சகாராவிலிருந்து காஸ்மீரம் வந்து சேர்ந்ததைப் போன்ற உணர்வை ஏசியின் குளிர் ஒத்தடம் ஏற்படுத்த தொடங்கி விட்ட அந்த நேரம்,தொண்டை கரகரத்து பேசமுடியாமல் போயிருந்ததை யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் என் சக்திக்கு ஏற்றார்போல இரண்டுமூன்று வார்த்தைகளில் அனைவரிடமும் அறிமுகத்தை மரியாதை நிமித்தமாய் முடித்துக்கொண்டு புதிதாக அன்று சந்திக்கும் தமிழிடம் சிறப்பு விசாரிப்புகளை வைத்துவிட்டு சிலபடங்களில் நடித்திருந்தாலும் கச்சிதமான கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரைப் பதித்த நிகோலஸ் அவர்களை நெஞ்சார வாழ்த்திவிட்டு முடிக்கிறேன்.பின் மனமும் கண்களும் ஸ்ரீஜி இருக்கும் திசையில் நிலை குத்துகிறது.
அவர் மொழிகளற்ற மேலான புன்னகையால் என்னை விசாரிப்பதை நான் கூர்ந்து கவனிக்கிறேன்.முகத்தின் இரண்டு புறமும் காதோரம் தொடங்கி கன்னத்தின் கீழ் தாடைப்பகுதிவரை நீண்டிருந்த கிர்தாவை வீச்சரிவாளாய் முருக்கிவிடப்பட்டிருந்த மீசையின் நுனிப்பகுதிகள் தொட்டுவிளையாடிக்கொண்டிருந்தன.அகலவிரித்து இந்த பூமி கிரகத்தை விழுகுவதைப் போல பார்க்கும் இருவிழிகளில் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது.அகன்று பரந்திருந்தது ஒளிவீசும் நெற்றி.இப்படியான தோற்றத்தில் கம்பீரமாக காட்சித்தரும் ஸ்ரீஜியில் முகத்தில் இடைவிடாமல் தவழும் புன்னகை அவரது மெல்லிதயத்தை பிரதிபளித்துக்கொண்டிருன்தது .மாலைநேரத்து மஞ்சள் நிலா நிறத்தில் ஒரு அழகான குர்தா முழங்காலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது ,உடன் நீலம் பாரித்த வெள்ளைநிறத்தில் வேட்டி.
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இங்கு மொத்த அடையாளங்களோடு ஒரு முழுமையான தமிழனாய் ஸ்ரீஜி அமர்ந்திருந்தது, ஆச்சர்யத்தை அனைவரிடமும் பற்றவைக்கவே செய்திருந்தது.
மேலை மண்ணில் இசைத்தமிழனாக,எழுசுர பிரியர்களின் நாயகனாக நீண்ட வருடங்களாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் ஆடையிலும் மொழியிலும் பச்சைத் தமிழனின் பாசமுகவரி இருந்ததை பார்த்து பார்த்து பூரித்தேன். அவசரகதியில் ஜீன்ஸ் அணித்து சென்றிருந்த என்னை பார்த்து அவர் பேசும்போதெல்லாம் மனதிற்குள் சுருக்கென்று வலிகொண்டேன். ஆடை என்பதை வெறும் உடல் மறக்கும் நாகரீகத்தின் பொருளாக சமூக விஞ்ஞானிகள் கருதுவது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று உணரலானேன்.ஒரு இனத்தின் பண்பாட்டு ,கலாசாரம்,சுற்றுச்சூழல்,தொழில்முறை,உற்பத்தி போன்ற பலவற்றோடும் நாம் அணியும் ஆடை சம்மந்தப்பட்டிருக்கிறது என்கிற ஞானம் அன்று உதயமானது.
பேசும்போது இடையில் ஆங்கில வார்த்தைகளை குழைத்து ஒரு கலவைமொழியாக எப்படி பேசப்போகிறார் என்ற என் எதிர்ப்பார்ப்பிற்கு ஸ்ரீஜியில் எதார்த்த தமிழ் ஆப்பு வைத்தது. லேசான சென்னை செந்தமிழின் உச்சரிப்போடு இயல்பான தமிழ் விவாதத்தை இன்னும் இலகுவாக்கியது.கர்வம் தொலைத்த ஒரு கம்பீரமான மனிதரை அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
முகநூலில் அறிவார்ந்த தகவல்களையும் பதிவதிலும் ,நடப்பு நிகழ்வுகளை சுடச்சுட முன்வைப்பதிலும்,இந்திய தேசத்தின் சமூக அரசியல் நிலைகளை அலசுவதிலும் ,நகைச்சுவை உணர்விலும் ,சமயோசிதத அறிவிலும் வல்லமையைக் காட்டிய அந்த பேராளுமையை நேரில் பார்க்கிற காட்சி இன்னும் எனக்குள் நம்பமறுக்கும் நினைவுச் சூறாவளியை ஏற்படுத்துகிறது.ஸ்ரீஜியைப் பார்த்து நானும் புன்னகைக்கிறேன்.
'இவர்த எனக்கு ,முகநூலில் நல்ல தமிழில் சிறப்பான பதிவுகளை பதிய தூண்டுதலாக இருந்தவர்' என்று அருகிலிருந்த தோழமைகளிடம் என்னை பற்றி பெருந்தகைமையோடு எடுத்துச் சொல்லி என்னை கெளரவித்தார்.ஏசியின் அளவு திடீரென அடர்த்தியானத்தை அந்த வினாடியில் உணரலானேன்.அந்த பாதிப்பிற்கு உங்கள் பதிவுகளே காரணம் என்று நான் அவரது பாராட்டை அவரிடமே திருப்பித்தர முயற்சிக்கிறேன்.மறுக்கிறார்.நெகிழ்கிறேன்..மற்றவர்களும்.
மிருதங்கத்தில் உலகறிந்த கலைஞராக உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்து ஆசிய நாட்டில் பெருமையை அகில உலகிற்கே உணர்த்திக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் கலைஞானமும், செழிப்பான செல்வமும், மெத்தப்படித்த மேதமையும் கொண்ட ஒரு பேராளுமை மிக சாதாரணமாக என் முன்னே அமர்ந்திருந்த காட்சி என்னை இன்னும் ஒருமுறை மெய்சிலிர்க்கவே செய்தது .ஒரு ஜென் துறவியைப் போல அமைதியாக காட்சியளித்துக்கொண்டே கடினமான ஞான பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார்.பார்க்கிறேன் படிக்கிறேன் கற்றுக்கொள்கிறேன் ...இப்படியாய் எல்லாம் நடக்கிறது.
வெளிச்சங்களால் நனைந்துகொண்டிருக்கும் அந்த ஆப்ப கடையின் எல்லா திசைகளிலும் சில மெளன இடைவெளிகளில் கண்களை வட்டமிடுகிறேன்.குடும்பத்துடன் கொத்துகொத்தாக வந்து அவரவர்களுக்கென மேசைகளை ஆக்கிரமித்துக்கொண்டு வகைவகையாய் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சிலர் ஆர்டர் செய்துவிட்டு வெகுநேரம் காத்திருப்பது விரக்தி வியாபித்த அவர்களின் முகத்தில் தெரிகிறது.
சிலர் அந்த காத்திருப்பில் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்து காலி இருக்கைகளில் கண்களை ஓடவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறுகிறார்கள்.பரிமாறுவதற்காகவும் ,ஆர்டர் எடுப்பதற்காகவும் வடக்கத்திய பெண்களும் ஆண்களும் எல்லா இருக்கைகளுக்கும் சென்று பணிவோடும் மரியாதையோடும் ஏதோ ரகசியம் பேசுவைதைப் போல பேசி நகர்கிறார்கள்.இறுதியாய் எங்கள் மேசை அவர்களால் உளவு பார்க்கப்படுகிறது.
இன்னும் வரவேண்டியவர்கள் வந்து இணைத்துகொள்ளட்டும் அதுவரையில் நாம் ஏதாவது ஆர்டர் செய்து தொடங்கலாமே என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்க ,ஸ்ரீஜியில் விருந்தோம்பல் தொடங்குகிறது.அவர் கேட்ட முதல் கேள்வி வெகுநேரம் அங்கு பட்டிமன்றத்தை ஏற்படுத்தவில்லை.சைவமா? அசைவமா?என்பதுதான் அது.ஸ்ரீஜியில் தீர்ப்பு வாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லப்பட்டதால் அந்த இரண்டும் கலந்த உணவுக்கலவைகள் மேசையை அலங்கரிக்கின்றன.டொமேடோ சூப்பில் தொடங்கி சில்லி கோபி பிஷ் பிரை மஸ்ரூம் பிரை வெஜிடபுள் கட்லெட் என்று முதல்கட்ட பதார்த்தங்கள் வந்து சேருகின்றன.இப்போது மேஜையில் கைவைப்பதற்கு இடமில்லை.
ஆனால் எனக்கு உணவைவிட உரையாடல் பிரதானமாக தெரிந்தது.பேசிக்கொண்டே அசைபோட்டோம் உணவையும் உணர்வையும்.ஒரு கேள்வியை ஸ்ரீஜியின் மீது வீசிவிட்டு அவரின் நூறு பதிலுக்காக எதிர்ப்பார்த்திருந்தேன். என் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செய்கிறார்.
சூடான சமையலையும் சுவையான விவாதத்தையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் எல்லோரும் கண்ணாடி சாளரத்தை திரும்பிப்பார்த்து விழியுயர்த்தி வரவேற்கிறார்கள்...
சனி, 14 மே, 2011
பூவலூராருடன் ஒருநாள் - பகுதி I
நெருப்பை கொளுத்திவிட்டு சன்னலுக்குள் கொலைவெறியோடு எட்டிப்பார்க்கும் சூரியனை அடிக்கடி முறைத்துக்கொண்டே , கூடவே சென்னையை செல்லமாக மனதிற்குள் சலித்துக்கொண்டு ஒரு கையில் கைக்குட்டையால் இடைவிடாது வழியும் வியர்வை நதிகளை ஒற்றி எடுத்துக்கொண்டும் மறுகையால் வகுப்பு முடிவதற்கு இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக அலைபேசியை ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் பார்க்காததைப் போல பார்த்தேன்.
சைலெண்டில் வைத்திருந்த அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராததை உறுதிபடுத்திக்கொண்டு,வழக்கம் போல வந்து குவியும் எஸ் எம் எஸ்-களை அசட்டை செய்யும் பரபரப்பில் ஒவ்வொன்றாக டெலீட் செய்வதற்காக எனது விரல்கள் விரையும் போது அன்பழகனிடமிருந்து வந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சந்தோசம் மேலிட எப்போது இந்த வகுப்பு முடியும் என்ற எரிச்சலும் தலைத்தூக்கியது.என் ஏக்கம் பயிற்சியாளரின் மனதிற்குள் உள்ளுணர்வை ஊடுருவி இருக்கக்கூடும்.வகுப்பு முடிந்தது.
எல்லோரும் வெளி ஏறுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.சூரிய நெருப்பு என் வருகைக்காக காத்திருந்து வார்ம் வெல்கம் கொடுத்தது.என்னை வரவேற்ற சூரியன் தன் அணைப்பை விளக்கி கொள்ளவே இல்லை.சூரியனின் இந்த அசௌகர்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வழியே குறுக்கிட்ட ஆட்டோவில் இடது கையை குறுக்கே நீட்ட நின்ற ஆட்டோவிற்குள் குனிந்து அமர்ந்து நிமிர்ந்ததும்தான் ஆசுவாசமாக இருந்தது. சூரியனிடமிருந்து தப்பித்தது போர்க்களத்திலிருந்து பகையாளியிடமிருந்து பிழைத்து வந்ததைப் போன்ற உணர்வை என்னுள் ஏற்படுத்த.ஆட்டோவின் இருவழி சாளரம் எனக்கு விசிறி வீசிக்கொண்டிருந்தது.நான் அந்த சில வினாடிகளில் அரசனாக சக்கர பல்லக்கில் பயணப்பட்டேன்.
அறைவந்து சேர,நான் மின்னல் வேகத்தில் தயாரானேன்.குளியல்,உடைமாற்றம்,புறப்பாடல் எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட காலத்திற்கும் சேப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆடோவா? பேருந்தா? என்ற மனசலனங்களுக்கு இடையே காத்திருந்த அந்த முன்னிரவுப் பொழுதில் குட்டி பேருந்தைப் போல ஒரு சேர் ஆட்டோ வந்து நின்றது.'வடபழனி போகுமா' கேள்விக்கு 'போகும் ,பாண்டி பஜாரிலிருந்து பக்கம்'பதில் திருப்தி அளிக்க சம்மதத்தோடு உள்ளே அமர்துகொண்டேன்.புது வாகனம் போலிருக்கக்கூடும் மெதுவாகவே நகர்கிறது.
குறிப்பிட்ட அந்த சந்திப்பிற்கு நாம் காலதாமதமாக போகிறோமே என்ற குற்ற உணர்வோடு விரைவாக ஓட்டுமாறு டிரைவருக்கு மனத்தால் இடைவிடாமல் எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.அவர் விரைய முடியாத அளவிற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் எங்கள் வாகனத்தை அணைத்துக்கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
காற்றில்லாத உலகத்தில் வசிப்பவனைப் போல துடித்து வழியும் வியர்வைத் துளிகளை துடைக்கிறேன் .கைக்குட்டை மேலும் துடைக்க முடியாத அளவிற்கு முழுதுமாக நனைந்தே போனது.புதிய நகரத்தில் இரவு நேரத்தில் எப்படிப் போகப்போகிறோமோ என்று நினைத்திருந்த வேளையில்தான் வாகனம் நிற்கிறது.எல்லோரும் இறங்குகிறார்கள். 'வடபழனி வந்துருச்சா' என்று கேட்ட கேள்வி என்னை வெளியூர்க்காரன் என்பதை டிரைவருக்கு அறிவித்திருக்கக்கூடும்.'இங்கே எறங்கி பஸ் புடிச்சா ரெண்டாவது ஸ்டாப்'. பத்து ரூபாயை அவருடைய உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு ஒரு குறுக்கு சாலைக்குள் அடுத்த பேருந்திற்காக நகர்கிறேன்.அந்த நிறுத்தத்தில் காத்திருப்பில் சுமார் நாற்பது பேர் ,அந்த ஜன சங்கமத்தில் நான் கலந்துகொண்டேன்.
'வடபழனி போறதுக்கு பஸ் வருமா?' '12B என்ற பதில் மட்டும் தெறிக்கிறது .அதற்காய் காத்திருந்து அந்த வழியாக வரும் ஒவ்வொரு பேருந்தின் நெற்றிப் பொட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிறுத்தங்களை அந்த குறைந்த இருட்டில் விழிப்புணர்வோடு வாசிக்க தொடக்கி ஒரு பத்துநிமிடம் வழிந்தோட இறுதியாய் அந்த எண் குறிப்பிட்ட ஒரு நீளமான பேருந்து மனித தொங்கும் தோட்டத்தை சுமந்துகொண்டு திணறிக்கொண்டு நிற்கிறது.கூட்டத்தின் நெரிசலோடு நான் ஐக்கியமாகிறேன்.
சிலவினாடிகளுக்குள் முழுதுமாக நான் நனைந்துபோய் இருந்தேன்.பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது.வடபழனி எனது அடுத்த கண்டுபிடிப்பு உலகமாக என் எண்ணத்தில் விரிந்தது. பூசைப்பொருட்களோடு சில தாய்மார்கள் அமர்ந்திருந்ததை பார்த்த நான் அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கினால் வடபழனி கோயில் வரும் என்று நானே முடிவுசெய்துகொண்டேன். இறங்கிக்கொண்டேன் அப்படியே நடந்தது. ஆனால் எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் நடக்கவேண்டி இருக்கிறது என்பதை மீண்டும் கேட்டு முடிவு செய்துகொண்டவனாய் நடக்கலானேன்.
ஒரு அழகான திருப்பத்தில் விளக்குகளால் மின்னும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த கடை.முகப்புக் கண்ணாடியில் மேலிருந்து கீழாக தண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் போன்ற காட்சியை என் கண்ணின் நிறுத்தி நானும் மனத்தால் குளிர்ந்துகொண்டேன். ஆனால் உடல் கொதிப்பை நிறுத்திய பாடில்லை.வாசல் வரையில் வந்துநிற்கவும் கதவை ஒருவர் திறக்கிறார்,நிதானமாக நுழைகிறேன்.
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் வலது மூலையில் திறந்திருந்த வாசல் வழி பார்ப்பதற்குள் என்னை குளிரூட்டப்பட்ட அந்த முதல் வரவேற்பறை எனக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க தொடங்கி விட்டது.எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கும் இந்த விடுதியில் எங்கே அமர்ந்திருப்பார்கள் என்று தேடலோடு நுழையும் போது எதிரில் தேனம்மை என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டவராய் புன்னகைத்து வரவேற்கிறார்.இருகரம் வணங்கிக்கொண்டே நெருங்குகிறேன் முதுகைக் காண்பித்தபடி அமர்ந்திருந்த நால்வரில் ஆல்மார்க் தங்க நிறத்தில் கருப்பு மல்லிகைகளை கணத்தில் தாடியை வளர்த்தி இருந்த அந்த விருந்தினர் திருப்பிப் பார்க்கிறார்.சந்தோசம் என் வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறது.அவரது ஆச்சர்யம் சிரிப்பின் வரவேற்பு என்னை இதயத்தை நிறைக்கிறது.அவர்தான் முகநூலில் எழுத்துக்களால் தோழமையான அறிவுஜீவி ஸ்ரீஜி.ஆச்சர்யம்,ஆனந்தம்,மனதிற்குள் ஆரவாரம்..இவற்றின் கலவையால் நிறைகிறேன்.
வரிசையாக தமிழ்ச்செல்வி, துணைவனார் நிக்கோலஸ்,தன் கேமரா குழந்தையோடு வருகைதந்திருந்த ஜெயராஜ் பாண்டியன்மற்றும் பலர் வட்டமேஜையில் இணைந்திருந்தனர்.அருகில் சில நண்பர்கள் எல்லோரையும் வணங்கி முடித்துவிட்டு அமரலானேன்.செய்தி அனுப்பிய அன்பையும் கயலையும் காணவில்லை.செல்வா வருவதாக தலைப்பு செய்தி சொன்னார்கள். சின்ன சின்ன விவாதங்கள் விசாரிப்புக்கள்...
சைலெண்டில் வைத்திருந்த அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராததை உறுதிபடுத்திக்கொண்டு,வழக்கம் போல வந்து குவியும் எஸ் எம் எஸ்-களை அசட்டை செய்யும் பரபரப்பில் ஒவ்வொன்றாக டெலீட் செய்வதற்காக எனது விரல்கள் விரையும் போது அன்பழகனிடமிருந்து வந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சந்தோசம் மேலிட எப்போது இந்த வகுப்பு முடியும் என்ற எரிச்சலும் தலைத்தூக்கியது.என் ஏக்கம் பயிற்சியாளரின் மனதிற்குள் உள்ளுணர்வை ஊடுருவி இருக்கக்கூடும்.வகுப்பு முடிந்தது.
எல்லோரும் வெளி ஏறுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.சூரிய நெருப்பு என் வருகைக்காக காத்திருந்து வார்ம் வெல்கம் கொடுத்தது.என்னை வரவேற்ற சூரியன் தன் அணைப்பை விளக்கி கொள்ளவே இல்லை.சூரியனின் இந்த அசௌகர்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வழியே குறுக்கிட்ட ஆட்டோவில் இடது கையை குறுக்கே நீட்ட நின்ற ஆட்டோவிற்குள் குனிந்து அமர்ந்து நிமிர்ந்ததும்தான் ஆசுவாசமாக இருந்தது. சூரியனிடமிருந்து தப்பித்தது போர்க்களத்திலிருந்து பகையாளியிடமிருந்து பிழைத்து வந்ததைப் போன்ற உணர்வை என்னுள் ஏற்படுத்த.ஆட்டோவின் இருவழி சாளரம் எனக்கு விசிறி வீசிக்கொண்டிருந்தது.நான் அந்த சில வினாடிகளில் அரசனாக சக்கர பல்லக்கில் பயணப்பட்டேன்.
அறைவந்து சேர,நான் மின்னல் வேகத்தில் தயாரானேன்.குளியல்,உடைமாற்றம்,புறப்பாடல் எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட காலத்திற்கும் சேப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆடோவா? பேருந்தா? என்ற மனசலனங்களுக்கு இடையே காத்திருந்த அந்த முன்னிரவுப் பொழுதில் குட்டி பேருந்தைப் போல ஒரு சேர் ஆட்டோ வந்து நின்றது.'வடபழனி போகுமா' கேள்விக்கு 'போகும் ,பாண்டி பஜாரிலிருந்து பக்கம்'பதில் திருப்தி அளிக்க சம்மதத்தோடு உள்ளே அமர்துகொண்டேன்.புது வாகனம் போலிருக்கக்கூடும் மெதுவாகவே நகர்கிறது.
குறிப்பிட்ட அந்த சந்திப்பிற்கு நாம் காலதாமதமாக போகிறோமே என்ற குற்ற உணர்வோடு விரைவாக ஓட்டுமாறு டிரைவருக்கு மனத்தால் இடைவிடாமல் எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.அவர் விரைய முடியாத அளவிற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் எங்கள் வாகனத்தை அணைத்துக்கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
காற்றில்லாத உலகத்தில் வசிப்பவனைப் போல துடித்து வழியும் வியர்வைத் துளிகளை துடைக்கிறேன் .கைக்குட்டை மேலும் துடைக்க முடியாத அளவிற்கு முழுதுமாக நனைந்தே போனது.புதிய நகரத்தில் இரவு நேரத்தில் எப்படிப் போகப்போகிறோமோ என்று நினைத்திருந்த வேளையில்தான் வாகனம் நிற்கிறது.எல்லோரும் இறங்குகிறார்கள். 'வடபழனி வந்துருச்சா' என்று கேட்ட கேள்வி என்னை வெளியூர்க்காரன் என்பதை டிரைவருக்கு அறிவித்திருக்கக்கூடும்.'இங்கே எறங்கி பஸ் புடிச்சா ரெண்டாவது ஸ்டாப்'. பத்து ரூபாயை அவருடைய உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு ஒரு குறுக்கு சாலைக்குள் அடுத்த பேருந்திற்காக நகர்கிறேன்.அந்த நிறுத்தத்தில் காத்திருப்பில் சுமார் நாற்பது பேர் ,அந்த ஜன சங்கமத்தில் நான் கலந்துகொண்டேன்.
'வடபழனி போறதுக்கு பஸ் வருமா?' '12B என்ற பதில் மட்டும் தெறிக்கிறது .அதற்காய் காத்திருந்து அந்த வழியாக வரும் ஒவ்வொரு பேருந்தின் நெற்றிப் பொட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிறுத்தங்களை அந்த குறைந்த இருட்டில் விழிப்புணர்வோடு வாசிக்க தொடக்கி ஒரு பத்துநிமிடம் வழிந்தோட இறுதியாய் அந்த எண் குறிப்பிட்ட ஒரு நீளமான பேருந்து மனித தொங்கும் தோட்டத்தை சுமந்துகொண்டு திணறிக்கொண்டு நிற்கிறது.கூட்டத்தின் நெரிசலோடு நான் ஐக்கியமாகிறேன்.
சிலவினாடிகளுக்குள் முழுதுமாக நான் நனைந்துபோய் இருந்தேன்.பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது.வடபழனி எனது அடுத்த கண்டுபிடிப்பு உலகமாக என் எண்ணத்தில் விரிந்தது. பூசைப்பொருட்களோடு சில தாய்மார்கள் அமர்ந்திருந்ததை பார்த்த நான் அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கினால் வடபழனி கோயில் வரும் என்று நானே முடிவுசெய்துகொண்டேன். இறங்கிக்கொண்டேன் அப்படியே நடந்தது. ஆனால் எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் நடக்கவேண்டி இருக்கிறது என்பதை மீண்டும் கேட்டு முடிவு செய்துகொண்டவனாய் நடக்கலானேன்.
ஒரு அழகான திருப்பத்தில் விளக்குகளால் மின்னும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த கடை.முகப்புக் கண்ணாடியில் மேலிருந்து கீழாக தண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் போன்ற காட்சியை என் கண்ணின் நிறுத்தி நானும் மனத்தால் குளிர்ந்துகொண்டேன். ஆனால் உடல் கொதிப்பை நிறுத்திய பாடில்லை.வாசல் வரையில் வந்துநிற்கவும் கதவை ஒருவர் திறக்கிறார்,நிதானமாக நுழைகிறேன்.
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் வலது மூலையில் திறந்திருந்த வாசல் வழி பார்ப்பதற்குள் என்னை குளிரூட்டப்பட்ட அந்த முதல் வரவேற்பறை எனக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க தொடங்கி விட்டது.எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கும் இந்த விடுதியில் எங்கே அமர்ந்திருப்பார்கள் என்று தேடலோடு நுழையும் போது எதிரில் தேனம்மை என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டவராய் புன்னகைத்து வரவேற்கிறார்.இருகரம் வணங்கிக்கொண்டே நெருங்குகிறேன் முதுகைக் காண்பித்தபடி அமர்ந்திருந்த நால்வரில் ஆல்மார்க் தங்க நிறத்தில் கருப்பு மல்லிகைகளை கணத்தில் தாடியை வளர்த்தி இருந்த அந்த விருந்தினர் திருப்பிப் பார்க்கிறார்.சந்தோசம் என் வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறது.அவரது ஆச்சர்யம் சிரிப்பின் வரவேற்பு என்னை இதயத்தை நிறைக்கிறது.அவர்தான் முகநூலில் எழுத்துக்களால் தோழமையான அறிவுஜீவி ஸ்ரீஜி.ஆச்சர்யம்,ஆனந்தம்,மனதிற்குள் ஆரவாரம்..இவற்றின் கலவையால் நிறைகிறேன்.
வரிசையாக தமிழ்ச்செல்வி, துணைவனார் நிக்கோலஸ்,தன் கேமரா குழந்தையோடு வருகைதந்திருந்த ஜெயராஜ் பாண்டியன்மற்றும் பலர் வட்டமேஜையில் இணைந்திருந்தனர்.அருகில் சில நண்பர்கள் எல்லோரையும் வணங்கி முடித்துவிட்டு அமரலானேன்.செய்தி அனுப்பிய அன்பையும் கயலையும் காணவில்லை.செல்வா வருவதாக தலைப்பு செய்தி சொன்னார்கள். சின்ன சின்ன விவாதங்கள் விசாரிப்புக்கள்...
திங்கள், 2 மே, 2011
துணிப்பந்து -சிறுகதை
புத்தகச் சிலுவைகளை வாரம்தோறும் தூக்கி தூக்கி ரணமாகிப்போன பள்ளி செல்லும் பிள்ளை ஏசுகள், ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் தங்கள் பாரங்களை எல்லாம் தற்காலிகமாய் இறக்கிவைத்துவிட்டு கல்வி கிரகத்திலிருந்து விளையாட்டு கிரகத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக கால்பதித்துக்கொண்டிருந்தனர். அந்த குழந்தைகளின் பாதம் பட்டதும் பூமாதேவி சந்தோசத்தில் சிலிர்த்துக்கொண்ட ஈரம் முற்றிலுமாக காயாமல் இருந்த அந்த ஒரு பொழுதில் விளையாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தேறிக்கொண்டிருந்தன.
திருநீரை முகப்பவுடராக பூசிக்கொண்டு ஒரு சிறுவன்; கால் சட்டையில் தபால் ஆபீஸ் வைத்துக்கொண்டு வந்த இன்னொருவன்; இளவரசன் மணிமுடி சூடியதைப் போல இலவம் பஞ்சு குல்லாய் அணிந்துகொண்டு வந்த மற்றொருவன்;சட்டையில் மேல் பொத்தானுக்கு பதிலாக குத்தப்பட்டிருந்த பின்னூசியை கைகளால் மறைத்தபடி ஒருவன்;இப்படியாய் ஒவ்வொருவரும் அந்த மலைகளின் தேசத்தில் வனங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அந்த சிற்றூரில் எல்லா வீடுகளுக்கும் ஒரே முற்றமாக இருந்த வீதியில் திரண்டிருந்தனர்.
மட்டைப்பந்து விளையாட்டுக்கு அந்த வீதி தயாராக இருந்தது. இவர்களும் விளையாட்டுக்கு தயாராய்.ஆனால் மட்டையும் பந்தும் இன்னும் தயாராகவில்லை.
நேற்றைய விளையாட்டில் மட்டை முறிந்து போனதற்கு மாற்றாக புதிய மட்டையை தேடிக்கொண்டிருந்தனர். 'எல்லா சரிடா, இப்ப பேட்டுக்கு என்ன பண்றது' என்று கேட்ட அந்த சிறுவனின் குரலில் விளையாடப்போகிறோம் என்ற குஷியும் மட்டை இல்லையே என்ற ஏக்கமும் நன்றாக தெரிந்தது.'டே எங்க வீட்டுலே ஒரு பேட்டு இருக்குதுடா ,நா எடுத்துட்டு வர்றே 'என்று அங்கிருந்து அகன்ற அந்த சிறுவன் அவர்கள் உள்ளத்திலும் உற்சாக நெருப்பை பற்றவைத்தான்.
பேட்டுடன் வரவிருக்கும் அவனது வருகையை ஆவலுடன் வீதியில் கடைசியில் உள்ள செமெண்டு திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். 'டே இவனே ,அவங்க வீட்லே பேட் உண்மையிலே இருக்கா' என்று ஒருவன் சந்தேகத்தை எழுப்பினான்.'இப்ப பாரு ,இத்தனே நாளா ஒளிச்சி வச்சிருந்த புது பேட்டிலே நம்ம விளையாடத்த போறோம்' 'ஹையா..ஜாலி..இன்னிக்கு கடலைமிட்டாய் பெட்டு கட்டி விளையாடுவோமா... ?என்கிட்டே இருபத்தஞ்சி பைசா இருக்கு' இப்படியாய் இவர்களின் கேள்விகளும் பதில்களும் எதிர்ப்பார்ப்புகளும் சந்தோஷ நெருப்பை கொழுந்துவிட்டு எரியவைத்த அந்த உற்சாக தருணத்தில் தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மட்டை கொண்டுவரச் சென்ற சிறுவனின் வீட்டு வாசலை இவர்கள் அனைவரின் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.முதுகிற்குப் பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டு ஏதோ கொண்டுவந்தான் அந்த சிறுவன் .'டே அவே வராண்டா' 'சட்டைக்குப் பின்னாலே ஒளிச்சிகொண்டுவரா பாத்தியா' மற்ற பலரும் ஆளுக்கொரு யூகங்களை அவரவர்கள் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் உரையாடல் முடிவதற்கு முன்பாகவே புன்னகையுடனும் பெருமிதத்துடனும் அவர்களின் முன்னே வந்து நின்றான் போர்முடித்து வென்ற மாவீரனாய்.
'டே காட்டுடா.' 'ஏண்டா ஒளிக்கிரே' 'வா உடனே விளையாடுவோம்' 'என்று பலரும் பலவாறு கேட்க அதிலொருவன் அவனது முதுகிற்குப் பின்னால் ரகசியமாய் சென்று அவனுக்கு அறியாமலேயே பார்த்துவிட்டு கிண்டலாய் கேலியாய் சிரிப்பிற்கு பதிலாக காற்றைமட்டுமே வெளியேற்றி 'கெக்கே கெக்கே உஷ் உஷஸ் புஷ் புஷ் ' என்று சிரித்தது அனைவருக்கும் புதிரை ஏற்படுத்தினான் .சிலிண்டர் வடிவிலான மரத்துண்டை கோடரியால் நான்காக பிளந்ததில் ஒரு பகுதியை பேட்டுக்கு பதிலாக அவன் கொண்டு வந்ததை அனைவரும் உறுதி செய்தார்கள்.கிண்டலில் அந்த இடம் அதிர்ந்தது.
'ஏண்டா கிண்டல் பண்றீங்க,இது எங்கம்மா சமைக்கறதுக்காக எடுத்து வச்ச காஞ்ச மரக்கட்டை ,விளையாடனும்னு உங்களுக்காகத்தான் தெரியாமே கொண்டு வந்தே' என்று அவன் நியாயப்படுத்தியதில் இருக்கும் அன்பையும் நட்பையும் புரிந்துகொண்ட ஒருவன் உடனே ஓடி ஒரு அரிவாளை கொண்டுவந்தான்' இதோ பாருங்கடா...இந்த மரக்கட்டையை அப்படியே புடிச்சு விளையாடுறதுக்கு கைப்பிடி இல்லே, இந்த கத்தியாலே முதல்லே கொஞ்சகொஞ்சமா சீவி கைப்பிடி செய்வோம்,பிறகு குத்தாத மாதிரி நைசா சீவி பேட் பண்ணிரலாம் ' என்று நம்பிக்கை தெரிவிக்க அதற்கான முயற்சியில் அனைவரும் இறங்கினார்கள்.
சில நிமிடங்களுக்குள் குத்திக் கிழிக்கும் மரச் செதில்கள் நிறைந்த அந்த மரக்கட்டை வழுவழுப்பாக மாறியிருந்தது,கூடவே கைப்பிடியும்.' விளையாடறதுக்கு பேட்டு ரெடியாயிடுச்சு பந்துக்கு எங்கடா போறது?' என்று மற்றொருவன் கேள்வி கேட்க ,துணிப்பந்து செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.அதற்க்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து சின்ன சின்ன துணிகளை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கேரட் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாத படி வேலியில் கட்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் பனியிலும் இற்றுப் போயிருந்த துணியும் , சூடான பாத்திரங்களை இறக்கிவைப்பதற்காக சமையல் கட்டில் பயன்படுத்தும் கரிபடிந்த துணியும்,சமைத்த சமையல் பாத்திரத்திற்கும் வடிக்கும் கஞ்சிப்பாத்திரத்திர்க்கும் இடையில் முட்டுக்கொடுக்கும் ஈரம் தோய்ந்த துணியும், தினைக்கொல்லை பொம்மையை நிர்வாணமாக்கி கிழித்து கொண்டுவந்த துணியும், கிழிந்த சில சீருடை கால்சட்டைத் துணிகளும்,...என்று இன்ன பிற துணிகளும் வகை வகையாய் விதவிதமாய் வண்ண வண்ணமாய் பந்திற்காக வரிசையாக சேர்ந்துகொண்டே இருந்தன.
சிறார்களில் அழகாக துணிப்பந்தை வழக்கமாக செய்யும் அந்த சிறுவன் தொடக்கமாக கோலிகுண்டு ஒன்றை இடதுகை பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் பிடித்திருந்தான். துணிகளில் பலவற்றை சிலர் பல்லைக் கடித்துக்கொண்டு பட்டை பட்டையாக கிழித்துக்கொண்டுத்துக்கொண்டிருன்தனர்.கெட்டியான துணிகளை சில குண்டு பையன்கள் நார் நாராக எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் எடுத்துக்கொடுக்க துணிப்பந்து வல்லுஞன் கோலி குண்டுக்கு மேல் சுருள்விழாதவாறு வட்டவட்டமாய் சுற்றிக்கொண்டே இருந்தான்.இப்போது பந்து எலுமிச்சை பழ வடிவிற்கு வந்திருந்தது.
'டே இன்னு சுத்தணும்,பந்து பொடிசா இருக்கு' என்று ஒருவன் தங்களின் தகுதியை தரம் உயர்த்தவே,மீண்டும் துணி அந்த சிறு பந்தை பருக்கவைத்துக்கொண்டே வந்தது. மெதுமெதுவென்று இருந்த அந்த துணிப்பந்து இப்போது கெட்டியான ஒரு கிரிக்கெட் பந்தைப் போல மாறியிருந்தது.துணி தைக்கும் ஊசிநூலுடன் வந்த ஒரு சிறுவன் அந்த பந்திற்கு காப்பீடு செய்வதைப் போல ஒரு நல்ல காரியத்தை இறுதியாய் செய்து முடித்தான்.இப்போது பந்து தயார்.
இரண்டுமணிநேர ஆயத்தத்திற்கு பின் ஆரவாரமாக தொடங்கிய அந்த விளையாட்டின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக விளையாட்டு முடிவிற்கு வந்ததுதான் சோகம்.அப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழும் என்று ஒருவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பந்து வீசுவதற்காக ஓடிவந்த அந்த வேளையில்தான் ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய அடைமழை இவர்களை விளையாட விடாமல் அவரவர்களது வீட்டில் அனைவரையும் சிறை வைத்தது. தங்களை விளையாட விடாமல் இடையூறு செய்த மழையை அவர்கள் நொந்துகொண்டிருக்கக்கூடும் .கதவு திறந்திருக்க வாசலில் நின்று அவரவார்களது வீட்டு வாசலில் நின்று மழையை வேறு வழியின்றி வெகுநேரமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் நனைந்தபடி.
மழை நின்றபின்னும் சேற்றை அள்ளிக்கொண்டு ஆறாக ஓடிக்கொண்டிருந்த அந்த வீதியில் கிரிக்கெட் விளையாடாமல் தவித்த அந்த சிறுவர்களின் நினைவில் அந்த இனிய மழை ஒரு விளையாட்டை ஞாபகப்படுத்தவே செய்தது.
சிறிது நேரம் கழித்து எல்லோரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் காதிதத்தில் கப்பல் செய்து.
திருநீரை முகப்பவுடராக பூசிக்கொண்டு ஒரு சிறுவன்; கால் சட்டையில் தபால் ஆபீஸ் வைத்துக்கொண்டு வந்த இன்னொருவன்; இளவரசன் மணிமுடி சூடியதைப் போல இலவம் பஞ்சு குல்லாய் அணிந்துகொண்டு வந்த மற்றொருவன்;சட்டையில் மேல் பொத்தானுக்கு பதிலாக குத்தப்பட்டிருந்த பின்னூசியை கைகளால் மறைத்தபடி ஒருவன்;இப்படியாய் ஒவ்வொருவரும் அந்த மலைகளின் தேசத்தில் வனங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அந்த சிற்றூரில் எல்லா வீடுகளுக்கும் ஒரே முற்றமாக இருந்த வீதியில் திரண்டிருந்தனர்.
மட்டைப்பந்து விளையாட்டுக்கு அந்த வீதி தயாராக இருந்தது. இவர்களும் விளையாட்டுக்கு தயாராய்.ஆனால் மட்டையும் பந்தும் இன்னும் தயாராகவில்லை.
நேற்றைய விளையாட்டில் மட்டை முறிந்து போனதற்கு மாற்றாக புதிய மட்டையை தேடிக்கொண்டிருந்தனர். 'எல்லா சரிடா, இப்ப பேட்டுக்கு என்ன பண்றது' என்று கேட்ட அந்த சிறுவனின் குரலில் விளையாடப்போகிறோம் என்ற குஷியும் மட்டை இல்லையே என்ற ஏக்கமும் நன்றாக தெரிந்தது.'டே எங்க வீட்டுலே ஒரு பேட்டு இருக்குதுடா ,நா எடுத்துட்டு வர்றே 'என்று அங்கிருந்து அகன்ற அந்த சிறுவன் அவர்கள் உள்ளத்திலும் உற்சாக நெருப்பை பற்றவைத்தான்.
பேட்டுடன் வரவிருக்கும் அவனது வருகையை ஆவலுடன் வீதியில் கடைசியில் உள்ள செமெண்டு திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். 'டே இவனே ,அவங்க வீட்லே பேட் உண்மையிலே இருக்கா' என்று ஒருவன் சந்தேகத்தை எழுப்பினான்.'இப்ப பாரு ,இத்தனே நாளா ஒளிச்சி வச்சிருந்த புது பேட்டிலே நம்ம விளையாடத்த போறோம்' 'ஹையா..ஜாலி..இன்னிக்கு கடலைமிட்டாய் பெட்டு கட்டி விளையாடுவோமா... ?என்கிட்டே இருபத்தஞ்சி பைசா இருக்கு' இப்படியாய் இவர்களின் கேள்விகளும் பதில்களும் எதிர்ப்பார்ப்புகளும் சந்தோஷ நெருப்பை கொழுந்துவிட்டு எரியவைத்த அந்த உற்சாக தருணத்தில் தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மட்டை கொண்டுவரச் சென்ற சிறுவனின் வீட்டு வாசலை இவர்கள் அனைவரின் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.முதுகிற்குப் பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டு ஏதோ கொண்டுவந்தான் அந்த சிறுவன் .'டே அவே வராண்டா' 'சட்டைக்குப் பின்னாலே ஒளிச்சிகொண்டுவரா பாத்தியா' மற்ற பலரும் ஆளுக்கொரு யூகங்களை அவரவர்கள் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் உரையாடல் முடிவதற்கு முன்பாகவே புன்னகையுடனும் பெருமிதத்துடனும் அவர்களின் முன்னே வந்து நின்றான் போர்முடித்து வென்ற மாவீரனாய்.
'டே காட்டுடா.' 'ஏண்டா ஒளிக்கிரே' 'வா உடனே விளையாடுவோம்' 'என்று பலரும் பலவாறு கேட்க அதிலொருவன் அவனது முதுகிற்குப் பின்னால் ரகசியமாய் சென்று அவனுக்கு அறியாமலேயே பார்த்துவிட்டு கிண்டலாய் கேலியாய் சிரிப்பிற்கு பதிலாக காற்றைமட்டுமே வெளியேற்றி 'கெக்கே கெக்கே உஷ் உஷஸ் புஷ் புஷ் ' என்று சிரித்தது அனைவருக்கும் புதிரை ஏற்படுத்தினான் .சிலிண்டர் வடிவிலான மரத்துண்டை கோடரியால் நான்காக பிளந்ததில் ஒரு பகுதியை பேட்டுக்கு பதிலாக அவன் கொண்டு வந்ததை அனைவரும் உறுதி செய்தார்கள்.கிண்டலில் அந்த இடம் அதிர்ந்தது.
'ஏண்டா கிண்டல் பண்றீங்க,இது எங்கம்மா சமைக்கறதுக்காக எடுத்து வச்ச காஞ்ச மரக்கட்டை ,விளையாடனும்னு உங்களுக்காகத்தான் தெரியாமே கொண்டு வந்தே' என்று அவன் நியாயப்படுத்தியதில் இருக்கும் அன்பையும் நட்பையும் புரிந்துகொண்ட ஒருவன் உடனே ஓடி ஒரு அரிவாளை கொண்டுவந்தான்' இதோ பாருங்கடா...இந்த மரக்கட்டையை அப்படியே புடிச்சு விளையாடுறதுக்கு கைப்பிடி இல்லே, இந்த கத்தியாலே முதல்லே கொஞ்சகொஞ்சமா சீவி கைப்பிடி செய்வோம்,பிறகு குத்தாத மாதிரி நைசா சீவி பேட் பண்ணிரலாம் ' என்று நம்பிக்கை தெரிவிக்க அதற்கான முயற்சியில் அனைவரும் இறங்கினார்கள்.
சில நிமிடங்களுக்குள் குத்திக் கிழிக்கும் மரச் செதில்கள் நிறைந்த அந்த மரக்கட்டை வழுவழுப்பாக மாறியிருந்தது,கூடவே கைப்பிடியும்.' விளையாடறதுக்கு பேட்டு ரெடியாயிடுச்சு பந்துக்கு எங்கடா போறது?' என்று மற்றொருவன் கேள்வி கேட்க ,துணிப்பந்து செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.அதற்க்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து சின்ன சின்ன துணிகளை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கேரட் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாத படி வேலியில் கட்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் பனியிலும் இற்றுப் போயிருந்த துணியும் , சூடான பாத்திரங்களை இறக்கிவைப்பதற்காக சமையல் கட்டில் பயன்படுத்தும் கரிபடிந்த துணியும்,சமைத்த சமையல் பாத்திரத்திற்கும் வடிக்கும் கஞ்சிப்பாத்திரத்திர்க்கும் இடையில் முட்டுக்கொடுக்கும் ஈரம் தோய்ந்த துணியும், தினைக்கொல்லை பொம்மையை நிர்வாணமாக்கி கிழித்து கொண்டுவந்த துணியும், கிழிந்த சில சீருடை கால்சட்டைத் துணிகளும்,...என்று இன்ன பிற துணிகளும் வகை வகையாய் விதவிதமாய் வண்ண வண்ணமாய் பந்திற்காக வரிசையாக சேர்ந்துகொண்டே இருந்தன.
சிறார்களில் அழகாக துணிப்பந்தை வழக்கமாக செய்யும் அந்த சிறுவன் தொடக்கமாக கோலிகுண்டு ஒன்றை இடதுகை பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் பிடித்திருந்தான். துணிகளில் பலவற்றை சிலர் பல்லைக் கடித்துக்கொண்டு பட்டை பட்டையாக கிழித்துக்கொண்டுத்துக்கொண்டிருன்தனர்.கெட்டியான துணிகளை சில குண்டு பையன்கள் நார் நாராக எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் எடுத்துக்கொடுக்க துணிப்பந்து வல்லுஞன் கோலி குண்டுக்கு மேல் சுருள்விழாதவாறு வட்டவட்டமாய் சுற்றிக்கொண்டே இருந்தான்.இப்போது பந்து எலுமிச்சை பழ வடிவிற்கு வந்திருந்தது.
'டே இன்னு சுத்தணும்,பந்து பொடிசா இருக்கு' என்று ஒருவன் தங்களின் தகுதியை தரம் உயர்த்தவே,மீண்டும் துணி அந்த சிறு பந்தை பருக்கவைத்துக்கொண்டே வந்தது. மெதுமெதுவென்று இருந்த அந்த துணிப்பந்து இப்போது கெட்டியான ஒரு கிரிக்கெட் பந்தைப் போல மாறியிருந்தது.துணி தைக்கும் ஊசிநூலுடன் வந்த ஒரு சிறுவன் அந்த பந்திற்கு காப்பீடு செய்வதைப் போல ஒரு நல்ல காரியத்தை இறுதியாய் செய்து முடித்தான்.இப்போது பந்து தயார்.
இரண்டுமணிநேர ஆயத்தத்திற்கு பின் ஆரவாரமாக தொடங்கிய அந்த விளையாட்டின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக விளையாட்டு முடிவிற்கு வந்ததுதான் சோகம்.அப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழும் என்று ஒருவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பந்து வீசுவதற்காக ஓடிவந்த அந்த வேளையில்தான் ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய அடைமழை இவர்களை விளையாட விடாமல் அவரவர்களது வீட்டில் அனைவரையும் சிறை வைத்தது. தங்களை விளையாட விடாமல் இடையூறு செய்த மழையை அவர்கள் நொந்துகொண்டிருக்கக்கூடும் .கதவு திறந்திருக்க வாசலில் நின்று அவரவார்களது வீட்டு வாசலில் நின்று மழையை வேறு வழியின்றி வெகுநேரமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் நனைந்தபடி.
மழை நின்றபின்னும் சேற்றை அள்ளிக்கொண்டு ஆறாக ஓடிக்கொண்டிருந்த அந்த வீதியில் கிரிக்கெட் விளையாடாமல் தவித்த அந்த சிறுவர்களின் நினைவில் அந்த இனிய மழை ஒரு விளையாட்டை ஞாபகப்படுத்தவே செய்தது.
சிறிது நேரம் கழித்து எல்லோரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் காதிதத்தில் கப்பல் செய்து.
சனி, 30 ஏப்ரல், 2011
புலி மைதானம் (சிறுகதை )
வெயில் நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த மரகத சோலைகளுக்கு நடுவே அந்த அழகிய மலைகிராமம்.கண்ணுக்கு எட்டும் தொலைவெல்லாம் மலைகள் மலைகள் மலைகள். மலைகளைத் தவிர வேறு எதுவுமில்லை.எல்லோரும் மேகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள் ஆனால் மேகங்கள் கழுத்து வலிக்க இவர்களை ஏறிட்டு பார்க்கும். அந்த அளவிற்கு இவர்கள் உயரத்தில் இருப்பது எப்போதும் இவர்களுக்கு ஆச்சர்யத்தையும் பெருமிதமுமான உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
நாகரீகங்களின் பாதிப்புகளிலிருந்தும் இந்த பிரதேசம் விலகியே இருந்திருக்கிறது.காரணம் சமவெளிக்கும் இவர்களுக்குமான தூரம் அதிகம். இயற்கையோடு இயற்கையாக கலந்த அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் அனைவருமே உழைப்பாளிகள். எல்லோரும் நாள் தவறாமல் வேலைக்கு சென்றுவிடுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வெறிச்சோடி அனாதையாய் கிடக்கும் அந்த தெருக்கள்.வாரத்தின் விடுமுறை நாட்கள் மட்டும் குழந்தைகளால் களைகட்டும்.
பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் பெண்கள் யாரும் சகஜமாய் உலவமுடியாதவாறு வாசல்களும் வீதியும் அடைக்க சிறுவர்கள் விளையாடுவது இயல்பானதுதான்.குழந்தைகள் தரும் இந்த இடையூறுகளை எப்போதும் இவர்கள் சுமையாக நினைத்ததே இல்லை.விதவிதமான விளையாட்டுக்களுக்கு பஞ்சமில்லை.
சிறார்களில் சிலர் பல் விளக்காமல் கோடாரியால் பிளக்கப்பட்ட மரக்கட்டை ஒன்றை பெட்டாக சுழற்றிக்கொண்டு வருவார்கள்.சிலர் பந்துகளுடன் ஆயத்தமாவார்கள்.ரப்பர் பந்து, பிளாஸ்டிக் பந்து,துணிப்பந்து,என்று இன்னும் நிறைய பந்துகள் சேர்ந்துவிடும்.
'டே இப்படியே ஓடிப்போனா ஒதேபடுவே,ஒழுங்கா சாபிட்டுட்டு போ' 'டே பல்லெ விளக்கிட்டு போடா, இல்லேன்னா பூச்சி ஊ வாயே தின்னுபோடும்' 'தம்பி..! முழு டவுசர் போட்டுட்டு போடா,முள்ளுச்செடி கீறும்' ' டே இவனே...! ஊ கால்சட்டை கிழிஞ்சிருக்குடா ,எல்லோரும் ஏசுவாங்க மாத்திட்டு போ' ' சாப்பிட்டு தண்ணி குடிக்காமே அப்படி என்ன அவசரம்,ஒழுங்கா தண்ணிகுடி' இப்படியாய் தங்கள் வேலைகளை செய்துகொண்டே பிள்ளைகளுக்கு தாயும் தந்தையும் படுத்தி படுத்தி சொன்ன எந்த குறிப்பையும் எந்த குழந்தையும் காதில் போட்டிருக்கொள்ளவில்லை.
நான்கைந்து பேராக இருந்தால் வீதியில்தான் தங்கள் விளையாட்டு சாகசத்தைக் காட்டுவார்கள். இப்போது சுமார் இருபது குழந்தைகள் குழுமிக்கொண்டார்கள். .கிழவிகளின் கூன் முதுகுகளை இவர்கள் அடித்த பல சிக்சர்கள் பதம் பார்க்க உதைவாங்கிய ஞாபகங்களும் பலமுறை.சன்னல் கண்ணாடிகளை உடைத்து வதைபட்ட நினைவுகளும் வர ஏகதேசமாய் முடிவுசெய்தார்கள்.இனி இவர்களின் விளையாக்கு களம் அந்த புலிமைதானம் என்று முடிவானது.
பெரிய அண்ணன்மார்கள் அந்த மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் தங்களை அங்கு வரக்கூடாது என்று ஏன் தவிர்த்தார்கள் என்ற ரகசியம் இவர்களைக் குடைந்துகொண்டே இருந்திருக்கக் கூடும். ஒருசமயம் அப்படி அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிவந்தது இவர்களுக்குள் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் எற்படுத்தியே இருக்கிறது.ஒரு சரிவில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால்தான் அந்த மைதானத்திற்கு செல்லமுடியும்.சுற்றிலும் முட்புதர்களால் ஆனா ஒரு குட்டி மைதானம். அங்கு விளையாடியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தார்கள்.பலமுறை முயற்சி செய்து முடியாத அந்த ஏக்கத்தை அன்று நிறைவேற்றவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
சிரிப்பும் கும்மாளமுமாக வீராவேசத்தோடு கிளம்பிய அந்த சிறார்பட்டாளம் அந்த பள்ளத்தாக்கில் பலவற்றையும் பேசிக்கொண்டே இறங்கியது.இனி மூச்சிரைக்க ஒரு மேட்டைக்கடக்கவேண்டும்.'ஊஸ் புஷ் ஊஸ் புஷ்' என்று நுரையீரல் சேர்ந்திசையை கேட்டுக்கொண்டே முன்னேறிக்கொண்டிருக்கும் போதுதான் கூட்டத்தில் ஒருவன் கிளியை கிளப்பினான்.
எத்தனை ஓவர் வீசவேண்டும்,யார் யார் எந்த அணியில் இருக்கவேண்டும் என்று அவர்களுக்குள்ளாக விவாதித்தபடி ஏறிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் 'டே என்னோட அண்ணே ஒருநாள் இங்கே விளையாட வந்தப்ப புலி வந்துருச்சாம்.' என்று ஒரு சிறுவன் சொன்னதும் கூட்டம் அதிர்ந்து அந்த இடத்திலேயே நின்றது. அதில் ஒருவன் 'ஐயோ புலியா.. நா வரலப்பா' தட்டுத் தடுமாறி செத்தே பொழசேன்னு ஓட்டமெடுத்தான்.அந்த அதிர்வில் மூன்று நான்கு சிறார்களும் அழுதபடியே சிதறி ஓடினார்கள்.
மீதம் இருப்பவர்கள் பீதியில் உறைந்துபோய் இருந்த போதுதான் 'டே அவன் புளுகுறாண்டா,பயந்தான்கொள்ளி,புளுகுமூட்டே'என்று ஒருவன் வசைபாடினான்.பயந்து போய் இருந்த அவர்களின் அச்சத்தை இந்த பதில் துடைத்தெறிந்தது.இப்போது அனைவருமே மனபயம் நீங்கி புலி மைதானம் முன்னேறினார்கள்.அந்த மேட்டில் இயற்கைக்கு வகிடு எடுத்தாற்போல ஒத்தையடி பாதையில் இருபுறமும் தங்களை கிள்ளி கீறிக்கொண்டிருந்த புதர் செடிகளை விலக்கிக்கொண்டு ஒரு வழியாக புலிமைதானத்தை வந்து சேர்ந்தார்கள்
இவர்கள் மைதானத்தில் கால்வைத்ததும் மகிழ்ச்சி ஊற்றேடுத்தாலும் உள்மனதில் பயம் லேசாக கசிந்துகொண்டுதான் இருந்தது.இருந்த போதிலும் திட்டமிட்டபடி விளையாட்டு தொடர்ந்தது.ஒரு குண்டு சிறுவன் அடித்த ஒரு பந்து ஆகாயத்தில் பறந்து சென்று புதருக்குள் விழ 'சிக்சர்' என்று ஆரவாரித்த கூட்டம் தொலைந்த பந்தை தேட ஆயத்தமானது.புதருக்குள் உடம்பை குறுக்கி குனிந்துகொண்டு நிழல்களில் இருட்டில் தேடும் போதுதான் எல்லோருக்கும் புலிஞாபகம் வந்தது.பந்து கிடைக்காத வெறுப்பும் புலியின் பயமும் கலவையாய்த் தொற்றிக்கொள்ள அந்த குளிர் உலகத்திலும் கூட எல்லா சிறுவர்களும் வியர்க்கத்தார்கள்.
தேடுதல் வேட்டையில், நிசப்தமாய் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு குட்டைமரமொன்று அசையவே ரகசியமான மெல்லியகுரலில் 'டே...அங்கே பாருங்கடா...மரம் ஆடுது...புலியா இருக்குமோ...?பயமா இருக்குடா..அவன் சொன்னது உணமைதா போலிருக்கே.. இவனே நம்பி வந்தோம் பாரு...நீதா புளுகு மூட்டை ..' இப்படியாய் புலி இல்லை என்று ஆறுதல் சொல்லி அழைத்துவந்த அந்த சிறுவன் நன்றாக அனைவருது வசையை வாங்கிக்கொண்டிருந்த போதுதான் குபீரென புதருக்குள்ளிருந்து ஆவேசமாய் வெளிப்பட்டது ஒரு குரங்கு.ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க கண்களை பயத்தில் மூடிக்கொண்டிருந்த அனைவரும் மெதுவாக திறந்தபோது அந்த குரங்கினை அவர்களால் ஆறுதலாய் பார்க்கமுடிந்தது.
மீண்டும் விளையாட்டு களைகட்டியது. பாதியிலேயே பயந்து ஓடி வீட்டை அடைந்த அந்த சில சிறார்கள் இவர்கள் ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பதை ஏக்கமாய் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை இவர்கள் கவனித்தார்கள். .'தேவையா...பேசாமே வந்திருக்கலாமில்லே..பயந்தாகொள்ளிங்கே' .கிண்டலடித்தார்கள். 'ஈ ஓ ஊ ஆ ...;என்று உச்சதாயத்தில் தங்களின் கேலியைத் தெரிவித்தார்கள்.
அன்றிலிருந்து பயமில்லாமல் அவர்களும் மற்ற சிறுவர்களும் அந்த புலிமைதானத்தில் பயம் இல்லாமல் வாரம் தோறும் தவறாமல் விளையாடிவருகிறார்கள்.ஆனால் உண்மையில் அந்த மைதானத்திற்கு புலி வந்து போவது வழக்கம் என்பதை அந்த சிறார்கள் அறியாமலே இருக்கட்டும்
நாகரீகங்களின் பாதிப்புகளிலிருந்தும் இந்த பிரதேசம் விலகியே இருந்திருக்கிறது.காரணம் சமவெளிக்கும் இவர்களுக்குமான தூரம் அதிகம். இயற்கையோடு இயற்கையாக கலந்த அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் அனைவருமே உழைப்பாளிகள். எல்லோரும் நாள் தவறாமல் வேலைக்கு சென்றுவிடுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வெறிச்சோடி அனாதையாய் கிடக்கும் அந்த தெருக்கள்.வாரத்தின் விடுமுறை நாட்கள் மட்டும் குழந்தைகளால் களைகட்டும்.
பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் பெண்கள் யாரும் சகஜமாய் உலவமுடியாதவாறு வாசல்களும் வீதியும் அடைக்க சிறுவர்கள் விளையாடுவது இயல்பானதுதான்.குழந்தைகள் தரும் இந்த இடையூறுகளை எப்போதும் இவர்கள் சுமையாக நினைத்ததே இல்லை.விதவிதமான விளையாட்டுக்களுக்கு பஞ்சமில்லை.
சிறார்களில் சிலர் பல் விளக்காமல் கோடாரியால் பிளக்கப்பட்ட மரக்கட்டை ஒன்றை பெட்டாக சுழற்றிக்கொண்டு வருவார்கள்.சிலர் பந்துகளுடன் ஆயத்தமாவார்கள்.ரப்பர் பந்து, பிளாஸ்டிக் பந்து,துணிப்பந்து,என்று இன்னும் நிறைய பந்துகள் சேர்ந்துவிடும்.
'டே இப்படியே ஓடிப்போனா ஒதேபடுவே,ஒழுங்கா சாபிட்டுட்டு போ' 'டே பல்லெ விளக்கிட்டு போடா, இல்லேன்னா பூச்சி ஊ வாயே தின்னுபோடும்' 'தம்பி..! முழு டவுசர் போட்டுட்டு போடா,முள்ளுச்செடி கீறும்' ' டே இவனே...! ஊ கால்சட்டை கிழிஞ்சிருக்குடா ,எல்லோரும் ஏசுவாங்க மாத்திட்டு போ' ' சாப்பிட்டு தண்ணி குடிக்காமே அப்படி என்ன அவசரம்,ஒழுங்கா தண்ணிகுடி' இப்படியாய் தங்கள் வேலைகளை செய்துகொண்டே பிள்ளைகளுக்கு தாயும் தந்தையும் படுத்தி படுத்தி சொன்ன எந்த குறிப்பையும் எந்த குழந்தையும் காதில் போட்டிருக்கொள்ளவில்லை.
நான்கைந்து பேராக இருந்தால் வீதியில்தான் தங்கள் விளையாட்டு சாகசத்தைக் காட்டுவார்கள். இப்போது சுமார் இருபது குழந்தைகள் குழுமிக்கொண்டார்கள். .கிழவிகளின் கூன் முதுகுகளை இவர்கள் அடித்த பல சிக்சர்கள் பதம் பார்க்க உதைவாங்கிய ஞாபகங்களும் பலமுறை.சன்னல் கண்ணாடிகளை உடைத்து வதைபட்ட நினைவுகளும் வர ஏகதேசமாய் முடிவுசெய்தார்கள்.இனி இவர்களின் விளையாக்கு களம் அந்த புலிமைதானம் என்று முடிவானது.
பெரிய அண்ணன்மார்கள் அந்த மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் தங்களை அங்கு வரக்கூடாது என்று ஏன் தவிர்த்தார்கள் என்ற ரகசியம் இவர்களைக் குடைந்துகொண்டே இருந்திருக்கக் கூடும். ஒருசமயம் அப்படி அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிவந்தது இவர்களுக்குள் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் எற்படுத்தியே இருக்கிறது.ஒரு சரிவில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால்தான் அந்த மைதானத்திற்கு செல்லமுடியும்.சுற்றிலும் முட்புதர்களால் ஆனா ஒரு குட்டி மைதானம். அங்கு விளையாடியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தார்கள்.பலமுறை முயற்சி செய்து முடியாத அந்த ஏக்கத்தை அன்று நிறைவேற்றவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
சிரிப்பும் கும்மாளமுமாக வீராவேசத்தோடு கிளம்பிய அந்த சிறார்பட்டாளம் அந்த பள்ளத்தாக்கில் பலவற்றையும் பேசிக்கொண்டே இறங்கியது.இனி மூச்சிரைக்க ஒரு மேட்டைக்கடக்கவேண்டும்.'ஊஸ் புஷ் ஊஸ் புஷ்' என்று நுரையீரல் சேர்ந்திசையை கேட்டுக்கொண்டே முன்னேறிக்கொண்டிருக்கும் போதுதான் கூட்டத்தில் ஒருவன் கிளியை கிளப்பினான்.
எத்தனை ஓவர் வீசவேண்டும்,யார் யார் எந்த அணியில் இருக்கவேண்டும் என்று அவர்களுக்குள்ளாக விவாதித்தபடி ஏறிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் 'டே என்னோட அண்ணே ஒருநாள் இங்கே விளையாட வந்தப்ப புலி வந்துருச்சாம்.' என்று ஒரு சிறுவன் சொன்னதும் கூட்டம் அதிர்ந்து அந்த இடத்திலேயே நின்றது. அதில் ஒருவன் 'ஐயோ புலியா.. நா வரலப்பா' தட்டுத் தடுமாறி செத்தே பொழசேன்னு ஓட்டமெடுத்தான்.அந்த அதிர்வில் மூன்று நான்கு சிறார்களும் அழுதபடியே சிதறி ஓடினார்கள்.
மீதம் இருப்பவர்கள் பீதியில் உறைந்துபோய் இருந்த போதுதான் 'டே அவன் புளுகுறாண்டா,பயந்தான்கொள்ளி,புளுகுமூட்டே'என்று ஒருவன் வசைபாடினான்.பயந்து போய் இருந்த அவர்களின் அச்சத்தை இந்த பதில் துடைத்தெறிந்தது.இப்போது அனைவருமே மனபயம் நீங்கி புலி மைதானம் முன்னேறினார்கள்.அந்த மேட்டில் இயற்கைக்கு வகிடு எடுத்தாற்போல ஒத்தையடி பாதையில் இருபுறமும் தங்களை கிள்ளி கீறிக்கொண்டிருந்த புதர் செடிகளை விலக்கிக்கொண்டு ஒரு வழியாக புலிமைதானத்தை வந்து சேர்ந்தார்கள்
இவர்கள் மைதானத்தில் கால்வைத்ததும் மகிழ்ச்சி ஊற்றேடுத்தாலும் உள்மனதில் பயம் லேசாக கசிந்துகொண்டுதான் இருந்தது.இருந்த போதிலும் திட்டமிட்டபடி விளையாட்டு தொடர்ந்தது.ஒரு குண்டு சிறுவன் அடித்த ஒரு பந்து ஆகாயத்தில் பறந்து சென்று புதருக்குள் விழ 'சிக்சர்' என்று ஆரவாரித்த கூட்டம் தொலைந்த பந்தை தேட ஆயத்தமானது.புதருக்குள் உடம்பை குறுக்கி குனிந்துகொண்டு நிழல்களில் இருட்டில் தேடும் போதுதான் எல்லோருக்கும் புலிஞாபகம் வந்தது.பந்து கிடைக்காத வெறுப்பும் புலியின் பயமும் கலவையாய்த் தொற்றிக்கொள்ள அந்த குளிர் உலகத்திலும் கூட எல்லா சிறுவர்களும் வியர்க்கத்தார்கள்.
தேடுதல் வேட்டையில், நிசப்தமாய் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு குட்டைமரமொன்று அசையவே ரகசியமான மெல்லியகுரலில் 'டே...அங்கே பாருங்கடா...மரம் ஆடுது...புலியா இருக்குமோ...?பயமா இருக்குடா..அவன் சொன்னது உணமைதா போலிருக்கே.. இவனே நம்பி வந்தோம் பாரு...நீதா புளுகு மூட்டை ..' இப்படியாய் புலி இல்லை என்று ஆறுதல் சொல்லி அழைத்துவந்த அந்த சிறுவன் நன்றாக அனைவருது வசையை வாங்கிக்கொண்டிருந்த போதுதான் குபீரென புதருக்குள்ளிருந்து ஆவேசமாய் வெளிப்பட்டது ஒரு குரங்கு.ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க கண்களை பயத்தில் மூடிக்கொண்டிருந்த அனைவரும் மெதுவாக திறந்தபோது அந்த குரங்கினை அவர்களால் ஆறுதலாய் பார்க்கமுடிந்தது.
மீண்டும் விளையாட்டு களைகட்டியது. பாதியிலேயே பயந்து ஓடி வீட்டை அடைந்த அந்த சில சிறார்கள் இவர்கள் ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பதை ஏக்கமாய் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை இவர்கள் கவனித்தார்கள். .'தேவையா...பேசாமே வந்திருக்கலாமில்லே..பயந்தாகொள்ளிங்கே' .கிண்டலடித்தார்கள். 'ஈ ஓ ஊ ஆ ...;என்று உச்சதாயத்தில் தங்களின் கேலியைத் தெரிவித்தார்கள்.
அன்றிலிருந்து பயமில்லாமல் அவர்களும் மற்ற சிறுவர்களும் அந்த புலிமைதானத்தில் பயம் இல்லாமல் வாரம் தோறும் தவறாமல் விளையாடிவருகிறார்கள்.ஆனால் உண்மையில் அந்த மைதானத்திற்கு புலி வந்து போவது வழக்கம் என்பதை அந்த சிறார்கள் அறியாமலே இருக்கட்டும்

இந்தியதேசத்தின்
அசோகச்சக்கரத்திற்கு
பிஞ்சுக் குழந்தைகளின்
வியர்வை
உயவுஎண்ணை ஆகவேண்டாம்.
...
தொழிலாளர்கள் பட்டியலில்
இருக்கும்
மழலைகளின் பெயர்களை
அழிப்போம்
பிள்ளைகளின் வியர்வையில்
பெற்றோர்கள் வயிறு வளர்ப்பதா?
(மேதின வாழ்த்துக்கள்)

இவர்கள்
விலங்குகள் அல்ல!
பிறகு ஏன்
இவர்களுக்கு விலங்குகள்.
உள்ளங்கள் குமுறினால்
உலோகங்கள் உதிரும்
வலிக்க வலிக்க
உழைத்த கரங்களுக்கு
முடிந்தால் பூட்டுங்கள்
பூவிலங்குகளை.
(மேதின வாழ்த்துக்கள்)
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
