புதன், 2 பிப்ரவரி, 2011

சென்னை இலக்கியச் சந்திப்பில் - தகிதா வெளியீட்டு விழா 








சென்னை இலக்கியச் சந்திப்பில் - தகிதா வெளியீட்டு விழா 


தகிதா பதிப்பகத்தின் இரண்டு புதிய நூல்களான எழுத்தாளர் திரு கங்கைமகனின் 'ஆத்மாலயம்' மற்றும் கவிஞர் வைரசின் 'நிறைய அமுதம் ஒருதுளி விஷம்' ஆகிய இரண்டு நூல்கள் நேற்று தகிதா பதிப்பகமும் டிச்கவேரி புக் ஹவுசும் இணைந்து நடத்திய முதல் இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டன.



மேலும் சென்ற ஆண்டில் வெளியிடப்பட்ட தகிதாவின் பன்னிரண்டு நூல்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இந்த விழாவில் தமிழ் இலக்கியம் கல்வி மற்றும் கலைத்துறையைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் யுகமாயினி சித்தன் அவர்கள் தலைமை தாங்க ,பேராசிரியர் ராம குருநாதன் அவர்களின் முன்னிலை வகிக்க வெளி ரங்கராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்க இறுதியில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.



'தலைப்பு இழந்தவை' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் கவிதாயினி ஈழவாணி கலந்துகொண்டு நன்றி கூறினார்.தேனம்மை லக்ஷ்மணன் நூல்கள் குறித்த விமர்சனங்களையும் முன் வைத்தார்.உடன் பாகி, செல்வகுமார்,வசுமதிவாசன்,கயல்விழி லக்ஷ்மணன்,அன்பு அழகன்,அந்தோனி அர்னால்ட்,ஜெயராஜ் பாண்டியன்,கவிஞர் வைரஸ் இன்னும் பல முகநூல் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.



மேலும் இந்த விழாவில் 'ஆண்மைத்தவறேல் 'திரைப்படத்தின் இயக்குஞர் திரு குழந்தைவேலப்பன் கலந்துகொண்டு தன் தமிழ் ஊடக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.நாடகக் கலைஞர் பாபு அவர்களும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தார்.



தகிதாவில் வெளியீட்டில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிகொள்கிறேன்.



தமிழ் மரியாதை

1.உலகத் தமிழர்களை எல்லாம் தேடித்தேடி கண்டெடுத்து அவரிகளை யுகமாயினியில் கவிஞர்களாய், கட்டுரையாளர்களாய் , கதாசிரியர்களாய், விமர்சகர்களாய் தொடர்ந்து அடையாளப்படுத்திவரும் இலக்கிய பிதாமகன் வணக்கத்திற்குரிய திரு சித்தன் ஐயா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.எங்களைப் போன்ற தமிழ் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பலருக்கு தன் அடர்த்தியான விமர்சனங்களால் நல்வழிப்படுத்திக்கொண்டிருக்கும் எழுத்துப் போராளி திரு சித்தன் அவர்கள்களுக்கு என் வணக்கங்கள் உரித்தாகிறது.



2.தமிழர்களின் கூத்துக்கலையாக இருந்து நாடகக்கலையாக வளர்ந்திருக்கும் மூன்றாம் தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்த நாடதத்தமிழர்தான் வெளி ரங்கராஜன் அவர்கள்.நாடகக் கலையை வளர்த்தேடுப்பதற்காகவே 'வெளி' என்ற நாடகமும் நாடகம் சார்ந்த இதழைத் தொடங்கி அதை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி கண்டவர் இவர். நாடக ஆசிரியராகவும் நாடக நடிகராகவும் நாடக இயக்குனராகவும் நாடக இதழாசிரியராகவும் இப்படியாய் நாடகத்திற்காகவே தனது தொடர் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் திரு வெளி ரங்கராஜன் அவர்களுக்கு தகிதாவின் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



3.பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி எண்ணற்ற படிப்பாளிகளையும் ,படைப்பாளிகளையும் உருவாக்கிய வணக்கத்திற்குரிய முனைவர் திரு இராம குருநாதன் அவர்கள் இந்த விழாவில் முன்னிலைவகித்து விழாவை சிறப்பித்தார் .சாகித்திய அகாடமி,கன்னிமர பொது நூலகம்,புது டில்லி ,கொல்கட்டா ,கும்பகோணம், சிவகுருநாதன் பொது நூலகம், வாசிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு போன்ற பலவற்றிலும் தனது சிறப்பான பங்களிப்பை ஆற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியரின் வருகை விழாவிற்கு பெருமிதத்தையும் கெளரவத்தையும் தந்தது.அவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.



4.அடர்த்தியாகவும் செறிவாகவும் பேசக்கூடிய தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், 'கும்பகோணம்' ,'வெண்மணி' -ஆகியவற்றைப் பற்றிய ஊடகப்பதிவுகளை சிறப்பாக செய்து முத்திரைப் பதித்த ஆவணப்பட இயக்குஞரும் .சிறந்த நூல் விமர்சகரும்,நல்ல நாடகம் மற்றும் திரை நடிகரும் இயக்குஞருமான அருமைத் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் நேற்று கலந்து கொண்டு விழாவை தன் நல்ல தமிழால் சிறப்பித்தார்.தொடர்ந்து மக்களுக்காக மக்களின் சிக்கல்களை மக்களின் ஊடகங்களில் வழங்கிக்கொண்டிருக்கிற அருமை நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக