சனி, 8 மே, 2010

காதல் குறட்பாக்கள்: 27

மாந்தளிர் நிறம்கொண்ட
பூந்தளிர் பூவையைத்
தழுவும் இன்பம்
உன்னத உழைப்பில்
கிடைத்த உணவைப்
பிறருக்கும் கொடுத்து
தானும் சுவைக்கும்
இன்பத்திற்கு இணையானது.

இனிய உணவு
இரைப்பை நிரப்பும்
இனிய உணர்வு
இதயப்பை நிரப்பும்
--------------------------------------
குறள்: 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக