வியாழன், 29 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:15

நேருக்கு நேராய்
விழியோடு விழிபொருத்தும்
வல்லமை வைக்காததால்தான்
ஓரவிழியில் மர்மமாய்
பார்வைசரங்களைத் தொடுத்து
காதல் கலவரங்கள்
விளைக்கிறாயோ?

கொரில்லாத் தாக்குதல்
நடத்தும்
உன் கண்களால்
நான் காயப்பட்டிருக்கிறேன்.
-------------------------------------------
குறள்:1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

1 கருத்து: