ஞாயிறு, 24 ஜூலை, 2011

தகிதா பதிப்பகத்தின் நூல் வெளியீடுகள் - 2011



தகிதா பதிப்பகத்தின் 2011 ஆண்டு நூல் வெளியீடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.அதன் முதல் கட்டமாக வே. விநாயக மூர்த்தி என்னும் கவிதை சகோதரரின் கவிதை நூலான "கற்கள் எறியாத குளம்" வாசகர்களின் இதயங்களை நனைக்க வருகிறது.இது இந்த கவிஞரின் முதல் படைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையோடு தன்னை இணைத்திருக்கும் புத்திலக்கிய பிரியர் இவர்.பல்வேறு காலங்களில் இவர் ரசித்து சுகித்து எழுதியதை பிரசுரித்ததை கோர்த்து இந்த கவிதை குளத்தில் நிரப்பி இருக்கிறார். அந்தியூரை சார்ந்த இந்த படைப்பாளர் நிறைய விருதுகளை தன் படைப்புக்காய் பல களங்களில் வென்றிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.தகிதாவின் இந்த படைப்பாளியை நீங்களும் வாழ்த்தி வரவேற்கலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக