வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதா பதிப்பகத்தில் வெளியான "சாக்பீஸ் சாம்பலில்"(நானற்காடன்) என்ற தொகுப்பிலிருந்து

*
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை

*
யாவும் கழுவப்பட்டிருக்கின்றன
மழை பொழிந்த
கவிதைகளால்
அழுக்காகிப் போன
என்னைத் தவிர.

*
உள்ளே
நீ தான் இருக்கிறாய்
கொஞ்சம்
பிளந்து பார்
எனது வேர்ப்பலாவை


*
தமிழர் திருநாளில்
கூச்சமின்றி சொல்கிறாய்
ஹேப்பி பொங்கல்
அட்லீஸ்ட் இதையாவது
இங்கிலீஸ்லே சொல்றத
அவாய்டு பண்ணியிருக்கலாம்
நீ

*
பேனாவின் முனை வழியாய்
கீழிறங்கி
எனது கவிதையை
முடித்து வைக்காமல்
விளையாடுகிறது
ஒரு கடைசிச் சொல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக