இடதுபுறம் தலைகோணி
இருபுறத்து இமைகவிழ்த்து
ஓர விழியில்
பிறைநிலா பூக்கக்
கள்ளத்தனமாய்
நீ பார்க்கும்பார்வை
காதல் பார்வை.
இமைதிறந்து விழிவிரித்து
பெளர்ணமியாய்
நீ பார்க்கும் பார்வை
காமப்பார்வை.
விரிதலும் சுருங்குதலும்
மலர்களுக்கு மட்டுமென
நினைத்திருந்தேன்
உன்
விழிகளுக்கும்
அவை பொருந்துகிறதே!
----------------------------------------
குறள்:1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
உளமொழியும் உடல் மொழியும் தெரிந்த வள்ளுவன்
பதிலளிநீக்கு