யாரேனும்
உள்ளுறுத்தும் படியாய்
ஈனப்பார்வை பார்த்தால்
பதிலுக்கு
ஈரப்பார்வை பாருங்கள்.
வெடிக்க ஒலிக்கும் - பிறரின்
எக்காளச் சிரிப்பைவிட
சலனமற்ற
அடர்த்தியான மெளனம்
சக்தி வாய்ந்தது.
முத்துத் தண்டுவடத்தை - யாரும்
முறித்துப் போடவில்லை.
நிமிர்ந்து பாருங்கள்
தாழ்வு மனப்பான்மை
குனிந்துகொள்ளட்டும்.
நேற்று விழவைத்தவர்களை
இன்று அழவைப்பவர்களைத்
தொழுது வையுங்கள்.
விழவைத்து அழவைத்து - உங்களை
எழவைப்பவர்கள்
அவர்கள்தான்.
செந்தணலாய் எரியும்
அவமானச் சிவப்பை - உன்
கன்னங்களில்
காணத் துடிப்பவர்களுக்குக்
குளிர்நிலவாய் காட்சிகொடுங்கள்.
பள்ளம் பறித்தால்
இரண்டையும் கற்றுக்கொள்ளுங்கள்
விழுவதையும் எழுவதையும்.
சரமாரியாய் - உங்களை
குறிவைத்துப் பாயும்
சரங்களை சேமித்து
செய்துகொள்ளுங்கள்
உங்களுக்கான வலிய கேடயம்.
உங்கள் மீது
கல்லெறிகிறவர்களைக் கைத்தொழுங்கள் - அந்த
கற்களை அடுக்கிவைத்தால்
இமயம் செய்யலாம்.
யாரேனும்
சொற்களை முள்ளாக்கி
கீறினால் - இதயத்தில்
உழவு நடப்பதை
வலியுடன் மகிழுங்கள்.
நகுதல் ஒலிகளை
நாத கீதமாய்
நுகர்ந்து பாருங்கள்.
திட்டுமொழிகள் கூட
தித்திக்கும் மொழியாய் இனிக்கும்.
பொடிவைத்து பேசினால்
படி வைத்து பேசுங்கள்.
உளைச்சல்களே
விளைச்சல்கள் தரும்
வருத்தங்களே
திருத்தங்களைத் தரும்.
கை கொட்டிச்சிரித்தால்
கெட்டிச்சிரிப்பை கொடுங்கள் .
எல்லோருக்கும் பிடிக்காத சனம்
பிடித்தசனம் ஆகட்டும்
'விமர்சனம்'.
சிக்கிக் கொள்ளாதீர்கள்
கவலைகள்
வலைகள் வைத்திருக்கின்றன.
வலியோனாய் வாழ்ந்து
எளியோனாய் காட்சிக்கொடு
வாழ்க்கையில் பயணப்படுகிறபோது
பாதங்களைப் பதம்பார்க்கும்
கூரிய முட்களை
ஊசியாக்கிக் கொண்டால்
உதிரிப்பூக்கள்
மாலையாகிக்கொள்ளும்.
தோற்பதும் வெல்வதும்
வீரனுக்கு அழகு.
முதலில்
தோற்றுப்பழகு.
சனி, 29 மே, 2010
சனி, 8 மே, 2010
காதல் குறட்பாக்கள்: 27
மாந்தளிர் நிறம்கொண்ட
பூந்தளிர் பூவையைத்
தழுவும் இன்பம்
உன்னத உழைப்பில்
கிடைத்த உணவைப்
பிறருக்கும் கொடுத்து
தானும் சுவைக்கும்
இன்பத்திற்கு இணையானது.
இனிய உணவு
இரைப்பை நிரப்பும்
இனிய உணர்வு
இதயப்பை நிரப்பும்
--------------------------------------
குறள்: 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
பூந்தளிர் பூவையைத்
தழுவும் இன்பம்
உன்னத உழைப்பில்
கிடைத்த உணவைப்
பிறருக்கும் கொடுத்து
தானும் சுவைக்கும்
இன்பத்திற்கு இணையானது.
இனிய உணவு
இரைப்பை நிரப்பும்
இனிய உணர்வு
இதயப்பை நிரப்பும்
--------------------------------------
குறள்: 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
காதல் குறட்பாக்கள்:26
உயிராற்றல் பாய்கிற
உன் மூங்கில் தோள்களை
தொடும்போதெல்லாம்
என் விரல்
புல்லாங்குழல் ஆகிறதே.
எதனால் செய்யப்பட்டிருக்கின்றன
உன் தோள்கள் ?
அழகினாலா ?
அமிழ்தினாலா?
--------------------------------------------
குறள்:1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
உன் மூங்கில் தோள்களை
தொடும்போதெல்லாம்
என் விரல்
புல்லாங்குழல் ஆகிறதே.
எதனால் செய்யப்பட்டிருக்கின்றன
உன் தோள்கள் ?
அழகினாலா ?
அமிழ்தினாலா?
--------------------------------------------
குறள்:1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
காதல் குறட்பாக்கள்:25
உன்
ஆடை நழுவுகையில்
உன்
தோளை தழுவுகையில்
நான்
நினைக்க விரும்புகிற
பொருளாக நீ!
நான்
விரும்பி நினைக்கிற
பொருளாகவும் நீ!
---------------------------------------
குறள்:1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
ஆடை நழுவுகையில்
உன்
தோளை தழுவுகையில்
நான்
நினைக்க விரும்புகிற
பொருளாக நீ!
நான்
விரும்பி நினைக்கிற
பொருளாகவும் நீ!
---------------------------------------
குறள்:1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
காதல் குறட்பாக்கள்:24
அன்பே!
நீயொரு அதிசயத் தீ!
நெருங்கினால் பனிக்கிறாய்
விலகினால் எரிக்கிறாய்.
-------------------------------------------
குறள்:1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றால் இவள்
நீயொரு அதிசயத் தீ!
நெருங்கினால் பனிக்கிறாய்
விலகினால் எரிக்கிறாய்.
-------------------------------------------
குறள்:1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றால் இவள்
காதல் குறட்பாக்கள்:23
காதலியே !
உன் மெல்லிய தோள்தழுவி
பஞ்சணையிலும் நெஞ்சணையிலும்
பள்ளிகொள்ளும் துயிலின்பம்
சொர்கத்தின் சுகத்தைக்காட்டிலும்
சுகமானது.
எத்தனை கோடி
இன்பம்வைத்தாய் இறைவா !
இவளிடம்.
---------------------------------------------
குறள்:1103
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
உன் மெல்லிய தோள்தழுவி
பஞ்சணையிலும் நெஞ்சணையிலும்
பள்ளிகொள்ளும் துயிலின்பம்
சொர்கத்தின் சுகத்தைக்காட்டிலும்
சுகமானது.
எத்தனை கோடி
இன்பம்வைத்தாய் இறைவா !
இவளிடம்.
---------------------------------------------
குறள்:1103
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
செவ்வாய், 4 மே, 2010
காதல் குறட்பாக்கள்:22
தலைவலிக்கு எனவும்
ஜலதோசத்திற்கு எனவும்
தனித்தனி மாத்திரைகள் உண்டு .
அன்பே!
உன்னால் ஏற்பட்ட
காதல் காய்ச்சலுக்கு
நீதானே மருந்து .
காதல் மருத்துவமனையில்
அவசர சிகிச்சைபிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்
முத்த மாத்திரைகளை
மொத்தமாய் கொண்டுவா!
-----------------------------------
குறள்:1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
ஜலதோசத்திற்கு எனவும்
தனித்தனி மாத்திரைகள் உண்டு .
அன்பே!
உன்னால் ஏற்பட்ட
காதல் காய்ச்சலுக்கு
நீதானே மருந்து .
காதல் மருத்துவமனையில்
அவசர சிகிச்சைபிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்
முத்த மாத்திரைகளை
மொத்தமாய் கொண்டுவா!
-----------------------------------
குறள்:1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)