வெள்ளி, 17 டிசம்பர், 2010

விளம்பரமான நூல்களும் விளம்பரமாகாத கலைஞர்களும்

திரு அனந்த பதமநாபன் அவர்ளைப் பற்றி சொல்வதற்கு எனக்கு அவரிடம் பணிசார்ந்த தொடர்பும், அதையும் தாண்டிய அன்பும் உண்டு.எமது தகிதா பதிப்பகம் சமீபத்தில் ஒரே வெளியீட்டில் பதி
மூன்று நூல்களை வெளிக்கொண்டுவந்தது. அந்த நூல்களின் அத்தனை அட்டைகளையும் அழகும் கருத்தும் ததும்பும் வகையில் படிமக் குறியீடுகளோடு வடிவமைத்திருந்தார் திரு ராஜன் அவர்கள்.

ஒரு நூலின் வாசல் எனபது அட்டைதான்.வீட்டில் வாசலில் இருப்பவரின் அழகிய புன்னகை விருந்தினரை எப்படி வரவேற்குமோ அதே போலத்தான் வாசகர்களை அட்டை வரவேற்கிறது எனபது நூறு சதவிகித உண்மை.

வடிவம் சார்ந்தும் வண்ணம் சார்ந்தும் தேர்ந்த ஞானம்,உலக நாடுகளில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பல விருதுகளைப் பெற்ற திரு ராஜன் அவர்கள் எமது நூல்களுக்கு வடிவமைத்தது யாம் பெற்ற பேரு.

உலக நாடுகளால் கெளரவிக்கப்பட்ட திரு அனந்த பத்மநாபன் ஐயா அவர்களை உள்ளூரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ,எமது வெளியீட்டு விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட தமிழ் இலக்கிய அன்பர்களின் முன்னிலையில் "கலைப் பொக்கிஷம்" என்ற விருதை வழங்கி எங்களை நாங்களே கெளரவித்துக்கொண்டதாய் .பெருமைப்பட்டுக்கொண்டோம்.

தொடர்ந்து தகிதா பதிப்பகம் கலைஞர்களை பாராட்டவும் வாழ்த்தவும் கெளரவிக்கவும் செய்யும். அவரின் விரல்களுக்கு உலகக் கலைஞர்களின் அன்பை அள்ளிப் போட்டு காப்பீடு செய்துகொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக