இலக்கியம் ஆனாலும் சரி திரைப்படம் ஆனாலும் சரி, அதை சரியான முறையில் நேரடியாக புரிந்துகொள்ளும் பக்குவத்தை நாம் உருவாக்க வேண்டும். இப்போது கோவையில் இருக்கிறீர்கள் என்றால் இங்கு ஒரு பிலிம் கிளப் ஆரம்பிக்கலாம்.அப்படி ஒரு பிலிம் கிளப் ஆரம்பிச்சி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் போட்டுக்காட்டி நல்ல சினிமா எது என்ற புரிதலை உருவாக்கவேண்டும். இது போன்ற அமைப்பை ஒவ்வோர் ஊர்களிலும் தொடங்கி மாற்றுத் திரைப்படத்திற்கு உரிய ரசனையை உருவாக்க வேண்டும். இப்போது அதற்கு நிறைய தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன.எங்கோ பிறந்த சேரனும் எங்கோ பிறந்த மணிவண்ணனும் இப்போது நண்பர்கள் இந்த முகப்புத்தகத்தில் மூலம். இல்லாட்டி இரு வந்திருக்காது. ஆகவே விஞ்ஞானத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் இருக்கு.
.இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு ,இது மாதிரி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகிட்டோம் என்கிறதே விட..................... இந்த மாதிரியான நோக்கத்திற்காக இந்த பதிப்பகத்தை இவர் தொடங்கி இருக்கிறார் என்கிறப்போ அந்த பதிப்பகத்தை நானும் நீங்களும் வாழ்த்தியே ஆகவேண்டும். மேலும் மேலும் இப்பதிப்பகம் வளர்வதற்கு இந்த எழுத்தாளர்கள்
அடுத்த எழுத்தாளர்களும் கை கொடுக்கவேண்டும். அடுத்த பதிப்பகத்திற்கு போனா நமக்கு காசு அதிகமாக வரும் அப்படிங்கறதே விட்டுட்டு எந்த பதிப்பகம் எழுத்துத் துறையை வளர்க்க ஆரம்பிக்கப்பட்டது? எந்த பதிப்பகம் எழுத்தாளர்களை அடையாளப்படுத்த உருவாக்க ஆரம்பிக்கப்பட்டது? என்பதே நெனச்சி அந்த பதிப்பகங்களுக்குத்தான் நாம் ஆதரவு கொடுக்கணும். ஏன்னா அவங்களுக்குத்தான் அதிலே முக்கியமான பங்கு இருக்கு.
எங்களைப் பொருத்தவரைக்கும் பதிப்பகம் என்பது ,அதாவது என்னோட மொழியிலே சொல்லணும்னா தயாரிப்பாளர் என்றுதான் சொல்லுவேன்.ஆயிரம் இயக்குஞர்களும் உதவி இயக்குஞர்களும் கதைகளோடு அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எங்களுக்கு யாரோ ஒருவர் ஒகே பண்ணினாதா கதை திரைக்குவரும். அதே போலத்தால் பத்துபேர் கதை கவிதைகளை எழுதி வைத்திருந்தாலும் ,உங்கள் கதை கவிதைகளை புரிந்துகொண்டு உங்கள் ஆர்வத்தை புரிந்துகொண்டு உங்களை மேலே கொண்டுவருவதற்கு அடித்தளம் அமைக்கிற பதிப்பகத்தார் வேண்டும். பதிப்பகத்தார்தான் உங்களுக்கான தயாரிப்பாளர்கள் .நீங்கள் அதன்மூலமாகத்தன் உங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டுவரமுடியும். நாங்கள் தயாரிப்பாளர்கள் மூலமாகத்தான் எங்கள் படங்களை சந்தைக்கு கொண்டுபோறோம். என்னதா சேரன் வீட்லே உக்காந்து தவமாய் தவமிருந்து மாதிரி பத்து கதையை எழுதினாலும் ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தால்தான் அந்த படத்தை சந்தைக்கு கொண்டுவர முடியும். அதே போலத்தான் உங்களின் படைப்புகளும், நீங்கள் ஆயிரம் பக்கங்கள் பத்தாயிரம் பக்கங்கள் என்று எவ்வளவு எழுதி வைத்திருந்தாலும் அதெ போடறதுக்கு ஒரு பதிப்பகத்தார் வேண்டும்.கொஞ்சம் பெரிய ஆள் ஆகிக்கிட்டீங்கன்ன உங்களைத் தேடி அவங்க வருவாங்க. முன்னாடியே சொன்னதுபோல உங்களுக்கு மாத சம்பளம் நிர்ணயம் பண்ணிடுவாங்க .
யாரும் இங்கே வியாபார சூழலில் ,மிகப்பெரிய அந்தஸ்த்து உள்ள; சொன்ன உடன் செல்வாக்கு இருக்கிற எழுத்தாளர்களை வைத்து இந்த பன்னிரண்டு புத்தகங்களை வெளியிடவில்லை. மேலும் இந்த புத்தகங்கள் வியாபார நோக்கில் வெளியிடவில்லை. அந்த வகையில் இந்த பதிப்பகத்தின் சேவை மிகவும் முக்கியமானது. மிக அரியது. எல்லோரின் பாராட்டுக்கு உரியது.
தமிழாசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கிய ஒவ்வொருவரும் எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க என்று புரிந்துகொள்ளமுடிகிறது. . எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள் என்று உணர்ந்துகொள்ளவும் முடிகிறது.தமிழ் படிக்கும் மாணவர்களிடம் பிற மாணவர்கள் பேச மாட்டார்கள். தமிழ் பாடம் படித்தாலே இங்கு கெளரவ குறைச்சல். இங்கு ஆங்கிலத்தில் பேசணும், ஆங்கிலத்தில் எழுதணும் ..அப்படி செய்தால்தான் மரியாதை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இது வருத்தத்திற்கு உரியது. அதற்காய் வேதனைப் படுகிறேன்.தமிழுக்கு தமிழ் நாடலே மரியாதை இல்லை. தமிழ் நம்முடைய மொழி. நமது உணர்விலும் குருதியிலும் உயிரிலும் கலந்த மொழி.
இங்கு எல்லோருமே தாகூர் ஆகமுடியாது ; எல்லோருமே அப்துல்கலாம் ஆகமுடியாது .ஆனால் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒவ்வொரு திறமை கட்டாயம் ஒளிந்திருக்கிறது. அந்த திறமை என்னான்னு கண்டு பிடிச்சி அதுலே பெரிய ஆளானால் போதும். பயணம் போகிற போது சன்னலோரத்தில் இருந்து நகரும் பேருந்திலிருந்து அந்த பூமியை உற்று கவனியுங்கள். அது உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்லும்.இந்த உலகத்தில் பார்க்கிற ஒவ்வொன்றும் பயன்படுகிறது.பயனற்றவை என்று எவற்றையும் சொல்லமுடியாது.அதுபோல ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ,வேறு வேறு திறமை இருக்கிறது. அது என்னான்னு கண்டுபுடிச்சி அதில் நாம் பெரிய ஆளாக வளரவேண்டும்.
மேலும் மன நிறைவு என்பது வேண்டும். திருத்தியடைகிற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.நம்ம கிட்டே என்ன இருக்கோ அது போதும். ஏன்னா மாயக்கண்ணாடியோட இறுதியிலே சொல்லியிருக்கேன். நம்முடைய சூழல் அது. நம்முடைய வாழ்க்கை முறை அது. நம்ம அப்பா அம்மா செத்து வச்சது, நமக்கான நண்பர்கள், நம்மோட பொருளாதார பின்னணி, நம்மோட வாழ்க்கை பின்னணி, நமக்கான தேடல் முயற்சி உழைப்பு ...இவ்வளவு சம்பந்தப்பட்டது ஒவ்வொரு மனிதனோட வெற்றி.வெறுமனே லக்கு லக்குன்னு மருதமலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வந்தா நடக்காது. முருகன் கோயிலுக்குத்தான் உண்டியல்லே காசு மிஞ்சும். நமக்கு ஒண்ணுமே கிடைக்காது. நம்மிடம் இருக்கும் ஆற்றல் ஒன்றை கண்டு பிடித்து அதை வெளியில் கொண்டு வந்தால் நீங்கள் ஜெயித்துவிட முடியும்.
என்னையே வந்து எங்கம்மா படிக்கவச்சாங்க அம்மா . நா பெரிய படிப்பாளி ஆகணும்,நா மாசம் இருபத்தைத்து ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கணும், குடும்பத்திற்கு உதவணும்,தங்கச்சிகளே
காப்பாத்தனுன்னு நெனச்சாங்க . எங்க குடும்பத்தோட அன்றைய சூழல் அது. நான் படிச்சி நல்ல சம்பளம் வாங்கி இருந்தால் எங்க அம்மாவே காப்பாத்தி இருக்க முடியும், என் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க முடியும். என்னுடைய ஆசை எல்லாம் சினிமா சினிமா சினிமா.சிவாஜியே பாத்து எம் ஜி ஆரைப் பாத்து அதுமாதிரி இதுமாதிரி நடிகனாயிரனும்னுங்கறது என் கனவு .ஆனா அவங்களாலே புரிஞ்சிக்க முடியலே. என்னை அனுப்புவதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
என்னை ஒரு அரசு ஊழியராக படிக்க போட்டிருந்தாங்கன்ன நான் நல்ல சிந்தனைகளோடு நல்ல மனிதனாக வாழ்ந்திருக்க முடியாது, எது கடமை ஆற்றி இருப்பேன். அவ்வளவுதான்.ஆனா நான் அதை மீறி, நான் அது இல்லேன்னு, பத்து வருஷம் போராடுனதுக்கு அப்புறம்தான் பன்னிரண்டு வருஷம் உழைப்புக்கு அப்புறம்தான் , முழுமையான உழைப்புக்கு அப்புறம்தான், நிறைய சந்தோசங்களை இழந்ததற்கு அப்புறம்தான் இது எனக்கு கிடைச்சிருக்கு.ஈசியா கிடைக்கலே.
அதுபோல எல்லா விசயத்திலும் அப்படி வர தயாராக இருக்கணும். ஆனா இன்னைக்கு உள்ளது அவசரமான உலகம்.அவசரமான ஒரு போக்கு இருக்கு. இன்ஸ்டன்ட் மாதிரி எல்லோருமே நம்ம வாழ்க்கையை மாத்திகிட்டோ .எதிலயுமே ஒரு பொறுமை இல்லை.கவிராயர் சொல்ல்ம்போது "நான் கவிதை படிக்கும் போது மனைவி இட்லி வைப்பாள் .நான் புத்தகத்தை சாப்பிட்டுக்கொண்டு இட்லி தொட்டுக்கொல்வேன்"என்றார். நான் சொல்றே, அவர் இருபத்தைந்து வருசமா மனைவி என்ற கவிதையைப் படிக்க மறந்துவிட்டார். இருபத்தைந்து வருசமாக மனைவி எழுதிய இட்லி என்ற கவிதையை ரசிக்க மறந்துவிட்டார். ஏனா,நீங்கள் யாரோ எழுதிய கவிதையை படித்தீர்கள் உங்களுக்காக எழுதப்பட்ட மனைவி என்ற கவிதையை படிக்க மறந்துவிட்டீர்கள்.
இந்தமாதிரி ஒரு விழாவில் கலந்து கொண்டதற்கு.மிகவும் சந்தோசம். நீங்க என்னுடைய படங்களை பார்த்து பாராட்டி "கதைப் பொக்கிஷம்" என்ற தலைப்பை கொடுத்தது எனக்கு கூச்சமாகத்தான் இருந்தது .என்ன பண்ணினோம் ஒன்னும் பண்ணலையே என்கிற நினைப்புதான் வந்தது. புத்திலக்கிய படைப்பாளிகள் கெளரவிக்கப்பட்ட இந்த மேடையில் சேரனும் கேளரவிக்கப்பட்டதற்க்கு இந்த பதிப்பகத்திற்கும் படைப்பாளிகளுக்கும் இந்த கொங்குத்தமிழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மிகுந்த சந்தோசம் மிகுந்த மன நிறைவு,மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு இப்படியொரு சந்தோசத்தை நான் உங்களோடு பகிர்ந்துக்க வந்த நேரத்துலேநீங்க எனக்கான சந்தோசத்தே கொடுத்ததை நான் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். எப்பொழுதுமே! ஏன்னா அவரு சொன்னது மாதிரி வந்து அங்கீகாரத்துக்குத்தான் ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான்.அந்த அங்கீகாரம் செத்ததற்கு அப்புறம் பட்டயமா வர்றதுலே பிரயோசனமே இல்லை. இருக்கும் போது என் தாய் தந்தைக்கு சோறு போடாமே.இறந்ததுக்கப்புறம் போடோவுக்கு மாலையே போட்டு காக்காவுக்கு சோறு வைக்கரதுலே என்ன பிரயோஜனம் .நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியதைப் போல நானும் நிறைய பேர்களுக்கு செய்யவேண்டும் என்று இருக்கிறேன். இப்போதும் கூட நல்ல சினிமாக்கள் வந்துச்சுன்ன அந்த இயக்குஞர்களைப் கூப்டு ,அவங்க வயதில் சின்னவங்களா இருந்தாலும் நான் அவர்களைப் பாராட்டுவேன்,வாழ்த்துவேன்...ஒரு சாதார திண்ணைப் பேச்சுக்காரனா அவர்களுடன் அமர்ந்து அவர்களின் படைப்புக் குறித்து சிலாகித்து பேசுவேன். அப்படி அவர்களை நான் தட்டிக்கொடுக்க்னும்னு ஆசைப்பட்டுகிறேன்.
அதே போலத்தான் நீங்களும் என்னை தட்டிக்கொடுத்ததா நினைத்துக்கொண்டு இந்த தட்டிக்கொடுத்த விசயத்தே துளி அளவு கூட என் தலையில் தலைக்கனமா ஏத்திக்காமே இன்னும் இன்னும் இன்னும் நிறைய நிறைய புதிய புதிய முயற்சிகளோடு ,உழைக்கனும்கர எண்ணத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
(சேரனின் உரை முடிவுக்கு வந்தது... நமது செயல்பாடுகள் இனி தொடரட்டும் தகிதா விழா நிகவுகள் குறித்த பதிவை முகநூலில் வாசித்து வாழ்த்திய நிறை குறைகள் சொன்ன , சிறப்பாக விவாதித்த, புதிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட, பாராட்டிய, முகநூல் தோழமைகள் அனைவருக்கும் மணிவண்ணனின் முத்தமிழ் முத்தங்கள் "கொஞ்சம் கன்னத்தை காட்டுங்கள் ".
வெள்ளி, 17 டிசம்பர், 2010
கலைப் பொக்கிஷம் (திரு அனந்தபத்மநாபன்)
இவர் குழந்தையாக இருக்கும் போது இவரின் தாய் விளையாடுவதற்கு பொம்மைக்கு பதிலாக தூரிகையைக் கொடுத்திருக்கக் கூடும். இவர் வயதானாலும் ஊன்றுகோலுக்கு பதிலாக தூரிகை பிடித்துக்கொண்டு நடக்கலாம். அப்படியாய் இவரது வலதுகையில் ஐந்து விரல்களோடு ஆறாவது விரலாய் வளர்ந்திருக்கிறது தூரிகை. பார்ப்பவைகளை தன் கண்களில் வண்ணநகல் எடுக்கும் ஆற்றல் பெற்றவர் இவர் . இவரது நாளங்களில் ஒற்றை சிவப்பு ரத்தத்திற்கு பதிலாக வானவில்லாய் பலவண்ண குருதி பாய்கிறது போலும். ஆயிரம் வார்த்தைகளால் ஆன ஓர் அழகு கவிதையை இவரின் ஒற்றை வரைதல் சொல்லும். இவர் ஒருநாள் கூட கறுப்புவெள்ளையில் கனவு கண்டிருக்க முடியாது. இவர் கருப்பு வண்ணத்தில் வரையும்போது ஓர் அழகிய பெண்ணின் புருவம் தொட்டு வரைகிறாரோ? இவர் சிவப்பு வண்ணத்தில் வரையும் போது ஓர் அழகு பெண்ணின் உதடு தொட்டு வரைகிறாரோ? இவர் மஞ்சள் வண்ணத்தில் வரையும் போது ஓர் அழகு பெண்ணின் கன்னம் தொட்டு வரைகிறாரோ? இப்படி எல்லாம் நினைக்க தோன்றும் இவரது வண்ண வரைதல்களை விழிகளால் ஆராதனை செய்யும்போது. நீருக்கு நிறமில்லை எனபது உண்மைதான் இவரது வண்ணப்படங்களைப் பார்க்கும் பொழுது இவர் குடிக்கும் நீருக்கு நிறம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. பொங்கலுக்கு பொங்கல் எல்லோரும் வீட்டிற்கு வெள்ளை அடிப்பார்கள், இவரோ வண்ணம் அடிப்பார்.. அதற்காய் வண்ணப்படங்களை சுவரில் அடிப்பார்.இவர் தன் தூரிகையை தொட்டு வைக்கும் போது கிழக்கில் சூரியன்.தன் தூரிகையை கழுவி வைக்கும்போது மேற்கில் நிலா.இவரது தூரிகை மிருதுவானதுதான்.ஆனால் சிலரேங்களில் வருடும் சில நேரங்களில் வதைக்கும். புரட்சிகள் எழுத்துக்களால் உருவானைவை அல்ல ஓவியங்களாலும் ...(நாளை தொடர்கிறேன்)
தகிதா வெளியீடுகளிலிருந்து சில கவிதைகள்
1
காலங்கள் கதைகட்காக
காத்திருப்பதில்லை
சில வேளைகளில்
மொழிந்த மொழி
மெளனமாய்
புதைந்துவிடுகின்றன.
-கவிதாயினி ஈழவாணி ( தலைப்பு இழந்தவை )
2.
என்னைக்
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும் போது
சிக்கியது
யார்மீதோ வீசப்பட்ட
என் கைரேகை படிந்த கல்.
-கவிஞர் யாழி ( என் கைரேகை படிந்த கல்)
3.
பலரின் காதல்
பேசியே தீர்ந்து போகும்
நம் காதலோ
பேசாமல் சேமிக்கப்படுகிறது
நம் இதயங்களில்
-கவிதாயினி தனலட்சுமி (நிலா கால நினைவுகள்)
4.
வெகு நாட்களுக்கு முன்
நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை.
என் யாழின்
நரம்புகளில் இருந்து
பரவுகிறது
மழையில் இசை.
-சரவணன்(முகில் பூக்கள்)
5.
எல்லா வழிகளின் முடிவிலும்
மூடியிருக்கும்
வெறுமையான சூனியக்கதவுகளால்
எஞ்சுகின்றது விரக்தி.
-ஆதித்தன்(பொய்யும் பழங்கதையும் வெருங்கனவும்)
6.
குளித்த ஈரக்கூந்தலோடு
நீ வெளியில் வர
காத்திருந்த காற்று
ஹைக்கூ எழுதிவிட்டு போகிறது!
ஆடும் கேசத்தில்
அமர்ந்துகொண்டே ரோஜாப்பூ
அதைப் படிக்கிறது...சிரிக்கிறது...
-மாரியப்பன்(என் பேனாவின் அனாக்கள்)
7.
போராட்டம்
வறுமைக்கு எதிராக
அநீதிக்கு எதிராக
அறியாமைக்கு எதிராக
என்றால்
நிச்சயம் ஆதரிப்பேன்
என் புதல்வர்களை
போர்க்கொடி ஏந்த.
-கவிஞர் பக்தவத்சலம் (போதிமரம் )
8.
யாரோ வீசிய கல்லில்
எழுந்த அலைகளால்
மெல்ல அசைகிறது
மீனுக்காக தவமிருக்கும்
கொக்கின் பிம்பம்
-நானற்காடன்(சாக்பீஸ் சாம்பலில்
காலங்கள் கதைகட்காக
காத்திருப்பதில்லை
சில வேளைகளில்
மொழிந்த மொழி
மெளனமாய்
புதைந்துவிடுகின்றன.
-கவிதாயினி ஈழவாணி ( தலைப்பு இழந்தவை )
2.
என்னைக்
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும் போது
சிக்கியது
யார்மீதோ வீசப்பட்ட
என் கைரேகை படிந்த கல்.
-கவிஞர் யாழி ( என் கைரேகை படிந்த கல்)
3.
பலரின் காதல்
பேசியே தீர்ந்து போகும்
நம் காதலோ
பேசாமல் சேமிக்கப்படுகிறது
நம் இதயங்களில்
-கவிதாயினி தனலட்சுமி (நிலா கால நினைவுகள்)
4.
வெகு நாட்களுக்கு முன்
நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை.
என் யாழின்
நரம்புகளில் இருந்து
பரவுகிறது
மழையில் இசை.
-சரவணன்(முகில் பூக்கள்)
5.
எல்லா வழிகளின் முடிவிலும்
மூடியிருக்கும்
வெறுமையான சூனியக்கதவுகளால்
எஞ்சுகின்றது விரக்தி.
-ஆதித்தன்(பொய்யும் பழங்கதையும் வெருங்கனவும்)
6.
குளித்த ஈரக்கூந்தலோடு
நீ வெளியில் வர
காத்திருந்த காற்று
ஹைக்கூ எழுதிவிட்டு போகிறது!
ஆடும் கேசத்தில்
அமர்ந்துகொண்டே ரோஜாப்பூ
அதைப் படிக்கிறது...சிரிக்கிறது...
-மாரியப்பன்(என் பேனாவின் அனாக்கள்)
7.
போராட்டம்
வறுமைக்கு எதிராக
அநீதிக்கு எதிராக
அறியாமைக்கு எதிராக
என்றால்
நிச்சயம் ஆதரிப்பேன்
என் புதல்வர்களை
போர்க்கொடி ஏந்த.
-கவிஞர் பக்தவத்சலம் (போதிமரம் )
8.
யாரோ வீசிய கல்லில்
எழுந்த அலைகளால்
மெல்ல அசைகிறது
மீனுக்காக தவமிருக்கும்
கொக்கின் பிம்பம்
-நானற்காடன்(சாக்பீஸ் சாம்பலில்
தகிதா பதிப்பகத்தில் வெளியான "சாக்பீஸ் சாம்பலில்"(நானற்காடன்) என்ற தொகுப்பிலிருந்து
*
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை
*
யாவும் கழுவப்பட்டிருக்கின்றன
மழை பொழிந்த
கவிதைகளால்
அழுக்காகிப் போன
என்னைத் தவிர.
*
உள்ளே
நீ தான் இருக்கிறாய்
கொஞ்சம்
பிளந்து பார்
எனது வேர்ப்பலாவை
*
தமிழர் திருநாளில்
கூச்சமின்றி சொல்கிறாய்
ஹேப்பி பொங்கல்
அட்லீஸ்ட் இதையாவது
இங்கிலீஸ்லே சொல்றத
அவாய்டு பண்ணியிருக்கலாம்
நீ
*
பேனாவின் முனை வழியாய்
கீழிறங்கி
எனது கவிதையை
முடித்து வைக்காமல்
விளையாடுகிறது
ஒரு கடைசிச் சொல்
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை
*
யாவும் கழுவப்பட்டிருக்கின்றன
மழை பொழிந்த
கவிதைகளால்
அழுக்காகிப் போன
என்னைத் தவிர.
*
உள்ளே
நீ தான் இருக்கிறாய்
கொஞ்சம்
பிளந்து பார்
எனது வேர்ப்பலாவை
*
தமிழர் திருநாளில்
கூச்சமின்றி சொல்கிறாய்
ஹேப்பி பொங்கல்
அட்லீஸ்ட் இதையாவது
இங்கிலீஸ்லே சொல்றத
அவாய்டு பண்ணியிருக்கலாம்
நீ
*
பேனாவின் முனை வழியாய்
கீழிறங்கி
எனது கவிதையை
முடித்து வைக்காமல்
விளையாடுகிறது
ஒரு கடைசிச் சொல்
கவிதைநூல்களை புறக்கணிப்பது ஏன்?
பதிப்பகங்களும் ,அரசு நூலகங்களும் கவிதை நூல்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இது புத்தியக்கியத்தின் தேக்கத்திற்கும் கவிஞர்களின் ஏக்கத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. ஒரு படைப்பாளி முதன் முதலில் எழுதத் தொடங்குவது ஒரு கவிதையைத்தான், அல்லது கவிதை போலிருக்கும் ஒன்றைத்தான். இந்த ஆதார வேரில் இப்படியாய் அமிலம் ஊற்றப்படும் போது கலைகளின் அரசியான கவிதை தெருவில் நின்று கண்ணீர் வடிக்கவே செய்வாள் . கதை இலக்கிய வாதிகளின் அரசியலும் , சிற்றிதழ்களின் கவிதை மறுதலிப்பும் , நூல் வணிகர்களின் விற்பனை உத்தியும் இதற்கு வழிகோலி இருக்கிறதா என்று ஆராயுங்கள் கவிஞர் பெருமக்களே!. (தகிதா பதிப்பகம் குறிப்பாக கவிதை நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதற்கு இவைகளே காரணம்) கவிஞர்களே! படைப்பாளர்களே ! உங்கள விமர்சனங்களை முன் வையுங்கள்
விளம்பரமான நூல்களும் விளம்பரமாகாத கலைஞர்களும்
திரு அனந்த பதமநாபன் அவர்ளைப் பற்றி சொல்வதற்கு எனக்கு அவரிடம் பணிசார்ந்த தொடர்பும், அதையும் தாண்டிய அன்பும் உண்டு.எமது தகிதா பதிப்பகம் சமீபத்தில் ஒரே வெளியீட்டில் பதி
மூன்று நூல்களை வெளிக்கொண்டுவந்தது. அந்த நூல்களின் அத்தனை அட்டைகளையும் அழகும் கருத்தும் ததும்பும் வகையில் படிமக் குறியீடுகளோடு வடிவமைத்திருந்தார் திரு ராஜன் அவர்கள்.
ஒரு நூலின் வாசல் எனபது அட்டைதான்.வீட்டில் வாசலில் இருப்பவரின் அழகிய புன்னகை விருந்தினரை எப்படி வரவேற்குமோ அதே போலத்தான் வாசகர்களை அட்டை வரவேற்கிறது எனபது நூறு சதவிகித உண்மை.
வடிவம் சார்ந்தும் வண்ணம் சார்ந்தும் தேர்ந்த ஞானம்,உலக நாடுகளில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பல விருதுகளைப் பெற்ற திரு ராஜன் அவர்கள் எமது நூல்களுக்கு வடிவமைத்தது யாம் பெற்ற பேரு.
உலக நாடுகளால் கெளரவிக்கப்பட்ட திரு அனந்த பத்மநாபன் ஐயா அவர்களை உள்ளூரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ,எமது வெளியீட்டு விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட தமிழ் இலக்கிய அன்பர்களின் முன்னிலையில் "கலைப் பொக்கிஷம்" என்ற விருதை வழங்கி எங்களை நாங்களே கெளரவித்துக்கொண்டதாய் .பெருமைப்பட்டுக்கொண்டோம்.
தொடர்ந்து தகிதா பதிப்பகம் கலைஞர்களை பாராட்டவும் வாழ்த்தவும் கெளரவிக்கவும் செய்யும். அவரின் விரல்களுக்கு உலகக் கலைஞர்களின் அன்பை அள்ளிப் போட்டு காப்பீடு செய்துகொள்கிறோம்.
மூன்று நூல்களை வெளிக்கொண்டுவந்தது. அந்த நூல்களின் அத்தனை அட்டைகளையும் அழகும் கருத்தும் ததும்பும் வகையில் படிமக் குறியீடுகளோடு வடிவமைத்திருந்தார் திரு ராஜன் அவர்கள்.
ஒரு நூலின் வாசல் எனபது அட்டைதான்.வீட்டில் வாசலில் இருப்பவரின் அழகிய புன்னகை விருந்தினரை எப்படி வரவேற்குமோ அதே போலத்தான் வாசகர்களை அட்டை வரவேற்கிறது எனபது நூறு சதவிகித உண்மை.
வடிவம் சார்ந்தும் வண்ணம் சார்ந்தும் தேர்ந்த ஞானம்,உலக நாடுகளில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பல விருதுகளைப் பெற்ற திரு ராஜன் அவர்கள் எமது நூல்களுக்கு வடிவமைத்தது யாம் பெற்ற பேரு.
உலக நாடுகளால் கெளரவிக்கப்பட்ட திரு அனந்த பத்மநாபன் ஐயா அவர்களை உள்ளூரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ,எமது வெளியீட்டு விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட தமிழ் இலக்கிய அன்பர்களின் முன்னிலையில் "கலைப் பொக்கிஷம்" என்ற விருதை வழங்கி எங்களை நாங்களே கெளரவித்துக்கொண்டதாய் .பெருமைப்பட்டுக்கொண்டோம்.
தொடர்ந்து தகிதா பதிப்பகம் கலைஞர்களை பாராட்டவும் வாழ்த்தவும் கெளரவிக்கவும் செய்யும். அவரின் விரல்களுக்கு உலகக் கலைஞர்களின் அன்பை அள்ளிப் போட்டு காப்பீடு செய்துகொள்கிறோம்.
"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா "
மதில் சுவரைத்
தாண்டிப் பறந்த
செய்தித்தாள் பறவை
பூ பூ
என்று கூவிய
பூக்காரியின்
வாசனை வார்த்தை
அமுதம் சுமந்துவரும்
பால்காரனின்
வெள்ளை அழைப்பு
புள்ளிவைக்கும்
அழகிய கோலப்பெண்களின்
விரல்கவிதைகள்
செவிக்குள் நுழைந்து
ஆன்மாவிற்குள் இறங்கும்
சுப்ரபாதம்
பனிப் பவுடரை
பூசிக்கொண்டு
அழகேற்றும் பூமிப்பெண்
புரிந்தும் புரியாத
குருவிகளின்
ரகசிய பரிபாசைகள்
குளிரில் நடுங்கும் பூமிக்கு
வெப்பமுத்தம் வைக்கும்
சூரியன்
காவி உடுத்தி
துறவுக்கு தாயாராகும்
வானம்
குங்குமம் சந்தானம் திருநீற்றின்
அறிவிப்புபலகையாய்
நெற்றி
பூந்தோட்டம் சுமக்கும்
பூவையரின்
மலர்க்கூந்தல்
நுரையீரல் நிரப்பிவைக்கும்
ஊதுபத்தி வாசனை.
பிரார்த்தனை வழியும்
பூஜையறை வாசற்படி
உறக்கம் தெளியாமல்
அழுகையோடு செல்லும்
பள்ளிக்குழந்தைகள்
உணவு ஊட்டிய
எச்சில் கையேடு
டாடா சொல்லும் அம்மாக்கள்
ஆலயம் சென்று திரும்பும்
செருப்பில்லா
பாதங்கள்
கேட்காமல் வரங்களாய்
நலம்விசாரிப்புக்கள்
உள்ளங்கையையும் உதட்டையும்
இணைக்கும்
தெய்வப் பிரசாதங்கள்
தாண்டிப் பறந்த
செய்தித்தாள் பறவை
பூ பூ
என்று கூவிய
பூக்காரியின்
வாசனை வார்த்தை
அமுதம் சுமந்துவரும்
பால்காரனின்
வெள்ளை அழைப்பு
புள்ளிவைக்கும்
அழகிய கோலப்பெண்களின்
விரல்கவிதைகள்
செவிக்குள் நுழைந்து
ஆன்மாவிற்குள் இறங்கும்
சுப்ரபாதம்
பனிப் பவுடரை
பூசிக்கொண்டு
அழகேற்றும் பூமிப்பெண்
புரிந்தும் புரியாத
குருவிகளின்
ரகசிய பரிபாசைகள்
குளிரில் நடுங்கும் பூமிக்கு
வெப்பமுத்தம் வைக்கும்
சூரியன்
காவி உடுத்தி
துறவுக்கு தாயாராகும்
வானம்
குங்குமம் சந்தானம் திருநீற்றின்
அறிவிப்புபலகையாய்
நெற்றி
பூந்தோட்டம் சுமக்கும்
பூவையரின்
மலர்க்கூந்தல்
நுரையீரல் நிரப்பிவைக்கும்
ஊதுபத்தி வாசனை.
பிரார்த்தனை வழியும்
பூஜையறை வாசற்படி
உறக்கம் தெளியாமல்
அழுகையோடு செல்லும்
பள்ளிக்குழந்தைகள்
உணவு ஊட்டிய
எச்சில் கையேடு
டாடா சொல்லும் அம்மாக்கள்
ஆலயம் சென்று திரும்பும்
செருப்பில்லா
பாதங்கள்
கேட்காமல் வரங்களாய்
நலம்விசாரிப்புக்கள்
உள்ளங்கையையும் உதட்டையும்
இணைக்கும்
தெய்வப் பிரசாதங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)