வெள்ளி, 11 மார்ச், 2011

ரோபோக்கள் வைத்த ஒப்பாரி

எரிமலைகள்

எரிந்துகொண்டிருக்கும்

இருபத்தினாங்குமணிநேர

மின்மயானம்தான்

ஜப்பான்...



அந்த

பூமியின் வெப்பத்தை

கடலின் முத்தங்கள்

ஈரப்படுத்தி இன்று ஆறவைத்தனவோ ?



எப்போதும்

அஸ்தியைக் கரைக்க

கடலைத் தேடி போவார்கள்

இன்று கடலே

அவர்களைத் தேடி வந்திருக்கிறது.



உயர்ந்த அலைகள்

நிமிர்ந்து நிமிர்ந்து

அறைகின்றன-அந்த

குள்ள மனிதர்களை...



'பட்ட காலிலே படும்

கெட்ட குடியே கெடும்'

என்பதற்கு

உதாரணமான இவர்கள்

இன்று ரணமாகிப் போனார்கள்...



பூமியின் தாலாட்டில்

நான்கு லட்ச குடும்பங்கள்

பகலில் கண்ணுறங்கிப் போயின ...



இறந்த மனிதர்களை

ஆற்றில் கரைப்பது வழக்கம்

இங்கே

இறவாத ஒரு தேசமே

கடலில் கரைந்து போனது....



தரையில் படகுகளும்

கடலில் மகிழுந்துகளும்

'பயணங்கள் தொடர்வதில்லை'



நேற்று

இவர்களுக்கு இறையாய் மீன்கள்

இன்று

மீன்களுக்கு இறையாய் இவர்கள்..



நீண்ட நாட்களாகவே

பூமி மாத்திரையை

விழுங்க

பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது

கடல்...



நேற்று

நதியோடு விளையாடி வந்த

மானுடம் - இன்று

விதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது



எந்தவேலையையும் செய்யும்

இவர்களால்

கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்

இறுதியாய் இந்தவேலையையும்

செய்யும்...

'....................ஒப்பாரி'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக