வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரனின் பேசுகிறார்: ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கின்றன

இலக்கியம் ஆனாலும் சரி திரைப்படம் ஆனாலும் சரி, அதை சரியான முறையில் நேரடியாக புரிந்துகொள்ளும் பக்குவத்தை நாம் உருவாக்க வேண்டும். இப்போது கோவையில் இருக்கிறீர்கள் என்றால் இங்கு ஒரு பிலிம் கிளப் ஆரம்பிக்கலாம்.அப்படி ஒரு பிலிம் கிளப் ஆரம்பிச்சி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் போட்டுக்காட்டி நல்ல சினிமா எது என்ற புரிதலை உருவாக்கவேண்டும். இது போன்ற அமைப்பை ஒவ்வோர் ஊர்களிலும் தொடங்கி மாற்றுத் திரைப்படத்திற்கு உரிய ரசனையை உருவாக்க வேண்டும். இப்போது அதற்கு நிறைய தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன.எங்கோ பிறந்த சேரனும் எங்கோ பிறந்த மணிவண்ணனும் இப்போது நண்பர்கள் இந்த முகப்புத்தகத்தில் மூலம். இல்லாட்டி இரு வந்திருக்காது. ஆகவே விஞ்ஞானத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் இருக்கு.

.இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு ,இது மாதிரி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகிட்டோம் என்கிறதே விட..................... இந்த மாதிரியான நோக்கத்திற்காக இந்த பதிப்பகத்தை இவர் தொடங்கி இருக்கிறார் என்கிறப்போ அந்த பதிப்பகத்தை நானும் நீங்களும் வாழ்த்தியே ஆகவேண்டும். மேலும் மேலும் இப்பதிப்பகம் வளர்வதற்கு இந்த எழுத்தாளர்கள்
அடுத்த எழுத்தாளர்களும் கை கொடுக்கவேண்டும். அடுத்த பதிப்பகத்திற்கு போனா நமக்கு காசு அதிகமாக வரும் அப்படிங்கறதே விட்டுட்டு எந்த பதிப்பகம் எழுத்துத் துறையை வளர்க்க ஆரம்பிக்கப்பட்டது? எந்த பதிப்பகம் எழுத்தாளர்களை அடையாளப்படுத்த உருவாக்க ஆரம்பிக்கப்பட்டது? என்பதே நெனச்சி அந்த பதிப்பகங்களுக்குத்தான் நாம் ஆதரவு கொடுக்கணும். ஏன்னா அவங்களுக்குத்தான் அதிலே முக்கியமான பங்கு இருக்கு.

எங்களைப் பொருத்தவரைக்கும் பதிப்பகம் என்பது ,அதாவது என்னோட மொழியிலே சொல்லணும்னா தயாரிப்பாளர் என்றுதான் சொல்லுவேன்.ஆயிரம் இயக்குஞர்களும் உதவி இயக்குஞர்களும் கதைகளோடு அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எங்களுக்கு யாரோ ஒருவர் ஒகே பண்ணினாதா கதை திரைக்குவரும். அதே போலத்தால் பத்துபேர் கதை கவிதைகளை எழுதி வைத்திருந்தாலும் ,உங்கள் கதை கவிதைகளை புரிந்துகொண்டு உங்கள் ஆர்வத்தை புரிந்துகொண்டு உங்களை மேலே கொண்டுவருவதற்கு அடித்தளம் அமைக்கிற பதிப்பகத்தார் வேண்டும். பதிப்பகத்தார்தான் உங்களுக்கான தயாரிப்பாளர்கள் .நீங்கள் அதன்மூலமாகத்தன் உங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டுவரமுடியும். நாங்கள் தயாரிப்பாளர்கள் மூலமாகத்தான் எங்கள் படங்களை சந்தைக்கு கொண்டுபோறோம். என்னதா சேரன் வீட்லே உக்காந்து தவமாய் தவமிருந்து மாதிரி பத்து கதையை எழுதினாலும் ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தால்தான் அந்த படத்தை சந்தைக்கு கொண்டுவர முடியும். அதே போலத்தான் உங்களின் படைப்புகளும், நீங்கள் ஆயிரம் பக்கங்கள் பத்தாயிரம் பக்கங்கள் என்று எவ்வளவு எழுதி வைத்திருந்தாலும் அதெ போடறதுக்கு ஒரு பதிப்பகத்தார் வேண்டும்.கொஞ்சம் பெரிய ஆள் ஆகிக்கிட்டீங்கன்ன உங்களைத் தேடி அவங்க வருவாங்க. முன்னாடியே சொன்னதுபோல உங்களுக்கு மாத சம்பளம் நிர்ணயம் பண்ணிடுவாங்க .

யாரும் இங்கே வியாபார சூழலில் ,மிகப்பெரிய அந்தஸ்த்து உள்ள; சொன்ன உடன் செல்வாக்கு இருக்கிற எழுத்தாளர்களை வைத்து இந்த பன்னிரண்டு புத்தகங்களை வெளியிடவில்லை. மேலும் இந்த புத்தகங்கள் வியாபார நோக்கில் வெளியிடவில்லை. அந்த வகையில் இந்த பதிப்பகத்தின் சேவை மிகவும் முக்கியமானது. மிக அரியது. எல்லோரின் பாராட்டுக்கு உரியது.

தமிழாசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கிய ஒவ்வொருவரும் எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க என்று புரிந்துகொள்ளமுடிகிறது. . எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள் என்று உணர்ந்துகொள்ளவும் முடிகிறது.தமிழ் படிக்கும் மாணவர்களிடம் பிற மாணவர்கள் பேச மாட்டார்கள். தமிழ் பாடம் படித்தாலே இங்கு கெளரவ குறைச்சல். இங்கு ஆங்கிலத்தில் பேசணும், ஆங்கிலத்தில் எழுதணும் ..அப்படி செய்தால்தான் மரியாதை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இது வருத்தத்திற்கு உரியது. அதற்காய் வேதனைப் படுகிறேன்.தமிழுக்கு தமிழ் நாடலே மரியாதை இல்லை. தமிழ் நம்முடைய மொழி. நமது உணர்விலும் குருதியிலும் உயிரிலும் கலந்த மொழி.

இங்கு எல்லோருமே தாகூர் ஆகமுடியாது ; எல்லோருமே அப்துல்கலாம் ஆகமுடியாது .ஆனால் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒவ்வொரு திறமை கட்டாயம் ஒளிந்திருக்கிறது. அந்த திறமை என்னான்னு கண்டு பிடிச்சி அதுலே பெரிய ஆளானால் போதும். பயணம் போகிற போது சன்னலோரத்தில் இருந்து நகரும் பேருந்திலிருந்து அந்த பூமியை உற்று கவனியுங்கள். அது உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்லும்.இந்த உலகத்தில் பார்க்கிற ஒவ்வொன்றும் பயன்படுகிறது.பயனற்றவை என்று எவற்றையும் சொல்லமுடியாது.அதுபோல ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ,வேறு வேறு திறமை இருக்கிறது. அது என்னான்னு கண்டுபுடிச்சி அதில் நாம் பெரிய ஆளாக வளரவேண்டும்.

மேலும் மன நிறைவு என்பது வேண்டும். திருத்தியடைகிற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.நம்ம கிட்டே என்ன இருக்கோ அது போதும். ஏன்னா மாயக்கண்ணாடியோட இறுதியிலே சொல்லியிருக்கேன். நம்முடைய சூழல் அது. நம்முடைய வாழ்க்கை முறை அது. நம்ம அப்பா அம்மா செத்து வச்சது, நமக்கான நண்பர்கள், நம்மோட பொருளாதார பின்னணி, நம்மோட வாழ்க்கை பின்னணி, நமக்கான தேடல் முயற்சி உழைப்பு ...இவ்வளவு சம்பந்தப்பட்டது ஒவ்வொரு மனிதனோட வெற்றி.வெறுமனே லக்கு லக்குன்னு மருதமலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வந்தா நடக்காது. முருகன் கோயிலுக்குத்தான் உண்டியல்லே காசு மிஞ்சும். நமக்கு ஒண்ணுமே கிடைக்காது. நம்மிடம் இருக்கும் ஆற்றல் ஒன்றை கண்டு பிடித்து அதை வெளியில் கொண்டு வந்தால் நீங்கள் ஜெயித்துவிட முடியும்.

என்னையே வந்து எங்கம்மா படிக்கவச்சாங்க அம்மா . நா பெரிய படிப்பாளி ஆகணும்,நா மாசம் இருபத்தைத்து ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கணும், குடும்பத்திற்கு உதவணும்,தங்கச்சிகளே
காப்பாத்தனுன்னு நெனச்சாங்க . எங்க குடும்பத்தோட அன்றைய சூழல் அது. நான் படிச்சி நல்ல சம்பளம் வாங்கி இருந்தால் எங்க அம்மாவே காப்பாத்தி இருக்க முடியும், என் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க முடியும். என்னுடைய ஆசை எல்லாம் சினிமா சினிமா சினிமா.சிவாஜியே பாத்து எம் ஜி ஆரைப் பாத்து அதுமாதிரி இதுமாதிரி நடிகனாயிரனும்னுங்கறது என் கனவு .ஆனா அவங்களாலே புரிஞ்சிக்க முடியலே. என்னை அனுப்புவதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

என்னை ஒரு அரசு ஊழியராக படிக்க போட்டிருந்தாங்கன்ன நான் நல்ல சிந்தனைகளோடு நல்ல மனிதனாக வாழ்ந்திருக்க முடியாது, எது கடமை ஆற்றி இருப்பேன். அவ்வளவுதான்.ஆனா நான் அதை மீறி, நான் அது இல்லேன்னு, பத்து வருஷம் போராடுனதுக்கு அப்புறம்தான் பன்னிரண்டு வருஷம் உழைப்புக்கு அப்புறம்தான் , முழுமையான உழைப்புக்கு அப்புறம்தான், நிறைய சந்தோசங்களை இழந்ததற்கு அப்புறம்தான் இது எனக்கு கிடைச்சிருக்கு.ஈசியா கிடைக்கலே.

அதுபோல எல்லா விசயத்திலும் அப்படி வர தயாராக இருக்கணும். ஆனா இன்னைக்கு உள்ளது அவசரமான உலகம்.அவசரமான ஒரு போக்கு இருக்கு. இன்ஸ்டன்ட் மாதிரி எல்லோருமே நம்ம வாழ்க்கையை மாத்திகிட்டோ .எதிலயுமே ஒரு பொறுமை இல்லை.கவிராயர் சொல்ல்ம்போது "நான் கவிதை படிக்கும் போது மனைவி இட்லி வைப்பாள் .நான் புத்தகத்தை சாப்பிட்டுக்கொண்டு இட்லி தொட்டுக்கொல்வேன்"என்றார். நான் சொல்றே, அவர் இருபத்தைந்து வருசமா மனைவி என்ற கவிதையைப் படிக்க மறந்துவிட்டார். இருபத்தைந்து வருசமாக மனைவி எழுதிய இட்லி என்ற கவிதையை ரசிக்க மறந்துவிட்டார். ஏனா,நீங்கள் யாரோ எழுதிய கவிதையை படித்தீர்கள் உங்களுக்காக எழுதப்பட்ட மனைவி என்ற கவிதையை படிக்க மறந்துவிட்டீர்கள்.

இந்தமாதிரி ஒரு விழாவில் கலந்து கொண்டதற்கு.மிகவும் சந்தோசம். நீங்க என்னுடைய படங்களை பார்த்து பாராட்டி "கதைப் பொக்கிஷம்" என்ற தலைப்பை கொடுத்தது எனக்கு கூச்சமாகத்தான் இருந்தது .என்ன பண்ணினோம் ஒன்னும் பண்ணலையே என்கிற நினைப்புதான் வந்தது. புத்திலக்கிய படைப்பாளிகள் கெளரவிக்கப்பட்ட இந்த மேடையில் சேரனும் கேளரவிக்கப்பட்டதற்க்கு இந்த பதிப்பகத்திற்கும் படைப்பாளிகளுக்கும் இந்த கொங்குத்தமிழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மிகுந்த சந்தோசம் மிகுந்த மன நிறைவு,மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு இப்படியொரு சந்தோசத்தை நான் உங்களோடு பகிர்ந்துக்க வந்த நேரத்துலேநீங்க எனக்கான சந்தோசத்தே கொடுத்ததை நான் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். எப்பொழுதுமே! ஏன்னா அவரு சொன்னது மாதிரி வந்து அங்கீகாரத்துக்குத்தான் ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான்.அந்த அங்கீகாரம் செத்ததற்கு அப்புறம் பட்டயமா வர்றதுலே பிரயோசனமே இல்லை. இருக்கும் போது என் தாய் தந்தைக்கு சோறு போடாமே.இறந்ததுக்கப்புறம் போடோவுக்கு மாலையே போட்டு காக்காவுக்கு சோறு வைக்கரதுலே என்ன பிரயோஜனம் .நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியதைப் போல நானும் நிறைய பேர்களுக்கு செய்யவேண்டும் என்று இருக்கிறேன். இப்போதும் கூட நல்ல சினிமாக்கள் வந்துச்சுன்ன அந்த இயக்குஞர்களைப் கூப்டு ,அவங்க வயதில் சின்னவங்களா இருந்தாலும் நான் அவர்களைப் பாராட்டுவேன்,வாழ்த்துவேன்...ஒரு சாதார திண்ணைப் பேச்சுக்காரனா அவர்களுடன் அமர்ந்து அவர்களின் படைப்புக் குறித்து சிலாகித்து பேசுவேன். அப்படி அவர்களை நான் தட்டிக்கொடுக்க்னும்னு ஆசைப்பட்டுகிறேன்.

அதே போலத்தான் நீங்களும் என்னை தட்டிக்கொடுத்ததா நினைத்துக்கொண்டு இந்த தட்டிக்கொடுத்த விசயத்தே துளி அளவு கூட என் தலையில் தலைக்கனமா ஏத்திக்காமே இன்னும் இன்னும் இன்னும் நிறைய நிறைய புதிய புதிய முயற்சிகளோடு ,உழைக்கனும்கர எண்ணத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

(சேரனின் உரை முடிவுக்கு வந்தது... நமது செயல்பாடுகள் இனி தொடரட்டும் தகிதா விழா நிகவுகள் குறித்த பதிவை முகநூலில் வாசித்து வாழ்த்திய நிறை குறைகள் சொன்ன , சிறப்பாக விவாதித்த, புதிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட, பாராட்டிய, முகநூல் தோழமைகள் அனைவருக்கும் மணிவண்ணனின் முத்தமிழ் முத்தங்கள் "கொஞ்சம் கன்னத்தை காட்டுங்கள் ".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக