நேருக்கு நேராய்
விழியோடு விழிபொருத்தும்
வல்லமை வைக்காததால்தான்
ஓரவிழியில் மர்மமாய்
பார்வைசரங்களைத் தொடுத்து
காதல் கலவரங்கள்
விளைக்கிறாயோ?
கொரில்லாத் தாக்குதல்
நடத்தும்
உன் கண்களால்
நான் காயப்பட்டிருக்கிறேன்.
-------------------------------------------
குறள்:1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
வியாழன், 29 ஏப்ரல், 2010
காதல் குறட்பாக்கள்:14
உன்னை
என் விழிபார்த்தபோது
நீ நிலம்பார்த்தாய்.
என்
விழிகளை விலக்கியபோதோ
நீ
விழிகளால் சிரிக்கிறாய்.
இதழ்கள்தான் சிரிக்கும்
என்று நினைத்திருந்தேன்
இமைகளும் சிரிக்கின்றனவே!
------------------------------------------------
குறள்:1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
என் விழிபார்த்தபோது
நீ நிலம்பார்த்தாய்.
என்
விழிகளை விலக்கியபோதோ
நீ
விழிகளால் சிரிக்கிறாய்.
இதழ்கள்தான் சிரிக்கும்
என்று நினைத்திருந்தேன்
இமைகளும் சிரிக்கின்றனவே!
------------------------------------------------
குறள்:1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
காதல் குறட்பாக்கள்:13
என்
காதல் முளைவிட்டது
நீ
ஓரவிழியில்
பார்வை வீசியபோது.
என்
காதல் பயிரானது
நீ
மனமென்னும்
மடை திறந்தபோது.
------------------------------------------
குறள்:1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
காதல் முளைவிட்டது
நீ
ஓரவிழியில்
பார்வை வீசியபோது.
என்
காதல் பயிரானது
நீ
மனமென்னும்
மடை திறந்தபோது.
------------------------------------------
குறள்:1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
புதன், 28 ஏப்ரல், 2010
காதல் குறட்பாக்கள்:12
இடதுபுறம் தலைகோணி
இருபுறத்து இமைகவிழ்த்து
ஓர விழியில்
பிறைநிலா பூக்கக்
கள்ளத்தனமாய்
நீ பார்க்கும்பார்வை
காதல் பார்வை.
இமைதிறந்து விழிவிரித்து
பெளர்ணமியாய்
நீ பார்க்கும் பார்வை
காமப்பார்வை.
விரிதலும் சுருங்குதலும்
மலர்களுக்கு மட்டுமென
நினைத்திருந்தேன்
உன்
விழிகளுக்கும்
அவை பொருந்துகிறதே!
----------------------------------------
குறள்:1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
இருபுறத்து இமைகவிழ்த்து
ஓர விழியில்
பிறைநிலா பூக்கக்
கள்ளத்தனமாய்
நீ பார்க்கும்பார்வை
காதல் பார்வை.
இமைதிறந்து விழிவிரித்து
பெளர்ணமியாய்
நீ பார்க்கும் பார்வை
காமப்பார்வை.
விரிதலும் சுருங்குதலும்
மலர்களுக்கு மட்டுமென
நினைத்திருந்தேன்
உன்
விழிகளுக்கும்
அவை பொருந்துகிறதே!
----------------------------------------
குறள்:1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
காதல் குறட்பாக்கள்:11
உன்
முதல் விழிவீச்சு
என்
மனத்தைக் காயப்படுத்தியது.
அடுத்த
மருள் பார்வையோ
அந்தக் காயத்திற்கு
மருத்துவம் பார்த்தது.
------------------------------------------
குறள்:1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து
முதல் விழிவீச்சு
என்
மனத்தைக் காயப்படுத்தியது.
அடுத்த
மருள் பார்வையோ
அந்தக் காயத்திற்கு
மருத்துவம் பார்த்தது.
------------------------------------------
குறள்:1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து
செவ்வாய், 27 ஏப்ரல், 2010
வாழ்தல்
இன்றின் முன்னம்கிழமை
மாலைமறித்து ஜனித்தஇரவு
நீளவளர்ந்த பொழுதொன்றில்
இமைத்திறந்திருந்த நினைவுகளை
விழிக்கதவடைத்து தாலாட்டினேன்.
எனதுஊரில் எனதுபிணம்
நனைந்து கொண்டிருந்தது
இரங்கல் கண்ணீரில்.
என்
பூதவுடல் மீது
சடலங்களாய் பூவுடல்கள்.
பிழைப்பட்டது
பிறவிக்கவிதை.
உயிர்உதிர்த்து உறவிழந்து
நிலம் பிரிந்தேன்.
இப்படியாய்த் துயரத்தீயில்
எரிந்துகொண்டிருந்தது
எனதுபிணம்.
இருள்பரவிய நடுநிசியில்
பயம் வியாபித்த
மனம்
மெதுவாய் உணரத்தொடங்கியது
சாகவில்லை என்பதை.
அந்த
இரத்தலின் வலியில்
உணர்ந்தேன்
வாழ்தலின் அருமையை.
"வாழ்தலின் அருமை"
மாலைமறித்து ஜனித்தஇரவு
நீளவளர்ந்த பொழுதொன்றில்
இமைத்திறந்திருந்த நினைவுகளை
விழிக்கதவடைத்து தாலாட்டினேன்.
எனதுஊரில் எனதுபிணம்
நனைந்து கொண்டிருந்தது
இரங்கல் கண்ணீரில்.
என்
பூதவுடல் மீது
சடலங்களாய் பூவுடல்கள்.
பிழைப்பட்டது
பிறவிக்கவிதை.
உயிர்உதிர்த்து உறவிழந்து
நிலம் பிரிந்தேன்.
இப்படியாய்த் துயரத்தீயில்
எரிந்துகொண்டிருந்தது
எனதுபிணம்.
இருள்பரவிய நடுநிசியில்
பயம் வியாபித்த
மனம்
மெதுவாய் உணரத்தொடங்கியது
சாகவில்லை என்பதை.
அந்த
இரத்தலின் வலியில்
உணர்ந்தேன்
வாழ்தலின் அருமையை.
"வாழ்தலின் அருமை"
திங்கள், 26 ஏப்ரல், 2010
காதல் குறட்பாக்கள்:8
எதிரியின்
படைகளை பொடியாக்கிய
என்
வெற்றியும் வீரமும்
ஒளிவீசும்
உன்
நெற்றியின் முன்னால்
தோற்றுப்போனது.
நிலா
தனக்கான ஒளியை
எதனிடம் கடன்வாங்குகிறது
சூரியநிடமா?
இல்லை
உன் சுந்தரவதனத்திடமா?
---------------------------------------
குறள்:1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
படைகளை பொடியாக்கிய
என்
வெற்றியும் வீரமும்
ஒளிவீசும்
உன்
நெற்றியின் முன்னால்
தோற்றுப்போனது.
நிலா
தனக்கான ஒளியை
எதனிடம் கடன்வாங்குகிறது
சூரியநிடமா?
இல்லை
உன் சுந்தரவதனத்திடமா?
---------------------------------------
குறள்:1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)