ஞாயிறு, 27 மார்ச், 2011


தனிமையையும்
ஏகாந்தத்தையும்
என் மீது பூசி
ஆயிரம் உறவுகள் இருந்தும்
என்னை
அனாதையாக
உணரவைக்கிறது
பேருந்தின்
மிருதுவான பயணங்கள்

சன்னலில் ஓரம்
அமரும் போதெல்லாம்
ஏதோ ஒன்றை நினைத்து
அழவிரும்புகிறேன்.
சில நேரம் கண்ணிலிருந்து
பல நேரம் மனதிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக