ஞாயிறு, 2 மே, 2010

காதல் குறட்பாக்கள் : 18

நான்
உன்னை ரசித்துப்பார்த்தேன்
நீ
என்னை பார்த்துரசித்தாய்.
புன்னகை பூப்பூக்க
ஓசையில்லாமல் சிரிக்கும்
சிரிப்பழகியே!
மயிலழகை
நடையழகில் கொண்ட
எனதழகியே!
கூடிக்கொண்டே இருக்கிறது
உனது
அழகின் கனம்
---------------------------------------------
குறள்:1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

1 கருத்து:

  1. நாணத்தில் சிரிக்கும் போது தான் சத்தம் இல்லாமல் சிரிப்பார்கள், அதை நாசூக்கான முறையில் அழகாய் கூறியிருக்கிறீர்கள்.
    அன்ன நடை, நடை மட்டும்தான் அழகு. ஆனால் மயிலினதோ அது அசைந்து வரும்நடையழகே தனி தான். புதுமை புதுமை.

    பதிலளிநீக்கு