ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

'ஜே.கே'.யாக வாழ்ந்த சேரன் "ரெளத்திரம் பழகு"

திரையில் நடிப்பது என்பது ஒரு ராகம்.திரையில் கதாபத்திரமாகவே வாழ்வது என்பது இன்னொரு ராகம். சேரன் எப்போதும் இரண்டாவது ரகம்தான். சேரன் ஜே.கே ஆக வாழ்கிறார். ஆரவார இசைக்குப் பின்னும் அணு அணுவான கேமரா நகர்வுகளுக்கு பின்னும் வழக்கமாக காட்டப்படும் கதாநாயகன் அறிமுக இலக்கணத்தை மிஸ்கின் உடைத்திருக்க,அகத்தின் சோகங்களையும் ,

இயலாமைகளையும் முகத்தில் காட்டியபடி சேரனும் இயல்பாய் தோற்றம் பெருகிற காட்சி தமிழுக்கு புதிது.

மனித வேட்டைக்காரர்களிடம் தன் தங்கையை இழந்த சோகத்தையும்,அடுத்ததாய் செய்தாகவேண்டிய காணாமல் போன இந்த சமூகத்து சகோதரிகளுக்கான தேடலையும் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருப்பதன் கனம் ஜே கே யின் முகத்தில் தெரிகிறது.பணிக்கும் பாசத்திற்கும் இடையே பரிதவிக்கும் பரிதவிப்பு தேவையான அளவிற்கு துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.ஜே கே யின் மெளனம் இன்னும் இன்னும் நிறைய செய்திகளை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக்கொண்டே இருக்கின்றது.

பிணவறைக்குள் நுழையும் போது ஜே கே உடன்வரும் புலனாய்வு உதவி அலுவலர்கள் கைக்குட்டையை அவசர அவசரமாக எடுத்து மூக்கை பொத்திக்கொள்வதையும் அவர்களுக்கு முன்னாள் நடந்துவரும் ஜே கே நாற்றத்தின் எந்த முகபாவத்தையும் வெளிப்படுத்தாமல்

இயல்பாக நடந்து வருவது எதிர்ப்பாராதது.தாங்க முடியாத சோகத்தை நெஞ்சில் சுமந்து இருக்கும் அந்த ஜே கே வை இந்த சின்ன விஷயம் ஏதும் செய்துவிடவில்லை என்பதை இந்த காட்சி முன்மொழிகிறது. அந்த அசட்டை செய்யாத முகபாவம் அசாதாரமானது.

இயல்பான திரைப்படங்களை தந்து இயல்பான கதாபாத்திரங்களையும் ஏற்று தனித்த அடையாளத்தைப் பெற்ற சேரனை சில கதாபத்திரங்களில் கற்பனை செய்துபார்த்தால் பொருந்தாத தன்மையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். அதில் ஒரு முக்கியமான பாத்திரம் காவல்துறை பாத்திரம். இந்த படத்தில் ஒரு காவல் துறை அதிகாரியாக சீருடையுடன் வந்திருந்தால் மனதிலும் கதையிலும் ஒட்டாமல் போயிருப்பார்.

ஒரு புலனாய்வு அதிகாரியாக 'யுத்தம் செய்' -யில் அடையாளப்பட்ட போது நூறு சதவிகிதம் அந்த கதா பாத்திரத்தோடு பொருந்தி விட்டார்.கண்ணை உறுத்தும் ஆடை தவிர்க்கப்பட்டிருப்பதும் அளவான அரிதாரங்கள் பூசப்பட்டிருப்பது சினிமாவிற்கான உயிர்த் தன்மையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த கதைக்கு சேரனைத் தவிர்த்து வேறு இந்த கதா பாத்திரங்களை கற்பனை செய்து பார்த்தாலும் அபத்தமாகத்தான் இருக்கும்.ஜே கே கதாபாத்திரத்தை முழுமையாக சேரன் உள்வாங்கிக்கொண்டதை திரையில் பளிச்சிட வைத்திருக்கிறார்.

கதவை தட்டும் சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்க்கும் சேரன், முதல் யாரும் இல்லாததை உணர்ந்தாலும் பின்னர் தன்னை வன்முறையாளர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர்.பாதுகாப்பாக வீட்டிற்குள் சென்று கதவுகளை தாழிட்டிவிடுவார் என நினைக்கும் போது ஜே கே வேட்டைக்கு தயாராகும் ஆயத்தம் வழக்கத்திற்கு மாறான புதிய சினிமாத்தனம்.அங்கே இசை எதிர்த்தாக்குதலுக்கு கதாநாயகன் தயாராகி விட்டான் என்பதை அறிவிக்கவில்லை. கேமராக்களும் விரைந்து விரைந்து சுழன்று சுழன்று பதியவில்லை.படத்தொகுப்பிலும் கத்திரிகளை வெட்டுதலும் ஒட்டுதலும் நடக்கவில்லை.இந்த எல்லா 'இல்லைகளும்' மாற்று சினிமாவிற்கான அழகிய அடையாளம்.இங்கு ஜே கே தென்றலாகவும் தெரிகிறார் புயலாகவும் தெறிக்கிறார்.

கருத்த இடுட்டில் ரகசியமாய் நடக்க இருக்கும் வன்முறை வியூகத்தை ஜே கே மாற்றிக்கொண்டே இருப்பதும் இறுதியில் உயரமும் வெளிச்சமும் இருக்கும் பாலத்தில் ஒற்றையாய் நின்று கொண்டு தன் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் நிரூபிக்க எதிர்கொள்ளும் காட்சியிலும் கைத்தட்டலைப் பெறுகிறார்.

தடித்த கூர் ஆயுதங்களோடு எம தூதர்கள் சூழ்ந்து கொண்டு ஆயத்தமாகும் போது கால்சட்டைப் பைக்குள் கையைத் திணித்து விரலளவு கத்தியை எடுக்கும் போது புத்திசாலித்தனமான தாக்குதலுக்கு தயாராவதை ஓரளவிற்கு உணரமுடிந்தாலும், ஜே கே கட்டாயம் வதைபடுவார் என உதயமாகும் நமது எண்ணத்தை அவரின் முதல் தாக்குதல் உடைத்து சுக்கு நூறாக்குகிறது.

நிதானமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் தடுப்பதும் தாக்குதலை தொடரும் ஜே கே பாராட்டை அள்ளிக்கொள்கிறார்.தான் கற்ற கலையை எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்து தேவைப்படும் இடத்தில் வெளிப்படுத்தும் ஒரு இளைய தற்காப்பு கலைஞனாய் அடையாளப்படுகிறார்.கட்டான உடல் வாகும் வைரம் பாய்ந்த புஜங்களும் அவரை நியாயப்படுத்துகிறது.


படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில் அந்த கதைக்குரிய உணர்வோட்டத்திலேயே ஜே கே தொடர்ந்திருப்பது சாமர்த்தியமான பங்களிப்பு.உறவுகள் இல்லாத ஒற்றை பறவையாய் இருக்கும் ஜே கே தன் தங்கை பறவையை இழந்த வேதைனையை மனதில் பூட்டி வைத்து விட்டு தன் பணியில் கவனம் சிதறாமல் நேர்மையுடன் இருப்பதான காட்சியில் பணிக்குத் தேவையான பொறுப்புணர்வையும் , தன் சோதரியை தேடும்போது ரத்த பந்தந்திற்கான பாச உணர்வையும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த இருமுனை தாக்குதல்களில் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம் அத்தனைப் பேரின் பரிதாபத்தை வாரிக்கொள்கிறார்.



(ஜே கே யின் தேடல் நாளையும் தொடரும்...

"மீண்டும் ஒரு வீரயுகக் கனவு" -சபாஷ் மிஸ்கின்

மீண்டும் ஒரு வீரயுகக் காலத்திற்கான விதையை நம் மனதில் ஆழப்பதித்திருக்கிறார் இயக்குஞர் மிஸ்கின் . அந்த விதை நிச்சயம் முளைவிடும் அளவிற்கு திரைக்கதை மூலம் நீர் வார்த்திருக்கிறார். அந்த வீர மரம் வளர்ந்து விருட்சங்கள் விடுவதற்கு ரெளத்திரம் என்ற சூரிய ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார்.

எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.

எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டையபுரத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.

சுரணை கெட்டுப்போன தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.

இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கடலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.

இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.

விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.

பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்

ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .

அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்.


வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.


நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.


இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.

ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.

அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.

பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.

நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்

அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.

ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.


ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்

இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

"மீண்டும் ஒரு வீரயுகக் கனவு" -சபாஷ் மிஸ்கின்

மீண்டும் ஒரு வீரயுகக் காலத்திற்கான விதையை நம் மனதில் ஆழப்பதித்திருக்கிறார் இயக்குஞர் மிஸ்கின் . அந்த விதை நிச்சயம் முளைவிடும் அளவிற்கு திரைக்கதை மூலம் நீர் வார்த்திருக்கிறார். அந்த வீர மரம் வளர்ந்து விருட்சங்கள் விடுவதற்கு ரெளத்திரம் என்ற சூரிய ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார்.

எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.

எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டியபுறத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.

சுரணை கேட்டுப் போல தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.

இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கழலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.

இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.

விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.

பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்

ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .

அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்

வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.

நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.


இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.

ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.

அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.

பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.

நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்

அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.

ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.

ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்

இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது...

தவறு செய்யாத நிரபராதியாக இருந்தாலும் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் எல்லா வீடுகளிலும் உள்ள மனைவிமார்களை கணவன்மார்கள் அடிக்கிறார்கள்.

அதே போலத்தான் சமூகத்திலும்.நாம் வேடிக்கை பார்க்கிறவரை நாம் உதைபடுவோம் நாம் தாக்கத் தொ...டங்கும் போதுதான் நம் மீதான தாக்குதல்கள் குறையும்.

இசை என்கிற பெயரில் சில இசையமைப்பாளர்கள் காட்சிகளை மனதில் பதியாமல் செய்துவிடுவார்கள். இயல்பான உணர்வுகளுக்கு உயர்வு நவிற்சியை வழங்கி அதன் உயிரை சாகடித்துவிடுவார்கள் l . படத்திலிருந்து விலகி இசையை மட்டும் தங்களின் அடையாளமாக துருத்திக்கொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் சர்வாதிகார தன்மையை தமிழ் சினிமாக்களில் பார்க்க முடிகிறது.ஒரு நல்ல இசை என்பது தனித்து தெரியக்கூடாது. கதையின் போக்கையும் காட்சியில் உணர்வையும் சுமந்துகொண்டு பயணிக்கவேண்டும்.


அத்தகைய நல்ல இசையின் அடையாளமாக 'கே' திகழ்கிறார். தேவையான இடத்தில் ஒலித்தும் தேவையில்லாத இடத்தில் மெளனித்தும் இருக்கும் கே அவர்களுக்கு பெரிய கைத்தட்டல்கள்.பயம் ,சந்தேகம்,குழப்பம்,சோகம்,ரகசியம்,ஆச்சர்யம்,திருப்பம்,அதிர்ச்சி, எரிச்சல், ஆதங்கம்,இயலாமை, பாய்ச்சல், அத்தனை உணர்வுகளையும் சரியான விகிதாசாரத்தில் கலந்து விருந்துவைத்திருக்கிறார் 'கே'. உங்களுக்கும் ஒரு சபாஷ்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

உலகத்தமிழர்களே ! தகிதா நூல்களைப் பெற தயாராகுங்கள் udumalai.com

உலகத்தமிழர்களே ! தகிதா நூல்களைப் பெற தயாராகுங்கள் udumalai.com



#18 Kannusamy Layout,
Tirupur Road, Udumalaipettai,
Tirupur District - 642126.
Tamilnadu, India.

Udumalai Book Centre
2, Srinivasa Street (Near Univercell)
Udumalaipettei, Tirupur District - 642126.
Tamilnadu, India


Phone : +91 91506 77030 (10 Am to 5 PM IST)
(For order status)

Mobile : +91 99946 80084(For sales enquires)

E-Mail : sales@udumalai.com

(தமிழிலும் அனுப்பலாம்)

Chat : udumalai@gmail.com

புதன், 9 பிப்ரவரி, 2011

சித்தன் வழிகாட்டலில் 'தகிதா' கவிதைச்சிற்றிதழ்

வணக்கம்

மணிவண்ணன் தகிதா – கவிதையும், கவிதைச் சார்ந்தும் இதழை புதியப் பொலிவுடன் வெளிக்கொண்டுவர இருப்பதாக எழுதியிருந்தார். உண்மைதான்! அதற்கான அடித்தளப் பணிகள் குறித்தானப் பேச்சு வார்த்தையில் மணிவண்ணனுடன் நானும் கலந்து முடிவெடுத்தாகும். சீரிய முறையில், ஊரறிந்த படைப்பாளிகளுடன் புதிய அறிமுக படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஆகச் சிறந்த கவியாக்கங்களுடன், ஒரு கவிஞரின் நேர்காணல், கவிதைக் குறித்தான ஒரு கட்டுரை, கவிதை நூல் அறிமுகம், விமர்சனம், அதன் மீதான ஆரோக்கியமான விவாதம் இவை இடம்பெறும். இலக்கியப்பாட்டையில் இன்னுமொரு மைல்கல்லை பிடுங்கி முன்னால் நட்டுவிட வேண்டும் என்கிற முனைப்போடு முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்புறம் நாம் சுகமாக நடந்து வருவதற்குப் பலரும் போட்டுக் கொடுத்தப் பாதையைத் திரும்பிப் பார்த்தேயிராத, பார்த்தாலும் பார்வை எட்டும் வரையிலேயான புரிதலுடன் மட்டுமே உள்ள நமக்கு, ” புதையல்” என்கிற, 1935ல் க.நா.சு , ந. பிச்சமூர்த்தி துவங்கி பல முன்னோடிகளின் படைப்புகளை இடம்பெறச்செய்யும் பகுதியும் இதழில் அடங்கும்.

எல்லாம் சரி!வெறும் வார்த்தைகளில் வாழ்த்துக்கள் சொல்லி ஒதுங்கி நின்றுவிடாமல், படைப்புகளை அனுப்புவதோடு, இதழுக்கான சந்தாவையும் செலுத்தி ஊக்கப்படுத்தினால்தான் இது போன்ற இதழ் முயற்சிகள் தொடர்ந்து உயிரோடு இருக்க முடியும் என்பதையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள். சந்தா செலுத்தி தகிதாவுக்கு ஆதரவு அளியுங்கள். அதற்காக, சந்தா செலுத்திவிட்டோம்....படைப்புகளை பிரசுரிப்பார்கள் என்று மட்டும் நம்பி இருந்துவிட வேண்டாம். ஏனென்றால், தகிதாவுக்கான கவிதை ஆக்கங்களை தேர்வு செய்யவிருப்பவர் கவிஞர் அன்பாதவன். அதே நேரம், ஒரு படைப்பில் ஒரு வரியில் ஒரு வார்த்தையில் மட்டுமே ஒரு பொறி இருந்தால்கூட அப்படைப்பாளியை ஊக்கப்படுத்துவோம் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

மற்றபடி நிர்வாக, வடிவமைப்பு, அச்சாக்கம் சார்ந்த பணிகளையும், ஒட்டுமொத்த இதழாக்க மேற்பார்வையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இதழை அரசு செய்தித்துறையில் முறைப்படி பதிவு செய்வதோடு, நூலக ஆணை பெறவும் முயற்சிகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

புதிய வடிவில் புதுப்பொலிவுடன் வெளிவரும் இதழ் குறித்தான ஏனையத் தகவல்களை அடுத்தக் கடிதத்தில் அளிக்கிறோம்

அன்புடன் சித்தன்

--

9382708030

yugamayini,blogspot.com

சனி, 5 பிப்ரவரி, 2011


இரவெல்லாம் சேமிக்கப்படும்
தூக்க அணுக்கள்
விழிப்பாய்
காலையில் வெடிக்கும்.
நல்ல அதிர்ச்சிக்காய் காத்திருங்கள்!
(இனிய வணக்கங்கள்)

முகம் பூத்து பேசிய
ஆயிரம் ஆயிரம்
அழகிய வார்த்தைகளை
உன்
ஒற்றை கடுஞ்சொல்
உதிர்த்துப் போட்டது.

விடியலில்
கருத்து மெத்தையிலிருந்து
எழுத்துப் போர்வையை விலக்கி
எழுந்திருந்த போதுதான்
தெரிந்துகொண்டேன்
நேற்றைய நடுநிசியில்
புத்தகங்களைப் படித்தபடியே
தூங்கிப்போயிருந்ததை

சிங்களனைத் தின்ற
தமிழமீன் சிங்களக்கரையில்
தமிழனைத் தின்ற
சிங்களமீன்
தமிழக் கரையில் .
பெருமிதம் பேசுகின்றன
சர்வதேச
அரக்க மீன்களுக்கு
ஆகாரமாகப் போவதை
உணராமல்

வியாழன், 3 பிப்ரவரி, 2011


யாரும் கலைக்கவில்லை
தானாகவும் கலையவில்லை
யுகங்கள் கடந்த
காத்திருப்பில்
உறைந்துகொண்டே இருக்கிறது
தனிமை

புதன், 2 பிப்ரவரி, 2011

மாண்புமிகு பேராசிரியர் க.அன்பழகன் ஐயா அவர்கள் தகிதா நூல்களைப் பெற்றுக்கொண்டார்



முக்கால் நூற்றாண்டுக்கும் (75-ஆண்டுகள் )மேலாக தமிழக அரசியலிலில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிற தொண்ணூறு வயதாகிற (90) வணங்குதலுக்குரிய மாண்புமிகு பேராசிரியர் ஐயா அவர்களை நேற்று முன்தினம் சந்திக்கிற நல்ல வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அந்த சந்திப்பில் ஐயா அவர்களிடம் தகிதா பதிப்பகத்தில் வெளியாகியுள்ள பதினான்கு நூல்களையும் வழங்கி மகிழ்ந்தேன்.
வாழ்த்தினார் பாராட்டினார் ஆசிர்வதித்தார்



வாழ்த்தினார் பாராட்டினார் ஆசிர்வதித்தார்

எஸ்.வைதீஸ்வரன் என்றொரு கவிதை பறவை

தமிழ் புதுக்கவிதை உலகில் தனக்கென தனி அடையாளத்தை தன் படைப்புகளால் பெற்று , கவிதை இலக்கிய வரலாற்றில் கலந்து என்றென்றும் வற்றாத கவிதை நதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் மூத்த கவிதை படைப்பாளர் திரு எஸ்.வைத்தீஸ்வரன் அவர்களை சந்தித்து சுமார் ஒருமணிநேரம் உரையாடுகிற நல்ல வாசிப்பை இன்று பெற்றேன்.

சுமார் முக்கால் நூற்றாண்டைத் தாண்டி கவிதைக்காகவே இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிற இந்த மூத்த படைப்பாளியை சந்தித்து தகிதா மொத்த வெளியீடுகளான பதினான்கு நூல்களை அவரிடம் வழங்கி பெருமிதப்பட்டுக்கொண்டேன்.ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க சிரிக்கும் புன்னகை விழிகளோடு அவைகளை காதலோடு பார்த்தார்.மகிழ்தார் பாராட்டினார்

தனது பத்தொன்பது வயதிலிருந்து கவிதை எழுதத் தொடங்கி தனது முப்பத்தி நான்காவது வயதில் தனது கவிதை நூலான 'உதய நிழல்' -ஐ 1970௦ இல் வெளியிட்டார் .சுமார் நூற்று நாற்பத்தைந்து (rs.145) ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த அன்றைய சூழலில் ரூ.முன்னூற்று பதினைந்து (rs.315)ரூபாய் செலவில் தொள்ளாயிரம் பிரதிகள் தயார் செய்திருக்கும் இவரது துணிச்சலுக்கு மனதிற்குள் தலைவணங்கினேன் கடந்த ஐம்பது வருடங்களில் அந்த தொள்ளாயிரம் நூல்களில் ஐநூறு நூல்கள் மட்டுமே விற்றிருக்கின்றன. நாற்பது வயதாகும் அந்த நூலில் ஆறு பிரதிகளை ஐயா அவர்களின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டேன்.இன்னும் அந்த நூல்களின் முகப்பிற்கு முத்தம் வைக்கலாம்

அந்த காலத்தில் ஒரு படைப்பாளன் நூல் வெளியிட வேண்டும் என்றால் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது என்று ஆதங்கப்பட்ட போது அவரது கவிதைப் பசியை என்னால் நன்கு உணர முடிந்தது.'எழுத்து','கலையாழி','நடை','ஞானரதம்','குமுதம்', போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாகி இருக்கின்றன. அடர்த்தியான சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாவதற்கு காரணமாக இருந்த சுதேசமித்திரனை உள்ளன்போடு நினைத்துப் பார்க்கிறார்.கசடதபற ,வானம்பாடி,ழ,மணிக்கோடு,எழுத்து போன்ற கவிதைக்கான குழுக்களின் நெகிழ்ச்சியான நினைவுகளை எல்லாம் மலர்த்தினார்.

தனக்கு எழுபத்தைந்து வயதாகிறது என்று ஐயா பேசும் போது எதேச்சையாக குறிப்பிட்ட போது நான் மலைத்தேன்.அவரது உற்சாகமும் துடிப்பும் தெளிவும் நிறைவும் கூர்மையும் நினைவாற்றலும் ஞானமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.இவை எல்லாவற்றிர்க்கும் காரணமாக இருப்பது தமிழ் என்பதை புரிந்துகொண்டேன். தகிதா எப்படி குறுகிய காலத்தில் இத்தனை நூல்களை கொண்டு வந்திருப்பது தனக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிடும் போது நான் உள்ளூர மகிழ்தேன். இன்றைக்கு நல்ல கவிதைகளைவிட விளம்பரமான கவிதைகள் தான் அதிகம் விற்கப்படுகின்றன என்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டது எனக்குள்ளும் வலியை எற்படுத்தவே செய்தது.


நல்ல கவிதை எனபது விசாரத் தன்மை உடையதாகவும் நுண்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.கோட்பாடுகளை தீர்மானம் செய்துகொண்டு .கவிதைப் படைக்கும் தன்மை ஜீவனில்லாதது. கவிதைதான் கோட்பாடுகளைக் கொண்டிருக்கலாம். கோட்பாடுகளால் கவிதை உருவாக்கம் ஆகக்கூடாது. ஒரு நல்ல படைப்பலனுக்கு அவனது மொழி அவனுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.

கோவையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வானம்பாடி கவிஞர்களான சிற்பி,ஞானி,முல்லை ஆதவன்,சிதம்பரநாதன்,அக்னிபுத்திரன்,மற்றும் பலரைப் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். நமது 'புதிய ழ'கவிதை சிற்றிதழ் கொங்கில் இருந்து வருகிறது ,என்று கேட்டறிந்துவிட்டு நானும் ஒரு வகையில் கொங்கு நாட்டுக்காரன்தான் என்று தன் உறவு மண்ணை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

நடப்பு தமிழ் இலக்கிய சூழலில் மேற்க்கத்திய கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு தமிழ் வாழ்வியல் சூழலை மறந்து படைப்பை உருவாக்குகிற குருட்டுத்தனமான அணுகுமுறையை அவர் சாடினார்.காலத்தின் போக்கிற்கேற்ப கவிதை மாறினாலும் அது நிலைபெருடையதாக விளங்கும் பாக்கியத்தை இழந்துவிடுகின்றது என்று தெரிவித்தார்.திரை இசை பாடல்களை மட்டுமே கவிதை என்று சிலாகித்துக் கொள்கிற மலட்டுத்தனமான வாசிப்புத்தன்மைக்கு தமிழர்கள் உலகெங்கிலும் ஆளாகி இருப்பது கவலை அளிக்கிறது என்று வேதனைப் பட்டார். படைப்பாளனை ஊடுருவிப்பார்த்து படைப்பின் மீது பொத்தம் பொதுவான விமர்சனங்களை வைக்கிற பிற்போக்கு தனமும் வளர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

சென்னை இலக்கியச் சந்திப்பில் - தகிதா வெளியீட்டு விழா 








சென்னை இலக்கியச் சந்திப்பில் - தகிதா வெளியீட்டு விழா 


தகிதா பதிப்பகத்தின் இரண்டு புதிய நூல்களான எழுத்தாளர் திரு கங்கைமகனின் 'ஆத்மாலயம்' மற்றும் கவிஞர் வைரசின் 'நிறைய அமுதம் ஒருதுளி விஷம்' ஆகிய இரண்டு நூல்கள் நேற்று தகிதா பதிப்பகமும் டிச்கவேரி புக் ஹவுசும் இணைந்து நடத்திய முதல் இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டன.



மேலும் சென்ற ஆண்டில் வெளியிடப்பட்ட தகிதாவின் பன்னிரண்டு நூல்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இந்த விழாவில் தமிழ் இலக்கியம் கல்வி மற்றும் கலைத்துறையைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் யுகமாயினி சித்தன் அவர்கள் தலைமை தாங்க ,பேராசிரியர் ராம குருநாதன் அவர்களின் முன்னிலை வகிக்க வெளி ரங்கராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்க இறுதியில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.



'தலைப்பு இழந்தவை' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் கவிதாயினி ஈழவாணி கலந்துகொண்டு நன்றி கூறினார்.தேனம்மை லக்ஷ்மணன் நூல்கள் குறித்த விமர்சனங்களையும் முன் வைத்தார்.உடன் பாகி, செல்வகுமார்,வசுமதிவாசன்,கயல்விழி லக்ஷ்மணன்,அன்பு அழகன்,அந்தோனி அர்னால்ட்,ஜெயராஜ் பாண்டியன்,கவிஞர் வைரஸ் இன்னும் பல முகநூல் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.



மேலும் இந்த விழாவில் 'ஆண்மைத்தவறேல் 'திரைப்படத்தின் இயக்குஞர் திரு குழந்தைவேலப்பன் கலந்துகொண்டு தன் தமிழ் ஊடக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.நாடகக் கலைஞர் பாபு அவர்களும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தார்.



தகிதாவில் வெளியீட்டில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிகொள்கிறேன்.



தமிழ் மரியாதை

1.உலகத் தமிழர்களை எல்லாம் தேடித்தேடி கண்டெடுத்து அவரிகளை யுகமாயினியில் கவிஞர்களாய், கட்டுரையாளர்களாய் , கதாசிரியர்களாய், விமர்சகர்களாய் தொடர்ந்து அடையாளப்படுத்திவரும் இலக்கிய பிதாமகன் வணக்கத்திற்குரிய திரு சித்தன் ஐயா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.எங்களைப் போன்ற தமிழ் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பலருக்கு தன் அடர்த்தியான விமர்சனங்களால் நல்வழிப்படுத்திக்கொண்டிருக்கும் எழுத்துப் போராளி திரு சித்தன் அவர்கள்களுக்கு என் வணக்கங்கள் உரித்தாகிறது.



2.தமிழர்களின் கூத்துக்கலையாக இருந்து நாடகக்கலையாக வளர்ந்திருக்கும் மூன்றாம் தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்த நாடதத்தமிழர்தான் வெளி ரங்கராஜன் அவர்கள்.நாடகக் கலையை வளர்த்தேடுப்பதற்காகவே 'வெளி' என்ற நாடகமும் நாடகம் சார்ந்த இதழைத் தொடங்கி அதை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி கண்டவர் இவர். நாடக ஆசிரியராகவும் நாடக நடிகராகவும் நாடக இயக்குனராகவும் நாடக இதழாசிரியராகவும் இப்படியாய் நாடகத்திற்காகவே தனது தொடர் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் திரு வெளி ரங்கராஜன் அவர்களுக்கு தகிதாவின் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



3.பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி எண்ணற்ற படிப்பாளிகளையும் ,படைப்பாளிகளையும் உருவாக்கிய வணக்கத்திற்குரிய முனைவர் திரு இராம குருநாதன் அவர்கள் இந்த விழாவில் முன்னிலைவகித்து விழாவை சிறப்பித்தார் .சாகித்திய அகாடமி,கன்னிமர பொது நூலகம்,புது டில்லி ,கொல்கட்டா ,கும்பகோணம், சிவகுருநாதன் பொது நூலகம், வாசிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு போன்ற பலவற்றிலும் தனது சிறப்பான பங்களிப்பை ஆற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியரின் வருகை விழாவிற்கு பெருமிதத்தையும் கெளரவத்தையும் தந்தது.அவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.



4.அடர்த்தியாகவும் செறிவாகவும் பேசக்கூடிய தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், 'கும்பகோணம்' ,'வெண்மணி' -ஆகியவற்றைப் பற்றிய ஊடகப்பதிவுகளை சிறப்பாக செய்து முத்திரைப் பதித்த ஆவணப்பட இயக்குஞரும் .சிறந்த நூல் விமர்சகரும்,நல்ல நாடகம் மற்றும் திரை நடிகரும் இயக்குஞருமான அருமைத் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் நேற்று கலந்து கொண்டு விழாவை தன் நல்ல தமிழால் சிறப்பித்தார்.தொடர்ந்து மக்களுக்காக மக்களின் சிக்கல்களை மக்களின் ஊடகங்களில் வழங்கிக்கொண்டிருக்கிற அருமை நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகிறது.