திங்கள், 19 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை : 3

கனிந்ததேன்ரசம் நிறைந்துவழியும்
கறுத்தக்கிளைகளில் பூத்துச்சிரிக்கும்
குறிஞ்சிமலர்களின் குவலயமான
மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...

பரந்து விரவிக்கிடக்கும்
புவியைவிட பெரிதானது!
வையமணைத்து நனைக்கும்
கடலைவிட ஆழமானது!
தொடமுடியா தொலைவில்நிலைக்கும்
வானைவிட உயரமானது!

மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...

------------------------------------------------------------------------

நூல்: குறுந்தொகை
ஆசிரியர்: தேவகுலத்தார்
பாடல் என்:3பாடல்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ரெட்டை சுழி திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுக மாகி வெற்றிப்பாடளைத்தந்த வீ.ராமசாமியின் விமர்சனம் கவனக்குறைவால் நீக்கப்பட்டுள்ளது.அதற்காய் மன்னிப்பும் வணக்கங்களும்

    பதிலளிநீக்கு