வெள்ளி, 17 டிசம்பர், 2010

கலைப் பொக்கிஷம் (திரு அனந்தபத்மநாபன்)

இவர் குழந்தையாக இருக்கும் போது இவரின் தாய் விளையாடுவதற்கு பொம்மைக்கு பதிலாக தூரிகையைக் கொடுத்திருக்கக் கூடும். இவர் வயதானாலும் ஊன்றுகோலுக்கு பதிலாக தூரிகை பிடித்துக்கொண்டு நடக்கலாம். அப்படியாய் இவரது வலதுகையில் ஐந்து விரல்களோடு ஆறாவது விரலாய் வளர்ந்திருக்கிறது தூரிகை. பார்ப்பவைகளை தன் கண்களில் வண்ணநகல் எடுக்கும் ஆற்றல் பெற்றவர் இவர் . இவரது நாளங்களில் ஒற்றை சிவப்பு ரத்தத்திற்கு பதிலாக வானவில்லாய் பலவண்ண குருதி பாய்கிறது போலும். ஆயிரம் வார்த்தைகளால் ஆன ஓர் அழகு கவிதையை இவரின் ஒற்றை வரைதல் சொல்லும். இவர் ஒருநாள் கூட கறுப்புவெள்ளையில் கனவு கண்டிருக்க முடியாது. இவர் கருப்பு வண்ணத்தில் வரையும்போது ஓர் அழகிய பெண்ணின் புருவம் தொட்டு வரைகிறாரோ? இவர் சிவப்பு வண்ணத்தில் வரையும் போது ஓர் அழகு பெண்ணின் உதடு தொட்டு வரைகிறாரோ? இவர் மஞ்சள் வண்ணத்தில் வரையும் போது ஓர் அழகு பெண்ணின் கன்னம் தொட்டு வரைகிறாரோ? இப்படி எல்லாம் நினைக்க தோன்றும் இவரது வண்ண வரைதல்களை விழிகளால் ஆராதனை செய்யும்போது. நீருக்கு நிறமில்லை எனபது உண்மைதான் இவரது வண்ணப்படங்களைப் பார்க்கும் பொழுது இவர் குடிக்கும் நீருக்கு நிறம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. பொங்கலுக்கு பொங்கல் எல்லோரும் வீட்டிற்கு வெள்ளை அடிப்பார்கள், இவரோ வண்ணம் அடிப்பார்.. அதற்காய் வண்ணப்படங்களை சுவரில் அடிப்பார்.இவர் தன் தூரிகையை தொட்டு வைக்கும் போது கிழக்கில் சூரியன்.தன் தூரிகையை கழுவி வைக்கும்போது மேற்கில் நிலா.இவரது தூரிகை மிருதுவானதுதான்.ஆனால் சிலரேங்களில் வருடும் சில நேரங்களில் வதைக்கும். புரட்சிகள் எழுத்துக்களால் உருவானைவை அல்ல ஓவியங்களாலும் ...(நாளை தொடர்கிறேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக