வியாழன், 31 மார்ச், 2011

அம்மா+அப்பா=தெய்வம்

என்னைத்

தெய்வம் தந்தது

என்னைத்

தெய்வம் வளர்த்தது

என்னைத்

தெய்வம் ஆளாக்கியது.



எனது

பிரார்த்தனைகளைத்

தெய்வத்திடம் வைத்தேன்

எனது

வரங்களைத்

தெய்வத்திடம் கேட்டேன்



தெய்வம்

எனக்குவரம் தந்தது

தெய்வம்

எனக்கு எல்லாம் தந்தது

எனது

வணக்கங்களைத்

தெய்வத்திற்குக் கொடுத்தேன்



தேக்கி வைத்த

அர்ச்சனைகளைத்

தெய்வத்தின் காலடியில்

சமர்ப்பித்தேன்.......



இறுதியில் ஒருநாள்

என்னிடம்

திட்டு வாங்கிக்கொண்டு

எனக்கு

மன்னிப்பைத் தந்தது

தெய்வம்.



அதன் பின்னும்

தெய்வம்

வரம் கொடுக்கும்

நான்

வணக்கம் சொல்வேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக