வியாழன், 29 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:14

உன்னை
என் விழிபார்த்தபோது
நீ நிலம்பார்த்தாய்.
என்
விழிகளை விலக்கியபோதோ
நீ
விழிகளால் சிரிக்கிறாய்.

இதழ்கள்தான் சிரிக்கும்
என்று நினைத்திருந்தேன்
இமைகளும் சிரிக்கின்றனவே!
------------------------------------------------
குறள்:1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

1 கருத்து: