செவ்வாய், 29 மார்ச், 2011

சத்துணவு


என்
இரைப்பைகள் இசைமுழக்கமிட
பசித்திருந்த மதியப்பொழுதில்
பயணம் மேற்கொள்ளவேண்டியதாயிற்று...

என் பசியறிந்து
தன் ஒலிபெருக்கி தனங்களில்
சங்கீதப் பாலை
என் செவியில்
வார்த்துக்கொண்டே இருந்தாள்
அந்தப் பேருந்துதாய்.

என்னால்
உணரமுடிந்தது......

உலகத்திலேயே
சிறந்த சத்துணவு
"சங்கீதம்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக