
என்
இரைப்பைகள் இசைமுழக்கமிட
பசித்திருந்த மதியப்பொழுதில்
பயணம் மேற்கொள்ளவேண்டியதாயிற்று...
என் பசியறிந்து
தன் ஒலிபெருக்கி தனங்களில்
சங்கீதப் பாலை
என் செவியில்
வார்த்துக்கொண்டே இருந்தாள்
அந்தப் பேருந்துதாய்.
என்னால்
உணரமுடிந்தது......
உலகத்திலேயே
சிறந்த சத்துணவு
"சங்கீதம்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக