சனி, 8 மே, 2010

காதல் குறட்பாக்கள்:26

உயிராற்றல் பாய்கிற
உன் மூங்கில் தோள்களை
தொடும்போதெல்லாம்
என் விரல்
புல்லாங்குழல் ஆகிறதே.
எதனால் செய்யப்பட்டிருக்கின்றன
உன் தோள்கள் ?

அழகினாலா ?
அமிழ்தினாலா?
--------------------------------------------
குறள்:1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக