ஞாயிறு, 17 ஜூலை, 2011

இல்லைகளில்தான் இருக்கிறது

சிறகுகளால் வரையும் பறவைகள்

வானப்புத்தகத்தில் முகவரிகளை குறித்துவைப்பதில்லை.

ஓய்வெடுத்துச் செல்லும் வண்டுகள்

பூவின்பக்கங்களில் விலாசங்களை எழுதிவைப்பதில்லை

அலைப்படகுகளில் பயணிக்கும் முத்துக்கள்

பயணக்குறிப்புகளை கடல்நீரில் வரைந்துவைப்பதில்லை.

கடந்து செல்லும் காற்று

நடந்துவரும் தடங்களை நினைவில்வைப்பதில்லை

குளிர்ந்து ஒளிரும் நிலா

வெளிச்சங்களை நிரந்தரமாய் எழுதிவைப்பதில்லை

நிமிர்ந்து நிற்கும் மரம்

குனியும் நிழல்களுக்காய் கோபம்கொள்வதில்லை

குலைந்து உருகும் பனி

அடையாளம் தொலைவதற்காய் அழுதுவைப்பதில்லை

பொழிந்து தள்ளும் மழை

வானம் தொலைத்ததற்காய் வருத்தம்கொள்வதில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக