செம்மொழி மாநாட்டிற்காக வந்திருந்த வெளியுலக எழுத்தாளர்களுக்கான இயல்பான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றது. . அதில் குறிப்பாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் இருநூறு பேர் கலந்துகொண்டனர்.அந்த சந்திப்பில் தமிழகத்து படைப்பாளிகள் சார்பில் நான் கலந்துகொண்டு 'உள்ளூரும் உலகத்தமிழும்' என்ற தலைப்பில் பேசினேன். என் நெகிழ்வான உரையால் ஈர்க்கப்பட்ட மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தில் பொதுச்செயலாளர் திரு ஆ. குணநாதன் அவர்கள் எனக்கு சால்வை அணிவித்து , மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் என்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி விளியிடப்பட்ட மலர் ஒன்றையும் பரிசாக்கி மரியாதை செய்தார்கள். 'புதிய ழ' இதழை அனைவருக்கும் நான் பரிசாக்கி மகிழ்ந்தேன். நம் கவிதை இதழ் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அகம் மகிழ்ந்தார்கள். மலேசிய எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து தனித்தனியே உரையாடுகிற நல வாய்ப்பு கிட்டியது.ஒருவர்கூட தமிழல்லாத பிறமொழியில் பேசி நான் பார்க்கவில்லை. தமிழை புகழும் போதெல்லாம் அவர்களை புகழ்வதாகவே நினைந்து நினைந்து பூரித்துக் கொண்டதை அவர்கள் திருமுகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது. கடல் கடந்தும் கண்டம் தாண்டியும் இருக்கிற தமிழர்கள் தமிழை வெகுவாக நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு நல் வாய்ப்பாக இருந்தது. இது என் வாழ்வில் மறக்கவொண்ணா நிகழ்வாகும்.
மலேசிய தோழர்களே வாருங்கள்.பதில் கூறுங்கள்
வியாழன், 24 ஜூன், 2010
திங்கள், 21 ஜூன், 2010
காதல் குறட்பாக்கள் : 28
நீயும்
நானும்
ஆரத் தழுவினோம்.
இடையில்
நுழைய முயற்சித்து
தோற்றுப் போனது
'காற்று'.
-----------------------------------
குறள் : 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
பொழப் படாஆ முயக்கு
நானும்
ஆரத் தழுவினோம்.
இடையில்
நுழைய முயற்சித்து
தோற்றுப் போனது
'காற்று'.
-----------------------------------
குறள் : 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
பொழப் படாஆ முயக்கு
ஞாயிறு, 13 ஜூன், 2010
இயக்குனர் சேரனுடன் ஒருநாள் -(பகுதி- 4)
புன்னகையின் ரேகைகள் ஏகமாய் பரவி இருந்த சேரனின் முகத்தில் பரபரப்பின் சுவடுகளை பார்க்க முடிந்ததில்லை.தன ஆட்காட்டி விரலால் பொத்தான் ஒன்றை அழுத்தினார் .அதன் மணியோசை கரைந்துபோகும் முன் உதவியாளர் திடீரென அவதரித்திருந்தார்.யாரோ ஒருவரின் பெயரை உச்சரித்துவிட்டு 'எங்கே' என்று கேட்டார். இந்த வினாவிலிருந்து சேரன் அடுத்த அலுவலுக்கு தயாராக இருப்பதை நான் யூகித்துக்கொண்டபடியே 'உங்களுடைய அரிய திரை நேரத்தில் இரண்டு மணிநேரத்தை திருடிக்கொண்டேன், உங்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி' என்று நன்றியின் மூலம் விடைபெறுவதற்கு உரிய குறிப்பை முன்வைத்தேன்.எனக்கும் உங்கள் சந்திப்பு மகிழ்வை ஏற்படுத்தியது என்று பதிலளித்து சேரன் புன்னகைத்தபோது உதவியாளர் ஒருவர் விரைந்து வந்து 'வந்தாச்சு சார்' என்று தகவலை சொல்லிவிட்டு நகர்ந்தார். சேரன் அலுவல் காரணமாக வெளியே கிளம்புகிறார் ,வாகனம் வந்திருக்ககூடும் என்று ஊகித்துக்கொண்டேன். என் இரண்டு ஊகங்களும் தவறானவை என்பதை 'சாப்பிடலாம் வாங்க மணி' என்று சேரன் அழைத்த போது அறிந்துகொண்டேன். மரியாதைக்காக மறுத்தேன்.பின் அன்பிற்காக சம்மதித்தேன்.உடனே நாங்கள் அமர்ந்திருந்த அலுவலக சிம்மாசனங்கள் காலியாகின. அடுத்த அறைக்குள் நகர்ந்தோம்.அந்த அறையின் மேற்கு திசையில் வலதுபுறமாக இருந்த கை கால் தூய்மைப்படுத்தும் அறைக்குள் நான் வழிகாட்டப்பட்டேன்.வெளியில் வந்ததும்.ருசிகர சமையலை கமகம நறுமணம் அறிவித்தது. அந்த அறையில் மூவர் அமரும் இலவம்பஞ்சு சோபாவின் இடது ஓரத்தின் நான் அமர்ந்துகொண்டேன்.சேரன் அருகிலுள்ள ஒற்றை சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டார்.சேரனின் கண்ணசைப்பை புரிந்து கொண்டு இயங்கும் இனிய உதவியாளரிடமிருந்து வெள்ளைநிற பீங்கன் தட்டினை நாங்கள் இருவரும் வாங்கிக்கொண்டோம். சைவ பிரியாணி பரிமாறப்பட்டது.அதில் கண்ணை உறுத்திக்கொண்டிருந்த காய்கறிகளில் வண்ணங்களும் ,நெய்யா எண்ணையா என்று ஐயப்பாட்டை ஏற்படுத்தும் அளவில் இருந்த அதன் நறுமணத்தை நுரையீரல் முழுக்க நான் நிரப்பிக்கொண்டேன். பசியின் ஆதிக்கம் அதிகமாகி இருந்ததை அந்த வினாடியில் உணரமுடிந்தது. பழுப்பு நிறத்தில் உருண்டை உருண்டையாய் வருவலும் வழங்கப்பட்டது. தட்டின் ஒருபுறம் வெங்காயப் பச்சிடி மறுபுறம் கிழங்கு குருமா இன்னொருபுறம் வாழைக்காய் வற்றல் என்று பீங்கான் தட்டின் மொத்த பரப்பையும் முழுக்க ஆக்கிரமித்துகொண்டன. பழுப்புநிற வறுவலை சுவைக்க தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை சில்லி கோபியா சில்லி சிக்கனா என்ற ஐயப்பாடு எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவ்வளவு சுவையாய் இதமாய் இருந்தது. சைவ பிரியாணி எனது தட்டில் தீர்ந்திருந்தபோது வெள்ளை சாதம் வழங்குமாறு சொன்ன சேரனின் ஆணைக்கு உதவியாளரும் நானும் சம்மதிக்கக இரண்டாம் சுற்று தொடங்கியது. அடிக்கடி எனக்கு தேவையானவற்றை வழங்குமாறு மகிழ்வாய் ஆணையிட்டுகொண்டே இருந்தார். இதயப்பையும் இரைப்பையும் நிரம்பி இருந்த இறுதிக்கட்டம். இரண்டொரு நிமிடங்களுக்கு முன்னதாக உணவருந்தி முடித்திருந்த சேரன் நான் சாப்பிடும் வரை காத்திருந்தது அவரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தியது. கைகளை சுத்தம் செய்வதற்காக அந்த அறைக்குள் சென்று வெளியேறும் வாசலில் கைகளின் ஈரத்தை துடைப்பதற்கான துண்டை தருவதற்காக அதன் வாசலில் காத்திருந்தார். உணவு முடித்து தமிழ், இனம், மொழி, கலை சார்ந்த விவாதங்களை மெல்லத்தொடங்கி ஒரு கட்டத்தில் முடித்து வைத்தோம்.இருவரும் விடைபெறும் நேரம்.ஒரு உதவியாளரை அழைத்து ஆட்டோவில் என்னை வழியனுப்பி வைக்குமாறு சொல்லி அனுப்பினார். பொங்கும் மகிழ்வுடனும் நட்பின் சிலாகிப்புடனும் தோழமையின் பேரானந்தத்துடனும் நன்றி சொல்லி விடை பெற்றேன்.
'அதிதி தேவோ பவ' என்று சொல்லிக்கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதை சேரனிடம் பழகி தெரிந்துகொண்டேன்.
"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க"
'அதிதி தேவோ பவ' என்று சொல்லிக்கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதை சேரனிடம் பழகி தெரிந்துகொண்டேன்.
"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க"
சனி, 12 ஜூன், 2010
இயக்குனர் சேரனுடன் ஒருநாள் -(பாகம் -3)
உங்கள் முகத்தில் முத்துமுத்தாய் வேர்த்திருக்கிறதே என்று மின்விசிறியை சுழல வைத்தார் எனக்காக.கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டே நான் குளிர்பிரதேசத்தில் பிறந்தவன்,மலைமாவட்டமான உதகை தான் என் பூர்வீகம் என்று சொல்லி தொடங்கினேன்.மதுரை மாவட்டம் மேலூரில் ஜனனமானேன் என்று தன் வேர்களைக் குறிப்பிட்டார் சேரன்.ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்கள்.,ஒரு குழந்தையின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியையர்கள் என்ற வாசகத்திற்கும் இவருக்கும் பொருத்தம் உள்ளது. காரணம் இவரது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. இவர் சொந்த ஊரில் எந்த பள்ளியில் பணி அமர்த்தப்பட்டாரோ அதே பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கால் நூற்றாண்டைக் கடந்து சுமார் முப்பது ஆண்டுகள் கல்விக்காக தன்னை அர்பணித்திருப்பதை பெருமிதம் பொங்க சொன்னபோது நானும் பெருமிதப்பட்டுக் கொண்டேன். எனது அன்னையும் பள்ளி ஆசிரியைதான் என்று அவரின் பதிலுக்கு இடையே பொருத்தமாய் குறுக்கிட்டு நாம் இருவரும் ஆசிரியர் குடும்பத்தில் வந்தவர்கள் என்று சொன்னதும் அவரின் முகம் இன்னும் மலரத்தொடங்கியது.திரை மற்றும் திரையிடல் சார்ந்த பணியில் தனது தந்தை அனுபவம் பெற்றவர் என்று தந்தையை அறிமுகம் செய்து வைத்தபோது, தந்தையின் கலையுணர்வும் தாயின் கல்விஞானமும் சேர்ந்த சரிவிகித கலவையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று நானும் சொல்லி மகிழ்ந்தேன்.உங்கள் திரைப்பயணம் எப்படி நேர்ந்தது என்று இயல்பாய் கேட்டு வைத்தேன்.திரை உலகில் கால் நூற்றாண்டை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிற கனத்த படைப்பாளி என்பதை அவரின் பதில் உறுதிப்படுத்தியது. யாருக்காகவும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் நான் என் படைப்போடு சமரசம் செய்துகொள்ளமாட்டேன் என்று உறுதியோடு இருக்கிற சேரனின் பேச்சில் சமூக அக்கறையும் படைப்பு தர்மமும் பளிச்சிட்டது. சினிமா சார்ந்து உரையாடியவற்றில் ,சேரன் தன் வெற்றிபெற்ற படங்களைப்பற்றி சிலாகித்துக்கொண்டதே இல்லை.மாறாக தோல்வியைத் தழுவிய படங்கள் என்று சொல்லப்படுகிற குறைந்த நாட்கள் ஓடிய படங்கள் குறித்து வினாக்களை முன்வைத்தார். அதில் அவரது தன்னடக்கத்தையும் படைப்பை செழுமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆவலையும் பார்க்கமுடிந்தது.
இயக்குநர் சேரனுடன் ஒருநாள் - (பாகம் -2)
ஒரு விளக்கின் ஒளி மற்றொரு விளக்கை ஒளி ஏற்றுவதைப்போல சேரனின் புன்னகை என்னிடமும் மகிழ்ச்சியை மலர்த்தியத்தை என்னால் நன்கு உணரமுடிந்தது. சற்று சதை வற்றி இளைத்ததுபோல இருந்த சேரனைப் பார்த்து நேரில் வித்தியாசமாக காட்சி தருகிறீர்கள் என்று கேட்டதற்கு ,எட்டு கிலோ எடை குறைத்திருக்கிறேன் என்று சிரித்தபடியே சொல்லிஎன்னை உள்ளே அழைத்து சென்றவராய் தான் அமர்வதற்கு முன் என்னை அமரச்செய்தார்.அவரின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்த அந்த நொடிகளில் விறைப்பும் கம்பீரமும் கலந்த புலனாய்வுத் துறையிடம் இருக்கவேண்டிய உடல்மொழியை அவருக்குத் தெரியாமல் நான் விழிகளால் வாசித்தேன். 'யுத்தம் செய்' திரைப்படத்திற்காக கனகச்சிதமான கதாபாத்திரமாக தன்னை உருமாற்றியிருந்த சேரனையும் மீறி அவருக்கே உரித்தான இயல்பான அன்பின் அடையாளங்களும் போலித்தனமற்ற உண்மையின் வெளிப்பாடுகள் பளிச்சிடவே செய்தன.பாண்டியநாட்டில் பிறந்திருந்த போதிலும் தன பெயரை சேரன் என்று வைத்துக்கொண்ட திரைராசன் சிம்மாசனத்தில் என்னெதிரே அமர்ந்துகொண்டார்.அவரது வரவேற்பிலும் விருந்தோம்பலிலும் லயித்து போன நான் சிலவினாடிகள் வாத்தைகள் தொலைத்து மெளனத்தில் சஞ்சாரித்தேன்.மொழி,
கலை,ஊடகம் சார்ந்த தோழர்களை இணைக்கும் முகநூலின் பங்களிப்பை குறிப்பிட்டபடி எங்களின் உரையாடல் வெதுவெதுப்பானது.வெகுநாள் நட்புக் கொண்டாடிய நண்பனுடன் பேசுவது போலவும் ; பாசத்தைப் பொழியும் சகோதரனுடன் சிலாகித்தது போலவுமான உணர்வை அவரது நடத்தை உருவாக்கியது. அணுக, பேச இத்தனை எளிதான மனிதரா என்ற ஆச்சர்யத்தை ஒவ்வொரு கணமும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.. பரிமாறலில் இடையிடையே அறைமுழுவதையும் அழகால் என் விழிகள் அளவெடுத்துக்கொண்டு இருந்தன.மேசைக்கு நேர் மேல்புறத்தில் தொங்கும் நிலையில் வாசிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான மின்விளக்கு. இடது புறத்தில் உள்ள குட்டி மேசையில் நிரம்பி வழியும் வெற்றிப்பதக்கங்களும் வியர்வையின் விளைச்சலாய் கேடையங்களும். தன் நல்ல திரைப்படத்தின் மூலம் தேசிய விருதுகளை நெஞ்சின் பதியன் போட்டிருப்பதைப் போலவே சுவர்களும் அதன் விருதுகளை சுமந்தபடி கம்பீரமாய் காட்சியளித்தன.மேசையிலிருந்த பொத்தானை அழுத்தியது வழக்கமான இரைச்சலுக்கு பதிலாக இசையை ஒலித்தது.அரை லிட்டர் பிடிக்கும் சில்வர் டம்ளரில் குடிநீர் கிடைத்தது. மினரல் நீரின் ஆதிக்கத்தையும் ,பிளாஸ்டிக் அரக்கனையும் அங்கு பார்க்கமுடியாமல் போனதற்காய் அக்கணமே மகிழ்ந்தேன். சுமார் ஒருமணியளவில் தொடங்கிய அர்த்தமுள்ள உரையாடல் இரண்டை மணி வரையில் தொடர்ந்தது.ஒளிவு மறைவுகள் இன்றி இருவரின் இதயங்களும் திறந்த புத்தகமாய் மலர்ந்திருந்தன .இதற்கிடையில் நான் கொண்டு சென்ற 'புதிய ழ' கவிதை இதழை கையொப்பமிட்டு அன்பாய் அளித்தேன்.என் ஆர்வத்தை அறிந்தவராய் நூலுக்குள் உடனே பயணிக்கத் தொடங்கிவிட்டார்.இந்த நூலில் தயாரிப்பு குறித்தும் ,இந்த நூலுக்காக கவிஞர்களை ஒருங்கிணைக்கும் முறை குறித்தும் ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டார்.இதற்கிடையில் அவரது அலைபேசியை ஒலிக்க செய்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் அணைத்து வைத்துக்கொண்டது அவரின் நாகரீகத்தை எனக்கு கற்பிக்க வைத்தது. பூமியானது மழையின் முத்தங்களுக்காக காத்துக்கொண்டிருந்த அந்த ஈர நொடிகள் என்னுள் வெப்பத்தை பற்றவைத்தது. குளிரூட்டப்பட்ட அறை என்று யூகித்திருந்த நான் 'மின்வெட்டா' என்று வினவியதும் ,மின்விளக்கை எரியவிட்டு உறுதிப்படுத்திக்கொண்ட சேரன் மின்சாரன் இருக்கிறது .முடிந்தவரை மரங்களில் சுவாசங்களையே உள்வாங்கிக்கொள்கிறேன்,
மின்விசிறிகளுக்கு நான் என்றுமே அடிமையாய் இருந்ததில்லை என்று விளக்கினார் . அவரது வலதுபுறத்து சாளரம் பெரிதாய் அகலமாய் திறந்திருந்ததை அப்போதுதான் நான் கவனிக்க தொடங்கினேன்.அபிபுல்லா சாலையின் சிவசைலம் கண்ணில் காட்சிதந்தது.நான் பெரும்பாலும் மின்விசிறி உபயோகிப்பதில்லை என்று தொடங்கி,இயற்கையின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நாம் நம் உடலை பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது என்று தன் அனுபவத்தை கலந்துகொண்டார்.
கலை,ஊடகம் சார்ந்த தோழர்களை இணைக்கும் முகநூலின் பங்களிப்பை குறிப்பிட்டபடி எங்களின் உரையாடல் வெதுவெதுப்பானது.வெகுநாள் நட்புக் கொண்டாடிய நண்பனுடன் பேசுவது போலவும் ; பாசத்தைப் பொழியும் சகோதரனுடன் சிலாகித்தது போலவுமான உணர்வை அவரது நடத்தை உருவாக்கியது. அணுக, பேச இத்தனை எளிதான மனிதரா என்ற ஆச்சர்யத்தை ஒவ்வொரு கணமும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.. பரிமாறலில் இடையிடையே அறைமுழுவதையும் அழகால் என் விழிகள் அளவெடுத்துக்கொண்டு இருந்தன.மேசைக்கு நேர் மேல்புறத்தில் தொங்கும் நிலையில் வாசிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான மின்விளக்கு. இடது புறத்தில் உள்ள குட்டி மேசையில் நிரம்பி வழியும் வெற்றிப்பதக்கங்களும் வியர்வையின் விளைச்சலாய் கேடையங்களும். தன் நல்ல திரைப்படத்தின் மூலம் தேசிய விருதுகளை நெஞ்சின் பதியன் போட்டிருப்பதைப் போலவே சுவர்களும் அதன் விருதுகளை சுமந்தபடி கம்பீரமாய் காட்சியளித்தன.மேசையிலிருந்த பொத்தானை அழுத்தியது வழக்கமான இரைச்சலுக்கு பதிலாக இசையை ஒலித்தது.அரை லிட்டர் பிடிக்கும் சில்வர் டம்ளரில் குடிநீர் கிடைத்தது. மினரல் நீரின் ஆதிக்கத்தையும் ,பிளாஸ்டிக் அரக்கனையும் அங்கு பார்க்கமுடியாமல் போனதற்காய் அக்கணமே மகிழ்ந்தேன். சுமார் ஒருமணியளவில் தொடங்கிய அர்த்தமுள்ள உரையாடல் இரண்டை மணி வரையில் தொடர்ந்தது.ஒளிவு மறைவுகள் இன்றி இருவரின் இதயங்களும் திறந்த புத்தகமாய் மலர்ந்திருந்தன .இதற்கிடையில் நான் கொண்டு சென்ற 'புதிய ழ' கவிதை இதழை கையொப்பமிட்டு அன்பாய் அளித்தேன்.என் ஆர்வத்தை அறிந்தவராய் நூலுக்குள் உடனே பயணிக்கத் தொடங்கிவிட்டார்.இந்த நூலில் தயாரிப்பு குறித்தும் ,இந்த நூலுக்காக கவிஞர்களை ஒருங்கிணைக்கும் முறை குறித்தும் ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டார்.இதற்கிடையில் அவரது அலைபேசியை ஒலிக்க செய்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் அணைத்து வைத்துக்கொண்டது அவரின் நாகரீகத்தை எனக்கு கற்பிக்க வைத்தது. பூமியானது மழையின் முத்தங்களுக்காக காத்துக்கொண்டிருந்த அந்த ஈர நொடிகள் என்னுள் வெப்பத்தை பற்றவைத்தது. குளிரூட்டப்பட்ட அறை என்று யூகித்திருந்த நான் 'மின்வெட்டா' என்று வினவியதும் ,மின்விளக்கை எரியவிட்டு உறுதிப்படுத்திக்கொண்ட சேரன் மின்சாரன் இருக்கிறது .முடிந்தவரை மரங்களில் சுவாசங்களையே உள்வாங்கிக்கொள்கிறேன்,
மின்விசிறிகளுக்கு நான் என்றுமே அடிமையாய் இருந்ததில்லை என்று விளக்கினார் . அவரது வலதுபுறத்து சாளரம் பெரிதாய் அகலமாய் திறந்திருந்ததை அப்போதுதான் நான் கவனிக்க தொடங்கினேன்.அபிபுல்லா சாலையின் சிவசைலம் கண்ணில் காட்சிதந்தது.நான் பெரும்பாலும் மின்விசிறி உபயோகிப்பதில்லை என்று தொடங்கி,இயற்கையின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நாம் நம் உடலை பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது என்று தன் அனுபவத்தை கலந்துகொண்டார்.
இயக்குனர் சேரனுடன் ஒருநாள் ....(பகுதி-1 )
சரியாக நண்பகல் பன்னிரண்டரை மணிக்கு விடுதியிலிருந்து வெளியேறி பாரதிசாலை வந்ததும் காற்றை கிழித்துக் கொண்டு விரைந்த ஆட்டோ என் விரலசைப்பிற்கு நிலைகுத்தி நின்றது.'அபிபுல்லா சாலை போகணும்.,வாடகை எவ்வளவு? சரியா ஒருமணிக்கெல்லா சேத்திடனும் ' என் வினாக்களுக்கும் கட்டளைக்கும் தலை சாய்த்தப்படி என்னையும் சுமந்தபடி பறந்தது.நெரிசல் சிக்னல் எல்லாம் தாண்டி துல்லியமான நேரத்திற்கு கட்சிதமாக கொண்டு சேர்த்தார்.'எறங்குங்க,இதுதான் டைரக்டர் சேரன் ஆபீஸ்'என்று வாடகையை பெற்றுக்கொண்டு மாயமானார். எந்த ஆரவாரமும், படோடாபமும் , சிமாவுக்கே உரிய பந்தாவும் அங்கு தென்படவில்லை.இது இயக்குனர் சேரன் அவர்களின் அலுவலகம் தானா? என்ற ஐயப்பாடு வந்து தொற்றிக்கொண்டது.நல்ல மனிதர்களின் இதயம் போல திறந்திருந்தது வெளிப்புறத்து உலோகக்கதவு.தயக்கத்தோடு உள்ளே நுழைந்தபோது நிசப்தம் பரவிய வரவேற்பறை.சுவரில் அட்டோகிரப் டிஜிட்டல் அட்டையில் நல்ல படங்களைத் தந்த சேரன் புன்னகை முகத்தோடு வரவேற்றுக்கொண்டிருந்தார்.இப்போதுதான் உறுதிபடுத்திக்கொள்ள முடிந்தது.இதழ்கள் படித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள். 'திரு சேரன் இருக்காருங்களா' என்று கேட்டதும் 'நீங்க'என்று விசாரித்தபடி அமரச்சொன்னார்கள். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும்.
கீழதளத்திளிருந்து முதல் மாடியை நோக்கி அழைத்து செல்லப்பட்டேன்.அங்கிருந்த இருக்கைகள் எனக்கு சிம்மாசனங்கலாய் தெரிந்தன. இருக்கையில் அமர்ந்ததும் அவை என்னை முழுதுமாய் உள்வாங்கிக்கொண்டன மிருதுவாய் அழகாய்.அதில் சுகமாய் புதைந்திருந்து கலை அம்சத்தோடு கூடிய அந்த அறையை ரசிக்கத்தொடங்கினேன். பழைய லாந்தர் விளக்கினை போல கலை நயத்தோடு உருவாக்கப்பட்டிருந்த அந்த எழில் விளக்கு கிழபுரத்து சுவற்றில் மூலையில் ஒரு டீபாயில் காட்சிதந்தது.இரண்டாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியின் கூழ்பகுதியில் சுவற்றை ஒட்டி குட்டியாய் ஒரு மர மேசை அதில் ஒரு கணினியும் குட்டியாய் ஒரு சுழலும் இருக்கையும். வெட்கத்தில் சிவந்ததைப் போல மருதாணி கலந்ததைப்போல் வைத்ததை போல தரை முழுக்க கிராமத்து செம்மண்ணை அடையாளப்படுத்தும் விதத்ததில் செந்நிறத்தில் பளிச்சிட்டது.இடது புறமாக இருந்த மூடியிருந்த அறையில்தான் இயக்குனர் இருக்க கூடும் என்று யூகித்தபடி அமர்ந்திருந்தபோது கதவின் இடது புறத்து நிலவில் பழங்காலத்து தொலை பேசி ஒன்று மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. எல்லாம் ரசித்தப்படி நேரம் ஆவலிலும் சுவாரஸ்யத்திலும் மெல்ல மெல்ல கரைந்துகொண்டே இருந்தது. கதவுகள் திறக்கும் ஓசை ஏதும் இல்லாமல் திறந்தது. வெள்ளை சட்டை அணிந்து வாகாய் வகையாய் ஒருவர் வெளியேறினார் ,அவர் யாரென்று என்னால் கவனிக்க முடியவில்லை ,இயக்குனர் அவர்களின் நண்பராய் இருக்கக்கூடும்.அவரை பின்தொடர்ந்து வழியனுப்பும் முகமாய் வெளியில் வந்து என் கண்களுக்கு எளிதாய் காட்சிப்படுகிறார்.அரிதாரங்கள் பூசும் திரைக்களத்தில் போலித்தனம் இல்லாத தமிழ் சினிமாவின் பொக்கிசமாய் திரு சேரன்.'வணக்கம்' இருவரும் பரிமாறிக்கொண்டோம். அவரில் படைப்புகளுக்காக எனது பாணியில் வணங்கினேன். இன்முகத்தோடு வரவேற்றபடி என்னை உள்ளே அழைத்து சென்றார்.(பகுதி -௨ தொடரும்)
கீழதளத்திளிருந்து முதல் மாடியை நோக்கி அழைத்து செல்லப்பட்டேன்.அங்கிருந்த இருக்கைகள் எனக்கு சிம்மாசனங்கலாய் தெரிந்தன. இருக்கையில் அமர்ந்ததும் அவை என்னை முழுதுமாய் உள்வாங்கிக்கொண்டன மிருதுவாய் அழகாய்.அதில் சுகமாய் புதைந்திருந்து கலை அம்சத்தோடு கூடிய அந்த அறையை ரசிக்கத்தொடங்கினேன். பழைய லாந்தர் விளக்கினை போல கலை நயத்தோடு உருவாக்கப்பட்டிருந்த அந்த எழில் விளக்கு கிழபுரத்து சுவற்றில் மூலையில் ஒரு டீபாயில் காட்சிதந்தது.இரண்டாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியின் கூழ்பகுதியில் சுவற்றை ஒட்டி குட்டியாய் ஒரு மர மேசை அதில் ஒரு கணினியும் குட்டியாய் ஒரு சுழலும் இருக்கையும். வெட்கத்தில் சிவந்ததைப் போல மருதாணி கலந்ததைப்போல் வைத்ததை போல தரை முழுக்க கிராமத்து செம்மண்ணை அடையாளப்படுத்தும் விதத்ததில் செந்நிறத்தில் பளிச்சிட்டது.இடது புறமாக இருந்த மூடியிருந்த அறையில்தான் இயக்குனர் இருக்க கூடும் என்று யூகித்தபடி அமர்ந்திருந்தபோது கதவின் இடது புறத்து நிலவில் பழங்காலத்து தொலை பேசி ஒன்று மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. எல்லாம் ரசித்தப்படி நேரம் ஆவலிலும் சுவாரஸ்யத்திலும் மெல்ல மெல்ல கரைந்துகொண்டே இருந்தது. கதவுகள் திறக்கும் ஓசை ஏதும் இல்லாமல் திறந்தது. வெள்ளை சட்டை அணிந்து வாகாய் வகையாய் ஒருவர் வெளியேறினார் ,அவர் யாரென்று என்னால் கவனிக்க முடியவில்லை ,இயக்குனர் அவர்களின் நண்பராய் இருக்கக்கூடும்.அவரை பின்தொடர்ந்து வழியனுப்பும் முகமாய் வெளியில் வந்து என் கண்களுக்கு எளிதாய் காட்சிப்படுகிறார்.அரிதாரங்கள் பூசும் திரைக்களத்தில் போலித்தனம் இல்லாத தமிழ் சினிமாவின் பொக்கிசமாய் திரு சேரன்.'வணக்கம்' இருவரும் பரிமாறிக்கொண்டோம். அவரில் படைப்புகளுக்காக எனது பாணியில் வணங்கினேன். இன்முகத்தோடு வரவேற்றபடி என்னை உள்ளே அழைத்து சென்றார்.(பகுதி -௨ தொடரும்)
செவ்வாய், 1 ஜூன், 2010
தொடர்வண்டி குறிப்புகள்
இருவரிக்குள் ஒருவரிக்கவிதையை
எழுதிச்செல்கிறது தொடர்வண்டி.
தண்டவாளங்களோடு
இடைவிடாமல் இங்கிலீஸ்முத்தம்
கொடுக்கின்றன
இரும்புச்சக்கரங்கள்.
'தண்டவாளங்கள்'
இந்திய மண்ணின் அந்நியன் எழுதிய
உலோக வரலாறுகள்.
எல்லா மனிதர்களையும்
சுமந்தபடி நகர்கிறது
ஒரு ஜனநாயகவீதி.
தூங்கும்
ஸ்டேஷன் மாஸ்டர்களை
சங்கொலியில் எழுப்பியபடி
மின்னதிர்ச்சியில்
கதறிக்கொண்டே ஓடுகிறது
தொடர்வண்டி.
வழிநெடுக
சிலுவை மரங்களாய்
மின்சாரம் சுமக்கும்
கம்பங்கள்.
உறவுக்காரர்களை
வழியனுப்பி வைப்பதுபோல
கையசைத்து புன்னகைக்கும்
சிறார்கள்.
லட்சக்கனக்கில்
நிழல் சிதைந்த
குடைகளைப் பிடித்திருக்கும்
முட்புதர்கள்.
கைகளில்
காயக் கவிதைகளை
முட்கள் கிறுக்க
சுள்ளி பொறுக்கும் பெண்கள்.
கொள்ளை வெயிலில்
வெள்ளைக்காரன் விளையாட்டை
விளையாடும்
கறுப்புக் குழந்தைகள்.
தியானிக்கும்
மலைகள்.
இரையைத் தேடிக்கொண்டே
நகரும் ஆடுகள்.
வறண்ட தரிசுகளில்
நம்பிக்கையை விதைக்கும்
உழவர்கள்.
தூரத்தில்
தண்டவாளத்தை தாண்டும்
பள்ளித்தாமரைகள்.
எல்லோரும் குளிக்கும்
ஒரு
கிராமத்தின் பாத்ரூமாய்
தெப்பக்குளம்.
ஊர் எல்லையில்
தெருமுனையில்
கொட்டமடிக்கும் சுந்தரபுருசர்கள்.
ஆலமரத்தடியில்
அசைவற்று ஓய்வெடுக்கும்
தெய்வங்கள்.
வண்ணங்கள் தொலைத்த
புழுதிபடிந்த சோலைகள்.
கழுத்து வலிகளைத்
தங்களுக்குள்ளேயே
பரிமாறிக்கொள்ளும்
பாரம்சுமக்கும் வண்டிமாடுகள்.
ஆளரவமில்லாத
அனாதைச்சாலைகள்.
சன்னலுக்குள்ளே
கைகளை நிரப்பும்
இயலாத...
பெண்கள்-குழந்தைகள்-பெரியவர்கள்.
மனிதர்களை வள்ளலாக்க
முயற்சிசெய்து
தோற்றுப்போன பிச்சைக்காரர்கள்.
மானிடர்களின் கருணையுள்ளத்தை
சோதனைச்செய்து பார்க்கும்
குரங்குகள்.
அமுதமோ ஆலகாலமோ
உணவுப்பொட்டலங்களை விற்று
விருந்தோம்பும் சீருடைமனிதர்கள்.
வயிற்றில் கலவரம்;
இரப்பையில்
உள்ளிருப்பு போராட்டம்.
பூட்ஸ் கால்களுக்கிடையில்
தவழ்ந்தபடி
தரையைக் கூட்டிச்செல்லும்
ஊனமுற்ற சிறார்கள்.
இப்படியாய் ...
டயர் பஞ்சராகாமல்
ஓடும் தொடர்வண்டியில்
எனக்கு பிடித்தது...
தீண்டாமையை கடைப்பிடிக்காத
ஜெனரல் கம்பார்மென்ட் தான்.
எழுதிச்செல்கிறது தொடர்வண்டி.
தண்டவாளங்களோடு
இடைவிடாமல் இங்கிலீஸ்முத்தம்
கொடுக்கின்றன
இரும்புச்சக்கரங்கள்.
'தண்டவாளங்கள்'
இந்திய மண்ணின் அந்நியன் எழுதிய
உலோக வரலாறுகள்.
எல்லா மனிதர்களையும்
சுமந்தபடி நகர்கிறது
ஒரு ஜனநாயகவீதி.
தூங்கும்
ஸ்டேஷன் மாஸ்டர்களை
சங்கொலியில் எழுப்பியபடி
மின்னதிர்ச்சியில்
கதறிக்கொண்டே ஓடுகிறது
தொடர்வண்டி.
வழிநெடுக
சிலுவை மரங்களாய்
மின்சாரம் சுமக்கும்
கம்பங்கள்.
உறவுக்காரர்களை
வழியனுப்பி வைப்பதுபோல
கையசைத்து புன்னகைக்கும்
சிறார்கள்.
லட்சக்கனக்கில்
நிழல் சிதைந்த
குடைகளைப் பிடித்திருக்கும்
முட்புதர்கள்.
கைகளில்
காயக் கவிதைகளை
முட்கள் கிறுக்க
சுள்ளி பொறுக்கும் பெண்கள்.
கொள்ளை வெயிலில்
வெள்ளைக்காரன் விளையாட்டை
விளையாடும்
கறுப்புக் குழந்தைகள்.
தியானிக்கும்
மலைகள்.
இரையைத் தேடிக்கொண்டே
நகரும் ஆடுகள்.
வறண்ட தரிசுகளில்
நம்பிக்கையை விதைக்கும்
உழவர்கள்.
தூரத்தில்
தண்டவாளத்தை தாண்டும்
பள்ளித்தாமரைகள்.
எல்லோரும் குளிக்கும்
ஒரு
கிராமத்தின் பாத்ரூமாய்
தெப்பக்குளம்.
ஊர் எல்லையில்
தெருமுனையில்
கொட்டமடிக்கும் சுந்தரபுருசர்கள்.
ஆலமரத்தடியில்
அசைவற்று ஓய்வெடுக்கும்
தெய்வங்கள்.
வண்ணங்கள் தொலைத்த
புழுதிபடிந்த சோலைகள்.
கழுத்து வலிகளைத்
தங்களுக்குள்ளேயே
பரிமாறிக்கொள்ளும்
பாரம்சுமக்கும் வண்டிமாடுகள்.
ஆளரவமில்லாத
அனாதைச்சாலைகள்.
சன்னலுக்குள்ளே
கைகளை நிரப்பும்
இயலாத...
பெண்கள்-குழந்தைகள்-பெரியவர்கள்.
மனிதர்களை வள்ளலாக்க
முயற்சிசெய்து
தோற்றுப்போன பிச்சைக்காரர்கள்.
மானிடர்களின் கருணையுள்ளத்தை
சோதனைச்செய்து பார்க்கும்
குரங்குகள்.
அமுதமோ ஆலகாலமோ
உணவுப்பொட்டலங்களை விற்று
விருந்தோம்பும் சீருடைமனிதர்கள்.
வயிற்றில் கலவரம்;
இரப்பையில்
உள்ளிருப்பு போராட்டம்.
பூட்ஸ் கால்களுக்கிடையில்
தவழ்ந்தபடி
தரையைக் கூட்டிச்செல்லும்
ஊனமுற்ற சிறார்கள்.
இப்படியாய் ...
டயர் பஞ்சராகாமல்
ஓடும் தொடர்வண்டியில்
எனக்கு பிடித்தது...
தீண்டாமையை கடைப்பிடிக்காத
ஜெனரல் கம்பார்மென்ட் தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)