நான்
உன்னை ரசித்துப்பார்த்தேன்
நீ
என்னை பார்த்துரசித்தாய்.
புன்னகை பூப்பூக்க
ஓசையில்லாமல் சிரிக்கும்
சிரிப்பழகியே!
மயிலழகை
நடையழகில் கொண்ட
எனதழகியே!
கூடிக்கொண்டே இருக்கிறது
உனது
அழகின் கனம்
---------------------------------------------
குறள்:1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
நாணத்தில் சிரிக்கும் போது தான் சத்தம் இல்லாமல் சிரிப்பார்கள், அதை நாசூக்கான முறையில் அழகாய் கூறியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅன்ன நடை, நடை மட்டும்தான் அழகு. ஆனால் மயிலினதோ அது அசைந்து வரும்நடையழகே தனி தான். புதுமை புதுமை.