வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதா வெளியீடுகளிலிருந்து சில கவிதைகள்

1
காலங்கள் கதைகட்காக
காத்திருப்பதில்லை
சில வேளைகளில்
மொழிந்த மொழி
மெளனமாய்
புதைந்துவிடுகின்றன.
-கவிதாயினி ஈழவாணி ( தலைப்பு இழந்தவை )


2.
என்னைக்
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும் போது
சிக்கியது
யார்மீதோ வீசப்பட்ட
என் கைரேகை படிந்த கல்.
-கவிஞர் யாழி ( என் கைரேகை படிந்த கல்)
3.
பலரின் காதல்
பேசியே தீர்ந்து போகும்
நம் காதலோ
பேசாமல் சேமிக்கப்படுகிறது
நம் இதயங்களில்
-கவிதாயினி தனலட்சுமி (நிலா கால நினைவுகள்)

4.
வெகு நாட்களுக்கு முன்
நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை.
என் யாழின்
நரம்புகளில் இருந்து
பரவுகிறது
மழையில் இசை.
-சரவணன்(முகில் பூக்கள்)

5.
எல்லா வழிகளின் முடிவிலும்
மூடியிருக்கும்
வெறுமையான சூனியக்கதவுகளால்
எஞ்சுகின்றது விரக்தி.
-ஆதித்தன்(பொய்யும் பழங்கதையும் வெருங்கனவும்)


6.
குளித்த ஈரக்கூந்தலோடு
நீ வெளியில் வர
காத்திருந்த காற்று
ஹைக்கூ எழுதிவிட்டு போகிறது!
ஆடும் கேசத்தில்
அமர்ந்துகொண்டே ரோஜாப்பூ
அதைப் படிக்கிறது...சிரிக்கிறது...
-மாரியப்பன்(என் பேனாவின் அனாக்கள்)


7.
போராட்டம்
வறுமைக்கு எதிராக
அநீதிக்கு எதிராக
அறியாமைக்கு எதிராக
என்றால்
நிச்சயம் ஆதரிப்பேன்
என் புதல்வர்களை
போர்க்கொடி ஏந்த.
-கவிஞர் பக்தவத்சலம் (போதிமரம் )


8.
யாரோ வீசிய கல்லில்
எழுந்த அலைகளால்
மெல்ல அசைகிறது
மீனுக்காக தவமிருக்கும்
கொக்கின் பிம்பம்
-நானற்காடன்(சாக்பீஸ் சாம்பலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக