வெயில் நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த மரகத சோலைகளுக்கு நடுவே அந்த அழகிய மலைகிராமம்.கண்ணுக்கு எட்டும் தொலைவெல்லாம் மலைகள் மலைகள் மலைகள். மலைகளைத் தவிர வேறு எதுவுமில்லை.எல்லோரும் மேகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள் ஆனால் மேகங்கள் கழுத்து வலிக்க இவர்களை ஏறிட்டு பார்க்கும். அந்த அளவிற்கு இவர்கள் உயரத்தில் இருப்பது எப்போதும் இவர்களுக்கு ஆச்சர்யத்தையும் பெருமிதமுமான உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
நாகரீகங்களின் பாதிப்புகளிலிருந்தும் இந்த பிரதேசம் விலகியே இருந்திருக்கிறது.காரணம் சமவெளிக்கும் இவர்களுக்குமான தூரம் அதிகம். இயற்கையோடு இயற்கையாக கலந்த அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் அனைவருமே உழைப்பாளிகள். எல்லோரும் நாள் தவறாமல் வேலைக்கு சென்றுவிடுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வெறிச்சோடி அனாதையாய் கிடக்கும் அந்த தெருக்கள்.வாரத்தின் விடுமுறை நாட்கள் மட்டும் குழந்தைகளால் களைகட்டும்.
பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் பெண்கள் யாரும் சகஜமாய் உலவமுடியாதவாறு வாசல்களும் வீதியும் அடைக்க சிறுவர்கள் விளையாடுவது இயல்பானதுதான்.குழந்தைகள் தரும் இந்த இடையூறுகளை எப்போதும் இவர்கள் சுமையாக நினைத்ததே இல்லை.விதவிதமான விளையாட்டுக்களுக்கு பஞ்சமில்லை.
சிறார்களில் சிலர் பல் விளக்காமல் கோடாரியால் பிளக்கப்பட்ட மரக்கட்டை ஒன்றை பெட்டாக சுழற்றிக்கொண்டு வருவார்கள்.சிலர் பந்துகளுடன் ஆயத்தமாவார்கள்.ரப்பர் பந்து, பிளாஸ்டிக் பந்து,துணிப்பந்து,என்று இன்னும் நிறைய பந்துகள் சேர்ந்துவிடும்.
'டே இப்படியே ஓடிப்போனா ஒதேபடுவே,ஒழுங்கா சாபிட்டுட்டு போ' 'டே பல்லெ விளக்கிட்டு போடா, இல்லேன்னா பூச்சி ஊ வாயே தின்னுபோடும்' 'தம்பி..! முழு டவுசர் போட்டுட்டு போடா,முள்ளுச்செடி கீறும்' ' டே இவனே...! ஊ கால்சட்டை கிழிஞ்சிருக்குடா ,எல்லோரும் ஏசுவாங்க மாத்திட்டு போ' ' சாப்பிட்டு தண்ணி குடிக்காமே அப்படி என்ன அவசரம்,ஒழுங்கா தண்ணிகுடி' இப்படியாய் தங்கள் வேலைகளை செய்துகொண்டே பிள்ளைகளுக்கு தாயும் தந்தையும் படுத்தி படுத்தி சொன்ன எந்த குறிப்பையும் எந்த குழந்தையும் காதில் போட்டிருக்கொள்ளவில்லை.
நான்கைந்து பேராக இருந்தால் வீதியில்தான் தங்கள் விளையாட்டு சாகசத்தைக் காட்டுவார்கள். இப்போது சுமார் இருபது குழந்தைகள் குழுமிக்கொண்டார்கள். .கிழவிகளின் கூன் முதுகுகளை இவர்கள் அடித்த பல சிக்சர்கள் பதம் பார்க்க உதைவாங்கிய ஞாபகங்களும் பலமுறை.சன்னல் கண்ணாடிகளை உடைத்து வதைபட்ட நினைவுகளும் வர ஏகதேசமாய் முடிவுசெய்தார்கள்.இனி இவர்களின் விளையாக்கு களம் அந்த புலிமைதானம் என்று முடிவானது.
பெரிய அண்ணன்மார்கள் அந்த மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் தங்களை அங்கு வரக்கூடாது என்று ஏன் தவிர்த்தார்கள் என்ற ரகசியம் இவர்களைக் குடைந்துகொண்டே இருந்திருக்கக் கூடும். ஒருசமயம் அப்படி அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிவந்தது இவர்களுக்குள் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் எற்படுத்தியே இருக்கிறது.ஒரு சரிவில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால்தான் அந்த மைதானத்திற்கு செல்லமுடியும்.சுற்றிலும் முட்புதர்களால் ஆனா ஒரு குட்டி மைதானம். அங்கு விளையாடியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தார்கள்.பலமுறை முயற்சி செய்து முடியாத அந்த ஏக்கத்தை அன்று நிறைவேற்றவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
சிரிப்பும் கும்மாளமுமாக வீராவேசத்தோடு கிளம்பிய அந்த சிறார்பட்டாளம் அந்த பள்ளத்தாக்கில் பலவற்றையும் பேசிக்கொண்டே இறங்கியது.இனி மூச்சிரைக்க ஒரு மேட்டைக்கடக்கவேண்டும்.'ஊஸ் புஷ் ஊஸ் புஷ்' என்று நுரையீரல் சேர்ந்திசையை கேட்டுக்கொண்டே முன்னேறிக்கொண்டிருக்கும் போதுதான் கூட்டத்தில் ஒருவன் கிளியை கிளப்பினான்.
எத்தனை ஓவர் வீசவேண்டும்,யார் யார் எந்த அணியில் இருக்கவேண்டும் என்று அவர்களுக்குள்ளாக விவாதித்தபடி ஏறிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் 'டே என்னோட அண்ணே ஒருநாள் இங்கே விளையாட வந்தப்ப புலி வந்துருச்சாம்.' என்று ஒரு சிறுவன் சொன்னதும் கூட்டம் அதிர்ந்து அந்த இடத்திலேயே நின்றது. அதில் ஒருவன் 'ஐயோ புலியா.. நா வரலப்பா' தட்டுத் தடுமாறி செத்தே பொழசேன்னு ஓட்டமெடுத்தான்.அந்த அதிர்வில் மூன்று நான்கு சிறார்களும் அழுதபடியே சிதறி ஓடினார்கள்.
மீதம் இருப்பவர்கள் பீதியில் உறைந்துபோய் இருந்த போதுதான் 'டே அவன் புளுகுறாண்டா,பயந்தான்கொள்ளி,புளுகுமூட்டே'என்று ஒருவன் வசைபாடினான்.பயந்து போய் இருந்த அவர்களின் அச்சத்தை இந்த பதில் துடைத்தெறிந்தது.இப்போது அனைவருமே மனபயம் நீங்கி புலி மைதானம் முன்னேறினார்கள்.அந்த மேட்டில் இயற்கைக்கு வகிடு எடுத்தாற்போல ஒத்தையடி பாதையில் இருபுறமும் தங்களை கிள்ளி கீறிக்கொண்டிருந்த புதர் செடிகளை விலக்கிக்கொண்டு ஒரு வழியாக புலிமைதானத்தை வந்து சேர்ந்தார்கள்
இவர்கள் மைதானத்தில் கால்வைத்ததும் மகிழ்ச்சி ஊற்றேடுத்தாலும் உள்மனதில் பயம் லேசாக கசிந்துகொண்டுதான் இருந்தது.இருந்த போதிலும் திட்டமிட்டபடி விளையாட்டு தொடர்ந்தது.ஒரு குண்டு சிறுவன் அடித்த ஒரு பந்து ஆகாயத்தில் பறந்து சென்று புதருக்குள் விழ 'சிக்சர்' என்று ஆரவாரித்த கூட்டம் தொலைந்த பந்தை தேட ஆயத்தமானது.புதருக்குள் உடம்பை குறுக்கி குனிந்துகொண்டு நிழல்களில் இருட்டில் தேடும் போதுதான் எல்லோருக்கும் புலிஞாபகம் வந்தது.பந்து கிடைக்காத வெறுப்பும் புலியின் பயமும் கலவையாய்த் தொற்றிக்கொள்ள அந்த குளிர் உலகத்திலும் கூட எல்லா சிறுவர்களும் வியர்க்கத்தார்கள்.
தேடுதல் வேட்டையில், நிசப்தமாய் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு குட்டைமரமொன்று அசையவே ரகசியமான மெல்லியகுரலில் 'டே...அங்கே பாருங்கடா...மரம் ஆடுது...புலியா இருக்குமோ...?பயமா இருக்குடா..அவன் சொன்னது உணமைதா போலிருக்கே.. இவனே நம்பி வந்தோம் பாரு...நீதா புளுகு மூட்டை ..' இப்படியாய் புலி இல்லை என்று ஆறுதல் சொல்லி அழைத்துவந்த அந்த சிறுவன் நன்றாக அனைவருது வசையை வாங்கிக்கொண்டிருந்த போதுதான் குபீரென புதருக்குள்ளிருந்து ஆவேசமாய் வெளிப்பட்டது ஒரு குரங்கு.ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க கண்களை பயத்தில் மூடிக்கொண்டிருந்த அனைவரும் மெதுவாக திறந்தபோது அந்த குரங்கினை அவர்களால் ஆறுதலாய் பார்க்கமுடிந்தது.
மீண்டும் விளையாட்டு களைகட்டியது. பாதியிலேயே பயந்து ஓடி வீட்டை அடைந்த அந்த சில சிறார்கள் இவர்கள் ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பதை ஏக்கமாய் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை இவர்கள் கவனித்தார்கள். .'தேவையா...பேசாமே வந்திருக்கலாமில்லே..பயந்தாகொள்ளிங்கே' .கிண்டலடித்தார்கள். 'ஈ ஓ ஊ ஆ ...;என்று உச்சதாயத்தில் தங்களின் கேலியைத் தெரிவித்தார்கள்.
அன்றிலிருந்து பயமில்லாமல் அவர்களும் மற்ற சிறுவர்களும் அந்த புலிமைதானத்தில் பயம் இல்லாமல் வாரம் தோறும் தவறாமல் விளையாடிவருகிறார்கள்.ஆனால் உண்மையில் அந்த மைதானத்திற்கு புலி வந்து போவது வழக்கம் என்பதை அந்த சிறார்கள் அறியாமலே இருக்கட்டும்
சனி, 30 ஏப்ரல், 2011

இந்தியதேசத்தின்
அசோகச்சக்கரத்திற்கு
பிஞ்சுக் குழந்தைகளின்
வியர்வை
உயவுஎண்ணை ஆகவேண்டாம்.
...
தொழிலாளர்கள் பட்டியலில்
இருக்கும்
மழலைகளின் பெயர்களை
அழிப்போம்
பிள்ளைகளின் வியர்வையில்
பெற்றோர்கள் வயிறு வளர்ப்பதா?
(மேதின வாழ்த்துக்கள்)

இவர்கள்
விலங்குகள் அல்ல!
பிறகு ஏன்
இவர்களுக்கு விலங்குகள்.
உள்ளங்கள் குமுறினால்
உலோகங்கள் உதிரும்
வலிக்க வலிக்க
உழைத்த கரங்களுக்கு
முடிந்தால் பூட்டுங்கள்
பூவிலங்குகளை.
(மேதின வாழ்த்துக்கள்)
.
எண்ணைகட்டி(சிறுகதை)
இயற்கை சிம்மாசம் இட்டு மரியாதை செய்ததைப் போல எழிலாய் நிமிர்ந்து நிற்கும் அந்த மலை கிராமத்தில், ஒரு சிகரத்தின் இடுப்பில் குழந்தையாய் அந்த ஊர் பசுமைகளுக்கிடையே அழகாய் காட்சிதருகிறது. விடுமுறை வந்துவிட்டால் போதும் இனிய சிறார்களின் கள்ளம்கபடமில்லா விளையாட்டில் உள்ளம் மகிழ இன்னும் அழகாகத்தெரியும் அந்த ரம்மிய கிராமம்.
தொடர்வண்டியைப் போல நீளமான நகராத தெருக்கள்.எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கும் பயணிகளைப் போல குழந்தைகள்.ஒரு ஞாயிறு ஒன்றில் விளையாடுவதற்கான திட்டங்களை தெருவின் மூலையில் ரகசியமாய் போட்டார்கள்.கூச்சல் குழப்பங்களுக்கிடையே சில முடிவுகளும் சில சூளுரைகளும் எழுந்து ஓய்ந்தன.எதோ முடிவுக்கு வந்ததாக கூட்டம் கலைந்தது.
சட்டென வீட்டிற்குள் தொலைந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியேறினார்கள்.எம்பிக்கொண்டே இருக்கும் ரப்பர் பந்தை தரையில் மோதவிட்டுக்கொண்டே ஒருவன் வெளியில் வந்து தன் வேடிக்கையைக் காட்டினான்,மற்றொரு சிறுவன் பிளாஸ்ட்டிக் பந்து ஒன்றை ஆகாயத்திற்கும் தனக்குமாக விழாதவாறு கவனமாக தட்டிக்கொண்டே வந்து சேர்ந்தான்.இப்படியாய் ஒவ்வொருவரும் பல விளையாட்டு சாமான்களோடு வந்து குழுமினர்.இப்போது எந்த விளையாட்டை விளையாடுவது என்ற குழப்பம் ஆரவாரமாக எழுந்து ஓய்ந்தது.
அனல்பறக்கும் விவாதங்களுக்கு இறுதியில் , பள்ளத்தாக்கு புல்வெளியில் மரப்பலகையில் சருக்கிவிளையாடுவது என்ற முடிவுக்கு ஒருவழியாக வந்தார்கள்.ஊரின் எல்லையில் கோடை வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாய் இருக்கும் சரிவுப் புல்வெளிதான் அது. ஒவ்வொருவருடமும் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் அனைவரும் அங்கு சறுக்கி விளையாடுவது வழக்கம்.
சருக்குவதற்கு பெரும்பாலும் வீட்டில் மரவேலை செய்து மீதமிருக்கும் பலகைகளை பயன்படுத்துவதுவார்கள். இந்த கோடையில் யாருடைய வீட்டிலும் மரவேலைப்பாடுகள் நடைபெறாததால் சறுக்கி விளையாட பலகைகளை தேடி அலைந்த நேரத்தில் ஒரு சிறுவன் கொடுத்த யோசனையின் பேரில் மாட்டுக் கொட்டகையில் நிலையில் கதவைப் போல அடைப்பதற்காக பயன்படுத்தும் பலகையை உபயோகிப்பது என்று முடிவுசெய்தார்கள்.
பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகும் நேரத்திற்காக காத்திருந்த அந்த சிறுவர்கள்,சரியான ஒரு சமயத்தில் உரிமையாளருக்குத் தெரியாமல் ஒன்றரையடி அகலமும் ஐந்தடி நீளமும் இரண்டு அங்குல தடிமனும் கொண்ட ஒரு பலகையை கொட்டகையிலிருந்து தங்கள் தலைக்குமேல் வைத்து கடத்திக்கொண்டு ஒருவழியாக சறுக்கும் சரிவுப்புல்வெளிக்கு வந்து சேர்ந்தார்கள்.
மலைபிரதேசத்தில் பனியில் ஈரம் காய்வதற்கு இன்னும் அரைமணிநேரம் இருந்தது.உணர்ச்சிவசப்பட்டிருந்தால் அந்த காலைநேர ஈரப்பனியில் சறுக்கும் முயற்சி அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கும். எனவேதான் அனைவரும் பொறுமையோடு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் .'டே வெயிலுலே ஈரம் காஞ்சி புல்லு சூடானாதான் சறுக்குபலகை வேகமா போகும்.' என்று ஒருவன் ஒரு யோசனை சொன்னான். சற்று யோசித்துவிட்டு அனுபவசாலியைப்போல 'இன்னொரு இடியா சொல்லட்டா'என்று அனைவரையில் அவனே இன்ப அதர்ச்சியில் ஆழ்த்தினான்
'டே சறுக்கு பலகையோட அடியிலே தேங்கா எண்ணையே தேச்சென்னு வச்சுக்கோ சும்மா தீயா பறக்குமடா' யோசனை பலமாக இருந்ததை அறிந்து ஆதங்கத்தோடு இன்னொரு சிறுவன் கேட்டான்'சரி இப்ப எண்ணைக்கு எங்கே போறதுடா'என்ற கேள்வியை எழுப்பி எல்லோரையும் ஏங்க வைத்தான். எல்லோரும் வாயில் விரலைவைத்துக்கொண்டும் , பக்கவாட்டுத் தலையை சொரிந்துகொண்டும் யோசிப்பதற்கான குறிப்புகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
'இதோ பாருங்கடா! எங்க வீட்லே அப்பாவும் அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க.இப்ப நா போனா திட்டும் ஒதையும் விழாது . நா போயி கொண்டு வர்றேன்' என்று சொல்லிக்கொண்டே தன் நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடினான்.
தாழிடப்பட்டு பூட்டப்படாமலே இருக்கும் வழக்கமான அவனது வீட்டுக்குள் நுழைந்து தேங்காய் எண்ணை டப்பியை எடுத்தான்.அதன் மேல் மூடியை ஒரு ஆணையின் துணைக்கொண்டு இரண்டுபேரின் பலத்தால் திறந்துவைத்தார்கள். வந்தவன் கண்களால் ஆச்சர்யப்பட்டு நாசியால் அந்த ரம்மிய நறுமணத்தை நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டிருந்தான்.,இடதுபுறமாக அந்த சிலிண்டர் வடிவில் இருந்த கையடக்க அலுமினிய டின்னை சாய்த்து எண்ணை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்காக அவனும் அவனது நண்பனும் காத்திருந்தனர்.எண்ணை வந்த பாடில்லை.லேசான வெளிச்சத்தில் பார்த்த அவர்களுக்கு திரவமாக இல்லாமல் உறைந்து வெள்ளை வெளேரென்று கட்டிப்பட்டபடி காட்சிதந்த அந்த பொருள் தேங்காய் எண்ணைதானா என்ற குழப்பத்தை எற்படுத்தவே செய்தது.
'டே இது எண்ணை இல்லேடா வேறே ஏதோ.எண்ணை தண்ணிமாதிரி தானே இருக்கும்.இது என்ன கெட்டியா வெள்ளையா இருக்கு,நீ ஏதோ ஒண்ணே தரந்துட்டே போலிருக்கு ,இப்ப என்னடா செய்றது ' துணைக்கு வந்த சிறுவனின் புலம்பல் அவனை இன்னும் சிந்திக்க வைத்தது.'அப்பா எப்பவும் குளிச்சிட்டு இதிலிருந்துதா எடுத்து தலையிலே போடுவாருடா,அம்மா கூட சனிக்கிழமே இதிலிருந்தா எடுக்கும், நா எத்தனையோ டைம் பாத்திருக்கேன்'
சோதனை முயற்சியில் முதல் நிலையாக அவன் தனது வலது கையை அந்த டப்பிக்குள் நுழைத்தான்,வழுவழுப்பாய் இருந்ததை உணர்ந்தபடியே கொஞ்சம் எடுத்தான் உள்ளங்கையில் அள்ளிய அந்த இறுகிப்போன எண்ணைக்கட்டி மெல்ல உருக ஆரம்பித்தது.அந்த அதிசயத்தை இருவரும் கண்கொட்டாமல் ரசித்தபடியே இருந்தனர்.இவருடைய புலனாய்வு வெற்றியை தந்த சந்தோசத்தில் ஆளுக்கு ஒரு கையாக அள்ளிக்கொண்டு ஓடினார்கள்.
அவ்வளவு கவனமாக எடுத்துவரப்பட்ட எண்ணைக்கட்டி சறுக்கு புல்வெளியை அடைந்ததும் அனைவரது மனதிலும் பரவசம் மலர்ந்தது.உடனே அந்த பலகை தலைக்கீழாய் கவிழ்க்கப்பட்டது.இரண்டு சிறுவர்களும் ஒழுகியது போக மீதமிருந்த எண்ணையை பலகையில் பக்கவாட்டு முழுக்க தேக்க ஆரம்பித்தார்கள். அனைவரும் ஆளுக்கு ஒரு கையை நீட்டி வலிக்கும் பலகைக்கு காலமுக்கி விடுவதைப்போல தடவிவிட்டார்கள்.
இப்பொழுது சறுக்கும் பலகை முழுக்க எண்ணைப்பரவி இருந்தது.வெயிலும் தன் வெப்பத்தால் புல்வெளியை மிருதுவாக்கி இருந்தது.அவர்களின் பயணம் தயாராகி விட்டது.மொத்தம் ஐந்துபேர்.ஒரு சமயத்தில் அந்த பலகையில் மூன்றுபேர் மட்டுமே பயணப்படமுடியும் என்பதால் முதலில் மூவர் ஏறிக்கொண்டனர்.முட்டிப்பகுதியை பிரமிடைப் போல மடக்கி குவியலாக வைத்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அந்த சறுக்கும் பலகையில் அமர்ந்திருந்த வேளை அவர்களுக்குள் மகிழ்வையும் பயத்தையும் மாறிமாறி தந்துகொண்டே இருந்தது.
கீழ்நோக்கி சரிவில் பாய்வதற்கு மனத்தால் தங்களை தயார்செய்துகொண்ட சிறுவர்கள் மூவரும், ஒருவரது கால்களை மற்றவைகள் சங்கிலியாய் பிடித்துக்கொண்டு தயாராகிவிட்டனர்.அந்த சறுக்கு பலகை மிருதுவாய் நகரத்தொடங்கிய சிலவினாடிகளில் புதுவிதமான உணர்வை தங்கள் வயிற்றுப் பகுதியில் உணர்ந்தவர்களாய் ஆனந்தத்தையும் பயத்தையும் சரிவிகிதமாக கலந்த கலவையைப் போன்ற ஒரு விதமான சப்தத்தை நீள எழுப்பிக்கொண்டு 'ஆ ஆ ஊ ஊ ஈ ஈ ஏ ஏ' குதுகலித்த அந்த மூவரையும் அந்த சறுக்கு பலகை சரிவின் கீழ் தளத்திற்கு சிலநிமிடங்களில் அழைத்துச் சென்றது.
இப்போது அந்த பலகையை மீண்டும் தொடங்கிய மேல் முகட்டிற்கு கொண்டுவரவேண்டும். அந்த மூவரும் சுமைதாங்கியை தலையில் சுமப்பதைப் போல தங்கள் தலைக்குமேல் வைத்து நிழலையும் போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க மேலே வந்து சேர்த்தார்கள். அடுத்த பயணத்திற்காய் மீதமிருந்த இருவர் ஆனந்தத்தோடு ஆயத்தமானார்கள்.அதற்குள்ளாக இன்னொருவன் தனது பயணம் முந்தய பயணத்தைவிட வேகமா இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வீட்டிற்கு போய் இவனைப் போலவே தேங்காய் எண்ணையை உள்ளங்கைகளில் அள்ளிவராமல்,தன் தலைமுடியில் வழியவழிய தேய்த்துவந்திருக்கிறான்..
முகமெல்லாம் எண்ணை வடிய இப்படியாய் வெயில் சாயும் வரை அந்த சிறுவர்கள் சருக்கிவிளையாடிக்கொண்டே இருந்தார்கள். தேங்காய் எண்ணை விலை உயர்ந்தது என்பதை அவர்கள் அறியாமலே இருந்துவிட்டுபோகட்டும்
தொடர்வண்டியைப் போல நீளமான நகராத தெருக்கள்.எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கும் பயணிகளைப் போல குழந்தைகள்.ஒரு ஞாயிறு ஒன்றில் விளையாடுவதற்கான திட்டங்களை தெருவின் மூலையில் ரகசியமாய் போட்டார்கள்.கூச்சல் குழப்பங்களுக்கிடையே சில முடிவுகளும் சில சூளுரைகளும் எழுந்து ஓய்ந்தன.எதோ முடிவுக்கு வந்ததாக கூட்டம் கலைந்தது.
சட்டென வீட்டிற்குள் தொலைந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியேறினார்கள்.எம்பிக்கொண்டே இருக்கும் ரப்பர் பந்தை தரையில் மோதவிட்டுக்கொண்டே ஒருவன் வெளியில் வந்து தன் வேடிக்கையைக் காட்டினான்,மற்றொரு சிறுவன் பிளாஸ்ட்டிக் பந்து ஒன்றை ஆகாயத்திற்கும் தனக்குமாக விழாதவாறு கவனமாக தட்டிக்கொண்டே வந்து சேர்ந்தான்.இப்படியாய் ஒவ்வொருவரும் பல விளையாட்டு சாமான்களோடு வந்து குழுமினர்.இப்போது எந்த விளையாட்டை விளையாடுவது என்ற குழப்பம் ஆரவாரமாக எழுந்து ஓய்ந்தது.
அனல்பறக்கும் விவாதங்களுக்கு இறுதியில் , பள்ளத்தாக்கு புல்வெளியில் மரப்பலகையில் சருக்கிவிளையாடுவது என்ற முடிவுக்கு ஒருவழியாக வந்தார்கள்.ஊரின் எல்லையில் கோடை வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாய் இருக்கும் சரிவுப் புல்வெளிதான் அது. ஒவ்வொருவருடமும் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் அனைவரும் அங்கு சறுக்கி விளையாடுவது வழக்கம்.
சருக்குவதற்கு பெரும்பாலும் வீட்டில் மரவேலை செய்து மீதமிருக்கும் பலகைகளை பயன்படுத்துவதுவார்கள். இந்த கோடையில் யாருடைய வீட்டிலும் மரவேலைப்பாடுகள் நடைபெறாததால் சறுக்கி விளையாட பலகைகளை தேடி அலைந்த நேரத்தில் ஒரு சிறுவன் கொடுத்த யோசனையின் பேரில் மாட்டுக் கொட்டகையில் நிலையில் கதவைப் போல அடைப்பதற்காக பயன்படுத்தும் பலகையை உபயோகிப்பது என்று முடிவுசெய்தார்கள்.
பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகும் நேரத்திற்காக காத்திருந்த அந்த சிறுவர்கள்,சரியான ஒரு சமயத்தில் உரிமையாளருக்குத் தெரியாமல் ஒன்றரையடி அகலமும் ஐந்தடி நீளமும் இரண்டு அங்குல தடிமனும் கொண்ட ஒரு பலகையை கொட்டகையிலிருந்து தங்கள் தலைக்குமேல் வைத்து கடத்திக்கொண்டு ஒருவழியாக சறுக்கும் சரிவுப்புல்வெளிக்கு வந்து சேர்ந்தார்கள்.
மலைபிரதேசத்தில் பனியில் ஈரம் காய்வதற்கு இன்னும் அரைமணிநேரம் இருந்தது.உணர்ச்சிவசப்பட்டிருந்தால் அந்த காலைநேர ஈரப்பனியில் சறுக்கும் முயற்சி அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கும். எனவேதான் அனைவரும் பொறுமையோடு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் .'டே வெயிலுலே ஈரம் காஞ்சி புல்லு சூடானாதான் சறுக்குபலகை வேகமா போகும்.' என்று ஒருவன் ஒரு யோசனை சொன்னான். சற்று யோசித்துவிட்டு அனுபவசாலியைப்போல 'இன்னொரு இடியா சொல்லட்டா'என்று அனைவரையில் அவனே இன்ப அதர்ச்சியில் ஆழ்த்தினான்
'டே சறுக்கு பலகையோட அடியிலே தேங்கா எண்ணையே தேச்சென்னு வச்சுக்கோ சும்மா தீயா பறக்குமடா' யோசனை பலமாக இருந்ததை அறிந்து ஆதங்கத்தோடு இன்னொரு சிறுவன் கேட்டான்'சரி இப்ப எண்ணைக்கு எங்கே போறதுடா'என்ற கேள்வியை எழுப்பி எல்லோரையும் ஏங்க வைத்தான். எல்லோரும் வாயில் விரலைவைத்துக்கொண்டும் , பக்கவாட்டுத் தலையை சொரிந்துகொண்டும் யோசிப்பதற்கான குறிப்புகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
'இதோ பாருங்கடா! எங்க வீட்லே அப்பாவும் அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க.இப்ப நா போனா திட்டும் ஒதையும் விழாது . நா போயி கொண்டு வர்றேன்' என்று சொல்லிக்கொண்டே தன் நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடினான்.
தாழிடப்பட்டு பூட்டப்படாமலே இருக்கும் வழக்கமான அவனது வீட்டுக்குள் நுழைந்து தேங்காய் எண்ணை டப்பியை எடுத்தான்.அதன் மேல் மூடியை ஒரு ஆணையின் துணைக்கொண்டு இரண்டுபேரின் பலத்தால் திறந்துவைத்தார்கள். வந்தவன் கண்களால் ஆச்சர்யப்பட்டு நாசியால் அந்த ரம்மிய நறுமணத்தை நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டிருந்தான்.,இடதுபுறமாக அந்த சிலிண்டர் வடிவில் இருந்த கையடக்க அலுமினிய டின்னை சாய்த்து எண்ணை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்காக அவனும் அவனது நண்பனும் காத்திருந்தனர்.எண்ணை வந்த பாடில்லை.லேசான வெளிச்சத்தில் பார்த்த அவர்களுக்கு திரவமாக இல்லாமல் உறைந்து வெள்ளை வெளேரென்று கட்டிப்பட்டபடி காட்சிதந்த அந்த பொருள் தேங்காய் எண்ணைதானா என்ற குழப்பத்தை எற்படுத்தவே செய்தது.
'டே இது எண்ணை இல்லேடா வேறே ஏதோ.எண்ணை தண்ணிமாதிரி தானே இருக்கும்.இது என்ன கெட்டியா வெள்ளையா இருக்கு,நீ ஏதோ ஒண்ணே தரந்துட்டே போலிருக்கு ,இப்ப என்னடா செய்றது ' துணைக்கு வந்த சிறுவனின் புலம்பல் அவனை இன்னும் சிந்திக்க வைத்தது.'அப்பா எப்பவும் குளிச்சிட்டு இதிலிருந்துதா எடுத்து தலையிலே போடுவாருடா,அம்மா கூட சனிக்கிழமே இதிலிருந்தா எடுக்கும், நா எத்தனையோ டைம் பாத்திருக்கேன்'
சோதனை முயற்சியில் முதல் நிலையாக அவன் தனது வலது கையை அந்த டப்பிக்குள் நுழைத்தான்,வழுவழுப்பாய் இருந்ததை உணர்ந்தபடியே கொஞ்சம் எடுத்தான் உள்ளங்கையில் அள்ளிய அந்த இறுகிப்போன எண்ணைக்கட்டி மெல்ல உருக ஆரம்பித்தது.அந்த அதிசயத்தை இருவரும் கண்கொட்டாமல் ரசித்தபடியே இருந்தனர்.இவருடைய புலனாய்வு வெற்றியை தந்த சந்தோசத்தில் ஆளுக்கு ஒரு கையாக அள்ளிக்கொண்டு ஓடினார்கள்.
அவ்வளவு கவனமாக எடுத்துவரப்பட்ட எண்ணைக்கட்டி சறுக்கு புல்வெளியை அடைந்ததும் அனைவரது மனதிலும் பரவசம் மலர்ந்தது.உடனே அந்த பலகை தலைக்கீழாய் கவிழ்க்கப்பட்டது.இரண்டு சிறுவர்களும் ஒழுகியது போக மீதமிருந்த எண்ணையை பலகையில் பக்கவாட்டு முழுக்க தேக்க ஆரம்பித்தார்கள். அனைவரும் ஆளுக்கு ஒரு கையை நீட்டி வலிக்கும் பலகைக்கு காலமுக்கி விடுவதைப்போல தடவிவிட்டார்கள்.
இப்பொழுது சறுக்கும் பலகை முழுக்க எண்ணைப்பரவி இருந்தது.வெயிலும் தன் வெப்பத்தால் புல்வெளியை மிருதுவாக்கி இருந்தது.அவர்களின் பயணம் தயாராகி விட்டது.மொத்தம் ஐந்துபேர்.ஒரு சமயத்தில் அந்த பலகையில் மூன்றுபேர் மட்டுமே பயணப்படமுடியும் என்பதால் முதலில் மூவர் ஏறிக்கொண்டனர்.முட்டிப்பகுதியை பிரமிடைப் போல மடக்கி குவியலாக வைத்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அந்த சறுக்கும் பலகையில் அமர்ந்திருந்த வேளை அவர்களுக்குள் மகிழ்வையும் பயத்தையும் மாறிமாறி தந்துகொண்டே இருந்தது.
கீழ்நோக்கி சரிவில் பாய்வதற்கு மனத்தால் தங்களை தயார்செய்துகொண்ட சிறுவர்கள் மூவரும், ஒருவரது கால்களை மற்றவைகள் சங்கிலியாய் பிடித்துக்கொண்டு தயாராகிவிட்டனர்.அந்த சறுக்கு பலகை மிருதுவாய் நகரத்தொடங்கிய சிலவினாடிகளில் புதுவிதமான உணர்வை தங்கள் வயிற்றுப் பகுதியில் உணர்ந்தவர்களாய் ஆனந்தத்தையும் பயத்தையும் சரிவிகிதமாக கலந்த கலவையைப் போன்ற ஒரு விதமான சப்தத்தை நீள எழுப்பிக்கொண்டு 'ஆ ஆ ஊ ஊ ஈ ஈ ஏ ஏ' குதுகலித்த அந்த மூவரையும் அந்த சறுக்கு பலகை சரிவின் கீழ் தளத்திற்கு சிலநிமிடங்களில் அழைத்துச் சென்றது.
இப்போது அந்த பலகையை மீண்டும் தொடங்கிய மேல் முகட்டிற்கு கொண்டுவரவேண்டும். அந்த மூவரும் சுமைதாங்கியை தலையில் சுமப்பதைப் போல தங்கள் தலைக்குமேல் வைத்து நிழலையும் போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க மேலே வந்து சேர்த்தார்கள். அடுத்த பயணத்திற்காய் மீதமிருந்த இருவர் ஆனந்தத்தோடு ஆயத்தமானார்கள்.அதற்குள்ளாக இன்னொருவன் தனது பயணம் முந்தய பயணத்தைவிட வேகமா இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வீட்டிற்கு போய் இவனைப் போலவே தேங்காய் எண்ணையை உள்ளங்கைகளில் அள்ளிவராமல்,தன் தலைமுடியில் வழியவழிய தேய்த்துவந்திருக்கிறான்..
முகமெல்லாம் எண்ணை வடிய இப்படியாய் வெயில் சாயும் வரை அந்த சிறுவர்கள் சருக்கிவிளையாடிக்கொண்டே இருந்தார்கள். தேங்காய் எண்ணை விலை உயர்ந்தது என்பதை அவர்கள் அறியாமலே இருந்துவிட்டுபோகட்டும்
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மரணத்திற்கு சுவாசம் தேவைப்படும் போதெல்லாம் நமது உயிர்காற்றை நுகர்ந்துகொள்ளும்.மரணம் உலகின் மிகப்பெரிய பிச்சைக்காரன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

