சனி, 17 ஏப்ரல், 2010

சங்கஇலக்கியம்:குறுந்தொகை

மைவடியும் எழுதுகோலைப்போல
இரத்தம்வடியும் அம்புகள்;
உதிரத்தால் சிவந்த
யானையின் வெள்ளைகொம்புகள்;
அசுரரை கொன்று
அதர்மத்தை வென்றதால்
குருதியை குடித்து
சதுப்புநிலமாகியிருக்கிறது போர்க்களம்;
எங்கும் எதிலும் சிவப்பின் ஆதிக்கம்.

காலில் வீரக்கழல்
கையில் வெற்றிவளை -அந்த
கந்தனை அலங்கரிக்கும்
காந்தள் மலர்
கன்னியை அலங்கரித்தல் தகுமோ !
கேள்விகள்
வேள்விகள் செய்கின்றன....

சங்கநூல்:குறுந்தொகை
ஆசிரியர்:திப்புத்தோளார்
பாடல் எண் :ஒன்று
பாடல்:
"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின்,செங்கோட்டு யானை,
கழல் தோடி,சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்கே "

2 கருத்துகள்:

  1. திரைத் தமிழனுக்கும் திரைக்கடலோடும் தமிழனுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. சமகால தமிழர்களுக்காக சங்கத்தமிழ் புதுக்கவிதை வடிவில்

    பதிலளிநீக்கு