சனி, 12 ஜூன், 2010

இயக்குனர் சேரனுடன் ஒருநாள் ....(பகுதி-1 )

சரியாக நண்பகல் பன்னிரண்டரை மணிக்கு விடுதியிலிருந்து வெளியேறி பாரதிசாலை வந்ததும் காற்றை கிழித்துக் கொண்டு விரைந்த ஆட்டோ என் விரலசைப்பிற்கு நிலைகுத்தி நின்றது.'அபிபுல்லா சாலை போகணும்.,வாடகை எவ்வளவு? சரியா ஒருமணிக்கெல்லா சேத்திடனும் ' என் வினாக்களுக்கும் கட்டளைக்கும் தலை சாய்த்தப்படி என்னையும் சுமந்தபடி பறந்தது.நெரிசல் சிக்னல் எல்லாம் தாண்டி துல்லியமான நேரத்திற்கு கட்சிதமாக கொண்டு சேர்த்தார்.'எறங்குங்க,இதுதான் டைரக்டர் சேரன் ஆபீஸ்'என்று வாடகையை பெற்றுக்கொண்டு மாயமானார். எந்த ஆரவாரமும், படோடாபமும் , சிமாவுக்கே உரிய பந்தாவும் அங்கு தென்படவில்லை.இது இயக்குனர் சேரன் அவர்களின் அலுவலகம் தானா? என்ற ஐயப்பாடு வந்து தொற்றிக்கொண்டது.நல்ல மனிதர்களின் இதயம் போல திறந்திருந்தது வெளிப்புறத்து உலோகக்கதவு.தயக்கத்தோடு உள்ளே நுழைந்தபோது நிசப்தம் பரவிய வரவேற்பறை.சுவரில் அட்டோகிரப் டிஜிட்டல் அட்டையில் நல்ல படங்களைத் தந்த சேரன் புன்னகை முகத்தோடு வரவேற்றுக்கொண்டிருந்தார்.இப்போதுதான் உறுதிபடுத்திக்கொள்ள முடிந்தது.இதழ்கள் படித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள். 'திரு சேரன் இருக்காருங்களா' என்று கேட்டதும் 'நீங்க'என்று விசாரித்தபடி அமரச்சொன்னார்கள். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும்.
கீழதளத்திளிருந்து முதல் மாடியை நோக்கி அழைத்து செல்லப்பட்டேன்.அங்கிருந்த இருக்கைகள் எனக்கு சிம்மாசனங்கலாய் தெரிந்தன. இருக்கையில் அமர்ந்ததும் அவை என்னை முழுதுமாய் உள்வாங்கிக்கொண்டன மிருதுவாய் அழகாய்.அதில் சுகமாய் புதைந்திருந்து கலை அம்சத்தோடு கூடிய அந்த அறையை ரசிக்கத்தொடங்கினேன். பழைய லாந்தர் விளக்கினை போல கலை நயத்தோடு உருவாக்கப்பட்டிருந்த அந்த எழில் விளக்கு கிழபுரத்து சுவற்றில் மூலையில் ஒரு டீபாயில் காட்சிதந்தது.இரண்டாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியின் கூழ்பகுதியில் சுவற்றை ஒட்டி குட்டியாய் ஒரு மர மேசை அதில் ஒரு கணினியும் குட்டியாய் ஒரு சுழலும் இருக்கையும். வெட்கத்தில் சிவந்ததைப் போல மருதாணி கலந்ததைப்போல் வைத்ததை போல தரை முழுக்க கிராமத்து செம்மண்ணை அடையாளப்படுத்தும் விதத்ததில் செந்நிறத்தில் பளிச்சிட்டது.இடது புறமாக இருந்த மூடியிருந்த அறையில்தான் இயக்குனர் இருக்க கூடும் என்று யூகித்தபடி அமர்ந்திருந்தபோது கதவின் இடது புறத்து நிலவில் பழங்காலத்து தொலை பேசி ஒன்று மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. எல்லாம் ரசித்தப்படி நேரம் ஆவலிலும் சுவாரஸ்யத்திலும் மெல்ல மெல்ல கரைந்துகொண்டே இருந்தது. கதவுகள் திறக்கும் ஓசை ஏதும் இல்லாமல் திறந்தது. வெள்ளை சட்டை அணிந்து வாகாய் வகையாய் ஒருவர் வெளியேறினார் ,அவர் யாரென்று என்னால் கவனிக்க முடியவில்லை ,இயக்குனர் அவர்களின் நண்பராய் இருக்கக்கூடும்.அவரை பின்தொடர்ந்து வழியனுப்பும் முகமாய் வெளியில் வந்து என் கண்களுக்கு எளிதாய் காட்சிப்படுகிறார்.அரிதாரங்கள் பூசும் திரைக்களத்தில் போலித்தனம் இல்லாத தமிழ் சினிமாவின் பொக்கிசமாய் திரு சேரன்.'வணக்கம்' இருவரும் பரிமாறிக்கொண்டோம். அவரில் படைப்புகளுக்காக எனது பாணியில் வணங்கினேன். இன்முகத்தோடு வரவேற்றபடி என்னை உள்ளே அழைத்து சென்றார்.(பகுதி -௨ தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக