வியாழன், 29 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:13

என்
காதல் முளைவிட்டது
நீ
ஓரவிழியில்
பார்வை வீசியபோது.
என்
காதல் பயிரானது
நீ
மனமென்னும்
மடை திறந்தபோது.
------------------------------------------
குறள்:1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

1 கருத்து: