ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தகிதா படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்"



தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நல்லதொரு தமிழ்சங்கம் நல்லதொரு படைப்பாளியை கெளரவித்ததால் தமிழன்னை பெரிதுவத்திருப்பாள்.தகிதா பதிப்பகம் நீங்கள் இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துகிறது. "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" நூல் வெளியீட்டு விழா

தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வெளியிடப்பட்டுள்ளது.

தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர்,எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குஞர்,கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் புதிய ஆவணப்படமான "நல்லாறு " என்ற ஆவணப்படத்திற்கு எனது பின்னணிக்குரல் இன்று பதியப்பட்டது. என்னிடம் இருந்த சூழலியல் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்திய குறிஞ்சி சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ,என் இனிய நண்பர் கோவை சதாசிவம் அவர்களுக்கு உங்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

பதினொன்று... பத்து... ஒன்பது...

குறைந்து கொண்டிருந்த சிக்னலில்

வலதுகாலை நொண்டியபடி

இடுப்பிலிருக்கும் குழந்தையைக்காட்டி

பிச்சைகேட்டுக்கொண்டிருந்த

அந்த இளம்வயது தாய்

வாகனநெரிசலில் என்ன ஆனாள்?

சாலைவிதிகளை மீறி

பின்னோக்கிப் பயணப்பட்டது

எனது ஏங்கும் மனம்

செவ்வாய், 18 ஜனவரி, 2011


தகிதா பதிப்பகத்தின் சார்பில் இந்தப் புத்தாண்டில் முதன்முதலாக வெளிவரவிருக்கும் கவிதைத் தொகுப்பு "நிறைய அமுதம் கொஞ்சம் விஷம்" -எழுதியவர் வைரஸ். அந்த படைப்பாளரை வரவேற்று வாழ்த்துங்கள்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

உண்மை எப்போது அரிதாரங்கள் பூசிக்கொள்ளாததால்...அதன் அழகு யாருக்கும் பிடிக்காது. பொய் எப்போதும் அலங்காரங்களோடு அலைவதால் எல்லோருக்கும் பிடிக்கும்