செவ்வாய், 4 மே, 2010

காதல் குறட்பாக்கள்:20

புருவ வில்லுக்குக்
கீழுள்ள இமைகள்
சொல்லெடுத்துக் கொடுக்க
கண்கள் கிசுகிசுக்கின்றனவே ஏன்?
வார்த்தைகள்
விடுப்பு எடுத்துக்கொண்டனவோ?
சைகைமொழி பேசும்போது
சப்தமொழி எதற்கென்று
மெளன விரதமா ?

இருந்தாலும்
இடைவிடாமல்
பேசிக்கொண்டே இருக்கின்றன
உன் பேரழகு விழிகள்
----------------------------------------------------
குறள்:1100
கண்ணோடு கன்ன்நினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக