சனி, 14 மே, 2011

பூவலூராரும் இசை ஆவர்த்தனமும்- இறுதிப்பகுதி

சில்லிட்ட அறையில் நிகழும் இந்த இனிய சந்திப்பில் என் கடைசி ஆசை அதுவாகத்தான் இருக்கமுடியும் என்று என் மனம் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது,ஸ்ரீஜியை இப்போது மிருதங்கம் வாசிக்க சொல்லுவோம் என்று வாயெடுத்தபோது உள்ளே ஒரு இருபத்தைந்து வயது அழகான இளைஞன் உள்ளே நுழைகிறார்,விநாடிப்பொழுதில் அறிமுகத்தை முடித்துவிட்டு ஸ்ரீஜியின் புறப்பாட்டுக்கான அனைத்து பொருட்களையும் மும்முரமாக எடுத்துவைக்கிறார்.



நவயுக இளைஞனுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் ஒருங்கே பெற்றிருந்த அந்த இளைஞனை ஸ்ரீஜியின் சகோதரிமகன் என்பதை அறிந்து வாழ்த்தினோம் இன்னொருமுறை.



நான்குவயதுமுதலாக வாய்ப்பாட்டும் மிருதங்கமும் கற்று மேடைப் பங்களிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் அந்த இளைஞன் என்பதை அறிந்து அனைவரும் புருவத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம்.ஸ்ரீஜிக்கு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எந்த பாவங்களில் மூலமும் இதுவரையிலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததை எண்ணி அவரின் பண்பிற்கும் அன்பிற்கும் மனதிற்குள் வணக்கம் சொல்கிறேன்.



அந்த அறைமுழுவதும் இருந்த பொருட்கள் இப்போது பயண பெட்டிக்குள்ளாக பத்திரமாகும் அந்த நேரத்தில் என் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவனாய் இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று முடிவேடுத்தபடியே.'ஸ்ரீஜி நீங்க எங்களுக்காக கொஞ்சம் மிருதங்கம் வாசிக்க முடியுமா' கேள்வியின் ஆர்வத்தை அவர் உணர்ந்திருக்க கூடும்.



பாலாடையைப் போல வெள்ளையை பூசியிருக்கும் கட்டிலின் மேற்பரப்பில். பழுப்பு நிறத்தில் பைஜாமாவும் வெள்ளை வேட்டியுமாக சமமான காலிட்டு அமர்கிறார்.'கொஞ்சம் அதை என்னன்னு பாரு' என்று தன் சகோதரி மகனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.முதன்மை அறையை ஒட்டி இருந்த ஒரு குட்டி அறையில் முருதங்கம் முறையாக வாசிக்க தயாராகிறது என்பதை சில ஒலிக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.



சில வினாடிகளில் தயாராய் ஸ்ரீஜியின் விரல்களால் ஆராதனை செய்யப்பட்ட அந்த மிருதங்கம் அரியணை ஏறுகிறது.எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் மிருதங்கத்தின் இடதுபுற மேல்பகுதியில் தன் இடது காலை எடுத்து அணைக்கிறார்.விரல்கள் மிருதங்கத்தின் கன்னத்தில் லேசாய் தொட்டுத் தடவ மிருதங்கம் சிலிர்த்திருக்க கூடும்.இப்போது விரல்கள் இருபுறமும் தோலின் கன்னத்தை அழுத்தி இரண்டுமுறை அழுந்த சுற்று நிற்கின்றன.



ஒரு மிருதங்க சக்கரவர்த்தியில் கைகள் இசைக்கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டன.மெதுவாய் தொடங்கி மிருதங்கத்தில் இதுவரையிலும் கேட்டிராத புதிய புதிய இசை ஓசைகளை விதவிதமாய் எழுப்ப அறை இசையால் நிறைகிறது.காதுக்குள் நுழைந்து உடல் கோப்பையும் வழிகிறது.ஒத்திசை தேசைப்படவே தன் சகோதரை மகனை பார்த்து கண்ணசைக்கிறார்,இப்போது அந்த இசை இளவரசன் ஸ்ரீஜியின் வாசிப்பிற்கு சரியாக கைகளை தாளம் தப்பாமல் தட்டுகிறார்.நானும் சேர்ந்து கைகளைத் தட்டுகிறேன்.உடல் செல்கள் ஒவ்வொன்றும் சலவைசெயயப்படுவதைப் போன்ற உணர்வை பெறுகிறேன்.



எங்கள் ஆர்வத்திற்கு வஞ்சகம் செய்யாமல் நிறைவாக தொடர்ந்து வாசிக்கிறார்.இசைக்கலையை இத்தனை ஆண்டுகள் எத்தகைய விதத்தில் நேசித்தார் என்பதை வாசிப்பு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.



ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது ,சட்டென்று வாசிப்பை நிறுத்தி விட்டு பேசுவார் என்று நினைத்திருந்த அனைவரின் எண்ணத்தை தகர்த்தார்,தொலைப் பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை பெருட்படுத்தவில்லை என்று சொல்லிவிடமுடியாது, ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல இசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசிப்பை முடித்துவைத்தார்.



சிலிர்த்து போனோம்.கிட்டத்தட்ட ஒரு மிருதங்க சபாவில் கலந்துகொண்டைதை போல நிறைவில் எங்களை அறியாமலேயே கைகளைத் தட்டி ஆரவரிக்கிறோம்.அதற்கும் லேசான புன்னகையைத் தான் பதிலாகத்தருகிறார்.ஞானிகள் பேசுவதில்லைதானே .



மிருதங்கம் பயணத்திற்காய் பயணப் பைக்குள் அமர்ந்துகொள்கிறது.மிருதங்கம் செய்யும் மூலப்பொருள் பற்றிய விவாதத்தை நான் லேசாக பற்ற வைக்கிறேன். முன்பெல்லாம் நல்ல மரத்தில் கனமான மிருதன்கங்கள் செய்யப்பட்டன. இப்போதெல்லாம் பைபரில் கூட மிருதங்கம் செய்கிறார்கள்,காரணம் எடைக்குறைவான மிருதங்கத்தையே மேலைக் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.



புதிய இசைக்கலைஞர்களும் விரும்புகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து இந்த மிருதங்கங்கள் செய்யப்பட்டன.இலங்கையில் இத்தகைய மிருதங்கங்களுக்கான மரங்கள் மிகுதியாக இருந்தன.தமிழின படுகொலையில் நடந்த கோரத்தில் அக்குறிப்பிட்டவகை மரங்களை இழந்து நிற்கிறோம், என்ற அந்த தகவலோடு அதை மட்டுமா இழந்தோம் ...???'என்று இன்ன பிறவற்றையும் சொல்லி வருத்தம் கொள்கிறார்.இப்படியாய் சந்திப்புகம் நிறைய சிந்திப்புகளை என்னுள் விதித்துள்ளன.அந்த சந்திப்பிற்காய் பலமுறை நன்றிசொல்லி இருக்கிறேன்.



(ஸ்ரீஜியின் நண்பர் வாக்குமூலம்: சார், இந்தியன் கிளாசிகல் மியுசிக்கில் ஸ்ரீஜி ஒரு முக்கியஸ்தர்.இன்னிக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய இசைக்கலைஞர்களைக் காட்டிலும் இசை அனுபவத்திலே இவரு கொஞ்சம் ஒசத்தி.விமானத்துலே பறந்துகிட்டே இருப்பார்,உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துகிறார்,எவ்வளவோ ஸ்டூடெண்ட்ஸ்.வருஷம் முழுக்க நிகழ்சிகளில் கலக்குகிறார்.ஆனா ஒரு விஷயம் சார்.ஒரு டீ ஸ்பூன் அளவுகூட பந்தா பண்னத் தெரியாத மனுஷன் சார்.விளம்பரம் கொஞ்ச கூட புடிக்கவே புடிக்காது.கட் அவுட் ,பேனர், போஸ்டர்,மீடியா விளம்பரம் சொஞ்சிகறதே இல்லே,இவரே கூப்பிடுறவங்களுக்கு கண்டிசனே அதுதான்.நெறைய பணம் இருக்கு இவருகிட்டே ,எவ்ளோ சிம்பிள் பாத்தீங்களா.நம்மளாலே இருக்கமுடியாது.பொய் பேச தெரியாது எதார்த்தம். ஸ்ரீஜி ரொம்ப இட்டிலிஜென்ட் சார் அப்பா இருந்து இப்ப வரைக்கும் அப்படித்த அப்படியேதான்..பிரெண்ட் ன்னா அப்படி ஒரு பிரெண்ட்.)



இந்த கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? அந்த மனிதருக்கு இப்படி ஒரு நண்பரா?..ஆச்சர்யங்களோடு முடிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக