நேற்றுவரை
அறியாதிருந்த எமனை
இன்று
கண்டுகொண்டேன்
அவள்
கண்களில்
----------------------------------------------------------------------
குறள்:1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
சனி, 24 ஏப்ரல், 2010
காதல் குறட்பாக்கள் :2
நான்
அவளைப் பார்த்தேன்
அவள்
என்னைப் பார்த்தாள்.
படைநடத்தி வந்து
தாக்கியது போலிருந்தது
அவள் பார்த்த
பதில் பார்வை.
--------------------------------------------------------------------------
குறள்:1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண்டு அன்னது உடைத்து
அவளைப் பார்த்தேன்
அவள்
என்னைப் பார்த்தாள்.
படைநடத்தி வந்து
தாக்கியது போலிருந்தது
அவள் பார்த்த
பதில் பார்வை.
--------------------------------------------------------------------------
குறள்:1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண்டு அன்னது உடைத்து
காதல் குறட்பாக்கள்:1
பெண்ணா!
பேரழகுத் தெய்வமா!
வண்ணம் பூசிய மயிலா!
குழப்பமடி
கூறடி
அடியே
நீ யாரடி?
---------------------------------------------------------
குறள்:1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
பேரழகுத் தெய்வமா!
வண்ணம் பூசிய மயிலா!
குழப்பமடி
கூறடி
அடியே
நீ யாரடி?
---------------------------------------------------------
குறள்:1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
சங்க இலக்கியம் - குறுந்தொகை : 8
மரகத வயல்வெளியும்
அலையில்லா குளக்கரையும்
ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொண்டிருக்கும்;
கிளைகளுக்கு விடைகள்சொல்லி
குதிக்கும் மாங்கனிகளைக்
குளிக்கும் மீன்கள் பசியாறும்;
இத்தகைய
அழகிய மருதநிலத்தில்....
அந்த தலைவன்.
என்
வனப்பில் வழுக்கி
வெல்லமொழி போல
செல்லமொழி பேசி
கள்ளத்தனமாக
காமம் நுகர்வது வழக்கம் .
இப்பொழுதோ
செய்வதையே திரும்பச்செய்யும்
கண்ணாடி பிம்பத்தைபோல
உணர்சிகளற்ற பொம்மையாக
வாழ்க்கைத் துணையுடன்
வாழ்ந்து தொலைக்கிறான்.
(பரத்தையின் கூற்று)
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:ஆலங்குடி வங்கனார்
பாடல் என்:௮
பாடல்:8
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி,தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.
அலையில்லா குளக்கரையும்
ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொண்டிருக்கும்;
கிளைகளுக்கு விடைகள்சொல்லி
குதிக்கும் மாங்கனிகளைக்
குளிக்கும் மீன்கள் பசியாறும்;
இத்தகைய
அழகிய மருதநிலத்தில்....
அந்த தலைவன்.
என்
வனப்பில் வழுக்கி
வெல்லமொழி போல
செல்லமொழி பேசி
கள்ளத்தனமாக
காமம் நுகர்வது வழக்கம் .
இப்பொழுதோ
செய்வதையே திரும்பச்செய்யும்
கண்ணாடி பிம்பத்தைபோல
உணர்சிகளற்ற பொம்மையாக
வாழ்க்கைத் துணையுடன்
வாழ்ந்து தொலைக்கிறான்.
(பரத்தையின் கூற்று)
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:ஆலங்குடி வங்கனார்
பாடல் என்:௮
பாடல்:8
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி,தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.
வியாழன், 22 ஏப்ரல், 2010
சங்க இலக்கியம் - குறுந்தொகை:7
கழைக்கூத்தாடிகள் கயிற்றிலாடுகையில்
கொட்டப்படும் முழக்கமாய்
வாகைமரத்து கொம்புகளும்
மூங்கில்மர தண்டுகளும்
ஓசை எழுப்புகின்றன,
தீக்குண்டமாய் தகிக்கும்
நெருப்புதேசமான பாலைவெளியில்.
வளையல்கள் ஏழுசுரங்களை இசைக்க
சிலம்புகள் சங்கீதசப்தங்களை எழுப்ப
மெல்லடி வைத்து மெல்லியல் நடக்கிறாள்...
வீரம்செறிந்த கரங்களில்
வில்லேந்தி
வெற்றிச்செறிந்த கால்களில்
கழலேந்தி -அவள்
முன்னே நடக்கிறான் காதலன்.
திருமதி ஆவதற்காய்
செல்வனுடன் செல்லும்
செல்வியின் சிலம்பு
கட்டாயம் மெட்டியாக மாறும்...
-----------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பெரும்பதுமனார்
பாடல் எண்:7
பாடல்:
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே - ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி,
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே.
கொட்டப்படும் முழக்கமாய்
வாகைமரத்து கொம்புகளும்
மூங்கில்மர தண்டுகளும்
ஓசை எழுப்புகின்றன,
தீக்குண்டமாய் தகிக்கும்
நெருப்புதேசமான பாலைவெளியில்.
வளையல்கள் ஏழுசுரங்களை இசைக்க
சிலம்புகள் சங்கீதசப்தங்களை எழுப்ப
மெல்லடி வைத்து மெல்லியல் நடக்கிறாள்...
வீரம்செறிந்த கரங்களில்
வில்லேந்தி
வெற்றிச்செறிந்த கால்களில்
கழலேந்தி -அவள்
முன்னே நடக்கிறான் காதலன்.
திருமதி ஆவதற்காய்
செல்வனுடன் செல்லும்
செல்வியின் சிலம்பு
கட்டாயம் மெட்டியாக மாறும்...
-----------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பெரும்பதுமனார்
பாடல் எண்:7
பாடல்:
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே - ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி,
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே.
புதன், 21 ஏப்ரல், 2010
சங்க இலக்கியம் - குறுந்தொகை: 6
வெளிச்சம்தொலைத்த வானும்
ஓசைதொலைத்த பூமியும்
இருட்டை பூசிக்கொண்டு
கறுத்த முகத்தோடு
காட்சியளிக்கும் ராப்பொழுதில்
கவலை களைந்து
கனவில் களித்தபடி
பூமி என்னும்
ஒற்றை படுக்கையில்
எல்லோரும் துயில்கொள்கிறார்கள்.
நிசப்தம்பரவும் நித்திரைபொழுதில்
உறங்காமல் தனித்திருப்பதும்
தனிமைக்கு துணையிருப்பதும்
நான் மட்டும்தான்.
காரணம்
காதலன் அருகில் இல்லை
நள்ளிரவும்
நல்லிரவாய் இல்லை.
----------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பதுமனார்
பாடல் எண்:
பாடல்:6
நள்ளேன்றன்றே, யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே,மாக்கள்;முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.
ஓசைதொலைத்த பூமியும்
இருட்டை பூசிக்கொண்டு
கறுத்த முகத்தோடு
காட்சியளிக்கும் ராப்பொழுதில்
கவலை களைந்து
கனவில் களித்தபடி
பூமி என்னும்
ஒற்றை படுக்கையில்
எல்லோரும் துயில்கொள்கிறார்கள்.
நிசப்தம்பரவும் நித்திரைபொழுதில்
உறங்காமல் தனித்திருப்பதும்
தனிமைக்கு துணையிருப்பதும்
நான் மட்டும்தான்.
காரணம்
காதலன் அருகில் இல்லை
நள்ளிரவும்
நல்லிரவாய் இல்லை.
----------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பதுமனார்
பாடல் எண்:
பாடல்:6
நள்ளேன்றன்றே, யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே,மாக்கள்;முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
சங்க இலக்கியம் - குறுந்தொகை : 5
வயல்களின் பூமியிலிருந்து
அலைகளின் பூமிக்கு
மீனுண்ணும் நிமித்தமாய்
குருகுப்பறவைகள் சிறகுவிரித்தன;
கரைகளை உடைக்கும்
அலைகளை உடைய
அந்த
தண்ணீர்தேசத்தின் தலைவன்
என்னை
கண்ணீர்தேசத்தில்
விட்டுவிட்டுப் போனதிலிருந்து...
கறுப்புக் கொடிபிடித்து
தூக்கத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றன
மைபூசப்பட்ட என்கண்கள்;
தொட்டுக்கொள்ளாமலும்
ஒட்டிக்கொள்ளாமலும்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன
என்
ஈர இமைகள்
----------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:நரிவெரூஊத் தலையார்
பாடல் எண்:
பாடல்:5
அதுகொல்,தோழி! காம நோய்?
வதிகுருகு உறங்கும் இன்நிழற் புன்னை,
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்இதழ்,உண்கண் பாடு ஒல்லாவே.
அலைகளின் பூமிக்கு
மீனுண்ணும் நிமித்தமாய்
குருகுப்பறவைகள் சிறகுவிரித்தன;
கரைகளை உடைக்கும்
அலைகளை உடைய
அந்த
தண்ணீர்தேசத்தின் தலைவன்
என்னை
கண்ணீர்தேசத்தில்
விட்டுவிட்டுப் போனதிலிருந்து...
கறுப்புக் கொடிபிடித்து
தூக்கத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றன
மைபூசப்பட்ட என்கண்கள்;
தொட்டுக்கொள்ளாமலும்
ஒட்டிக்கொள்ளாமலும்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன
என்
ஈர இமைகள்
----------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:நரிவெரூஊத் தலையார்
பாடல் எண்:
பாடல்:5
அதுகொல்,தோழி! காம நோய்?
வதிகுருகு உறங்கும் இன்நிழற் புன்னை,
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்இதழ்,உண்கண் பாடு ஒல்லாவே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)