திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மரமும் மறமும்

துண்டு துண்டாய்

வெட்டப்பட்டது மரம்

முண்டமானது

மனிதன்.

வள்ளல்களும்

அன்று வனங்களுக்காக

வாகனம் தந்தார்கள்

பாரி வள்ளல்கள்

இன்று வாகனங்களுக்காக

வனங்களை கொன்றார்கள்

பாரில் வள்ளல்கள் 

'அப்பா' என்றொரு குழந்தை

கழுவப்பட்டிருந்த பின்னும்

கழுவப்படாமலே இருந்தது

மலம் கழித்திருந்ததன்

அடையாளங்கள்...



கண்பார்வை குறைந்துபோன

எழுபதுவயது

தந்தையின் குறைக்கு

முகம்சுளிக்காமல்

நுழைகிறேன்

வீட்டின் கழிவறைக்குள்

பூவிழுந்த .....

என் முகத்தில்

படரும் உணர்விழைகளை

வாசிக்கும் அளவிற்கு

விழிகள் பிரகாசமாய் இல்லை

என் அன்னைக்கு....

இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்

என் மொழிகளை

செவிகளில்

பார்த்து.பார்த்து..

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஒலியும் ஒளியும்

வானொலி நண்பர்கள் சிலரும்

தொலைகாட்சி தோழிகள் சிலரும்

ஓய்வுபெற்று வீட்டிலிருக்கும்

அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்



பெற்ற பிள்ளைகள்

தூர தேசங்களில் ...



காலவினாடி கண்களில் சுழன்று

செவிகளில் ஒலிக்கிறது.

இரை

பசித்திருக்கும்

கால நாகத்தின்

வாயில்...



நாவினை

ரப்பர் இழைப்போல நீட்டி

இரைதேடும்

தவளை

மரமும் மறமும்

துண்டு துண்டாய்

வெட்டப்பட்டது மரம்

முண்டமானது

மனிதன்.