மெல்லியல் மீதுபாயும்
வல்லினச்சொற்கள்
வார்த்தை வாள்களல்ல
வசந்தத்தின் முன்னறிவிப்புகள் !
எதிரியைப்போல பார்க்கும்
எதிர்ப்பார்வைகள்
புரியாத பார்வைகளல்ல
புதிர்போடும் புதியபார்வைகள்!
இங்கு
இருவருமே நிராயுதபாணிகள்
இருந்தாலும்
இடைவிடாமல் நடக்கிறது
காதல்போர்.
---------------------------------------------
குறள்:1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
விழி யுத்தத்தின் முன்னே வாள்களும், வேல்களும் எம்மாத்திரம்.
பதிலளிநீக்கு