கரும்பலகையை வாத்தியார் அழித்துக் கொண்டிருந்தார். பள்ளி முடிவதற்கு இன்னும் சிலவினாடிகள் இருக்கக்கூடும் என்பதை யூகம் செய்தவர்களாய் சிறுவர்கள் தங்கள் புத்தகங்களை சரி செய்து துணிப்பைக்குள் அடுக்கடுக்காய் திணித்துக் கொண்டார்கள்.சிலர் கடன் கொடுக்கப்பட்ட வெள்ளைநிற சிலேட்டு குச்சிகளை திரும்பப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.சிலர் நிலாவிற்கு செல்வதற்கு சிலிண்டர் மாட்டுவதைப் போல தங்கள் பைகளுக்குள் இரண்டு கைகளை திணித்து முதுகில் தொங்கவிட்டிருந்தார்கள். வகுப்பு ஓய்ந்ததால் பள்ளிச்சிறார்களின் சின்ன சின்ன உரையாடல்கள் பேரிரைச்சலாக அந்த அமைதியான மலைகிராமத்து காற்றில்கலந்துகொண்டிருந்தது.
நான்காம் வகுப்பில் எழுந்த விடைபெறும் சத்தம் பக்கத்து வகுப்புகளுக்கும் பரவுகிறது ,இப்போது அந்த கிராமத்துப் பள்ளி முற்றிலுமாக தன் அமைதியை இழந்திருந்தது . நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் கடைசி வினாடிகளுக்காக விழிப்போடிருக்கும் வீரர்களைப் போல மாணவர்களும் காத்திருந்த வேலை 'டிங் டிங் டிங் டங் டங் டங்' என்று ஒலிக்கும் பள்ளியின் மணியோசை அந்த பள்ளியை சுற்றியுள்ள பத்து மலைகிராமங்களுக்கு கேட்கிறது .இந்த மணியோசைக்கேட்டு சில பெற்றோர்கள் அவரவர்களது வீட்டில் தயாராகி இருக்கக்கூடும்.சில மாணவர்கள் காத்திருப்பார்கள் பலரும் நடையைக் கட்டிவிடுவார்கள்.அந்த பள்ளியிலிருந்து ஒவ்வொரு ஊரும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன.
வெள்ளை சட்டை காக்கி கால்சட்டை அணிந்த சிறுவர்களும் வெள்ளை மேலாடை பச்சை பாவாடை அணிந்து சிறுமிகளும் கூட்டமாக பள்ளி வளாகத்திலிருந்து நழுவும் பாதரசத்தைப் போல மெல்லென வழிகிறார்கள் .பள்ளி வெறுமையாகிறது.ஒரு கிலோமீட்டர் தூரம் மலை சரிவிலும் ஒரு கிலோமீட்டர் தூரம் சமதளத்திலும் இவர்கள் நடந்தாகவேண்டிய தொலைவில் ஊர் இருக்கிறது.
நான்காம் வகுப்பு படிக்கும் மகேஷ் வெற்றி குமார் ஆகியோர் இணைபிரியாத தோழர்கள்.வெற்றி எப்போது ஒரு அவாய் அணிந்துவருவான், மகேசும் குமாரும் வெறும் காலுடன்தான் வருவது வழக்கம்.அது அவர்களுக்கு பழகிப் போய் இருந்தது.வெயில் காலம் ஆனாலும் பனிக்காலம் ஆனாலும்.
டிசம்பர் மாதம் பனி என்றால் அந்த பனிக்கே குளிரெடுக்கும். காலை நேரத்து விடியலில் பனிக்கட்டிகளை பொடித்து வைத்ததைப் போல புல்லெங்கும் பனித் துளிகள் உறங்கிக்கொண்டிருக்கும்.மதிய வேளைகளில் அடிக்கும் பனி வெயில் சருமத்தை குதறிவிட்டுப் போகும்.சிலரின் உதடுகளுக்கு வெடிவைத்து ரத்தக் கசிவை ஏற்ப்படுத்தி இருக்கும்.இந்த பூமியில் அந்த மாதத்தில் பெரிய பயங்கரவாதி பனிதான்.
வெற்றி எப்போதும் இளவரசனைப் போல இந்த பனிக்காலத்தில் தன் தலைமீது பஞ்சு கிரீடம் வைத்துவருவான்.மகேஷிடம் எப்போது ஒரு பருத்தி பனியன் இருக்கும். குமார் ஒற்றை சட்டையும் வெறும் காலுமாக வருவதுதான் வழக்கம்.
ஈரப் பனிக்காற்று பட்டு இவர்களின் கைகளின் ரோமங்கள் எழுந்துநின்று கொண்டன.குமாரின் மேற்பல்லும் கீழ்ப் பல்லும் .குளிர்தாக்குப் பிடிக்கமுடியாமல் 'கட் கட் கட கட ' என்று இடைவிடாமல் அடிக்க தொடங்கி விட்டன. நிலநடுக்கம் பூமிக்கு வந்ததைப் போல குமாருக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்க , உள்ளங்கை இரண்டையும் அழுத்தி தேய்த்து உஷ்ணத்தை லேசாக பற்ற வைக்க முயற்சி செய்கிறான். .அப்போதைக்கு வெப்பம் எரிகிறது உடனே அணைந்துபோகிறது . சில்லிட்ட தனது உடலை இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்றாக வேண்டுமே என்ற சவால் இப்போது மூவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட சரிவு, இவர்கள் நடக்க முயற்சி செய்தும் அது உந்தி ஓடவைத்திருக்கிறது.சரிவின் கீழிலிருந்து சமவெளி தொடங்கும் பாதையெங்கும் அடர்ந்த மரங்கள் சாலைகளை வணங்குவதைப் போல அடர்ந்து படர்ந்து நிழலை இருட்டாகவே அப்பச் செய்திருக்கிறது.மலைகிராமங்களில் மாலை ஐந்துமணி ஆனாலே அமைதியும் வெளிச்சமும் ஓய்வெடுத்துக்கொள்ள தொடங்கிவிடுகிறது.அதிலும் பனிக்காலம் என்றால் கேட்கவா வேண்டும்.அந்த மூவரில் குமாருக்கு சவாலான நேரம்தான்.இரண்டு புறமும் நண்பர்கள் வர நடுவில் குளிரிலிருந்து தன்னை ஒளித்துக்கொண்டே நடந்தான்.ஒரு கட்டத்தில் மூமரும் கைகளை ஒன்றாக பிடித்துக்கொண்டு ஒருவரது வெப்பத்தை அடுத்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டார்கள்.
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடையை கடந்து போவதற்குள் ஐந்துநிமிடம் ஆகும்.இப்போது அந்த சூழ்நிலை மூவருக்கும் சவாலாகிவிட்டிருந்தது.வேறு வழியின்றி மூவரும் முழங்காலளவு வரும் அந்த ஓடைக்குள் லேசாக கால் நனைத்தார்கள்.ரத்தம் உறையும் அளவிற்கு பனியை உணர்ந்து பின்வாங்கினார்கள்.வெற்றி அணிந்திருந்த செருப்பும் இப்போது பயன்படவில்லை என்ற ஏக்கம் அவனையும் தொற்றிக்கொண்டது.எப்படியோ கண்களை மூடிஉடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.அதுவரையில் ஏற்படாத பனியில் வலியை அப்போது உணரத்தொடங்கினார்கள். முழங்காலுக்கு கீழே உணர்வை இழந்து நின்றார்கள்.அந்த பனியின் வலி அவர்களை இன்னும் படுத்ததொடங்குகிறது.
நீரில் நனைத்ததன் எதிர்வினையாய் வெற்றி பாதையின் ஓரத்தில் ஒதுங்கினான்.'டே வெற்றி ' 'இருடா உச்சா வருது' 'எனக்கு தண்டா' 'ஆமாட எனக்கு வருது' வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் சிருநீர்க்கழிக்க எத்தனித்த நேரத்தில். பனியில் விரித்துப் போயிருந்த மரத்த அந்த குமாரின் காலில் கழித்த சிறுநீர் தெறித்தது . மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை தந்திருக்கக் கூடும்.
'டே உச்சாவே காலிலே விடுடா,,,எப்படி சூடா இருக்கு தெரியுமா' குமார் தொடங்கி வைத்தான், மற்றவர்களும் பரிசோதனைக்கு இறங்கிவிட்டார்கள்.ஆவி பறக்க ஊற்றெடுத்த அந்த சிறுநீரின் வெப்பம் குமாரை மட்டுமல்ல அனைவருக்கும் புதிய ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.இப்போது எல்லோரும் கீழி சிறுநீர்க்கழிப்பதை நிறுத்தி விட்டு மூவரும் அவரவர்களின் கால்களில் பீச்சினார்கள்.
அந்த பிஞ்சுக்கால்களில் ஊறிப்போயிருந்த குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருப்பதை அவர்கள் உணரத்தலைப்பட்டார்கள்.வியர்க்காத பொழுதானதால் சிலநிமிடங்கள் தொடர்ந்து பாய்ந்த சிறுநீரில் வெப்ப ஒத்தடத்தை வாங்கிக்கொண்டார்கள் . சிறுநீரின் ஆவி வெள்ளை வெள்ளையாய் மேலேழுந்துகொண்டிருந்தது. நன்கு குளிர்ந்துபோய் இருந்த குமார் கால் விரலில் தொடங்கி அரைக்கால் சட்டை படும் அளவிற்கு முழங்கால் வரையில் நனைத்தான்.மற்றவர்களும் வேப்பநீரில் நனைகிறார்கள்.இதமாகவும் சுகமாகவும் இருக்க இப்படியாக அந்த பனிக்காலம் முடிய .அடுத்த பனிக்காலங்கள் தொடர்ந்தன .
பிறகெல்லாம் இவர்கள் பள்ளிநேரங்களில் ரீசஸ் பீரியடில் இவர்கள் ரீசஸ் போவதே இல்லை. மாலைப் பனிக்கு சேமித்துக் கொள்கிறார்கள் .
சனி, 14 மே, 2011
பூவலூராரும் இசை ஆவர்த்தனமும்- இறுதிப்பகுதி
சில்லிட்ட அறையில் நிகழும் இந்த இனிய சந்திப்பில் என் கடைசி ஆசை அதுவாகத்தான் இருக்கமுடியும் என்று என் மனம் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது,ஸ்ரீஜியை இப்போது மிருதங்கம் வாசிக்க சொல்லுவோம் என்று வாயெடுத்தபோது உள்ளே ஒரு இருபத்தைந்து வயது அழகான இளைஞன் உள்ளே நுழைகிறார்,விநாடிப்பொழுதில் அறிமுகத்தை முடித்துவிட்டு ஸ்ரீஜியின் புறப்பாட்டுக்கான அனைத்து பொருட்களையும் மும்முரமாக எடுத்துவைக்கிறார்.
நவயுக இளைஞனுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் ஒருங்கே பெற்றிருந்த அந்த இளைஞனை ஸ்ரீஜியின் சகோதரிமகன் என்பதை அறிந்து வாழ்த்தினோம் இன்னொருமுறை.
நான்குவயதுமுதலாக வாய்ப்பாட்டும் மிருதங்கமும் கற்று மேடைப் பங்களிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் அந்த இளைஞன் என்பதை அறிந்து அனைவரும் புருவத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம்.ஸ்ரீஜிக்கு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எந்த பாவங்களில் மூலமும் இதுவரையிலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததை எண்ணி அவரின் பண்பிற்கும் அன்பிற்கும் மனதிற்குள் வணக்கம் சொல்கிறேன்.
அந்த அறைமுழுவதும் இருந்த பொருட்கள் இப்போது பயண பெட்டிக்குள்ளாக பத்திரமாகும் அந்த நேரத்தில் என் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவனாய் இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று முடிவேடுத்தபடியே.'ஸ்ரீஜி நீங்க எங்களுக்காக கொஞ்சம் மிருதங்கம் வாசிக்க முடியுமா' கேள்வியின் ஆர்வத்தை அவர் உணர்ந்திருக்க கூடும்.
பாலாடையைப் போல வெள்ளையை பூசியிருக்கும் கட்டிலின் மேற்பரப்பில். பழுப்பு நிறத்தில் பைஜாமாவும் வெள்ளை வேட்டியுமாக சமமான காலிட்டு அமர்கிறார்.'கொஞ்சம் அதை என்னன்னு பாரு' என்று தன் சகோதரி மகனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.முதன்மை அறையை ஒட்டி இருந்த ஒரு குட்டி அறையில் முருதங்கம் முறையாக வாசிக்க தயாராகிறது என்பதை சில ஒலிக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
சில வினாடிகளில் தயாராய் ஸ்ரீஜியின் விரல்களால் ஆராதனை செய்யப்பட்ட அந்த மிருதங்கம் அரியணை ஏறுகிறது.எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் மிருதங்கத்தின் இடதுபுற மேல்பகுதியில் தன் இடது காலை எடுத்து அணைக்கிறார்.விரல்கள் மிருதங்கத்தின் கன்னத்தில் லேசாய் தொட்டுத் தடவ மிருதங்கம் சிலிர்த்திருக்க கூடும்.இப்போது விரல்கள் இருபுறமும் தோலின் கன்னத்தை அழுத்தி இரண்டுமுறை அழுந்த சுற்று நிற்கின்றன.
ஒரு மிருதங்க சக்கரவர்த்தியில் கைகள் இசைக்கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டன.மெதுவாய் தொடங்கி மிருதங்கத்தில் இதுவரையிலும் கேட்டிராத புதிய புதிய இசை ஓசைகளை விதவிதமாய் எழுப்ப அறை இசையால் நிறைகிறது.காதுக்குள் நுழைந்து உடல் கோப்பையும் வழிகிறது.ஒத்திசை தேசைப்படவே தன் சகோதரை மகனை பார்த்து கண்ணசைக்கிறார்,இப்போது அந்த இசை இளவரசன் ஸ்ரீஜியின் வாசிப்பிற்கு சரியாக கைகளை தாளம் தப்பாமல் தட்டுகிறார்.நானும் சேர்ந்து கைகளைத் தட்டுகிறேன்.உடல் செல்கள் ஒவ்வொன்றும் சலவைசெயயப்படுவதைப் போன்ற உணர்வை பெறுகிறேன்.
எங்கள் ஆர்வத்திற்கு வஞ்சகம் செய்யாமல் நிறைவாக தொடர்ந்து வாசிக்கிறார்.இசைக்கலையை இத்தனை ஆண்டுகள் எத்தகைய விதத்தில் நேசித்தார் என்பதை வாசிப்பு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது ,சட்டென்று வாசிப்பை நிறுத்தி விட்டு பேசுவார் என்று நினைத்திருந்த அனைவரின் எண்ணத்தை தகர்த்தார்,தொலைப் பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை பெருட்படுத்தவில்லை என்று சொல்லிவிடமுடியாது, ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல இசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசிப்பை முடித்துவைத்தார்.
சிலிர்த்து போனோம்.கிட்டத்தட்ட ஒரு மிருதங்க சபாவில் கலந்துகொண்டைதை போல நிறைவில் எங்களை அறியாமலேயே கைகளைத் தட்டி ஆரவரிக்கிறோம்.அதற்கும் லேசான புன்னகையைத் தான் பதிலாகத்தருகிறார்.ஞானிகள் பேசுவதில்லைதானே .
மிருதங்கம் பயணத்திற்காய் பயணப் பைக்குள் அமர்ந்துகொள்கிறது.மிருதங்கம் செய்யும் மூலப்பொருள் பற்றிய விவாதத்தை நான் லேசாக பற்ற வைக்கிறேன். முன்பெல்லாம் நல்ல மரத்தில் கனமான மிருதன்கங்கள் செய்யப்பட்டன. இப்போதெல்லாம் பைபரில் கூட மிருதங்கம் செய்கிறார்கள்,காரணம் எடைக்குறைவான மிருதங்கத்தையே மேலைக் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.
புதிய இசைக்கலைஞர்களும் விரும்புகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து இந்த மிருதங்கங்கள் செய்யப்பட்டன.இலங்கையில் இத்தகைய மிருதங்கங்களுக்கான மரங்கள் மிகுதியாக இருந்தன.தமிழின படுகொலையில் நடந்த கோரத்தில் அக்குறிப்பிட்டவகை மரங்களை இழந்து நிற்கிறோம், என்ற அந்த தகவலோடு அதை மட்டுமா இழந்தோம் ...???'என்று இன்ன பிறவற்றையும் சொல்லி வருத்தம் கொள்கிறார்.இப்படியாய் சந்திப்புகம் நிறைய சிந்திப்புகளை என்னுள் விதித்துள்ளன.அந்த சந்திப்பிற்காய் பலமுறை நன்றிசொல்லி இருக்கிறேன்.
(ஸ்ரீஜியின் நண்பர் வாக்குமூலம்: சார், இந்தியன் கிளாசிகல் மியுசிக்கில் ஸ்ரீஜி ஒரு முக்கியஸ்தர்.இன்னிக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய இசைக்கலைஞர்களைக் காட்டிலும் இசை அனுபவத்திலே இவரு கொஞ்சம் ஒசத்தி.விமானத்துலே பறந்துகிட்டே இருப்பார்,உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துகிறார்,எவ்வளவோ ஸ்டூடெண்ட்ஸ்.வருஷம் முழுக்க நிகழ்சிகளில் கலக்குகிறார்.ஆனா ஒரு விஷயம் சார்.ஒரு டீ ஸ்பூன் அளவுகூட பந்தா பண்னத் தெரியாத மனுஷன் சார்.விளம்பரம் கொஞ்ச கூட புடிக்கவே புடிக்காது.கட் அவுட் ,பேனர், போஸ்டர்,மீடியா விளம்பரம் சொஞ்சிகறதே இல்லே,இவரே கூப்பிடுறவங்களுக்கு கண்டிசனே அதுதான்.நெறைய பணம் இருக்கு இவருகிட்டே ,எவ்ளோ சிம்பிள் பாத்தீங்களா.நம்மளாலே இருக்கமுடியாது.பொய் பேச தெரியாது எதார்த்தம். ஸ்ரீஜி ரொம்ப இட்டிலிஜென்ட் சார் அப்பா இருந்து இப்ப வரைக்கும் அப்படித்த அப்படியேதான்..பிரெண்ட் ன்னா அப்படி ஒரு பிரெண்ட்.)
இந்த கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? அந்த மனிதருக்கு இப்படி ஒரு நண்பரா?..ஆச்சர்யங்களோடு முடிக்கிறேன்.
நவயுக இளைஞனுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் ஒருங்கே பெற்றிருந்த அந்த இளைஞனை ஸ்ரீஜியின் சகோதரிமகன் என்பதை அறிந்து வாழ்த்தினோம் இன்னொருமுறை.
நான்குவயதுமுதலாக வாய்ப்பாட்டும் மிருதங்கமும் கற்று மேடைப் பங்களிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் அந்த இளைஞன் என்பதை அறிந்து அனைவரும் புருவத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம்.ஸ்ரீஜிக்கு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எந்த பாவங்களில் மூலமும் இதுவரையிலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததை எண்ணி அவரின் பண்பிற்கும் அன்பிற்கும் மனதிற்குள் வணக்கம் சொல்கிறேன்.
அந்த அறைமுழுவதும் இருந்த பொருட்கள் இப்போது பயண பெட்டிக்குள்ளாக பத்திரமாகும் அந்த நேரத்தில் என் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவனாய் இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று முடிவேடுத்தபடியே.'ஸ்ரீஜி நீங்க எங்களுக்காக கொஞ்சம் மிருதங்கம் வாசிக்க முடியுமா' கேள்வியின் ஆர்வத்தை அவர் உணர்ந்திருக்க கூடும்.
பாலாடையைப் போல வெள்ளையை பூசியிருக்கும் கட்டிலின் மேற்பரப்பில். பழுப்பு நிறத்தில் பைஜாமாவும் வெள்ளை வேட்டியுமாக சமமான காலிட்டு அமர்கிறார்.'கொஞ்சம் அதை என்னன்னு பாரு' என்று தன் சகோதரி மகனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.முதன்மை அறையை ஒட்டி இருந்த ஒரு குட்டி அறையில் முருதங்கம் முறையாக வாசிக்க தயாராகிறது என்பதை சில ஒலிக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
சில வினாடிகளில் தயாராய் ஸ்ரீஜியின் விரல்களால் ஆராதனை செய்யப்பட்ட அந்த மிருதங்கம் அரியணை ஏறுகிறது.எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் மிருதங்கத்தின் இடதுபுற மேல்பகுதியில் தன் இடது காலை எடுத்து அணைக்கிறார்.விரல்கள் மிருதங்கத்தின் கன்னத்தில் லேசாய் தொட்டுத் தடவ மிருதங்கம் சிலிர்த்திருக்க கூடும்.இப்போது விரல்கள் இருபுறமும் தோலின் கன்னத்தை அழுத்தி இரண்டுமுறை அழுந்த சுற்று நிற்கின்றன.
ஒரு மிருதங்க சக்கரவர்த்தியில் கைகள் இசைக்கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டன.மெதுவாய் தொடங்கி மிருதங்கத்தில் இதுவரையிலும் கேட்டிராத புதிய புதிய இசை ஓசைகளை விதவிதமாய் எழுப்ப அறை இசையால் நிறைகிறது.காதுக்குள் நுழைந்து உடல் கோப்பையும் வழிகிறது.ஒத்திசை தேசைப்படவே தன் சகோதரை மகனை பார்த்து கண்ணசைக்கிறார்,இப்போது அந்த இசை இளவரசன் ஸ்ரீஜியின் வாசிப்பிற்கு சரியாக கைகளை தாளம் தப்பாமல் தட்டுகிறார்.நானும் சேர்ந்து கைகளைத் தட்டுகிறேன்.உடல் செல்கள் ஒவ்வொன்றும் சலவைசெயயப்படுவதைப் போன்ற உணர்வை பெறுகிறேன்.
எங்கள் ஆர்வத்திற்கு வஞ்சகம் செய்யாமல் நிறைவாக தொடர்ந்து வாசிக்கிறார்.இசைக்கலையை இத்தனை ஆண்டுகள் எத்தகைய விதத்தில் நேசித்தார் என்பதை வாசிப்பு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது ,சட்டென்று வாசிப்பை நிறுத்தி விட்டு பேசுவார் என்று நினைத்திருந்த அனைவரின் எண்ணத்தை தகர்த்தார்,தொலைப் பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை பெருட்படுத்தவில்லை என்று சொல்லிவிடமுடியாது, ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல இசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசிப்பை முடித்துவைத்தார்.
சிலிர்த்து போனோம்.கிட்டத்தட்ட ஒரு மிருதங்க சபாவில் கலந்துகொண்டைதை போல நிறைவில் எங்களை அறியாமலேயே கைகளைத் தட்டி ஆரவரிக்கிறோம்.அதற்கும் லேசான புன்னகையைத் தான் பதிலாகத்தருகிறார்.ஞானிகள் பேசுவதில்லைதானே .
மிருதங்கம் பயணத்திற்காய் பயணப் பைக்குள் அமர்ந்துகொள்கிறது.மிருதங்கம் செய்யும் மூலப்பொருள் பற்றிய விவாதத்தை நான் லேசாக பற்ற வைக்கிறேன். முன்பெல்லாம் நல்ல மரத்தில் கனமான மிருதன்கங்கள் செய்யப்பட்டன. இப்போதெல்லாம் பைபரில் கூட மிருதங்கம் செய்கிறார்கள்,காரணம் எடைக்குறைவான மிருதங்கத்தையே மேலைக் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.
புதிய இசைக்கலைஞர்களும் விரும்புகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து இந்த மிருதங்கங்கள் செய்யப்பட்டன.இலங்கையில் இத்தகைய மிருதங்கங்களுக்கான மரங்கள் மிகுதியாக இருந்தன.தமிழின படுகொலையில் நடந்த கோரத்தில் அக்குறிப்பிட்டவகை மரங்களை இழந்து நிற்கிறோம், என்ற அந்த தகவலோடு அதை மட்டுமா இழந்தோம் ...???'என்று இன்ன பிறவற்றையும் சொல்லி வருத்தம் கொள்கிறார்.இப்படியாய் சந்திப்புகம் நிறைய சிந்திப்புகளை என்னுள் விதித்துள்ளன.அந்த சந்திப்பிற்காய் பலமுறை நன்றிசொல்லி இருக்கிறேன்.
(ஸ்ரீஜியின் நண்பர் வாக்குமூலம்: சார், இந்தியன் கிளாசிகல் மியுசிக்கில் ஸ்ரீஜி ஒரு முக்கியஸ்தர்.இன்னிக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய இசைக்கலைஞர்களைக் காட்டிலும் இசை அனுபவத்திலே இவரு கொஞ்சம் ஒசத்தி.விமானத்துலே பறந்துகிட்டே இருப்பார்,உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துகிறார்,எவ்வளவோ ஸ்டூடெண்ட்ஸ்.வருஷம் முழுக்க நிகழ்சிகளில் கலக்குகிறார்.ஆனா ஒரு விஷயம் சார்.ஒரு டீ ஸ்பூன் அளவுகூட பந்தா பண்னத் தெரியாத மனுஷன் சார்.விளம்பரம் கொஞ்ச கூட புடிக்கவே புடிக்காது.கட் அவுட் ,பேனர், போஸ்டர்,மீடியா விளம்பரம் சொஞ்சிகறதே இல்லே,இவரே கூப்பிடுறவங்களுக்கு கண்டிசனே அதுதான்.நெறைய பணம் இருக்கு இவருகிட்டே ,எவ்ளோ சிம்பிள் பாத்தீங்களா.நம்மளாலே இருக்கமுடியாது.பொய் பேச தெரியாது எதார்த்தம். ஸ்ரீஜி ரொம்ப இட்டிலிஜென்ட் சார் அப்பா இருந்து இப்ப வரைக்கும் அப்படித்த அப்படியேதான்..பிரெண்ட் ன்னா அப்படி ஒரு பிரெண்ட்.)
இந்த கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? அந்த மனிதருக்கு இப்படி ஒரு நண்பரா?..ஆச்சர்யங்களோடு முடிக்கிறேன்.
பூவலூராருடன் ஒருநாள் -பகுதி 4
சேப்பாக்கத்தில் கடந்த ஒருவாரகாலம் வாங்கிய உப்புக்காற்றின் எதிரொலி என் நுரையீரலுக்குள் இருமல் எதிரொலியாக இடைவிடாமல் கேட்கிறது.எரியும் வெயிலுக்கு ஆறுதல் சொல்ல குடித்து தீர்த்த பலநூறு லிட்டர் தண்ணீர் மேனியெங்கும் வியர்வையாய் வழிகிறது.கனவுகளைக் காயப்படுத்தி தவணை முறையில் தூக்கம் வந்துவந்து போகிறது. மின்விசிறி என்னை ஆசுவாசப்படுத்த இரவெல்லாம் முயற்சித்து தோற்று களைத்துப் போயிருக்கிறது.லேசாக விழிக்கிறேன்,மைக்ரோ ஓவனிலிருந்து எடுக்கப்பட்ட ரொட்டித் துண்டைப்போல நான் சூடாக இருப்பதை உணர்கிறேன்.
இன்று ஸ்ரீஜியுடன் சந்திப்பு இருக்கிறது என்று மூளை எனக்கு அறிவுறுத்தும் அந்த நொடியில் தான் செல்வாவின் அலைபேசி அழைக்கிறது.'வணக்கம் மணி,நாங்க வந்தாச்சு' ,இதோ கிளம்புகிறேன்'என்று பதில்சொல்லிவிட்டு ஆயத்தமாகிறேன். இப்போது நான் பயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோ மைலாபூரை நோக்கி பறக்கிறது.என்னை வெளியூர்க்காரன் என்று தெரிந்திருந்த ஒரு டிரைவர் பேசிய கட்டணத்தை பேரம் பேசாமல் நான் குறிப்பிட்ட ஸ்ரீஜி தங்கி இருக்கும் கட்டிடத்தின் வாசலில் வந்து நிறுத்தி இருக்கிறார்.தூக்கம் தெளிந்து பெயரை உறுதிப்படுத்திக்கொண்டு இறங்குகிறேன் அவருக்கும் மனத்தால் நன்றி சொல்லிக்கொண்டே.
நிமிர்ந்து பார்க்கச் செய்கிற கம்பீரமான கட்டடம்.வெளியில் பகட்டும் ஆரவாரமும் இல்லாத சாந்தம்.முகம்மட்டும் தெரியும் அளவிற்கு ஆடைகளால் தன்னை மூடியிருந்த வாயில் காப்போன் என்னை வரவேற்கும் விதமாக மூன்று அங்குலம் கனமுள்ள கண்ணாடி கதவை இதமாய் திறந்துவிடுகிறார். ஒரு பனி பிரதேசத்திற்குள் திடீரென நுழைவதைப் போன்ற உணர்வை பெற்றவனாய் வரவேற்பினரிடம் நெருங்குகிறேன் .
ஸ்ரீஜி எந்த அறையில் தங்கி இருக்கிறார் என்று கேட்கிறேன்.சற்று யோசித்துவிட்டு 'பூவலூரார்' என்று திரும்பவும் என்னை கேட்டு நான் தேடிவந்த நபர் அவர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்.ஆம் என்பது போல தலை அசைக்கிறேன்.அவர் நினைவில் வைத்து கூறிய அந்த அறையைநோக்கி செல்வதற்கு லிப்டை தேடுகிறேன்.ஒரு சமயத்தில் நான்குபேர் ஏறிக்கொள்ளும் அளவிற்கு சின்னதான அந்த நகரும் அறைக்குள் நான் நுழைகிறேன் ,எல்லா தளங்களிலும் நின்று நின்று ஏறும் லிப்ட் என்னையும் மூன்றாவது தளத்தில் வந்து விட்டுவிட்டு போகிறது.
அழைப்பு மணிக்கான எந்த கருவிகளும் அந்த அறைக்கதவருகில் தென்படவில்லை.சில வினாடிகள் யோசித்த படி முழிக்கிறேன்.இறுதியாய் வலிக்காமல் என் வலதுகை நடுவிரலின் கணுக்களால் லேசாக சிலமுறை தட்டுகிறேன்.தட்டிமுடிப்பதர்க்கும் கதவு திறக்கிறது.உள்ளே ஸ்ரீஜியை சுற்றி வட்டமாய் நமது முகநூல் தோழமைகள்.
இள நிறத்தில் முழுக்கை சட்டையும் கருநீல நிறத்தில் பேண்டும் அணிந்து ஒரு தேர்ந்த அதிகாரியின் தோற்றத்தின் கிளீன் சேவுடன் ஒருவர் மெல்லிய குரலில் இனிதாய் வரவேற்று ஸ்ரீஜியில் அருகிலேயே அமர்ந்திருந்தார்.என் யூகம் சரியாக இருந்திருக்கிறது என்பதை அவரை எனக்கு ஸ்ரீஜி அறிமுகம் செய்துவைக்கும் போது அறியமுடிந்தது. செல்வா,ஜெயராஜ்,அன்பு, கயல், என்று நால்வரும் சுற்றிலும் அமர்ந்திருந்து கலகலத்தார்கள்.
அவரோடு உரையாடவேண்டும் என்ற ஆசையால் ஸ்ரீஜியிடம் நான் சின்ன சின்ன விதைகளை வீசுகிறேன்.அவர் அந்த விதைகளை மனதில் போட்டுக்கொண்டு மலரும் நினைவுகளை ஆலமரம் அளவிற்கும் அழகழகாய் மலர்த்துகிறார்.
கல்லூரி படிக்கும் காலத்தில் அருகிலிருந்த குப்பத்திற்குள் சென்று இரவு வெகுநேரம் வரை நாடகம் கூத்து பார்த்த ஞாபகங்களை கிளறுகிறார்.நான்கைந்து நண்பர்கள் கைலி கட்டிக்கொண்டு சுவாச மண்டலங்களில் புகை மண்டலங்களை விட்டுக்கொண்டும் வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் களைகட்டி இருக்கும் குப்பத்திற்க்குள் சென்று நிகழ்த்துக்கலைகள் பார்ப்பது ஒரு வேலையாக கொண்டிருந்திருன்தார்களாம் .அதை சொல்லிவிட்டு இப்போது தெருக்கூத்து என்ற தமிழர்களின் நாடக பிரச்சார வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோயவிட்டதை சொல்லி வருத்தப்படுகிறார்.தெருக்கூத்து என்ற ஆதி கலையை எந்த அளவிற்கு ஸ்ரீஜி நேசிக்கிறார் என்பதை அந்த நினைவுகூறலில் முலமாக தெரிந்துகொண்டேன்.அந்த நாடகக் கலையின் நவீன வடிவமாக இருக்கும் திரைக்கலையில் இருக்கும் எதார்த்தமற்ற போக்குகள் குறித்தும் வருத்தமும் தெரிவித்தார்.
மேலைநாடுகளில் இருக்கும் ஒவொருவரும் தங்கள் நாட்டு நடனம் இசை வாத்தியம் வாய்பாட்டு ஏதாவது ஒரு கலையையை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதும்,அதற்காக அதிகப்படியான தொகையையும் நேரத்தையும் செலவிடுவதையை சுட்டிக்காட்டிய ஸ்ரீஜி ,தமிழகத்தில் அந்த அடையாளம் தகர்ந்துவருவதை வருத்தம் தொனிக்க வாதமாக முன்வைக்கிறார்.ஊடகங்களின் பாதிப்புகளால் பழைய கலை அடையாளங்களை பாதுகாக்க முடியாதவர்களாகவும் அவைகளை தொடரும் திராணி அற்றவர்களாகவும் மாறிப்போயிருக்கும் அபத்தத்தை தனக்கே உரிய பாணியில் ஜில்லென விவாதப் பொருளாக்குகிறார்.
மைலாப்பூரில் ஒரு உணவகம் இருக்கிறதாம் ,இளம் வயதில் அங்கு சென்றுதான் ஸ்ரீஜி உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.சின்ன சிம்மினி விளக்கில் காய்கறிகளை நறுக்குவார்கலாம் தூக்ககலக்கத்தில் அந்த உணவகத்தின் பணியாளர்கள்.அவர்களின் விடியற்காலையில் பணிகள் முடியும்போதுதான் முற்றிலுமாக அவர்கள் தூக்கத்திலிருந்து விடுபட்டிருப்பார்கலாம். நண்பர் ஒருவர் ஒரு நாள் ஸ்ரீஜியைப் பார்த்து கேட்டிருக்கிறார்.ஸ்ரீஜி நீ சைவமா இல்லை அசைவமா? அதற்க்கு சைவம்தான் பதிலளித்திருக்கிறார்.அப்படிஎன்றால் இத்தனை நாட்கள் ஏன் அசைவம் சாப்பிட்டு வந்திருக்கிறார் என்று அதிரவைத்திருக்கிறார். ஸ்ரீஜிக்கு ஒன்றுமே புரியவில்லை.'பின்னே என்ன காய் கறியிலே இருக்கிற பூச்சி எல்லாத்தையும் வெட்டி வேட்டிதான் போடுறாங்களே ஒழிய வெட்டி எங்கே வெளியிலே போட்டாங்க.அந்த தூங்கு மூஞ்சி பசங்க'என்று சொன்னபிறகுதான் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.அன்றிலிருந்து அந்த உணவகத்திற்கு ஸ்ரீஜி சென்றதே இல்லையாம்
இன்னொரு உணவகம் 1980௦-களிலிருந்து இன்று வரையில் ஒரே எண்ணையில்தான் பலகாரங்களை சுடுவார்களாம்.அப்படியான ஒரு ஏற்பாட்டை ஒரு உணவகம் கொண்டிருக்கிறதாம். அவர்கள் பழயதை மறக்கும் கெட்டகுணம் இல்லாதவர்கள் என்று நகைக்கவைக்கிறார்.அதில் பலகாரங்கள் சுவையாக இருப்பதாகவும் தன சம்மதத்தையும் சொல்கிறார்.சுட்ட என்னையையே சுடும் கலையை அவர்கள் மட்டுமே தெரிந்திருந்தார்கள்.
இப்படியாக பலவற்றைப்பற்றியும் விவாதிக்கிறோம் ...பலமணி நேரங்கள் அவரது பசுமையான அனுபவங்களால் களவு போயிருந்ததை கடிகாரத்தைப் பார்த்த பிறகே தெரிந்துகொண்டோம்.என் இறுதி கேள்வி மனதில் தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது ...சின்ன இடைவெளி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.சமயமும் அமைகிறது...
ஸ்ரீஜி எங்களுக்காக நீங்கள் உங்கள் மிருதங்கத்தை வாசித்து காட்ட வேண்டும் என்கிறேன்.சம்மதத்தை புன்னகையோடு சொல்கிறார்.
இன்று ஸ்ரீஜியுடன் சந்திப்பு இருக்கிறது என்று மூளை எனக்கு அறிவுறுத்தும் அந்த நொடியில் தான் செல்வாவின் அலைபேசி அழைக்கிறது.'வணக்கம் மணி,நாங்க வந்தாச்சு' ,இதோ கிளம்புகிறேன்'என்று பதில்சொல்லிவிட்டு ஆயத்தமாகிறேன். இப்போது நான் பயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோ மைலாபூரை நோக்கி பறக்கிறது.என்னை வெளியூர்க்காரன் என்று தெரிந்திருந்த ஒரு டிரைவர் பேசிய கட்டணத்தை பேரம் பேசாமல் நான் குறிப்பிட்ட ஸ்ரீஜி தங்கி இருக்கும் கட்டிடத்தின் வாசலில் வந்து நிறுத்தி இருக்கிறார்.தூக்கம் தெளிந்து பெயரை உறுதிப்படுத்திக்கொண்டு இறங்குகிறேன் அவருக்கும் மனத்தால் நன்றி சொல்லிக்கொண்டே.
நிமிர்ந்து பார்க்கச் செய்கிற கம்பீரமான கட்டடம்.வெளியில் பகட்டும் ஆரவாரமும் இல்லாத சாந்தம்.முகம்மட்டும் தெரியும் அளவிற்கு ஆடைகளால் தன்னை மூடியிருந்த வாயில் காப்போன் என்னை வரவேற்கும் விதமாக மூன்று அங்குலம் கனமுள்ள கண்ணாடி கதவை இதமாய் திறந்துவிடுகிறார். ஒரு பனி பிரதேசத்திற்குள் திடீரென நுழைவதைப் போன்ற உணர்வை பெற்றவனாய் வரவேற்பினரிடம் நெருங்குகிறேன் .
ஸ்ரீஜி எந்த அறையில் தங்கி இருக்கிறார் என்று கேட்கிறேன்.சற்று யோசித்துவிட்டு 'பூவலூரார்' என்று திரும்பவும் என்னை கேட்டு நான் தேடிவந்த நபர் அவர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்.ஆம் என்பது போல தலை அசைக்கிறேன்.அவர் நினைவில் வைத்து கூறிய அந்த அறையைநோக்கி செல்வதற்கு லிப்டை தேடுகிறேன்.ஒரு சமயத்தில் நான்குபேர் ஏறிக்கொள்ளும் அளவிற்கு சின்னதான அந்த நகரும் அறைக்குள் நான் நுழைகிறேன் ,எல்லா தளங்களிலும் நின்று நின்று ஏறும் லிப்ட் என்னையும் மூன்றாவது தளத்தில் வந்து விட்டுவிட்டு போகிறது.
அழைப்பு மணிக்கான எந்த கருவிகளும் அந்த அறைக்கதவருகில் தென்படவில்லை.சில வினாடிகள் யோசித்த படி முழிக்கிறேன்.இறுதியாய் வலிக்காமல் என் வலதுகை நடுவிரலின் கணுக்களால் லேசாக சிலமுறை தட்டுகிறேன்.தட்டிமுடிப்பதர்க்கும் கதவு திறக்கிறது.உள்ளே ஸ்ரீஜியை சுற்றி வட்டமாய் நமது முகநூல் தோழமைகள்.
இள நிறத்தில் முழுக்கை சட்டையும் கருநீல நிறத்தில் பேண்டும் அணிந்து ஒரு தேர்ந்த அதிகாரியின் தோற்றத்தின் கிளீன் சேவுடன் ஒருவர் மெல்லிய குரலில் இனிதாய் வரவேற்று ஸ்ரீஜியில் அருகிலேயே அமர்ந்திருந்தார்.என் யூகம் சரியாக இருந்திருக்கிறது என்பதை அவரை எனக்கு ஸ்ரீஜி அறிமுகம் செய்துவைக்கும் போது அறியமுடிந்தது. செல்வா,ஜெயராஜ்,அன்பு, கயல், என்று நால்வரும் சுற்றிலும் அமர்ந்திருந்து கலகலத்தார்கள்.
அவரோடு உரையாடவேண்டும் என்ற ஆசையால் ஸ்ரீஜியிடம் நான் சின்ன சின்ன விதைகளை வீசுகிறேன்.அவர் அந்த விதைகளை மனதில் போட்டுக்கொண்டு மலரும் நினைவுகளை ஆலமரம் அளவிற்கும் அழகழகாய் மலர்த்துகிறார்.
கல்லூரி படிக்கும் காலத்தில் அருகிலிருந்த குப்பத்திற்குள் சென்று இரவு வெகுநேரம் வரை நாடகம் கூத்து பார்த்த ஞாபகங்களை கிளறுகிறார்.நான்கைந்து நண்பர்கள் கைலி கட்டிக்கொண்டு சுவாச மண்டலங்களில் புகை மண்டலங்களை விட்டுக்கொண்டும் வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் களைகட்டி இருக்கும் குப்பத்திற்க்குள் சென்று நிகழ்த்துக்கலைகள் பார்ப்பது ஒரு வேலையாக கொண்டிருந்திருன்தார்களாம் .அதை சொல்லிவிட்டு இப்போது தெருக்கூத்து என்ற தமிழர்களின் நாடக பிரச்சார வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோயவிட்டதை சொல்லி வருத்தப்படுகிறார்.தெருக்கூத்து என்ற ஆதி கலையை எந்த அளவிற்கு ஸ்ரீஜி நேசிக்கிறார் என்பதை அந்த நினைவுகூறலில் முலமாக தெரிந்துகொண்டேன்.அந்த நாடகக் கலையின் நவீன வடிவமாக இருக்கும் திரைக்கலையில் இருக்கும் எதார்த்தமற்ற போக்குகள் குறித்தும் வருத்தமும் தெரிவித்தார்.
மேலைநாடுகளில் இருக்கும் ஒவொருவரும் தங்கள் நாட்டு நடனம் இசை வாத்தியம் வாய்பாட்டு ஏதாவது ஒரு கலையையை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதும்,அதற்காக அதிகப்படியான தொகையையும் நேரத்தையும் செலவிடுவதையை சுட்டிக்காட்டிய ஸ்ரீஜி ,தமிழகத்தில் அந்த அடையாளம் தகர்ந்துவருவதை வருத்தம் தொனிக்க வாதமாக முன்வைக்கிறார்.ஊடகங்களின் பாதிப்புகளால் பழைய கலை அடையாளங்களை பாதுகாக்க முடியாதவர்களாகவும் அவைகளை தொடரும் திராணி அற்றவர்களாகவும் மாறிப்போயிருக்கும் அபத்தத்தை தனக்கே உரிய பாணியில் ஜில்லென விவாதப் பொருளாக்குகிறார்.
மைலாப்பூரில் ஒரு உணவகம் இருக்கிறதாம் ,இளம் வயதில் அங்கு சென்றுதான் ஸ்ரீஜி உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.சின்ன சிம்மினி விளக்கில் காய்கறிகளை நறுக்குவார்கலாம் தூக்ககலக்கத்தில் அந்த உணவகத்தின் பணியாளர்கள்.அவர்களின் விடியற்காலையில் பணிகள் முடியும்போதுதான் முற்றிலுமாக அவர்கள் தூக்கத்திலிருந்து விடுபட்டிருப்பார்கலாம். நண்பர் ஒருவர் ஒரு நாள் ஸ்ரீஜியைப் பார்த்து கேட்டிருக்கிறார்.ஸ்ரீஜி நீ சைவமா இல்லை அசைவமா? அதற்க்கு சைவம்தான் பதிலளித்திருக்கிறார்.அப்படிஎன்றால் இத்தனை நாட்கள் ஏன் அசைவம் சாப்பிட்டு வந்திருக்கிறார் என்று அதிரவைத்திருக்கிறார். ஸ்ரீஜிக்கு ஒன்றுமே புரியவில்லை.'பின்னே என்ன காய் கறியிலே இருக்கிற பூச்சி எல்லாத்தையும் வெட்டி வேட்டிதான் போடுறாங்களே ஒழிய வெட்டி எங்கே வெளியிலே போட்டாங்க.அந்த தூங்கு மூஞ்சி பசங்க'என்று சொன்னபிறகுதான் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.அன்றிலிருந்து அந்த உணவகத்திற்கு ஸ்ரீஜி சென்றதே இல்லையாம்
இன்னொரு உணவகம் 1980௦-களிலிருந்து இன்று வரையில் ஒரே எண்ணையில்தான் பலகாரங்களை சுடுவார்களாம்.அப்படியான ஒரு ஏற்பாட்டை ஒரு உணவகம் கொண்டிருக்கிறதாம். அவர்கள் பழயதை மறக்கும் கெட்டகுணம் இல்லாதவர்கள் என்று நகைக்கவைக்கிறார்.அதில் பலகாரங்கள் சுவையாக இருப்பதாகவும் தன சம்மதத்தையும் சொல்கிறார்.சுட்ட என்னையையே சுடும் கலையை அவர்கள் மட்டுமே தெரிந்திருந்தார்கள்.
இப்படியாக பலவற்றைப்பற்றியும் விவாதிக்கிறோம் ...பலமணி நேரங்கள் அவரது பசுமையான அனுபவங்களால் களவு போயிருந்ததை கடிகாரத்தைப் பார்த்த பிறகே தெரிந்துகொண்டோம்.என் இறுதி கேள்வி மனதில் தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது ...சின்ன இடைவெளி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.சமயமும் அமைகிறது...
ஸ்ரீஜி எங்களுக்காக நீங்கள் உங்கள் மிருதங்கத்தை வாசித்து காட்ட வேண்டும் என்கிறேன்.சம்மதத்தை புன்னகையோடு சொல்கிறார்.
பூவலூராருடன் ஒரு நாள் - பகுதி 3
சின்னச் சின்ன உரையாடல்களால் கோடி தீக்குச்சிகள் கிழித்த மருந்துகிடங்கைப் போல குளிரூட்டப்பட்ட அந்த உணவு அறை சூடாகிக்கொண்டிருந்தது. இரைப்பை நிரப்புவதும் இதயம் நிரப்புவதும் ஒரு சேர நிகழ்ந்துகொண்டிருந்த அந்த விருந்தில் முதன்மை உணவை ஆர்டர் செய்யும் தருணத்தில் வெள்ளைச் சிரிப்போடும் குழிவுழுந்த கன்னத்தொடும் கனத்த கண்ணாடியின் வழியாக எங்களை உன்னிப்பாய் ஊடுருவி பார்த்தபடி உள்ளே நுழைகிறார் செல்வா.
நான் அங்கு இருப்பதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அவரின் விழியுயர்த்திய விசாரிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.உடன் அன்பும் கயலும் இணைகிறார்கள்.இப்போது எங்கள் அனைவரது மொய்த்தலும் ஸ்ரீஜியை மையமிட்டே இருந்தது.
சைவக்காரர்களும் அசைவக்காரர்களும் உணவுக்கலவரங்கள் நேராமல் விருப்பம்போல ஆர்டர் செய்கிறார்கள்.பசியோடும் விவாத ருசியோடும் நேரம் வழிந்துகொண்டே இருந்தது. வெளிச்ச உலகத்தில் இருப்பதால் கருத்த இரவை மறந்து போயிருந்தார்கள் ஒவ்வொருவரும் .பிரியமான நண்பர்களோடு இணைந்திருக்கும் பொழுதுகள் ஒரு இனிய தியானவகுப்புகள் தான்.அந்த விருந்து உணவை எடுத்து சுவைக்க ஐந்துவிரல்களும் உள்ளங்கையும் யாருக்கும் பயன்படவில்லையே என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
மனித விரல்களோடு உலோக விரல்களை இணைத்துக்கொண்டு கலியுக ரோபோக்களாக நாங்கள் கருவிகளின் துணையோடு அசைபோட்டோம். உணவின் சுற்று முடிந்தும் முடியாமல் மேசையை நோக்கி வண்ணவண்ண ஆடையணிந்து அலங்காரங்கள் ஆயிரம் செய்து ஐஸ்கிரீம் தேவதைகள் படையெடுக்கிறார்கள்.அதில் ஒரு கோப்பையில் வானத்து 'வெண்ணிலாவும்' வழுக்கி விழுந்திருந்தது.
இந்த எல்லா நிகழ்வுகளையும் கோணங்களுக்கு தகுந்தாற்போல இடம்மாறிக்கொண்டு கேமராவின் ஆடியை தன் இடது விழியோடு முத்தம் வைத்துக்கொண்டு .கேமராவின் உடல் பாகம் அவரது கன்னத்தில் மெல்ல பதிய அடிக்கடி ஜூம் லென்சை மாற்றி பிளாசில் வெளிச்சம் விதைத்து படங்களை அறுவடை செய்துகொள்கிறார் பதட்டமில்லாமல் ஒரு படக்கலைஞர்.அவர்தான் ஜெயராஜ் .
அந்த உணவகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சுவைமறந்து எங்களை நோக்கி விழி திருப்புகிறார்கள்.நிஜ நாயகன் ஸ்ரீஜி நடுவில் நிற்கிறார்.அனைவரும் இணைந்து இணைந்து சிரித்து பெருமிதம்கொண்டு நெகிழ்ந்து படங்களை பதிகிறார்கள்.எல்லோரையும் பதிந்த ஜெயராஜை இறுதியாய் நான் வாங்கி பதிந்தேன். அது சரியான பதிவுதான என்று டிஜிட்டல் தோற்றத்தை பார்த்து விட்டு தலையாட்டினார்.சரியாக எடுத்திருக்கிறேன் என்று நான் சந்தோசப்பட்டுக்கொண்டேன்.
இப்போது பில் கட்டும் ஓலை வருகிறது..அன்பு முந்துகிறார் ..நானும் என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்..பிறரும் முன்வருகிறார்கள்.இறுதியில் ஸ்ரீஜி மட்டுமே வள்ளலாகிறார்.பைஜாமாவின் இடது பைக்குள் தன் வலது கையைத் திணித்து கத்தியை மடித்துவைத்திருந்த பணத்தை சிதறாமல் அள்ளுகிறார். அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.அதில் பலவற்றை அந்த வசூல் குறிப்பேட்டுக்குள் திணித்து விருந்தை முடித்துவைக்கிறார்.
.
உணவு முடித்து பல்குத்தி தீர்த்திருந்த அந்த கிளைமாக்சில் ஸ்ரீஜியின் சந்திப்பிற்காக விரைந்து தன் குறும்படத்தை முடித்து அதை வெளி இடுவதற்காக டிவிடி யாக செல்வா கொண்டுவந்திருப்பதை அறிந்து அனைவரும் ஆனந்தப்பட்டோம்.அதை வெளி இடுவதற்கு அந்த இடம் பொருத்தமில்லை என்று சொல்ல அனைவரும் வரவேற்பு அறையை நோக்கி நகர்கிறோம்.
ஸ்ரீஜி வலதுபுற வண்ணச்சுவரின் நடுவில் நிற்கிறார் செல்வா தன் முத்திரைப் படைப்பான 'யாதுமானவள்' என்ற குறும்படத்தை நிறைவோடு வெளியிடுகிறார்.ஸ்ரீஜி புன்னகையோடு பெற்றுக்கொள்கிறார்.பிறகு அனைவரும் கேமராவின் செவ்வகத்திற்குள் வந்துவிடுகிறோம் ,இப்போது ஜெயராஜ் ஒரே தோட்டாவில் அனைவரையும் சுட்டுமுடிக்கிறார்.
முகநூல் தோழமைகளின் கூட்டம் கண்ணாடி வாசலைத் தாண்டி சப்த உலகத்திற்குள் சங்கமிக்க வெளியேறுவதற்கு முன்பாக அனல்காற்று அனைவரையும் இன்னொருமுறை வரவேற்க அனைவரும் முகம் சுளிக்கிறார்கள்.களிப்பும் கதகதப்பும் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தில் விடை பெறலுக்கான அனைத்து முகாந்தரங்களும் தொடங்குகின்றன.
மீண்டும் சிந்திப்போம் என்ற நம்பிக்கையோடு வேறுவேறு எல்லைகளை நோக்கி நகர்கிற ராணுவ வீரர்களைப் போல தோழமைகள் பிரிகிறார்கள்.கலகலத்த அந்த கடையில் வாசல் வெறுச்சிடுகிறது. எல்லோருக்கும் கையசைத்து அவர்கள் போகும்வரை காத்திருக்கிறார் ஸ்ரீஜி. இறுதியாய் அந்த முகப்பில் நானும் அவரும் மட்டுமே.
ஸ்ரீஜி என்னை அழைத்துக்கொண்டு அவருக்காக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்த ஆட்டோவை நோக்கி அழைத்துக்கொண்டு போகிறார்.'இவரை சேப்பாக்கத்தில் இறக்கிவிட்டுட்டு அப்படியே நாம் மைலாபூர் போயிறலாம்'என்று தனது ஆடோ ஓட்டுஞருக்கு கட்டளையைப் பாய்ச்சுகிறார்.டிரைவர் பாபு பதிலுக்கு தலையசைத்தபடி முறுக்குகிறார்.
இப்போது இருபுறத்து குளிர்காற்று அருகிலிருக்கும் சங்கீத சுரத்திற்கும் (ஸ்ரீஜி) அவரின் அருகிலிருக்கும் ஒரு தப்புத் தாளத்திற்கும் (நான்) பாரபட்சமிலாமல் வீசுகிறது. நன்றி அன்பு பாசம் பகிர்வு ....இவைகளோடு அந்த நீண்ட பயணம் விரைவாய் முடிந்தது ஏக்கத்தை மிச்சம் வைத்தது.இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
நான் அங்கு இருப்பதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அவரின் விழியுயர்த்திய விசாரிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.உடன் அன்பும் கயலும் இணைகிறார்கள்.இப்போது எங்கள் அனைவரது மொய்த்தலும் ஸ்ரீஜியை மையமிட்டே இருந்தது.
சைவக்காரர்களும் அசைவக்காரர்களும் உணவுக்கலவரங்கள் நேராமல் விருப்பம்போல ஆர்டர் செய்கிறார்கள்.பசியோடும் விவாத ருசியோடும் நேரம் வழிந்துகொண்டே இருந்தது. வெளிச்ச உலகத்தில் இருப்பதால் கருத்த இரவை மறந்து போயிருந்தார்கள் ஒவ்வொருவரும் .பிரியமான நண்பர்களோடு இணைந்திருக்கும் பொழுதுகள் ஒரு இனிய தியானவகுப்புகள் தான்.அந்த விருந்து உணவை எடுத்து சுவைக்க ஐந்துவிரல்களும் உள்ளங்கையும் யாருக்கும் பயன்படவில்லையே என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
மனித விரல்களோடு உலோக விரல்களை இணைத்துக்கொண்டு கலியுக ரோபோக்களாக நாங்கள் கருவிகளின் துணையோடு அசைபோட்டோம். உணவின் சுற்று முடிந்தும் முடியாமல் மேசையை நோக்கி வண்ணவண்ண ஆடையணிந்து அலங்காரங்கள் ஆயிரம் செய்து ஐஸ்கிரீம் தேவதைகள் படையெடுக்கிறார்கள்.அதில் ஒரு கோப்பையில் வானத்து 'வெண்ணிலாவும்' வழுக்கி விழுந்திருந்தது.
இந்த எல்லா நிகழ்வுகளையும் கோணங்களுக்கு தகுந்தாற்போல இடம்மாறிக்கொண்டு கேமராவின் ஆடியை தன் இடது விழியோடு முத்தம் வைத்துக்கொண்டு .கேமராவின் உடல் பாகம் அவரது கன்னத்தில் மெல்ல பதிய அடிக்கடி ஜூம் லென்சை மாற்றி பிளாசில் வெளிச்சம் விதைத்து படங்களை அறுவடை செய்துகொள்கிறார் பதட்டமில்லாமல் ஒரு படக்கலைஞர்.அவர்தான் ஜெயராஜ் .
அந்த உணவகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சுவைமறந்து எங்களை நோக்கி விழி திருப்புகிறார்கள்.நிஜ நாயகன் ஸ்ரீஜி நடுவில் நிற்கிறார்.அனைவரும் இணைந்து இணைந்து சிரித்து பெருமிதம்கொண்டு நெகிழ்ந்து படங்களை பதிகிறார்கள்.எல்லோரையும் பதிந்த ஜெயராஜை இறுதியாய் நான் வாங்கி பதிந்தேன். அது சரியான பதிவுதான என்று டிஜிட்டல் தோற்றத்தை பார்த்து விட்டு தலையாட்டினார்.சரியாக எடுத்திருக்கிறேன் என்று நான் சந்தோசப்பட்டுக்கொண்டேன்.
இப்போது பில் கட்டும் ஓலை வருகிறது..அன்பு முந்துகிறார் ..நானும் என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்..பிறரும் முன்வருகிறார்கள்.இறுதியில் ஸ்ரீஜி மட்டுமே வள்ளலாகிறார்.பைஜாமாவின் இடது பைக்குள் தன் வலது கையைத் திணித்து கத்தியை மடித்துவைத்திருந்த பணத்தை சிதறாமல் அள்ளுகிறார். அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.அதில் பலவற்றை அந்த வசூல் குறிப்பேட்டுக்குள் திணித்து விருந்தை முடித்துவைக்கிறார்.
.
உணவு முடித்து பல்குத்தி தீர்த்திருந்த அந்த கிளைமாக்சில் ஸ்ரீஜியின் சந்திப்பிற்காக விரைந்து தன் குறும்படத்தை முடித்து அதை வெளி இடுவதற்காக டிவிடி யாக செல்வா கொண்டுவந்திருப்பதை அறிந்து அனைவரும் ஆனந்தப்பட்டோம்.அதை வெளி இடுவதற்கு அந்த இடம் பொருத்தமில்லை என்று சொல்ல அனைவரும் வரவேற்பு அறையை நோக்கி நகர்கிறோம்.
ஸ்ரீஜி வலதுபுற வண்ணச்சுவரின் நடுவில் நிற்கிறார் செல்வா தன் முத்திரைப் படைப்பான 'யாதுமானவள்' என்ற குறும்படத்தை நிறைவோடு வெளியிடுகிறார்.ஸ்ரீஜி புன்னகையோடு பெற்றுக்கொள்கிறார்.பிறகு அனைவரும் கேமராவின் செவ்வகத்திற்குள் வந்துவிடுகிறோம் ,இப்போது ஜெயராஜ் ஒரே தோட்டாவில் அனைவரையும் சுட்டுமுடிக்கிறார்.
முகநூல் தோழமைகளின் கூட்டம் கண்ணாடி வாசலைத் தாண்டி சப்த உலகத்திற்குள் சங்கமிக்க வெளியேறுவதற்கு முன்பாக அனல்காற்று அனைவரையும் இன்னொருமுறை வரவேற்க அனைவரும் முகம் சுளிக்கிறார்கள்.களிப்பும் கதகதப்பும் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தில் விடை பெறலுக்கான அனைத்து முகாந்தரங்களும் தொடங்குகின்றன.
மீண்டும் சிந்திப்போம் என்ற நம்பிக்கையோடு வேறுவேறு எல்லைகளை நோக்கி நகர்கிற ராணுவ வீரர்களைப் போல தோழமைகள் பிரிகிறார்கள்.கலகலத்த அந்த கடையில் வாசல் வெறுச்சிடுகிறது. எல்லோருக்கும் கையசைத்து அவர்கள் போகும்வரை காத்திருக்கிறார் ஸ்ரீஜி. இறுதியாய் அந்த முகப்பில் நானும் அவரும் மட்டுமே.
ஸ்ரீஜி என்னை அழைத்துக்கொண்டு அவருக்காக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்த ஆட்டோவை நோக்கி அழைத்துக்கொண்டு போகிறார்.'இவரை சேப்பாக்கத்தில் இறக்கிவிட்டுட்டு அப்படியே நாம் மைலாபூர் போயிறலாம்'என்று தனது ஆடோ ஓட்டுஞருக்கு கட்டளையைப் பாய்ச்சுகிறார்.டிரைவர் பாபு பதிலுக்கு தலையசைத்தபடி முறுக்குகிறார்.
இப்போது இருபுறத்து குளிர்காற்று அருகிலிருக்கும் சங்கீத சுரத்திற்கும் (ஸ்ரீஜி) அவரின் அருகிலிருக்கும் ஒரு தப்புத் தாளத்திற்கும் (நான்) பாரபட்சமிலாமல் வீசுகிறது. நன்றி அன்பு பாசம் பகிர்வு ....இவைகளோடு அந்த நீண்ட பயணம் விரைவாய் முடிந்தது ஏக்கத்தை மிச்சம் வைத்தது.இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
பூவலூராருடன் ஒருநாள் - பகுதி 2
சகாராவிலிருந்து காஸ்மீரம் வந்து சேர்ந்ததைப் போன்ற உணர்வை ஏசியின் குளிர் ஒத்தடம் ஏற்படுத்த தொடங்கி விட்ட அந்த நேரம்,தொண்டை கரகரத்து பேசமுடியாமல் போயிருந்ததை யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் என் சக்திக்கு ஏற்றார்போல இரண்டுமூன்று வார்த்தைகளில் அனைவரிடமும் அறிமுகத்தை மரியாதை நிமித்தமாய் முடித்துக்கொண்டு புதிதாக அன்று சந்திக்கும் தமிழிடம் சிறப்பு விசாரிப்புகளை வைத்துவிட்டு சிலபடங்களில் நடித்திருந்தாலும் கச்சிதமான கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரைப் பதித்த நிகோலஸ் அவர்களை நெஞ்சார வாழ்த்திவிட்டு முடிக்கிறேன்.பின் மனமும் கண்களும் ஸ்ரீஜி இருக்கும் திசையில் நிலை குத்துகிறது.
அவர் மொழிகளற்ற மேலான புன்னகையால் என்னை விசாரிப்பதை நான் கூர்ந்து கவனிக்கிறேன்.முகத்தின் இரண்டு புறமும் காதோரம் தொடங்கி கன்னத்தின் கீழ் தாடைப்பகுதிவரை நீண்டிருந்த கிர்தாவை வீச்சரிவாளாய் முருக்கிவிடப்பட்டிருந்த மீசையின் நுனிப்பகுதிகள் தொட்டுவிளையாடிக்கொண்டிருந்தன.அகலவிரித்து இந்த பூமி கிரகத்தை விழுகுவதைப் போல பார்க்கும் இருவிழிகளில் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது.அகன்று பரந்திருந்தது ஒளிவீசும் நெற்றி.இப்படியான தோற்றத்தில் கம்பீரமாக காட்சித்தரும் ஸ்ரீஜியில் முகத்தில் இடைவிடாமல் தவழும் புன்னகை அவரது மெல்லிதயத்தை பிரதிபளித்துக்கொண்டிருன்தது .மாலைநேரத்து மஞ்சள் நிலா நிறத்தில் ஒரு அழகான குர்தா முழங்காலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது ,உடன் நீலம் பாரித்த வெள்ளைநிறத்தில் வேட்டி.
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இங்கு மொத்த அடையாளங்களோடு ஒரு முழுமையான தமிழனாய் ஸ்ரீஜி அமர்ந்திருந்தது, ஆச்சர்யத்தை அனைவரிடமும் பற்றவைக்கவே செய்திருந்தது.
மேலை மண்ணில் இசைத்தமிழனாக,எழுசுர பிரியர்களின் நாயகனாக நீண்ட வருடங்களாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் ஆடையிலும் மொழியிலும் பச்சைத் தமிழனின் பாசமுகவரி இருந்ததை பார்த்து பார்த்து பூரித்தேன். அவசரகதியில் ஜீன்ஸ் அணித்து சென்றிருந்த என்னை பார்த்து அவர் பேசும்போதெல்லாம் மனதிற்குள் சுருக்கென்று வலிகொண்டேன். ஆடை என்பதை வெறும் உடல் மறக்கும் நாகரீகத்தின் பொருளாக சமூக விஞ்ஞானிகள் கருதுவது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று உணரலானேன்.ஒரு இனத்தின் பண்பாட்டு ,கலாசாரம்,சுற்றுச்சூழல்,தொழில்முறை,உற்பத்தி போன்ற பலவற்றோடும் நாம் அணியும் ஆடை சம்மந்தப்பட்டிருக்கிறது என்கிற ஞானம் அன்று உதயமானது.
பேசும்போது இடையில் ஆங்கில வார்த்தைகளை குழைத்து ஒரு கலவைமொழியாக எப்படி பேசப்போகிறார் என்ற என் எதிர்ப்பார்ப்பிற்கு ஸ்ரீஜியில் எதார்த்த தமிழ் ஆப்பு வைத்தது. லேசான சென்னை செந்தமிழின் உச்சரிப்போடு இயல்பான தமிழ் விவாதத்தை இன்னும் இலகுவாக்கியது.கர்வம் தொலைத்த ஒரு கம்பீரமான மனிதரை அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
முகநூலில் அறிவார்ந்த தகவல்களையும் பதிவதிலும் ,நடப்பு நிகழ்வுகளை சுடச்சுட முன்வைப்பதிலும்,இந்திய தேசத்தின் சமூக அரசியல் நிலைகளை அலசுவதிலும் ,நகைச்சுவை உணர்விலும் ,சமயோசிதத அறிவிலும் வல்லமையைக் காட்டிய அந்த பேராளுமையை நேரில் பார்க்கிற காட்சி இன்னும் எனக்குள் நம்பமறுக்கும் நினைவுச் சூறாவளியை ஏற்படுத்துகிறது.ஸ்ரீஜியைப் பார்த்து நானும் புன்னகைக்கிறேன்.
'இவர்த எனக்கு ,முகநூலில் நல்ல தமிழில் சிறப்பான பதிவுகளை பதிய தூண்டுதலாக இருந்தவர்' என்று அருகிலிருந்த தோழமைகளிடம் என்னை பற்றி பெருந்தகைமையோடு எடுத்துச் சொல்லி என்னை கெளரவித்தார்.ஏசியின் அளவு திடீரென அடர்த்தியானத்தை அந்த வினாடியில் உணரலானேன்.அந்த பாதிப்பிற்கு உங்கள் பதிவுகளே காரணம் என்று நான் அவரது பாராட்டை அவரிடமே திருப்பித்தர முயற்சிக்கிறேன்.மறுக்கிறார்.நெகிழ்கிறேன்..மற்றவர்களும்.
மிருதங்கத்தில் உலகறிந்த கலைஞராக உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்து ஆசிய நாட்டில் பெருமையை அகில உலகிற்கே உணர்த்திக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் கலைஞானமும், செழிப்பான செல்வமும், மெத்தப்படித்த மேதமையும் கொண்ட ஒரு பேராளுமை மிக சாதாரணமாக என் முன்னே அமர்ந்திருந்த காட்சி என்னை இன்னும் ஒருமுறை மெய்சிலிர்க்கவே செய்தது .ஒரு ஜென் துறவியைப் போல அமைதியாக காட்சியளித்துக்கொண்டே கடினமான ஞான பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார்.பார்க்கிறேன் படிக்கிறேன் கற்றுக்கொள்கிறேன் ...இப்படியாய் எல்லாம் நடக்கிறது.
வெளிச்சங்களால் நனைந்துகொண்டிருக்கும் அந்த ஆப்ப கடையின் எல்லா திசைகளிலும் சில மெளன இடைவெளிகளில் கண்களை வட்டமிடுகிறேன்.குடும்பத்துடன் கொத்துகொத்தாக வந்து அவரவர்களுக்கென மேசைகளை ஆக்கிரமித்துக்கொண்டு வகைவகையாய் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சிலர் ஆர்டர் செய்துவிட்டு வெகுநேரம் காத்திருப்பது விரக்தி வியாபித்த அவர்களின் முகத்தில் தெரிகிறது.
சிலர் அந்த காத்திருப்பில் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்து காலி இருக்கைகளில் கண்களை ஓடவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறுகிறார்கள்.பரிமாறுவதற்காகவும் ,ஆர்டர் எடுப்பதற்காகவும் வடக்கத்திய பெண்களும் ஆண்களும் எல்லா இருக்கைகளுக்கும் சென்று பணிவோடும் மரியாதையோடும் ஏதோ ரகசியம் பேசுவைதைப் போல பேசி நகர்கிறார்கள்.இறுதியாய் எங்கள் மேசை அவர்களால் உளவு பார்க்கப்படுகிறது.
இன்னும் வரவேண்டியவர்கள் வந்து இணைத்துகொள்ளட்டும் அதுவரையில் நாம் ஏதாவது ஆர்டர் செய்து தொடங்கலாமே என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்க ,ஸ்ரீஜியில் விருந்தோம்பல் தொடங்குகிறது.அவர் கேட்ட முதல் கேள்வி வெகுநேரம் அங்கு பட்டிமன்றத்தை ஏற்படுத்தவில்லை.சைவமா? அசைவமா?என்பதுதான் அது.ஸ்ரீஜியில் தீர்ப்பு வாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லப்பட்டதால் அந்த இரண்டும் கலந்த உணவுக்கலவைகள் மேசையை அலங்கரிக்கின்றன.டொமேடோ சூப்பில் தொடங்கி சில்லி கோபி பிஷ் பிரை மஸ்ரூம் பிரை வெஜிடபுள் கட்லெட் என்று முதல்கட்ட பதார்த்தங்கள் வந்து சேருகின்றன.இப்போது மேஜையில் கைவைப்பதற்கு இடமில்லை.
ஆனால் எனக்கு உணவைவிட உரையாடல் பிரதானமாக தெரிந்தது.பேசிக்கொண்டே அசைபோட்டோம் உணவையும் உணர்வையும்.ஒரு கேள்வியை ஸ்ரீஜியின் மீது வீசிவிட்டு அவரின் நூறு பதிலுக்காக எதிர்ப்பார்த்திருந்தேன். என் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செய்கிறார்.
சூடான சமையலையும் சுவையான விவாதத்தையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் எல்லோரும் கண்ணாடி சாளரத்தை திரும்பிப்பார்த்து விழியுயர்த்தி வரவேற்கிறார்கள்...
அவர் மொழிகளற்ற மேலான புன்னகையால் என்னை விசாரிப்பதை நான் கூர்ந்து கவனிக்கிறேன்.முகத்தின் இரண்டு புறமும் காதோரம் தொடங்கி கன்னத்தின் கீழ் தாடைப்பகுதிவரை நீண்டிருந்த கிர்தாவை வீச்சரிவாளாய் முருக்கிவிடப்பட்டிருந்த மீசையின் நுனிப்பகுதிகள் தொட்டுவிளையாடிக்கொண்டிருந்தன.அகலவிரித்து இந்த பூமி கிரகத்தை விழுகுவதைப் போல பார்க்கும் இருவிழிகளில் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது.அகன்று பரந்திருந்தது ஒளிவீசும் நெற்றி.இப்படியான தோற்றத்தில் கம்பீரமாக காட்சித்தரும் ஸ்ரீஜியில் முகத்தில் இடைவிடாமல் தவழும் புன்னகை அவரது மெல்லிதயத்தை பிரதிபளித்துக்கொண்டிருன்தது .மாலைநேரத்து மஞ்சள் நிலா நிறத்தில் ஒரு அழகான குர்தா முழங்காலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது ,உடன் நீலம் பாரித்த வெள்ளைநிறத்தில் வேட்டி.
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இங்கு மொத்த அடையாளங்களோடு ஒரு முழுமையான தமிழனாய் ஸ்ரீஜி அமர்ந்திருந்தது, ஆச்சர்யத்தை அனைவரிடமும் பற்றவைக்கவே செய்திருந்தது.
மேலை மண்ணில் இசைத்தமிழனாக,எழுசுர பிரியர்களின் நாயகனாக நீண்ட வருடங்களாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் ஆடையிலும் மொழியிலும் பச்சைத் தமிழனின் பாசமுகவரி இருந்ததை பார்த்து பார்த்து பூரித்தேன். அவசரகதியில் ஜீன்ஸ் அணித்து சென்றிருந்த என்னை பார்த்து அவர் பேசும்போதெல்லாம் மனதிற்குள் சுருக்கென்று வலிகொண்டேன். ஆடை என்பதை வெறும் உடல் மறக்கும் நாகரீகத்தின் பொருளாக சமூக விஞ்ஞானிகள் கருதுவது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று உணரலானேன்.ஒரு இனத்தின் பண்பாட்டு ,கலாசாரம்,சுற்றுச்சூழல்,தொழில்முறை,உற்பத்தி போன்ற பலவற்றோடும் நாம் அணியும் ஆடை சம்மந்தப்பட்டிருக்கிறது என்கிற ஞானம் அன்று உதயமானது.
பேசும்போது இடையில் ஆங்கில வார்த்தைகளை குழைத்து ஒரு கலவைமொழியாக எப்படி பேசப்போகிறார் என்ற என் எதிர்ப்பார்ப்பிற்கு ஸ்ரீஜியில் எதார்த்த தமிழ் ஆப்பு வைத்தது. லேசான சென்னை செந்தமிழின் உச்சரிப்போடு இயல்பான தமிழ் விவாதத்தை இன்னும் இலகுவாக்கியது.கர்வம் தொலைத்த ஒரு கம்பீரமான மனிதரை அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
முகநூலில் அறிவார்ந்த தகவல்களையும் பதிவதிலும் ,நடப்பு நிகழ்வுகளை சுடச்சுட முன்வைப்பதிலும்,இந்திய தேசத்தின் சமூக அரசியல் நிலைகளை அலசுவதிலும் ,நகைச்சுவை உணர்விலும் ,சமயோசிதத அறிவிலும் வல்லமையைக் காட்டிய அந்த பேராளுமையை நேரில் பார்க்கிற காட்சி இன்னும் எனக்குள் நம்பமறுக்கும் நினைவுச் சூறாவளியை ஏற்படுத்துகிறது.ஸ்ரீஜியைப் பார்த்து நானும் புன்னகைக்கிறேன்.
'இவர்த எனக்கு ,முகநூலில் நல்ல தமிழில் சிறப்பான பதிவுகளை பதிய தூண்டுதலாக இருந்தவர்' என்று அருகிலிருந்த தோழமைகளிடம் என்னை பற்றி பெருந்தகைமையோடு எடுத்துச் சொல்லி என்னை கெளரவித்தார்.ஏசியின் அளவு திடீரென அடர்த்தியானத்தை அந்த வினாடியில் உணரலானேன்.அந்த பாதிப்பிற்கு உங்கள் பதிவுகளே காரணம் என்று நான் அவரது பாராட்டை அவரிடமே திருப்பித்தர முயற்சிக்கிறேன்.மறுக்கிறார்.நெகிழ்கிறேன்..மற்றவர்களும்.
மிருதங்கத்தில் உலகறிந்த கலைஞராக உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்து ஆசிய நாட்டில் பெருமையை அகில உலகிற்கே உணர்த்திக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் கலைஞானமும், செழிப்பான செல்வமும், மெத்தப்படித்த மேதமையும் கொண்ட ஒரு பேராளுமை மிக சாதாரணமாக என் முன்னே அமர்ந்திருந்த காட்சி என்னை இன்னும் ஒருமுறை மெய்சிலிர்க்கவே செய்தது .ஒரு ஜென் துறவியைப் போல அமைதியாக காட்சியளித்துக்கொண்டே கடினமான ஞான பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார்.பார்க்கிறேன் படிக்கிறேன் கற்றுக்கொள்கிறேன் ...இப்படியாய் எல்லாம் நடக்கிறது.
வெளிச்சங்களால் நனைந்துகொண்டிருக்கும் அந்த ஆப்ப கடையின் எல்லா திசைகளிலும் சில மெளன இடைவெளிகளில் கண்களை வட்டமிடுகிறேன்.குடும்பத்துடன் கொத்துகொத்தாக வந்து அவரவர்களுக்கென மேசைகளை ஆக்கிரமித்துக்கொண்டு வகைவகையாய் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சிலர் ஆர்டர் செய்துவிட்டு வெகுநேரம் காத்திருப்பது விரக்தி வியாபித்த அவர்களின் முகத்தில் தெரிகிறது.
சிலர் அந்த காத்திருப்பில் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்து காலி இருக்கைகளில் கண்களை ஓடவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறுகிறார்கள்.பரிமாறுவதற்காகவும் ,ஆர்டர் எடுப்பதற்காகவும் வடக்கத்திய பெண்களும் ஆண்களும் எல்லா இருக்கைகளுக்கும் சென்று பணிவோடும் மரியாதையோடும் ஏதோ ரகசியம் பேசுவைதைப் போல பேசி நகர்கிறார்கள்.இறுதியாய் எங்கள் மேசை அவர்களால் உளவு பார்க்கப்படுகிறது.
இன்னும் வரவேண்டியவர்கள் வந்து இணைத்துகொள்ளட்டும் அதுவரையில் நாம் ஏதாவது ஆர்டர் செய்து தொடங்கலாமே என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்க ,ஸ்ரீஜியில் விருந்தோம்பல் தொடங்குகிறது.அவர் கேட்ட முதல் கேள்வி வெகுநேரம் அங்கு பட்டிமன்றத்தை ஏற்படுத்தவில்லை.சைவமா? அசைவமா?என்பதுதான் அது.ஸ்ரீஜியில் தீர்ப்பு வாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லப்பட்டதால் அந்த இரண்டும் கலந்த உணவுக்கலவைகள் மேசையை அலங்கரிக்கின்றன.டொமேடோ சூப்பில் தொடங்கி சில்லி கோபி பிஷ் பிரை மஸ்ரூம் பிரை வெஜிடபுள் கட்லெட் என்று முதல்கட்ட பதார்த்தங்கள் வந்து சேருகின்றன.இப்போது மேஜையில் கைவைப்பதற்கு இடமில்லை.
ஆனால் எனக்கு உணவைவிட உரையாடல் பிரதானமாக தெரிந்தது.பேசிக்கொண்டே அசைபோட்டோம் உணவையும் உணர்வையும்.ஒரு கேள்வியை ஸ்ரீஜியின் மீது வீசிவிட்டு அவரின் நூறு பதிலுக்காக எதிர்ப்பார்த்திருந்தேன். என் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செய்கிறார்.
சூடான சமையலையும் சுவையான விவாதத்தையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் எல்லோரும் கண்ணாடி சாளரத்தை திரும்பிப்பார்த்து விழியுயர்த்தி வரவேற்கிறார்கள்...
பூவலூராருடன் ஒருநாள் - பகுதி I
நெருப்பை கொளுத்திவிட்டு சன்னலுக்குள் கொலைவெறியோடு எட்டிப்பார்க்கும் சூரியனை அடிக்கடி முறைத்துக்கொண்டே , கூடவே சென்னையை செல்லமாக மனதிற்குள் சலித்துக்கொண்டு ஒரு கையில் கைக்குட்டையால் இடைவிடாது வழியும் வியர்வை நதிகளை ஒற்றி எடுத்துக்கொண்டும் மறுகையால் வகுப்பு முடிவதற்கு இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக அலைபேசியை ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் பார்க்காததைப் போல பார்த்தேன்.
சைலெண்டில் வைத்திருந்த அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராததை உறுதிபடுத்திக்கொண்டு,வழக்கம் போல வந்து குவியும் எஸ் எம் எஸ்-களை அசட்டை செய்யும் பரபரப்பில் ஒவ்வொன்றாக டெலீட் செய்வதற்காக எனது விரல்கள் விரையும் போது அன்பழகனிடமிருந்து வந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சந்தோசம் மேலிட எப்போது இந்த வகுப்பு முடியும் என்ற எரிச்சலும் தலைத்தூக்கியது.என் ஏக்கம் பயிற்சியாளரின் மனதிற்குள் உள்ளுணர்வை ஊடுருவி இருக்கக்கூடும்.வகுப்பு முடிந்தது.
எல்லோரும் வெளி ஏறுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.சூரிய நெருப்பு என் வருகைக்காக காத்திருந்து வார்ம் வெல்கம் கொடுத்தது.என்னை வரவேற்ற சூரியன் தன் அணைப்பை விளக்கி கொள்ளவே இல்லை.சூரியனின் இந்த அசௌகர்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வழியே குறுக்கிட்ட ஆட்டோவில் இடது கையை குறுக்கே நீட்ட நின்ற ஆட்டோவிற்குள் குனிந்து அமர்ந்து நிமிர்ந்ததும்தான் ஆசுவாசமாக இருந்தது. சூரியனிடமிருந்து தப்பித்தது போர்க்களத்திலிருந்து பகையாளியிடமிருந்து பிழைத்து வந்ததைப் போன்ற உணர்வை என்னுள் ஏற்படுத்த.ஆட்டோவின் இருவழி சாளரம் எனக்கு விசிறி வீசிக்கொண்டிருந்தது.நான் அந்த சில வினாடிகளில் அரசனாக சக்கர பல்லக்கில் பயணப்பட்டேன்.
அறைவந்து சேர,நான் மின்னல் வேகத்தில் தயாரானேன்.குளியல்,உடைமாற்றம்,புறப்பாடல் எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட காலத்திற்கும் சேப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆடோவா? பேருந்தா? என்ற மனசலனங்களுக்கு இடையே காத்திருந்த அந்த முன்னிரவுப் பொழுதில் குட்டி பேருந்தைப் போல ஒரு சேர் ஆட்டோ வந்து நின்றது.'வடபழனி போகுமா' கேள்விக்கு 'போகும் ,பாண்டி பஜாரிலிருந்து பக்கம்'பதில் திருப்தி அளிக்க சம்மதத்தோடு உள்ளே அமர்துகொண்டேன்.புது வாகனம் போலிருக்கக்கூடும் மெதுவாகவே நகர்கிறது.
குறிப்பிட்ட அந்த சந்திப்பிற்கு நாம் காலதாமதமாக போகிறோமே என்ற குற்ற உணர்வோடு விரைவாக ஓட்டுமாறு டிரைவருக்கு மனத்தால் இடைவிடாமல் எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.அவர் விரைய முடியாத அளவிற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் எங்கள் வாகனத்தை அணைத்துக்கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
காற்றில்லாத உலகத்தில் வசிப்பவனைப் போல துடித்து வழியும் வியர்வைத் துளிகளை துடைக்கிறேன் .கைக்குட்டை மேலும் துடைக்க முடியாத அளவிற்கு முழுதுமாக நனைந்தே போனது.புதிய நகரத்தில் இரவு நேரத்தில் எப்படிப் போகப்போகிறோமோ என்று நினைத்திருந்த வேளையில்தான் வாகனம் நிற்கிறது.எல்லோரும் இறங்குகிறார்கள். 'வடபழனி வந்துருச்சா' என்று கேட்ட கேள்வி என்னை வெளியூர்க்காரன் என்பதை டிரைவருக்கு அறிவித்திருக்கக்கூடும்.'இங்கே எறங்கி பஸ் புடிச்சா ரெண்டாவது ஸ்டாப்'. பத்து ரூபாயை அவருடைய உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு ஒரு குறுக்கு சாலைக்குள் அடுத்த பேருந்திற்காக நகர்கிறேன்.அந்த நிறுத்தத்தில் காத்திருப்பில் சுமார் நாற்பது பேர் ,அந்த ஜன சங்கமத்தில் நான் கலந்துகொண்டேன்.
'வடபழனி போறதுக்கு பஸ் வருமா?' '12B என்ற பதில் மட்டும் தெறிக்கிறது .அதற்காய் காத்திருந்து அந்த வழியாக வரும் ஒவ்வொரு பேருந்தின் நெற்றிப் பொட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிறுத்தங்களை அந்த குறைந்த இருட்டில் விழிப்புணர்வோடு வாசிக்க தொடக்கி ஒரு பத்துநிமிடம் வழிந்தோட இறுதியாய் அந்த எண் குறிப்பிட்ட ஒரு நீளமான பேருந்து மனித தொங்கும் தோட்டத்தை சுமந்துகொண்டு திணறிக்கொண்டு நிற்கிறது.கூட்டத்தின் நெரிசலோடு நான் ஐக்கியமாகிறேன்.
சிலவினாடிகளுக்குள் முழுதுமாக நான் நனைந்துபோய் இருந்தேன்.பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது.வடபழனி எனது அடுத்த கண்டுபிடிப்பு உலகமாக என் எண்ணத்தில் விரிந்தது. பூசைப்பொருட்களோடு சில தாய்மார்கள் அமர்ந்திருந்ததை பார்த்த நான் அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கினால் வடபழனி கோயில் வரும் என்று நானே முடிவுசெய்துகொண்டேன். இறங்கிக்கொண்டேன் அப்படியே நடந்தது. ஆனால் எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் நடக்கவேண்டி இருக்கிறது என்பதை மீண்டும் கேட்டு முடிவு செய்துகொண்டவனாய் நடக்கலானேன்.
ஒரு அழகான திருப்பத்தில் விளக்குகளால் மின்னும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த கடை.முகப்புக் கண்ணாடியில் மேலிருந்து கீழாக தண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் போன்ற காட்சியை என் கண்ணின் நிறுத்தி நானும் மனத்தால் குளிர்ந்துகொண்டேன். ஆனால் உடல் கொதிப்பை நிறுத்திய பாடில்லை.வாசல் வரையில் வந்துநிற்கவும் கதவை ஒருவர் திறக்கிறார்,நிதானமாக நுழைகிறேன்.
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் வலது மூலையில் திறந்திருந்த வாசல் வழி பார்ப்பதற்குள் என்னை குளிரூட்டப்பட்ட அந்த முதல் வரவேற்பறை எனக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க தொடங்கி விட்டது.எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கும் இந்த விடுதியில் எங்கே அமர்ந்திருப்பார்கள் என்று தேடலோடு நுழையும் போது எதிரில் தேனம்மை என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டவராய் புன்னகைத்து வரவேற்கிறார்.இருகரம் வணங்கிக்கொண்டே நெருங்குகிறேன் முதுகைக் காண்பித்தபடி அமர்ந்திருந்த நால்வரில் ஆல்மார்க் தங்க நிறத்தில் கருப்பு மல்லிகைகளை கணத்தில் தாடியை வளர்த்தி இருந்த அந்த விருந்தினர் திருப்பிப் பார்க்கிறார்.சந்தோசம் என் வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறது.அவரது ஆச்சர்யம் சிரிப்பின் வரவேற்பு என்னை இதயத்தை நிறைக்கிறது.அவர்தான் முகநூலில் எழுத்துக்களால் தோழமையான அறிவுஜீவி ஸ்ரீஜி.ஆச்சர்யம்,ஆனந்தம்,மனதிற்குள் ஆரவாரம்..இவற்றின் கலவையால் நிறைகிறேன்.
வரிசையாக தமிழ்ச்செல்வி, துணைவனார் நிக்கோலஸ்,தன் கேமரா குழந்தையோடு வருகைதந்திருந்த ஜெயராஜ் பாண்டியன்மற்றும் பலர் வட்டமேஜையில் இணைந்திருந்தனர்.அருகில் சில நண்பர்கள் எல்லோரையும் வணங்கி முடித்துவிட்டு அமரலானேன்.செய்தி அனுப்பிய அன்பையும் கயலையும் காணவில்லை.செல்வா வருவதாக தலைப்பு செய்தி சொன்னார்கள். சின்ன சின்ன விவாதங்கள் விசாரிப்புக்கள்...
சைலெண்டில் வைத்திருந்த அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராததை உறுதிபடுத்திக்கொண்டு,வழக்கம் போல வந்து குவியும் எஸ் எம் எஸ்-களை அசட்டை செய்யும் பரபரப்பில் ஒவ்வொன்றாக டெலீட் செய்வதற்காக எனது விரல்கள் விரையும் போது அன்பழகனிடமிருந்து வந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சந்தோசம் மேலிட எப்போது இந்த வகுப்பு முடியும் என்ற எரிச்சலும் தலைத்தூக்கியது.என் ஏக்கம் பயிற்சியாளரின் மனதிற்குள் உள்ளுணர்வை ஊடுருவி இருக்கக்கூடும்.வகுப்பு முடிந்தது.
எல்லோரும் வெளி ஏறுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.சூரிய நெருப்பு என் வருகைக்காக காத்திருந்து வார்ம் வெல்கம் கொடுத்தது.என்னை வரவேற்ற சூரியன் தன் அணைப்பை விளக்கி கொள்ளவே இல்லை.சூரியனின் இந்த அசௌகர்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வழியே குறுக்கிட்ட ஆட்டோவில் இடது கையை குறுக்கே நீட்ட நின்ற ஆட்டோவிற்குள் குனிந்து அமர்ந்து நிமிர்ந்ததும்தான் ஆசுவாசமாக இருந்தது. சூரியனிடமிருந்து தப்பித்தது போர்க்களத்திலிருந்து பகையாளியிடமிருந்து பிழைத்து வந்ததைப் போன்ற உணர்வை என்னுள் ஏற்படுத்த.ஆட்டோவின் இருவழி சாளரம் எனக்கு விசிறி வீசிக்கொண்டிருந்தது.நான் அந்த சில வினாடிகளில் அரசனாக சக்கர பல்லக்கில் பயணப்பட்டேன்.
அறைவந்து சேர,நான் மின்னல் வேகத்தில் தயாரானேன்.குளியல்,உடைமாற்றம்,புறப்பாடல் எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட காலத்திற்கும் சேப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆடோவா? பேருந்தா? என்ற மனசலனங்களுக்கு இடையே காத்திருந்த அந்த முன்னிரவுப் பொழுதில் குட்டி பேருந்தைப் போல ஒரு சேர் ஆட்டோ வந்து நின்றது.'வடபழனி போகுமா' கேள்விக்கு 'போகும் ,பாண்டி பஜாரிலிருந்து பக்கம்'பதில் திருப்தி அளிக்க சம்மதத்தோடு உள்ளே அமர்துகொண்டேன்.புது வாகனம் போலிருக்கக்கூடும் மெதுவாகவே நகர்கிறது.
குறிப்பிட்ட அந்த சந்திப்பிற்கு நாம் காலதாமதமாக போகிறோமே என்ற குற்ற உணர்வோடு விரைவாக ஓட்டுமாறு டிரைவருக்கு மனத்தால் இடைவிடாமல் எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.அவர் விரைய முடியாத அளவிற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் எங்கள் வாகனத்தை அணைத்துக்கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
காற்றில்லாத உலகத்தில் வசிப்பவனைப் போல துடித்து வழியும் வியர்வைத் துளிகளை துடைக்கிறேன் .கைக்குட்டை மேலும் துடைக்க முடியாத அளவிற்கு முழுதுமாக நனைந்தே போனது.புதிய நகரத்தில் இரவு நேரத்தில் எப்படிப் போகப்போகிறோமோ என்று நினைத்திருந்த வேளையில்தான் வாகனம் நிற்கிறது.எல்லோரும் இறங்குகிறார்கள். 'வடபழனி வந்துருச்சா' என்று கேட்ட கேள்வி என்னை வெளியூர்க்காரன் என்பதை டிரைவருக்கு அறிவித்திருக்கக்கூடும்.'இங்கே எறங்கி பஸ் புடிச்சா ரெண்டாவது ஸ்டாப்'. பத்து ரூபாயை அவருடைய உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு ஒரு குறுக்கு சாலைக்குள் அடுத்த பேருந்திற்காக நகர்கிறேன்.அந்த நிறுத்தத்தில் காத்திருப்பில் சுமார் நாற்பது பேர் ,அந்த ஜன சங்கமத்தில் நான் கலந்துகொண்டேன்.
'வடபழனி போறதுக்கு பஸ் வருமா?' '12B என்ற பதில் மட்டும் தெறிக்கிறது .அதற்காய் காத்திருந்து அந்த வழியாக வரும் ஒவ்வொரு பேருந்தின் நெற்றிப் பொட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிறுத்தங்களை அந்த குறைந்த இருட்டில் விழிப்புணர்வோடு வாசிக்க தொடக்கி ஒரு பத்துநிமிடம் வழிந்தோட இறுதியாய் அந்த எண் குறிப்பிட்ட ஒரு நீளமான பேருந்து மனித தொங்கும் தோட்டத்தை சுமந்துகொண்டு திணறிக்கொண்டு நிற்கிறது.கூட்டத்தின் நெரிசலோடு நான் ஐக்கியமாகிறேன்.
சிலவினாடிகளுக்குள் முழுதுமாக நான் நனைந்துபோய் இருந்தேன்.பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது.வடபழனி எனது அடுத்த கண்டுபிடிப்பு உலகமாக என் எண்ணத்தில் விரிந்தது. பூசைப்பொருட்களோடு சில தாய்மார்கள் அமர்ந்திருந்ததை பார்த்த நான் அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கினால் வடபழனி கோயில் வரும் என்று நானே முடிவுசெய்துகொண்டேன். இறங்கிக்கொண்டேன் அப்படியே நடந்தது. ஆனால் எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் நடக்கவேண்டி இருக்கிறது என்பதை மீண்டும் கேட்டு முடிவு செய்துகொண்டவனாய் நடக்கலானேன்.
ஒரு அழகான திருப்பத்தில் விளக்குகளால் மின்னும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த கடை.முகப்புக் கண்ணாடியில் மேலிருந்து கீழாக தண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் போன்ற காட்சியை என் கண்ணின் நிறுத்தி நானும் மனத்தால் குளிர்ந்துகொண்டேன். ஆனால் உடல் கொதிப்பை நிறுத்திய பாடில்லை.வாசல் வரையில் வந்துநிற்கவும் கதவை ஒருவர் திறக்கிறார்,நிதானமாக நுழைகிறேன்.
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் வலது மூலையில் திறந்திருந்த வாசல் வழி பார்ப்பதற்குள் என்னை குளிரூட்டப்பட்ட அந்த முதல் வரவேற்பறை எனக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க தொடங்கி விட்டது.எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கும் இந்த விடுதியில் எங்கே அமர்ந்திருப்பார்கள் என்று தேடலோடு நுழையும் போது எதிரில் தேனம்மை என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டவராய் புன்னகைத்து வரவேற்கிறார்.இருகரம் வணங்கிக்கொண்டே நெருங்குகிறேன் முதுகைக் காண்பித்தபடி அமர்ந்திருந்த நால்வரில் ஆல்மார்க் தங்க நிறத்தில் கருப்பு மல்லிகைகளை கணத்தில் தாடியை வளர்த்தி இருந்த அந்த விருந்தினர் திருப்பிப் பார்க்கிறார்.சந்தோசம் என் வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறது.அவரது ஆச்சர்யம் சிரிப்பின் வரவேற்பு என்னை இதயத்தை நிறைக்கிறது.அவர்தான் முகநூலில் எழுத்துக்களால் தோழமையான அறிவுஜீவி ஸ்ரீஜி.ஆச்சர்யம்,ஆனந்தம்,மனதிற்குள் ஆரவாரம்..இவற்றின் கலவையால் நிறைகிறேன்.
வரிசையாக தமிழ்ச்செல்வி, துணைவனார் நிக்கோலஸ்,தன் கேமரா குழந்தையோடு வருகைதந்திருந்த ஜெயராஜ் பாண்டியன்மற்றும் பலர் வட்டமேஜையில் இணைந்திருந்தனர்.அருகில் சில நண்பர்கள் எல்லோரையும் வணங்கி முடித்துவிட்டு அமரலானேன்.செய்தி அனுப்பிய அன்பையும் கயலையும் காணவில்லை.செல்வா வருவதாக தலைப்பு செய்தி சொன்னார்கள். சின்ன சின்ன விவாதங்கள் விசாரிப்புக்கள்...
திங்கள், 2 மே, 2011
துணிப்பந்து -சிறுகதை
புத்தகச் சிலுவைகளை வாரம்தோறும் தூக்கி தூக்கி ரணமாகிப்போன பள்ளி செல்லும் பிள்ளை ஏசுகள், ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் தங்கள் பாரங்களை எல்லாம் தற்காலிகமாய் இறக்கிவைத்துவிட்டு கல்வி கிரகத்திலிருந்து விளையாட்டு கிரகத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக கால்பதித்துக்கொண்டிருந்தனர். அந்த குழந்தைகளின் பாதம் பட்டதும் பூமாதேவி சந்தோசத்தில் சிலிர்த்துக்கொண்ட ஈரம் முற்றிலுமாக காயாமல் இருந்த அந்த ஒரு பொழுதில் விளையாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தேறிக்கொண்டிருந்தன.
திருநீரை முகப்பவுடராக பூசிக்கொண்டு ஒரு சிறுவன்; கால் சட்டையில் தபால் ஆபீஸ் வைத்துக்கொண்டு வந்த இன்னொருவன்; இளவரசன் மணிமுடி சூடியதைப் போல இலவம் பஞ்சு குல்லாய் அணிந்துகொண்டு வந்த மற்றொருவன்;சட்டையில் மேல் பொத்தானுக்கு பதிலாக குத்தப்பட்டிருந்த பின்னூசியை கைகளால் மறைத்தபடி ஒருவன்;இப்படியாய் ஒவ்வொருவரும் அந்த மலைகளின் தேசத்தில் வனங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அந்த சிற்றூரில் எல்லா வீடுகளுக்கும் ஒரே முற்றமாக இருந்த வீதியில் திரண்டிருந்தனர்.
மட்டைப்பந்து விளையாட்டுக்கு அந்த வீதி தயாராக இருந்தது. இவர்களும் விளையாட்டுக்கு தயாராய்.ஆனால் மட்டையும் பந்தும் இன்னும் தயாராகவில்லை.
நேற்றைய விளையாட்டில் மட்டை முறிந்து போனதற்கு மாற்றாக புதிய மட்டையை தேடிக்கொண்டிருந்தனர். 'எல்லா சரிடா, இப்ப பேட்டுக்கு என்ன பண்றது' என்று கேட்ட அந்த சிறுவனின் குரலில் விளையாடப்போகிறோம் என்ற குஷியும் மட்டை இல்லையே என்ற ஏக்கமும் நன்றாக தெரிந்தது.'டே எங்க வீட்டுலே ஒரு பேட்டு இருக்குதுடா ,நா எடுத்துட்டு வர்றே 'என்று அங்கிருந்து அகன்ற அந்த சிறுவன் அவர்கள் உள்ளத்திலும் உற்சாக நெருப்பை பற்றவைத்தான்.
பேட்டுடன் வரவிருக்கும் அவனது வருகையை ஆவலுடன் வீதியில் கடைசியில் உள்ள செமெண்டு திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். 'டே இவனே ,அவங்க வீட்லே பேட் உண்மையிலே இருக்கா' என்று ஒருவன் சந்தேகத்தை எழுப்பினான்.'இப்ப பாரு ,இத்தனே நாளா ஒளிச்சி வச்சிருந்த புது பேட்டிலே நம்ம விளையாடத்த போறோம்' 'ஹையா..ஜாலி..இன்னிக்கு கடலைமிட்டாய் பெட்டு கட்டி விளையாடுவோமா... ?என்கிட்டே இருபத்தஞ்சி பைசா இருக்கு' இப்படியாய் இவர்களின் கேள்விகளும் பதில்களும் எதிர்ப்பார்ப்புகளும் சந்தோஷ நெருப்பை கொழுந்துவிட்டு எரியவைத்த அந்த உற்சாக தருணத்தில் தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மட்டை கொண்டுவரச் சென்ற சிறுவனின் வீட்டு வாசலை இவர்கள் அனைவரின் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.முதுகிற்குப் பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டு ஏதோ கொண்டுவந்தான் அந்த சிறுவன் .'டே அவே வராண்டா' 'சட்டைக்குப் பின்னாலே ஒளிச்சிகொண்டுவரா பாத்தியா' மற்ற பலரும் ஆளுக்கொரு யூகங்களை அவரவர்கள் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் உரையாடல் முடிவதற்கு முன்பாகவே புன்னகையுடனும் பெருமிதத்துடனும் அவர்களின் முன்னே வந்து நின்றான் போர்முடித்து வென்ற மாவீரனாய்.
'டே காட்டுடா.' 'ஏண்டா ஒளிக்கிரே' 'வா உடனே விளையாடுவோம்' 'என்று பலரும் பலவாறு கேட்க அதிலொருவன் அவனது முதுகிற்குப் பின்னால் ரகசியமாய் சென்று அவனுக்கு அறியாமலேயே பார்த்துவிட்டு கிண்டலாய் கேலியாய் சிரிப்பிற்கு பதிலாக காற்றைமட்டுமே வெளியேற்றி 'கெக்கே கெக்கே உஷ் உஷஸ் புஷ் புஷ் ' என்று சிரித்தது அனைவருக்கும் புதிரை ஏற்படுத்தினான் .சிலிண்டர் வடிவிலான மரத்துண்டை கோடரியால் நான்காக பிளந்ததில் ஒரு பகுதியை பேட்டுக்கு பதிலாக அவன் கொண்டு வந்ததை அனைவரும் உறுதி செய்தார்கள்.கிண்டலில் அந்த இடம் அதிர்ந்தது.
'ஏண்டா கிண்டல் பண்றீங்க,இது எங்கம்மா சமைக்கறதுக்காக எடுத்து வச்ச காஞ்ச மரக்கட்டை ,விளையாடனும்னு உங்களுக்காகத்தான் தெரியாமே கொண்டு வந்தே' என்று அவன் நியாயப்படுத்தியதில் இருக்கும் அன்பையும் நட்பையும் புரிந்துகொண்ட ஒருவன் உடனே ஓடி ஒரு அரிவாளை கொண்டுவந்தான்' இதோ பாருங்கடா...இந்த மரக்கட்டையை அப்படியே புடிச்சு விளையாடுறதுக்கு கைப்பிடி இல்லே, இந்த கத்தியாலே முதல்லே கொஞ்சகொஞ்சமா சீவி கைப்பிடி செய்வோம்,பிறகு குத்தாத மாதிரி நைசா சீவி பேட் பண்ணிரலாம் ' என்று நம்பிக்கை தெரிவிக்க அதற்கான முயற்சியில் அனைவரும் இறங்கினார்கள்.
சில நிமிடங்களுக்குள் குத்திக் கிழிக்கும் மரச் செதில்கள் நிறைந்த அந்த மரக்கட்டை வழுவழுப்பாக மாறியிருந்தது,கூடவே கைப்பிடியும்.' விளையாடறதுக்கு பேட்டு ரெடியாயிடுச்சு பந்துக்கு எங்கடா போறது?' என்று மற்றொருவன் கேள்வி கேட்க ,துணிப்பந்து செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.அதற்க்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து சின்ன சின்ன துணிகளை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கேரட் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாத படி வேலியில் கட்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் பனியிலும் இற்றுப் போயிருந்த துணியும் , சூடான பாத்திரங்களை இறக்கிவைப்பதற்காக சமையல் கட்டில் பயன்படுத்தும் கரிபடிந்த துணியும்,சமைத்த சமையல் பாத்திரத்திற்கும் வடிக்கும் கஞ்சிப்பாத்திரத்திர்க்கும் இடையில் முட்டுக்கொடுக்கும் ஈரம் தோய்ந்த துணியும், தினைக்கொல்லை பொம்மையை நிர்வாணமாக்கி கிழித்து கொண்டுவந்த துணியும், கிழிந்த சில சீருடை கால்சட்டைத் துணிகளும்,...என்று இன்ன பிற துணிகளும் வகை வகையாய் விதவிதமாய் வண்ண வண்ணமாய் பந்திற்காக வரிசையாக சேர்ந்துகொண்டே இருந்தன.
சிறார்களில் அழகாக துணிப்பந்தை வழக்கமாக செய்யும் அந்த சிறுவன் தொடக்கமாக கோலிகுண்டு ஒன்றை இடதுகை பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் பிடித்திருந்தான். துணிகளில் பலவற்றை சிலர் பல்லைக் கடித்துக்கொண்டு பட்டை பட்டையாக கிழித்துக்கொண்டுத்துக்கொண்டிருன்தனர்.கெட்டியான துணிகளை சில குண்டு பையன்கள் நார் நாராக எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் எடுத்துக்கொடுக்க துணிப்பந்து வல்லுஞன் கோலி குண்டுக்கு மேல் சுருள்விழாதவாறு வட்டவட்டமாய் சுற்றிக்கொண்டே இருந்தான்.இப்போது பந்து எலுமிச்சை பழ வடிவிற்கு வந்திருந்தது.
'டே இன்னு சுத்தணும்,பந்து பொடிசா இருக்கு' என்று ஒருவன் தங்களின் தகுதியை தரம் உயர்த்தவே,மீண்டும் துணி அந்த சிறு பந்தை பருக்கவைத்துக்கொண்டே வந்தது. மெதுமெதுவென்று இருந்த அந்த துணிப்பந்து இப்போது கெட்டியான ஒரு கிரிக்கெட் பந்தைப் போல மாறியிருந்தது.துணி தைக்கும் ஊசிநூலுடன் வந்த ஒரு சிறுவன் அந்த பந்திற்கு காப்பீடு செய்வதைப் போல ஒரு நல்ல காரியத்தை இறுதியாய் செய்து முடித்தான்.இப்போது பந்து தயார்.
இரண்டுமணிநேர ஆயத்தத்திற்கு பின் ஆரவாரமாக தொடங்கிய அந்த விளையாட்டின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக விளையாட்டு முடிவிற்கு வந்ததுதான் சோகம்.அப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழும் என்று ஒருவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பந்து வீசுவதற்காக ஓடிவந்த அந்த வேளையில்தான் ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய அடைமழை இவர்களை விளையாட விடாமல் அவரவர்களது வீட்டில் அனைவரையும் சிறை வைத்தது. தங்களை விளையாட விடாமல் இடையூறு செய்த மழையை அவர்கள் நொந்துகொண்டிருக்கக்கூடும் .கதவு திறந்திருக்க வாசலில் நின்று அவரவார்களது வீட்டு வாசலில் நின்று மழையை வேறு வழியின்றி வெகுநேரமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் நனைந்தபடி.
மழை நின்றபின்னும் சேற்றை அள்ளிக்கொண்டு ஆறாக ஓடிக்கொண்டிருந்த அந்த வீதியில் கிரிக்கெட் விளையாடாமல் தவித்த அந்த சிறுவர்களின் நினைவில் அந்த இனிய மழை ஒரு விளையாட்டை ஞாபகப்படுத்தவே செய்தது.
சிறிது நேரம் கழித்து எல்லோரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் காதிதத்தில் கப்பல் செய்து.
திருநீரை முகப்பவுடராக பூசிக்கொண்டு ஒரு சிறுவன்; கால் சட்டையில் தபால் ஆபீஸ் வைத்துக்கொண்டு வந்த இன்னொருவன்; இளவரசன் மணிமுடி சூடியதைப் போல இலவம் பஞ்சு குல்லாய் அணிந்துகொண்டு வந்த மற்றொருவன்;சட்டையில் மேல் பொத்தானுக்கு பதிலாக குத்தப்பட்டிருந்த பின்னூசியை கைகளால் மறைத்தபடி ஒருவன்;இப்படியாய் ஒவ்வொருவரும் அந்த மலைகளின் தேசத்தில் வனங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அந்த சிற்றூரில் எல்லா வீடுகளுக்கும் ஒரே முற்றமாக இருந்த வீதியில் திரண்டிருந்தனர்.
மட்டைப்பந்து விளையாட்டுக்கு அந்த வீதி தயாராக இருந்தது. இவர்களும் விளையாட்டுக்கு தயாராய்.ஆனால் மட்டையும் பந்தும் இன்னும் தயாராகவில்லை.
நேற்றைய விளையாட்டில் மட்டை முறிந்து போனதற்கு மாற்றாக புதிய மட்டையை தேடிக்கொண்டிருந்தனர். 'எல்லா சரிடா, இப்ப பேட்டுக்கு என்ன பண்றது' என்று கேட்ட அந்த சிறுவனின் குரலில் விளையாடப்போகிறோம் என்ற குஷியும் மட்டை இல்லையே என்ற ஏக்கமும் நன்றாக தெரிந்தது.'டே எங்க வீட்டுலே ஒரு பேட்டு இருக்குதுடா ,நா எடுத்துட்டு வர்றே 'என்று அங்கிருந்து அகன்ற அந்த சிறுவன் அவர்கள் உள்ளத்திலும் உற்சாக நெருப்பை பற்றவைத்தான்.
பேட்டுடன் வரவிருக்கும் அவனது வருகையை ஆவலுடன் வீதியில் கடைசியில் உள்ள செமெண்டு திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். 'டே இவனே ,அவங்க வீட்லே பேட் உண்மையிலே இருக்கா' என்று ஒருவன் சந்தேகத்தை எழுப்பினான்.'இப்ப பாரு ,இத்தனே நாளா ஒளிச்சி வச்சிருந்த புது பேட்டிலே நம்ம விளையாடத்த போறோம்' 'ஹையா..ஜாலி..இன்னிக்கு கடலைமிட்டாய் பெட்டு கட்டி விளையாடுவோமா... ?என்கிட்டே இருபத்தஞ்சி பைசா இருக்கு' இப்படியாய் இவர்களின் கேள்விகளும் பதில்களும் எதிர்ப்பார்ப்புகளும் சந்தோஷ நெருப்பை கொழுந்துவிட்டு எரியவைத்த அந்த உற்சாக தருணத்தில் தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மட்டை கொண்டுவரச் சென்ற சிறுவனின் வீட்டு வாசலை இவர்கள் அனைவரின் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.முதுகிற்குப் பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டு ஏதோ கொண்டுவந்தான் அந்த சிறுவன் .'டே அவே வராண்டா' 'சட்டைக்குப் பின்னாலே ஒளிச்சிகொண்டுவரா பாத்தியா' மற்ற பலரும் ஆளுக்கொரு யூகங்களை அவரவர்கள் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் உரையாடல் முடிவதற்கு முன்பாகவே புன்னகையுடனும் பெருமிதத்துடனும் அவர்களின் முன்னே வந்து நின்றான் போர்முடித்து வென்ற மாவீரனாய்.
'டே காட்டுடா.' 'ஏண்டா ஒளிக்கிரே' 'வா உடனே விளையாடுவோம்' 'என்று பலரும் பலவாறு கேட்க அதிலொருவன் அவனது முதுகிற்குப் பின்னால் ரகசியமாய் சென்று அவனுக்கு அறியாமலேயே பார்த்துவிட்டு கிண்டலாய் கேலியாய் சிரிப்பிற்கு பதிலாக காற்றைமட்டுமே வெளியேற்றி 'கெக்கே கெக்கே உஷ் உஷஸ் புஷ் புஷ் ' என்று சிரித்தது அனைவருக்கும் புதிரை ஏற்படுத்தினான் .சிலிண்டர் வடிவிலான மரத்துண்டை கோடரியால் நான்காக பிளந்ததில் ஒரு பகுதியை பேட்டுக்கு பதிலாக அவன் கொண்டு வந்ததை அனைவரும் உறுதி செய்தார்கள்.கிண்டலில் அந்த இடம் அதிர்ந்தது.
'ஏண்டா கிண்டல் பண்றீங்க,இது எங்கம்மா சமைக்கறதுக்காக எடுத்து வச்ச காஞ்ச மரக்கட்டை ,விளையாடனும்னு உங்களுக்காகத்தான் தெரியாமே கொண்டு வந்தே' என்று அவன் நியாயப்படுத்தியதில் இருக்கும் அன்பையும் நட்பையும் புரிந்துகொண்ட ஒருவன் உடனே ஓடி ஒரு அரிவாளை கொண்டுவந்தான்' இதோ பாருங்கடா...இந்த மரக்கட்டையை அப்படியே புடிச்சு விளையாடுறதுக்கு கைப்பிடி இல்லே, இந்த கத்தியாலே முதல்லே கொஞ்சகொஞ்சமா சீவி கைப்பிடி செய்வோம்,பிறகு குத்தாத மாதிரி நைசா சீவி பேட் பண்ணிரலாம் ' என்று நம்பிக்கை தெரிவிக்க அதற்கான முயற்சியில் அனைவரும் இறங்கினார்கள்.
சில நிமிடங்களுக்குள் குத்திக் கிழிக்கும் மரச் செதில்கள் நிறைந்த அந்த மரக்கட்டை வழுவழுப்பாக மாறியிருந்தது,கூடவே கைப்பிடியும்.' விளையாடறதுக்கு பேட்டு ரெடியாயிடுச்சு பந்துக்கு எங்கடா போறது?' என்று மற்றொருவன் கேள்வி கேட்க ,துணிப்பந்து செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.அதற்க்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து சின்ன சின்ன துணிகளை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கேரட் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாத படி வேலியில் கட்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் பனியிலும் இற்றுப் போயிருந்த துணியும் , சூடான பாத்திரங்களை இறக்கிவைப்பதற்காக சமையல் கட்டில் பயன்படுத்தும் கரிபடிந்த துணியும்,சமைத்த சமையல் பாத்திரத்திற்கும் வடிக்கும் கஞ்சிப்பாத்திரத்திர்க்கும் இடையில் முட்டுக்கொடுக்கும் ஈரம் தோய்ந்த துணியும், தினைக்கொல்லை பொம்மையை நிர்வாணமாக்கி கிழித்து கொண்டுவந்த துணியும், கிழிந்த சில சீருடை கால்சட்டைத் துணிகளும்,...என்று இன்ன பிற துணிகளும் வகை வகையாய் விதவிதமாய் வண்ண வண்ணமாய் பந்திற்காக வரிசையாக சேர்ந்துகொண்டே இருந்தன.
சிறார்களில் அழகாக துணிப்பந்தை வழக்கமாக செய்யும் அந்த சிறுவன் தொடக்கமாக கோலிகுண்டு ஒன்றை இடதுகை பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் பிடித்திருந்தான். துணிகளில் பலவற்றை சிலர் பல்லைக் கடித்துக்கொண்டு பட்டை பட்டையாக கிழித்துக்கொண்டுத்துக்கொண்டிருன்தனர்.கெட்டியான துணிகளை சில குண்டு பையன்கள் நார் நாராக எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் எடுத்துக்கொடுக்க துணிப்பந்து வல்லுஞன் கோலி குண்டுக்கு மேல் சுருள்விழாதவாறு வட்டவட்டமாய் சுற்றிக்கொண்டே இருந்தான்.இப்போது பந்து எலுமிச்சை பழ வடிவிற்கு வந்திருந்தது.
'டே இன்னு சுத்தணும்,பந்து பொடிசா இருக்கு' என்று ஒருவன் தங்களின் தகுதியை தரம் உயர்த்தவே,மீண்டும் துணி அந்த சிறு பந்தை பருக்கவைத்துக்கொண்டே வந்தது. மெதுமெதுவென்று இருந்த அந்த துணிப்பந்து இப்போது கெட்டியான ஒரு கிரிக்கெட் பந்தைப் போல மாறியிருந்தது.துணி தைக்கும் ஊசிநூலுடன் வந்த ஒரு சிறுவன் அந்த பந்திற்கு காப்பீடு செய்வதைப் போல ஒரு நல்ல காரியத்தை இறுதியாய் செய்து முடித்தான்.இப்போது பந்து தயார்.
இரண்டுமணிநேர ஆயத்தத்திற்கு பின் ஆரவாரமாக தொடங்கிய அந்த விளையாட்டின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக விளையாட்டு முடிவிற்கு வந்ததுதான் சோகம்.அப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழும் என்று ஒருவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பந்து வீசுவதற்காக ஓடிவந்த அந்த வேளையில்தான் ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய அடைமழை இவர்களை விளையாட விடாமல் அவரவர்களது வீட்டில் அனைவரையும் சிறை வைத்தது. தங்களை விளையாட விடாமல் இடையூறு செய்த மழையை அவர்கள் நொந்துகொண்டிருக்கக்கூடும் .கதவு திறந்திருக்க வாசலில் நின்று அவரவார்களது வீட்டு வாசலில் நின்று மழையை வேறு வழியின்றி வெகுநேரமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் நனைந்தபடி.
மழை நின்றபின்னும் சேற்றை அள்ளிக்கொண்டு ஆறாக ஓடிக்கொண்டிருந்த அந்த வீதியில் கிரிக்கெட் விளையாடாமல் தவித்த அந்த சிறுவர்களின் நினைவில் அந்த இனிய மழை ஒரு விளையாட்டை ஞாபகப்படுத்தவே செய்தது.
சிறிது நேரம் கழித்து எல்லோரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் காதிதத்தில் கப்பல் செய்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)