வியாழன், 24 ஜூன், 2010

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பில் நான்

செம்மொழி மாநாட்டிற்காக வந்திருந்த வெளியுலக எழுத்தாளர்களுக்கான இயல்பான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றது. . அதில் குறிப்பாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் இருநூறு பேர் கலந்துகொண்டனர்.அந்த சந்திப்பில் தமிழகத்து படைப்பாளிகள் சார்பில் நான் கலந்துகொண்டு 'உள்ளூரும் உலகத்தமிழும்' என்ற தலைப்பில் பேசினேன். என் நெகிழ்வான உரையால் ஈர்க்கப்பட்ட மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தில் பொதுச்செயலாளர் திரு ஆ. குணநாதன் அவர்கள் எனக்கு சால்வை அணிவித்து , மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் என்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி விளியிடப்பட்ட மலர் ஒன்றையும் பரிசாக்கி மரியாதை செய்தார்கள். 'புதிய ழ' இதழை அனைவருக்கும் நான் பரிசாக்கி மகிழ்ந்தேன். நம் கவிதை இதழ் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அகம் மகிழ்ந்தார்கள். மலேசிய எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து தனித்தனியே உரையாடுகிற நல வாய்ப்பு கிட்டியது.ஒருவர்கூட தமிழல்லாத பிறமொழியில் பேசி நான் பார்க்கவில்லை. தமிழை புகழும் போதெல்லாம் அவர்களை புகழ்வதாகவே நினைந்து நினைந்து பூரித்துக் கொண்டதை அவர்கள் திருமுகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது. கடல் கடந்தும் கண்டம் தாண்டியும் இருக்கிற தமிழர்கள் தமிழை வெகுவாக நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு நல் வாய்ப்பாக இருந்தது. இது என் வாழ்வில் மறக்கவொண்ணா நிகழ்வாகும்.

மலேசிய தோழர்களே வாருங்கள்.பதில் கூறுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக