வெள்ளி, 17 டிசம்பர், 2010

கவிதைநூல்களை புறக்கணிப்பது ஏன்?

பதிப்பகங்களும் ,அரசு நூலகங்களும் கவிதை நூல்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இது புத்தியக்கியத்தின் தேக்கத்திற்கும் கவிஞர்களின் ஏக்கத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. ஒரு படைப்பாளி முதன் முதலில் எழுதத் தொடங்குவது ஒரு கவிதையைத்தான், அல்லது கவிதை போலிருக்கும் ஒன்றைத்தான். இந்த ஆதார வேரில் இப்படியாய் அமிலம் ஊற்றப்படும் போது கலைகளின் அரசியான கவிதை தெருவில் நின்று கண்ணீர் வடிக்கவே செய்வாள் . கதை இலக்கிய வாதிகளின் அரசியலும் , சிற்றிதழ்களின் கவிதை மறுதலிப்பும் , நூல் வணிகர்களின் விற்பனை உத்தியும் இதற்கு வழிகோலி இருக்கிறதா என்று ஆராயுங்கள் கவிஞர் பெருமக்களே!. (தகிதா பதிப்பகம் குறிப்பாக கவிதை நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதற்கு இவைகளே காரணம்) கவிஞர்களே! படைப்பாளர்களே ! உங்கள விமர்சனங்களை முன் வையுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக