சூடான கண்ணீரால்
என் இமைகள்
பற்றி எரியும்போதெல்லாம்
குளிர்விரலால்
தொட்டுத்துடைத்த காதலன்
விட்டுப்பிரிவதை நினைத்து...
நோகிறேன்
வெந்து போகிறேன்
சகிறேனடி தோழி!
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
பாடல் ஏன்:4
ஆசிரியர்:காமம் சேர் குளத்தார்
பாடல்:
நோம் ,என் நெஞ்சே நோம் என் செஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
திங்கள், 19 ஏப்ரல், 2010
சங்க இலக்கியம் - குறுந்தொகை:4
சூடான கண்ணீரால்
என் இமைகள்
பற்றி எரியும்போதெல்லாம்
குளிர்விரலால்
தொட்டுத்துடைத்த காதலன்
விட்டுப்பிரிவதை நினைத்து...
நோகிறேன்
வெந்து போகிறேன்
சாகிறேனடி தோழி!
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
பாடல் ஏன்:4
ஆசிரியர்:காமம் சேர் குளத்தார்
பாடல்:
நோம் ,என் நெஞ்சே நோம் என் செஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
என் இமைகள்
பற்றி எரியும்போதெல்லாம்
குளிர்விரலால்
தொட்டுத்துடைத்த காதலன்
விட்டுப்பிரிவதை நினைத்து...
நோகிறேன்
வெந்து போகிறேன்
சாகிறேனடி தோழி!
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
பாடல் ஏன்:4
ஆசிரியர்:காமம் சேர் குளத்தார்
பாடல்:
நோம் ,என் நெஞ்சே நோம் என் செஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
சங்க இலக்கியம் - குறுந்தொகை : 3
கனிந்ததேன்ரசம் நிறைந்துவழியும்
கறுத்தக்கிளைகளில் பூத்துச்சிரிக்கும்
குறிஞ்சிமலர்களின் குவலயமான
மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...
பரந்து விரவிக்கிடக்கும்
புவியைவிட பெரிதானது!
வையமணைத்து நனைக்கும்
கடலைவிட ஆழமானது!
தொடமுடியா தொலைவில்நிலைக்கும்
வானைவிட உயரமானது!
மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...
------------------------------------------------------------------------
நூல்: குறுந்தொகை
ஆசிரியர்: தேவகுலத்தார்
பாடல் என்:3பாடல்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
கறுத்தக்கிளைகளில் பூத்துச்சிரிக்கும்
குறிஞ்சிமலர்களின் குவலயமான
மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...
பரந்து விரவிக்கிடக்கும்
புவியைவிட பெரிதானது!
வையமணைத்து நனைக்கும்
கடலைவிட ஆழமானது!
தொடமுடியா தொலைவில்நிலைக்கும்
வானைவிட உயரமானது!
மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...
------------------------------------------------------------------------
நூல்: குறுந்தொகை
ஆசிரியர்: தேவகுலத்தார்
பாடல் என்:3பாடல்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
சனி, 17 ஏப்ரல், 2010
சங்கஇலக்கியம் - குறுந்தொகை :2
சின்னஞ்சிறிய சிறகுகள்விரிய
காற்றைத்தழுவி பறந்து
பிரபஞ்சம்முழுக்க கடந்து
மலர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து
நறுமணம் கொண்டு மதுரசம் உண்டு
மகிழும் வண்டே!
ஆறுதலுக்காக கூறுதலில்
பொய்வேண்டாம் மெய்பேசு!
பிறவிகளின் தொடர்ச்சியாய்
உறவுகளின் நேசம்
உணர்வுகள் நீட்சியில்
உரிமைகளே சுவாசம்.
உதடு விரித்த புன்னகையிலும்
உதடு திறந்த பொன்னகையிலும்
இறுக்கமாய் கோர்க்கப்பட்ட
முத்துப்பல்லை வரிசையைக்கொண்டு
அசைவிலும் இசைவிலும்
பொன்மயிலாய் தோகைவிரிப்பவள்
என் பெண்மயில்.!
பாதத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும்
அவளது
கார்கூந்தலில் நறுமணத்தைவிட
நீ பார்த்த கோடிமலர்களில்
எந்தப் பூவுக்கேனும் இருக்கிறதா?
சொல்வண்டே சொல் !
நூல்: குறுந்தொகை
ஆசிரியர்:இறையனார்
பாடல் எண்:2
பாடல்:
கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் துப்பி
காமம் செப்பாதுக் கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின்,மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
காற்றைத்தழுவி பறந்து
பிரபஞ்சம்முழுக்க கடந்து
மலர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து
நறுமணம் கொண்டு மதுரசம் உண்டு
மகிழும் வண்டே!
ஆறுதலுக்காக கூறுதலில்
பொய்வேண்டாம் மெய்பேசு!
பிறவிகளின் தொடர்ச்சியாய்
உறவுகளின் நேசம்
உணர்வுகள் நீட்சியில்
உரிமைகளே சுவாசம்.
உதடு விரித்த புன்னகையிலும்
உதடு திறந்த பொன்னகையிலும்
இறுக்கமாய் கோர்க்கப்பட்ட
முத்துப்பல்லை வரிசையைக்கொண்டு
அசைவிலும் இசைவிலும்
பொன்மயிலாய் தோகைவிரிப்பவள்
என் பெண்மயில்.!
பாதத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும்
அவளது
கார்கூந்தலில் நறுமணத்தைவிட
நீ பார்த்த கோடிமலர்களில்
எந்தப் பூவுக்கேனும் இருக்கிறதா?
சொல்வண்டே சொல் !
நூல்: குறுந்தொகை
ஆசிரியர்:இறையனார்
பாடல் எண்:2
பாடல்:
கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் துப்பி
காமம் செப்பாதுக் கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின்,மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
சங்கஇலக்கியம்:குறுந்தொகை
மைவடியும் எழுதுகோலைப்போல
இரத்தம்வடியும் அம்புகள்;
உதிரத்தால் சிவந்த
யானையின் வெள்ளைகொம்புகள்;
அசுரரை கொன்று
அதர்மத்தை வென்றதால்
குருதியை குடித்து
சதுப்புநிலமாகியிருக்கிறது போர்க்களம்;
எங்கும் எதிலும் சிவப்பின் ஆதிக்கம்.
காலில் வீரக்கழல்
கையில் வெற்றிவளை -அந்த
கந்தனை அலங்கரிக்கும்
காந்தள் மலர்
கன்னியை அலங்கரித்தல் தகுமோ !
கேள்விகள்
வேள்விகள் செய்கின்றன....
சங்கநூல்:குறுந்தொகை
ஆசிரியர்:திப்புத்தோளார்
பாடல் எண் :ஒன்று
பாடல்:
"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின்,செங்கோட்டு யானை,
கழல் தோடி,சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்கே "
இரத்தம்வடியும் அம்புகள்;
உதிரத்தால் சிவந்த
யானையின் வெள்ளைகொம்புகள்;
அசுரரை கொன்று
அதர்மத்தை வென்றதால்
குருதியை குடித்து
சதுப்புநிலமாகியிருக்கிறது போர்க்களம்;
எங்கும் எதிலும் சிவப்பின் ஆதிக்கம்.
காலில் வீரக்கழல்
கையில் வெற்றிவளை -அந்த
கந்தனை அலங்கரிக்கும்
காந்தள் மலர்
கன்னியை அலங்கரித்தல் தகுமோ !
கேள்விகள்
வேள்விகள் செய்கின்றன....
சங்கநூல்:குறுந்தொகை
ஆசிரியர்:திப்புத்தோளார்
பாடல் எண் :ஒன்று
பாடல்:
"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின்,செங்கோட்டு யானை,
கழல் தோடி,சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்கே "
வியாழன், 15 ஏப்ரல், 2010
கங்காரு
அலுவலகத்தில்
காலையில் சிறைப்படும்முன்னும்
மாலை விடுவிப்பிற்குப் பின்னும்
முதன்மைச்சாலையிலிருந்து விலகி
பள்ளியை நோக்கியே பயணிக்கும்
என் இரண்டுச்ச்சக்கரவாகனம்.
அந்த மோட்டார்தேரின்
முன்னிருக்கை சிம்மாசனத்தைக்
குட்டி இளவரசனாய்
ஆக்கிரமிக்கும் ஆசைக்கு
விதித்திருந்த தடையை
மீறியதில்லை என்மகன்.
என்
வயிற்று சுற்றளவை
அளவெடுக்கும் பாவனையோடு
பிஞ்சுக் கைகளால்
உடும்பைப்போல இறுக்கிக்கொண்டும்
போலிஷ் திருடன் விளையாட்டில்
மறைவதைப்போல்
எதிர்ப்படுகிறவர்களுக்குத் தென்படாமல்
என் முதுகின்பின் ஒளிந்தபடி
நிழலாய்ப் பயணிப்பான்.
சிக்னல்
வேகத்தடை
குறுகியவளைவு
மற்றும்
நெடுஞ்சாலைப் பந்தயங்களைக் கடந்து
அன்றையதினமும் தொடர்ந்தது
எங்கள் பயணம்.
பள்ளிவந்து சேர்ந்தபோது
நுழைவாயிலின்
கனத்த உலோகக்கதவுகள்
பூட்டப்பட்டிருந்தன.
பூக்களில்லாத மலர்வனமாய்
ஏகாந்தம் நிரப்பப்பட்டு
வெறிச்சோடியிருந்தது பள்ளிவளாகம்.
மகனை சுமந்துகொண்டிருப்பதான
நினைவில்
வழக்கமாய் அனிச்சையாய்
வந்திருக்கிறேன்
ஞாபகமறதியில்
அன்றையதினம் "ஞாயிற்றுக்கிழமை"
காலையில் சிறைப்படும்முன்னும்
மாலை விடுவிப்பிற்குப் பின்னும்
முதன்மைச்சாலையிலிருந்து விலகி
பள்ளியை நோக்கியே பயணிக்கும்
என் இரண்டுச்ச்சக்கரவாகனம்.
அந்த மோட்டார்தேரின்
முன்னிருக்கை சிம்மாசனத்தைக்
குட்டி இளவரசனாய்
ஆக்கிரமிக்கும் ஆசைக்கு
விதித்திருந்த தடையை
மீறியதில்லை என்மகன்.
என்
வயிற்று சுற்றளவை
அளவெடுக்கும் பாவனையோடு
பிஞ்சுக் கைகளால்
உடும்பைப்போல இறுக்கிக்கொண்டும்
போலிஷ் திருடன் விளையாட்டில்
மறைவதைப்போல்
எதிர்ப்படுகிறவர்களுக்குத் தென்படாமல்
என் முதுகின்பின் ஒளிந்தபடி
நிழலாய்ப் பயணிப்பான்.
சிக்னல்
வேகத்தடை
குறுகியவளைவு
மற்றும்
நெடுஞ்சாலைப் பந்தயங்களைக் கடந்து
அன்றையதினமும் தொடர்ந்தது
எங்கள் பயணம்.
பள்ளிவந்து சேர்ந்தபோது
நுழைவாயிலின்
கனத்த உலோகக்கதவுகள்
பூட்டப்பட்டிருந்தன.
பூக்களில்லாத மலர்வனமாய்
ஏகாந்தம் நிரப்பப்பட்டு
வெறிச்சோடியிருந்தது பள்ளிவளாகம்.
மகனை சுமந்துகொண்டிருப்பதான
நினைவில்
வழக்கமாய் அனிச்சையாய்
வந்திருக்கிறேன்
ஞாபகமறதியில்
அன்றையதினம் "ஞாயிற்றுக்கிழமை"
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
பெய்த நூல்
அந்தச்
சாலையோரப் பேருந்து
வழியில் எதிர்படும்
மூன்று ஊர்களைச்சுமந்து போகிறது.
எல்லா நிறுத்தங்களிலும்
தென்படுகிறார்கள்.
நாசியின்கீழ் பதினொன்றாய்
சளி பயணப்பட்ட உலர்சுவடுகள்;
புறங்கையால் எச்சில்துடைத்த
பக்கவாட்டு அடையாளங்கள்;
கருமையை வறுமைக்குப்பரிகொடுத்த
செம்பட்டை மயிர்கற்றைகள்;
மேலேயுயர்த்தவிடாது கைகளைத்தடுக்கும்
கிழிந்த கக்கங்கள்;
பவுடருக்குக்குப் பதிலாக விபூதிபூசப்பட்ட
கருத்தக் கன்னங்கள்;
நெய்தநூல்களைவிட மிகுதியாய்
பெய்தநூல்கலான சீருடைகளுடன்
எல்லா நிறுத்தங்களிலும்
பள்ளி செல்லும் பிள்ளைகள்.
இவர்களுடன்
இடதுபுறமாய் கோணியபடி
வயதான மூதாட்டியைப்போல்
கனத்து ஊர்கிறது
அந்த அரசுப்பேருந்து.
'குட்டிசாத்தான்களே' என்று
திட்டுமொழிகளால்
நடத்துனர்
செவிகளைக் கௌரவிக்கும்முன்
வெறுமையாகிவிடுகின்றன படிகள்.
ஒருபுறம்
புத்தக சிலுவைகளை சுமந்தபடி
நின்ற இடத்திலேயே
அறையப்பட்டிருக்கிறார்கள்
பேருந்துக்குள்
பிள்ளைஎசுகள்.
மறுபுறமோ
கிரீச்சிட்டு
சக்கரம் தேயும்படி
ஓட்டுனர் பாதங்களில்
வன்மமாய் மிதிபடும்
பிரேக்கால்.....
மண்டையுடைந்தாலும் பரவாயில்லை என்று
அந்தத் தொலைதூரப் பள்ளிக்குச்செல்லும்
எழைசசிறுமிகள்
கெட்டியாய்
பிடித்துக்கொண்டுதான் போகிறார்கள்....
கம்பிகளை அல்ல
நாட இல்லாத 'பாவாடைகளை '
சாலையோரப் பேருந்து
வழியில் எதிர்படும்
மூன்று ஊர்களைச்சுமந்து போகிறது.
எல்லா நிறுத்தங்களிலும்
தென்படுகிறார்கள்.
நாசியின்கீழ் பதினொன்றாய்
சளி பயணப்பட்ட உலர்சுவடுகள்;
புறங்கையால் எச்சில்துடைத்த
பக்கவாட்டு அடையாளங்கள்;
கருமையை வறுமைக்குப்பரிகொடுத்த
செம்பட்டை மயிர்கற்றைகள்;
மேலேயுயர்த்தவிடாது கைகளைத்தடுக்கும்
கிழிந்த கக்கங்கள்;
பவுடருக்குக்குப் பதிலாக விபூதிபூசப்பட்ட
கருத்தக் கன்னங்கள்;
நெய்தநூல்களைவிட மிகுதியாய்
பெய்தநூல்கலான சீருடைகளுடன்
எல்லா நிறுத்தங்களிலும்
பள்ளி செல்லும் பிள்ளைகள்.
இவர்களுடன்
இடதுபுறமாய் கோணியபடி
வயதான மூதாட்டியைப்போல்
கனத்து ஊர்கிறது
அந்த அரசுப்பேருந்து.
'குட்டிசாத்தான்களே' என்று
திட்டுமொழிகளால்
நடத்துனர்
செவிகளைக் கௌரவிக்கும்முன்
வெறுமையாகிவிடுகின்றன படிகள்.
ஒருபுறம்
புத்தக சிலுவைகளை சுமந்தபடி
நின்ற இடத்திலேயே
அறையப்பட்டிருக்கிறார்கள்
பேருந்துக்குள்
பிள்ளைஎசுகள்.
மறுபுறமோ
கிரீச்சிட்டு
சக்கரம் தேயும்படி
ஓட்டுனர் பாதங்களில்
வன்மமாய் மிதிபடும்
பிரேக்கால்.....
மண்டையுடைந்தாலும் பரவாயில்லை என்று
அந்தத் தொலைதூரப் பள்ளிக்குச்செல்லும்
எழைசசிறுமிகள்
கெட்டியாய்
பிடித்துக்கொண்டுதான் போகிறார்கள்....
கம்பிகளை அல்ல
நாட இல்லாத 'பாவாடைகளை '
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)