புதன், 28 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:11

உன்
முதல் விழிவீச்சு
என்
மனத்தைக் காயப்படுத்தியது.
அடுத்த
மருள் பார்வையோ
அந்தக் காயத்திற்கு
மருத்துவம் பார்த்தது.
------------------------------------------
குறள்:1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து

1 கருத்து: