மைதொட்டேன்
என் விரல்களை தூரிகையானது .
அவளது தோள்கள்
கவிதை காகிதமாகியபோது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)