காதலியே !
உன் மெல்லிய தோள்தழுவி
பஞ்சணையிலும் நெஞ்சணையிலும்
பள்ளிகொள்ளும் துயிலின்பம்
சொர்கத்தின் சுகத்தைக்காட்டிலும்
சுகமானது.
எத்தனை கோடி
இன்பம்வைத்தாய் இறைவா !
இவளிடம்.
---------------------------------------------
குறள்:1103
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக