வியாழன், 26 மே, 2011

சாம்பார் - சிறுகதை

கலையும் கருணும் சகோதரர்கள்.இருவரும் பக்கத்திலிருக்கும் அரசுப்பள்ளிக்கு போகிறவர்கள் .கலை ஏழாம் வகுப்பு கருண் ஆறாம் வகுப்பு.தினமும் பேருந்தில் பயணப்படும் இவர்களது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.வழக்கமாக அவர்கள் இருவரும் வீடுவந்து சேர்வதற்குள் மாலை ஆறரைமணி ஆகும். அதுவரையிலும் வீட்டுப்பயிற்சி முடித்து கைகால் அலம்பி பூசைமுடித்து விளையாடத் தொடங்கிவிடுவதர்க்கும் பெற்றோர்கள் வீடுவந்து சேர்வதற்கும் சரியாக இருக்கும். இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் துணிகளை மடித்து வைத்தல் , வீட்டை பெருக்குதல்,எச்சில் பாத்திரங்களை கழுவுதல் , என்று என்ன எல்லாம் தங்கள் சக்திக்கு செய்ய முடிகிறதோ அவை அனைத்தையும் முடித்துவைப்பார்கள்.ஒருநாள் தவறாமல் அந்த பணிகள் அனைத்தையும் பெற்றோர்களின் சிரமம் அறிந்து மனமுவந்து செய்துவருவதுதான் ஆச்சர்யம்.

ஒரு மாலைப் பொழுதில் எல்லா வேலைகளையும் முடித்துவைத்திருந்த அவர்கள் இருவரும் அடுப்பை பற்றவைப்பது என்று முடிவெடுத்தார்கள்.அண்ணன் சொன்னதைப் போல தம்பி கருண் வெட்டப்பட்டு காய்ந்து போயிருந்த தேயிலைச் செடியின் ஒரு சின்ன பாகத்தை வீட்டின் முன் வாசல் பகுதியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த விறகடுக்கிலிருந்து எடுத்து வந்தான்.இலைகளற்று எலும்புக்கூடாக போயிருந்த அந்த காய்ந்து சுருங்கிப் போயிருந்த செடியின் பிஞ்சுக்கிளைகளை கலை தன கை விரல்களால் 'டக் டக்' என்று முறித்து முறித்து போட்டான். கருண் அதை சேகரித்தவனாய் உள்ளங்கை நிரம்பிய விறகு சில்லுகளை அண்ணனின் கைகளில் சேர்த்தான்.கலை அதை மெதுவாக உலையினுள் பாதி நுழைத்து பழைய செய்தித்தாள் ஒன்றை நன்றாக சுருட்டி அதன் கீழ்ப்பகுதியில் இடம்பெறுமாறு திணித்தான்.இப்போது அடுப்பு பற்றவைப்பதற்கு தயார் நிலையில் இருந்தது.'அண்ணா நா பத்தவைக்கிறேன்' என்று முந்திக்கொண்டு தீப்பெட்டியுடன் கருணும் வந்து சேர்ந்தான்.மெளனமாக இருந்த கலையின் சம்மதத்தை பெற்ற ஆனந்தத்தில் தன் ஆள்காட்டி விரல்களால் பெற்றியின் உள்புறம் இருந்த பாகத்தை வேகமாக தள்ளினான்.தீப்பெட்டியின் திறப்பு கீழ்ப்பக்கமாக இருந்ததால் இருந்த நான்கைந்து குச்சிகளும் தரையில் சிதறின. கோபித்துக் கொள்ளாமல் கலை குனித்து இத்தோட்டத்தில் முகம் சிவக்க நிமிர்கிறான். முதல் தீக்குச்சியை எடுத்த கலை கருணை ஒருமுறை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு உரசுகிறார்.பற்றவில்லை.இன்னொருமுறை முயற்சி செய்கிறார்.பற்றவில்லை. மூன்றாவது முறை முயலும்போதுதான் அந்த தீக்குச்சியில் இருக்கும் மருந்து உதிரி இருந்ததை அறிந்துகொண்டான்.இப்படியாக தொடர் முயற்சியில் எல்லா குச்சிகளும் உதவாமல் போயின.மார்கழி மாசத்து பிசு பிசுப்பில் நமநமத்து போயிருந்த அந்த தீப்பெட்டியை வாசல் கதவை திறந்து தூர எறிந்தான். அந்த எறிதலில் கலையின் வெறுப்பும் கோபமும் கொஞ்சம் கலந்திருந்தது.



பின் சமையல் கட்டை நோக்கி நகர்ந்ததும் மஞ்சள் ஒளிவீச ஏரியும் காகிதத்தைத் துண்டையும் அது கருணின் கைகளில் இருப்பதையும் அறிந்து ஆபத்தை தவிர்க்க தன் கைக்கு பத்திரமாக மாற்றிக்கொண்டான்.'தீப்பெட்டிதான் யால்லையே அப்புறம் எப்படி இந்த காகிதத்தே பத்த வச்சே'என்ற கேள்வியைக் கேட்ட கருணிற்கு தான் சாதனை நிகழ்த்திவிட்டதாக பெருமிதம் ஏற்ப்பட்டது.அந்த முடிக்கிலேயே 'அண்ணா நாம இப்பதானே சாமி கும்பிட்டோ ,அதுக்குள்ளே மறந்துட்டியா ...விளக்கிலிருந்து பத்தவச்சிகிட்டேன்'என்று தெளிவாக பதிலளித்தான்.அவனின் அந்த சமாயோசித்த ஞானத்தை மனதிற்குள் பாராட்டியதைப் போல கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டுவிட்டு அந்த காகித நெருப்பைக் கொண்டு ஏற்கனவே உள்ளே வைக்கப்பட்டிருந்த காகிதத்தோடு சேர்த்து அது பற்றி எரியுமவரை அதன் அருகிலேயே கைகளால் பிடித்துக்கொண்டு நின்றான்.

மேட்டுச்சாலையில் வாகன சத்தம் கேட்டு கருணும் அடிக்கொருதரம் வீட்டிற்கு வெளியில் பொய் முகட்டில் தெரிகிற முதன்மைச் சாலையில் வாகனங்கள் போகிறதா என்று பார்ப்பதும் வருவதுமாக இருந்தான்.வாகனமும் பெற்றோர்களும் வந்ததாக தெரியவில்லை.'அண்ணா இன்னும் அம்மாவையும் அப்பாவையும் காணோமே' என்று ஏக்கத்தோடு கேள்விகேட்ட கருணிற்கு 'இப்ப வர்ற நேரமாச்சு'என்று அடுப்பை பற்றவைத்துக்கொண்டே பதிலளித்தான் கலை.

காகிதம் எரிந்து மேலிருந்த தேயிலை செடியின் சில்லுகளை எரித்து கொழுந்துவிடத் தொடங்கிய அந்த அக்கினியோடு புகையும் திடீர் கக்கிவிட, கருணும் கலையும் செய்வதறியாது புகையில் மாட்டிக்கொண்டு 'லோக் லோக் ' என்று இருவரும் மாறிமாறி இருமித் தள்ளினார்கள்.

இதற்கிடையில் கலை சமையலறை சன்னலை திறந்துவிட அடைந்திருந்த புகையில் ஒரு கால் பகுதி மட்டுமே வெளியேறி இருந்தது.கருண் ஐந்தாம் வகுப்பில் படித்த நோட்டு புத்தகத்தின் அட்டையை கிழித்து கொண்டுவந்திருந்தான்.'என்னடா இது , என்ன பண்றே' கலை கேட்டுமுடிப்பதற்கு முன்னதாகவே கருண் நோட்டு அட்டையால் இடத்தும் புறமும் வலது புறமும் மேலும் கீழும் அசைத்து புகையை வெளியேற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டான்.இந்த இருவரின் பிரயத்தனத்தால் புகை ஓரளவிற்கு வெளிநடப்பு செய்திருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊதுகுழலை எடுத்து கலை புகையும் உலைக்குள் தான் உயிர்க்காற்றை சிதறாமல் கவனமாக செலுத்தினான்.மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நெருப்பு லேசாக உயிர்ப்பெற்று சுடர்விட்டு சுவாலையாய் மேலெழுந்தது.அந்த சில கணங்களில் புகை எங்கோ காணாமலே போயிருந்தது.

பாத்திரம் வைக்கும் வாய்ப்பகுதியில் வழியாக நெருப்பு நாக்கை நீட்டி தனக்கான உணவை கேட்டு நின்றதைப் போல நீண்டு எரிந்தது.இப்போது கலை சோறு சமைக்கும் பாத்திரத்தை அதன் மீது வைத்தான்.கருண் அதற்குள்ளாக தன்னேர்கொண்டு வந்திருந்தான்.கலை கருண் கொண்டுவந்த தண்ணீரை பத்திரமாக பத்திரத்தில் வாய்ப் பகுதியின் வழியாக மிகுந்த எச்சிரிக்கையோடு கவனமாக ஊற்றினால்.தண்ணீரில் நெருப்பை அணைந்தால் மீண்டும் பற்றவைக்க முடியாது என்ற பயம் கலையை விட்டு அகன்றிருக்கவில்லை.அலுமினியப்பத்திரத்தின் முதலடுக்கு வளைவு வரையில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது.அப்போதுதான் இதுவரையிலும் இவர்கள் சோதனை முயற்சி செய்திராத நிலையில் கருண் ஒரு யோசனை சொன்னான்.'அண்ணா தினமும் சாதம் வைப்போம் , அதுக்குள்ளே அம்மா அப்பா வந்திடுவாங்க ,இன்னிக்கு இன்னும் வரலே ,பேசாமே சாம்பார் வைச்சு பாக்கலாமா' என்ற யோசனையை முதலில் பெரிய வேலையாக கலை நினைத்திருந்தாலும் பிறகு , சரி செய்து பார்த்தால்தான் என்ன என்று சோதனை முயற்ச்சியில் இருவரும் களமிறங்கி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் சமையல் குறித்த பார்த்த அனுபவம் மிகவும் அதிகம்.அந்த அனுபவம் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும்.

அதற்குள்ளாக அடுப்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது.'கருண் பருப்பு சாம்பார் செய்ய எல்லா பொருளும் இருக்கா, எதுக்கும் போயி கொஞ்சம் பாத்துட்டுவா'என்று கலை கட்டளை இட்டான் . எல்லாம் இருக்கிறது என்பதை அறிவுறுத்தும் வண்ணமாக தலையை ஆட்டிக்கொண்டு வாத கருண்,'அண்ணா முதல்லெ ஒரு டம்ளர் துவரம் பருப்பை இதுலே போட்டு கொதிக்கவைக்கணும்' ' ம்ம் சரியாதா சொல்றே, சரி ஒரு டம்ளர் பருப்பு எடுத்தா' கருண் தரையில் ஒரு பழைய பேப்பரை விரித்து அதன் மீது சில்வர் டம்ளரை வைத்து கவனமாக பிளாஸ்டிக் டின்னில் இருந்த பருப்பை கவனமாக சைத்தான்.பருப்பு அந்த டம்ளரை பிரமிடைப்போல நிறைத்து கொஞ்சம் உதிரிகளை தரையில் சிதறவிட்டது.கருணிடமிருந்த கலை அந்த பருப்பை வங்கி அதை அப்படியே கொதிக்கும் பாத்திரத்திற்குள் போட்டுவிட்டான். வேகும் பருப்பை கவனமாக உளவுபார்த்த படியே இருந்தான் கலை. அதற்குள் கருண் சிதறிய பருப்பு சிதறல்களை சேமித்துவிட்டிருந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் பருப்பின் வாசனை ஆவியின் வழியே நாசியை வந்தடைந்தது,இந்த வாசனைக்கே பாதி சாம்பார் செய்து முடித்துவிட்டதாக இருவரும் திருப்தி பட்டுக்கொண்டார்கள்.ஒரு கட்டத்தில் கலை பருப்பு எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சாம்பார் கரண்டி ஒன்றை உள்ளே நுழைத்தான். நீராவியில் அனல் கலையில் வலது முன்னங்கைகளை பதம் பார்த்தன.விரைந்து எடுத்த அந்த கரண்டியில் ஒட்டி இருந்த சில பருப்பு துண்டங்களை தொட்டு அழுத்திப்பார்த்தான், பருப்பு வந்தபாடில்லை.

' கருண் , பருப்பு வேந்துகிட்டிருக்கு அடுத்து என்ன போடணும்' என்று அடுத்த சமையல் குறிப்பை கருனிடம் கேட்க 'பருப்பு வெந்ததும் கிழங்குதான் போடணும்,என்னண்ணே இதுகூட தெரியாதா?'கருணின் வினா கலையை சமையல் கத்துக்குட்டி என்று குறிப்பிட்டதைப் போல உணர்த்தியது.'அது சரி ஒரு நாலு கெழங்கு கொண்டா'என்றான் கலை.கூடைக்குள் கைகளைத் துழாவி விட்டு என்மாந்தவனாய் நிமிர்ந்த கருண் 'அண்ணா நாம பருப்பு சாம்பார் வைக்க முடியாது 'என்று பேரதிர்வு குண்டை கலையின் முன்னாள் வீசினான்.ஒன்றும் புரியாதவனாய் நின்ற கலை'என்னடா சொன்றே'என்று கேட்டான்.'இல்லண்ணே பருப்பு சாம்பாருளே அம்மா எப்போதும் கிழங்கு போட்டுதா செய்யும், அது இல்லாமே சமைக்கவே முடியாது' என்று சமையல் வல்லுஞனைப் போல திட்டவட்டமாக அறிவித்ததும்,தங்கள் திட்டம் தொல்வியடைத்து விட்டதைப் போல வருத்தமுற்ற கலை 'சரி இப்ப என்னதா செய்யறதா?'மீண்டும் கேள்விகளாய் கருணை துளைத்தான்.'அண்ணா பேசாமே அந்த செம்புலே இருக்குற தண்ணியே வடிச்சி பருப்பே தனியா எடுத்து கொஞ்சம் காய வச்சி அம்மா வர்றதுக்குள்ளே அந்த தப்பியிலேயே போட்டுடலாமா' என்று சொன்னது கலைக்கு நல்ல யோசனையாகப் பட்டது.

குளிக்கும் போது துடைப்பதற்காக கதவில் தொங்க வைக்கப்பட்டிருந்த டவலை எடுத்து வந்த கலை கொதிக்கும் அந்த பாத்திரத்தின் வாய்ப்பகுதியைச் சுற்றி அரைவட்டவடிவில் பிடித்து மெதுவாக இறக்கிவைத்தான்.பிறகு வீட்டின் பின்பகுதிக்கு ரகசியமாக சென்று கொதிக்கும் பாத்திரத்தை தரையோடு வைத்து சாய்த்து சுடும் நீரை கால்களில் தெரித்துவிடாதபடி மெதுவாக வெளியேற்றி முடித்தான்.ஈரம் உலராமலும் லேசாக வெந்த நிலையிலும் இருந்த பருப்பு சிதறல்களை சேகரித்துக்கொண்டு அவைகளை பழைய செய்தித்தாள்களுக்குள் வைத்து ஈரம் உரியில் அளவிற்கு சுருட்டிக்கொண்டான்.ஒரு வழியாக பருப்பு பழைய நிலைக்கு இவர்களது முயற்ச்சியால் வந்திருந்ததில் இருவருக்கும் திருப்தி.இதை எங்கு வைப்பது என்று இடம்தேடும் போதுதான் வாசலில் அம்மா அப்பாவின் அரவம் கேட்டது.கருண் ஓடிப்போய் அவர்களை வரவேற்க போயிருந்த அந்த இடைவெளியில் கலை அந்த பருப்புகளை எடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஏற்கனவே இருந்த பருப்புகளோடு போட்டுவைத்துவிட்டான்.ஏதும் நடக்கவில்லை என்பதைப் போல இருவரும் நடந்துகொண்டார்கள். இருந்தாலும் அம்மா கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயமும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.வந்து செய்ததும் அம்மா முதல் வேலையாக அடுப்படிக்குள் நுழைந்து சமையலில் இறங்கி விட்டால். அன்று சுண்டல் கொழம்புதயாரிக்கப்பட்டதால் இருவரும் தப்பித்துக்கொண்டார்கள்.

மறுநாள் அம்மா சமைப்பதற்காக தானியப்பத்திரங்களை எடுத்தபோது பருப்பு டின் பூஞ்சை பிடித்திருந்ததை நோட்டமிட்டாள்.பருப்பை சுற்றிலும் பச்சை பசேலென ஏதோ படர்ந்திருந்தது.அம்மாவால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லை.கருணும் கலையும் வாய்த்திறக்கவில்லை.அம்மா அந்த பருப்பை சமைக்காமல் விட்டுவிட்டாள்.மறுநாள் மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்னதாகவே அந்த ஈரம்படிந்து கெட்டியாய் இருந்த பருப்புதுண்டத்தை மெதுவாக வெளியில் எடுத்து வீசிவிட்டு.சுவையான கமகமக்கும் பருப்பு சாம்பார் வைத்திருந்தார்கள்.பிள்ளைகளில் சாமர்த்தியத்தைப் பற்றி அம்மா அப்பாவிடம் அன்றைய தினம் முழுக்க பெருமை பேசிக்கொண்டே இருந்தாள்.

புதன், 25 மே, 2011

அறை எண் 17 -சிறுகதை

படித்துவிட்டு வேலைதேடும் ஓர் இளம் பட்டதாரி ஆன கண்ணனுக்கு சென்னை என்றாலே அலர்ஜி . கண்ணன் சென்னையைத் தவிர்ப்பதற்கு வெயில்,பரபரப்பு,நெரிசல்,வாகனங்கள்,புகை என்று பலவும் காரணம். .ஆனால் சென்னையை நோக்கி ஓடிவரவேண்டிய நல்ல திருப்பம் கண்ணனது வாழ்வில் நிகழ்ந்தது.



அதிலிருந்து கடந்த ஒருவருடமாக கண்ணன் ஒரு முழுமையான சென்னை வாசி.தனியார் நிறுவனத்தில் சின்ன சம்பளத்திற்கு பெரிய வேலைக்கிடைத்ததில் கண்ணனுக்கு நிறைவுதான்.கண்ணனுக்கு ஊதாரித்தனங்கள் இல்லாததால் அளவான ஊதியம் அவனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவில்லை. ஒருவருடம் முடிந்திருந்த போதிலும் கண்ணனுக்கு நன்கு பரிச்சயம் ஆகாத நகரமாகத்தான் சென்னை இருந்தது.காலையில் வேலைக்கு கிளம்பினால் மாலை நேராக மேன்சனுக்கு திரும்பிவிடும் அவனுக்கு இந்த சகமான வாழ்க்கை பிடித்திருந்தது.



மாத வாடகைக்கு தங்கி இருக்கும் அந்த மேன்சனில் தரைத்தளத்தில் அறை எண் 18 -தான் கண்ணன் தங்கி இருந்தான்.எல்லோரும் மாத வாடகைக்கு இருப்பவர்கள் எல்லா முகங்களும் தினந்தோறும் பார்த்து பழக்கப்பட்ட முகங்களாகிவிட்டிருன்தது கண்ணனுக்கு.ஆனால் யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இல்லாத கண்ணன் எல்லோரிடமும் புன்னகைத்து மெளனமாக வணக்கம் சொல்லிவிடுவது வழக்கம்.



காலையில் எல்லா அறைகளும் பூட்டியே இருக்கும் என்பதை தான் கிளம்பும் நேரத்தில் கதவு தாழிடும் சத்தத்தை வைத்து கண்ணன் உறுதி செய்துகொண்டான்.மாலை திரும்பும்போது சில கதவுகள் திறந்தும் பல கதவுகள் மூடியும் இருக்கும்.இப்படியாக நாட்கள் நகர்ந்த அந்த மேன்சனில் அறை எண் 17 மட்டும் மூடப்படாமல் இருப்பதையை அறிந்த கண்ணுக்கு யார் அங்கு நாள் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிய ஆர்வம் மேலிட்டது.



மேன்சன் பணியாளர் ஒருவரிடம் அந்த குறிப்பிட்ட அறையில் இருப்பது யார் என்று ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் கேட்டேவிட்டான்.அவரும் பதிலளிக்கவே ட கண்ணனுக்கு அவரை சந்திக்க வேண்டும் பேசவேண்டும் என்ற விருப்பம் எத்தனித்தது.அன்றிலிருந்து மேன்சனுக்குள் நுழையும்போதெல்லாம் அந்த அறையில் இருப்பவரை பார்த்தும் பார்க்காததைப் போல பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம்.காலையில் ஒருமுறையும் மாலையில் மறுமுறையும் என்று ஒருநாளிற்கு இருமுறை அந்த அறையை நோட்டமிடுவது கண்ணனுக்கு வழக்கமாய் இருந்தது.



மேன்சனின் வரவேற்பு அறையை கடக்கும்போது நடை பாதையின் இடது புறமாக இருக்கும் முதல் அறைதான் அது.எப்போதும் குழல்விளக்கின் வெளிச்சத்தின் பளிச்சிடும்.இருவர் தாங்கும் அறைக்கு பொருத்தமான அகலமான வெண்ணிறப் படுக்கை. மெத்தை முழுக்க துவைக்கப்பட்ட துணிகளில் அடுக்கு,ஒரு பிளாஸ்டிக் தட்டில் குவியல் குவியலாய் மாத்திரைகள்,ஒரு தமிழ் மற்றும் மற்றொரு ஆங்கில நாள் இதழ் , என்று இன்ன பிறவும் மெத்தையை ஆக்கிரமித்து இருக்கும்.கட்டிலின் அருகில் சின்னதாய் ஒரு குட்டி மேசை.அந்த மேசையில் டீ பிளாஸ்க் ஒன்றும் இரு ஸ்டீல் டம்ளர்களும் சில பழத்தோல்களும் கட்சிப் பொருளாக இருக்கும்.டீபாயிக்கு முன்பாக ஒரு பிரத்யேக நாற்காலி.அதை முழுக்க நிரப்பியதைப்போல தன் பருத்த உடம்பை பொருத்தி கட்சிதமாக அவர் காட்சித்தருவார்.



சற்று அகலமாக ஏற்றம் கொண்ட நெற்றி,கூர்மையான நீளமான மூக்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைக்காட்டும் நரைத்த முடிக்கற்றைகள் ,சதைப்பிடிப்பான உப்பிய கன்னங்கள்,எடையில் சதத்தைத் தாண்டும் பருமனான உடல்கட்டு , அகன்ற தேகத்தில் முன்னுக்கு எட்டிப்பார்க்கும் லேசான தொப்பை,மார்பும் வயிறும் சந்திக்கும் இடுப்பிற்கு சற்று மேல்பகுதியில் தன் வெள்ளை வேட்டியை முட்டுக்கொடுத்ததைப் போல கட்டி இருந்தார் அவர் .வேட்டிக்குள் வெள்ளை நிற கை பனியன் நுழைந்திருக்கும்.அவ்வப்போது கண்கண்ணாடி அவரின் மூக்கின் மேல் ஓய்வெடுக்கும்,பின்னர் இறங்கிக்கொள்ளும்.கூர்மையான கவனிப்பை வெளிப்படுத்தும் வகையில் அகலமான கண்கள் சுவற்றைப் பார்த்து வேறிப்பதைப் போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும் .ஆனால் அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் டிவியைத் தான் அப்படி பார்த்துக்கொண்டிருப்பார்.



அவரிடம் பேசவேண்டும் என்ற என்னத்தை கண்ணனது உள்ளுணர்வு அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டே இருந்ததை கண்ணன் உணரத் தவறவில்லை.ஒரு மாலை பொழுதில் வேலைமுடித்து திரும்பிய போது வரவேற்பரையில் சிறிதுநேரம் மின்விசிறியின் காற்றை கடன்வாங்கியப்படி கண்ணன் அமர்ந்திருந்தான். 'என்ன சார் வேலைக்கு போயி வந்துட்டீங்களா' என்று ரிஷிப்ஷநிஸ்ட் கேட்ட கேள்வி கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது.'ம்ம் முடிஞ்சது.. என்னா வெயில் ' என்று கண்ணன் பதிலுடன் தன் அலுப்பையும் தெரிவித்தான்.''ரூம் நண்பர் 17 லே இருக்கும் சாருகிட்டே பேசினீங்களா' என்று மறுகேள்வி கேட்டான்.' நானு பேசணும் பேசணும்னு இருக்கே, சந்தர்ப்பமே அமையலே' என்று தன் விருப்பை தெரிவித்தான் கண்ணன். கண்ணனின் ஆர்வத்தை புரிந்துகொண்ட அந்த மேன்சன் பொறுப்பாளன் 'வாங்க சார் நா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்று முன்னோக்கி நடந்து என்னை அந்த அறை அருகில் அழைத்துச் சென்றார்.சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஒரு வித சங்கோஜம் கண்ணனை தொற்றிக்கொண்டிருந்தது.



கண்ணனை அழைத்துக்கொண்டு போனவர் அந்த அறையின் வாசலில் நின்றதும் 'வாங்க வருசை ' என்று அவரை அழைத்தார்.தனக்கு பின்னால் நிற்கும் கண்ணனை வருசை திரும்பி பாத்துவிட்டு 'வாங்க சார்' என்று கண்ணனை முன்னிறுத்தினார்.சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க அவரை கண்ணன் தன் இரு கைகளையும் கூப்பி 'வணக்கம்' என்றான். அந்த அறிமுகத்தில் சுவாரஸ்யப் பட்டவராய் முகம் மலர்ந்து 'வணக்கம் உள்ளே வாங்க ..உக்காருங்க' என்று மிக சகஜமாக அழைக்கத் தொடங்கியது கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



கொஞ்சமாக இடமிருந்த அந்த மெத்தையில் ஒரு மூலையில் அமர்ந்து அமராததைப் போல கண்ணன் அமர்ந்துகொண்டான்.அறிமுதத்தை முடித்துவிட்டது வருசை தான் அலுவல்களுக்கு திரும்பிவிட்டார்.இப்போது அந்த அறையில் கண்ணனும் அவரும் மட்டும்தான்.பேராசிரியர் என்பதை அறிந்த கண்ணனுக்கு அவர்மீது இன்னும் மரியாதை அதிகமானது. அந்த பேராசிரியரிடமிருந்து அழகாய் சுவாரஷ்யங்களோடு உரையாடல்கள் தொடங்க மரியாதையும் அக்கறையும் கலந்த பதில்களால் கண்ணன் எதிர்வினை புரிந்துகொண்டிருந்தான். மெய்மறந்த இவர்களின் உரையாடல்களில் நேரம் முன்னிரவை தொடங்கிவைத்திருந்தது.முதல் சந்திப்பு போன பிறவியில் உறவின் தொடர்ச்சியைப் போல இருவரையும் உணரவைத்திருந்தது.



உரையாடிய அந்த பொழுதுகளில் என் கண்களை அதிகம் உறுத்தியவை வகை வகையான மிகுந்திருந்த வண்ண வண்ண மாத்திரைகள், இடத்துபுரத்து சுவற்றின் மூலையில் கொஞ்சம் சாய்ந்தபடி நின்றிருந்த மரத்தால் செய்யப்பட்டிருந்த ஒற்றை கைத்தடி,இன்னும் சிலவும் எனக்கு அவர்மீது இனம்புரியாத இரக்க உணர்ச்சியையும் அன்பின் மிகுதியையும் கண்ணனிடம் ஏற்படுத்தின.எப்போதும் தனிமையில் மருந்துகளோடு வாழும் அவரோடு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆறுதலாய் சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று கண்ணன் முடிவெடுத்தவனாய் அவரிடமிருந்து அன்று விடைப்பெற்றிருந்தான்.இந்த சந்திப்பும் உரையாடல்களும் அவருக்கு மட்டுமல்ல தனியாக இருக்கும் கண்ணனுக்கும் ஒரு நிறைவைத் தந்திருந்தது.தன் தந்தையை விட்டு தொலைவில் இருக்கும் கண்ணனுக்கு அவருடனான தொடர்பு இல்லத்தில் இருப்பதைப் போன்ற ஆறுதலை ஏற்படுத்தியது.



காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் வேகத்தில் அந்த அறையை கடக்கும்போது அவரின் முகம்பார்த்து 'வணக்கம்' சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான்.மாலையிலும் அதேதான். இரவில் உணவு அருந்தியபிறகுதான் பதினேழில் கண்ணன் வருகைப்பதிவைக்கொடுப்பான்.



கண்ணனைப்பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்ட அவர் தன்னைப்பற்றியே சொன்னதில்லை என்பது கண்ணனுக்கு ஒரு வெறுமையாக இருந்தது.பிறகு ஒரு சந்திப்பில் கண்ணன் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இயல்பான கேள்விகளில் இயல்பான பதில்களை கேட்டுப்பெற்றுக்கொண்டான்.பேராசிரியர் கண்ணனின் நல்ல குணத்தை அறிந்து திறந்த புத்தகமாகவே தன் மனம் திறந்தார்.பேராசிரியருக்கு திருமணமானது ,துணைவியார் உடல்நலமில்லாமல் உறவினர்வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, தான் சிகிச்சைக் காரணமாக சென்னையில் தங்கி ஓய்வூதியத்தில் மருத்துவம் பார்ப்பது என்று பலவும் கண்ணனுக்கு தெரிய வந்தன.கண்ணன் அவரில் நிலைக்கு தன்னுள்ளேயே வருந்திக்கொண்டான். அவரது பிள்ளைகளைப்பற்றி கேட்கவேண்டும் என்று ஆவல்கொண்டிருந்த கண்ணன் மருநாளைக்காக காத்திருந்தான்.



மற்றொருநாள் மாலைப் பொழுதில் நேரே பேராசிரியரின் அறைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு மேன்சனில் நுழைந்த கண்ணனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.அந்த குறிப்பிட்ட அறை வழக்கத்திற்கு மாறாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையைத் தாண்டி கண்ணனுக்கு செல்வதற்கும் கூட மனதுவரவில்லை. தளர்ந்துபோய் தனது அறையில் அடைந்துகொண்டான் கண்ணன்.இரவு முழுக்க அவரின் நினைவாகவேன் இருந்தான். விடிந்ததும் சற்று முன்னரே கிளம்பி நகர்ந்த கண்ணனுக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த அறை திறந்த நிலையில் விளக்கின் வெளிச்சத்தில் நிறைந்து வழிவதைப் பார்த்து மகிழ்ச்சி உற்றவனாய் நெருங்கினான்.வேறுயாராவது இருக்கப்போகிறார்களோ என்ற சந்தேகமும் கண்ணனுக்கு வந்தது.கடக்கும் சாக்கில் வாசலை லேசாக நோட்டமிட்டபோது வழக்கமாக பார்ப்பதைப்போல பேராசிரியர் அமர்ந்திருந்தார்.நான் வினாவை எழுப்புவதற்கு முன்னதாகவே அவர் முந்திக்கொண்டு' ''நேத்தைக்கு எம் பையனே பாக்கலான்னு போயிருந்தே.வர்றதுக்கு ரொம்பவும் நேரமாயிடுச்சு'என்றார். கண்ணனது கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்தில் கண்ணனது மனம் நிறைத்தது .



மறுநாள் வேலைக்காக வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது மேன்சன் பொறுப்பாளர் வருசை என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.'வாத்தியாரே பாத்தீங்களா' என்று கேட்க 'ஆமா பாத்தே ..பேசினேன்' என்று பதிலளித்த கண்ணனுக்கு 'பிள்ளையைப் பார்க்க போனதா சொன்னாரா'என்று மீண்டும் வினாவினால் தொடர்ந்தார்.'ஆமாம்'.'இப்படி ஒரு வயசுலே இருக்குற தகப்பனே இந்த காலத்து பிள்ளைங்க பாத்துக்கறது பெரிய புண்ணியம்தானே' என்று கண்ணன் நிறைவோடு பதிலளித்ததும்.'இல்லே சார் , நேத்திக்கு அவரு டாக்டர்கிட்டே போனாங்க,பையனே பாக்க போகலே'என்று வருசை சொன்ன பதில் கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது.'அப்பா ஏ அவர் அப்படியொரு பொய்யே சொல்லணும்'என்று கண்ணன் திருப்பிக்கேட்டான்.வருசை உண்மையைத் திறக்கிறான் 'அவருக்கு உண்மையில் புள்ளங்க இல்லே சார்,வயசான காலத்துலே யாருக்கும் உபத்திரமா இருக்ககூடாதுன்னுட்டு இப்படி வந்து தங்கி இருக்காரு, பென்சன் பணத்தை வாங்கிக்கிட்டு உடம்புக்கு தானே மருத்துவம் பாத்துகிட்டு வாழ்க்கையே ஒட்டிக்கிட்டு இருக்காரு' என்றதும் கண்ணனுக்கு மனதில் அதிர்ச்சியும் கண்ணில் துளிகளும் நிறைந்துகொண்டன.



அன்றிலிருந்து இப்போதெல்லாம் கண்ணன் அந்த அறைக்கு அடிக்கடி சென்று அதிக நேரம் செலவழித்து ஆறுதல் மொழி பேசி சின்ன சின்ன உதவிகள் செய்து வருகிறான் .தனக்கு பிள்ளை இல்லை என்பது கண்ணனுக்கு தெரியாது என்று அந்த பேராசிரியர் இன்னமும் நினைத்துக்கொண்டார். ஆனால் கண்ணனோ காலப்போக்கில் முழுமையான பிள்ளையாகவே மாறிப்போயிருந்தான்.

குச்சி ஐஸ் -சிறுகதை

வீதிகள் விழாக்கோலமாக களைக் கட்டி இருந்தன அந்த விடுமுறை நாளில்.அகலமும் நீளமும் மிகுந்த அந்த வீதியை மழலைகள் குட்டி மைதானமாகவே கருதி ஓய்வே இல்லாமல் விளையாடுவது வழக்கம்.கோலூன்றும் பெரியவர்களும் தண்ணீர் குடம் சுமக்கும் பெண்களும் இயங்க முடியாத அளவிற்கு விளையாட்டுப் பிள்ளைகள் அந்த வீதியை அடைத்திருப்பார்கள். அவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டு விளையாடும் அந்த மழலைகளை யாரும் எதுவும் சொல்வதே இல்லை.கோடைக்கால விடுமுறை வெளியிலில் விளையாடும் அந்த பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் ஒலிகள் இரண்டு.வெயிலின் கூச்சத்தைக் கூட பொறுத்துக்கொண்டு வானத்தின் திசையெங்கும் மின்னலடிக்கும் தங்களின் சின்ன விழிகளால் துழாவும் ,வெள்ளை கோட்டை கிழித்தபடி செல்லும் விமானத்தின் ஓசை.மற்றொன்று நாக்கில் எச்சிலையும் மனதில் சில்லிடலையும் உருவாக்கும் குச்சி ஐஸ் காரன் எழுப்பும் 'பொய்ங்... பொய்ங்...' என்னும் ஹாரன் சத்தம்.



இவர்கள் எப்போதும் கூட்டாக விளையாடுவதுதான் வழக்கம்.அப்படி அவர்கள் என்ன விளையாட்டு விளையாடினாலும் அவர்களுக்குள் பந்தய 'பெட்' கட்டாயம் இருக்கும்.இதற்காகவே ஐந்து பைசா பத்து பைசா என்று ஆளாளுக்கு கொண்டு வந்து எப்போதும் விளையாடாத ஒரு பையனிடம் பத்திரப்படுத்திவிட்டு களம் இறங்கிவிடுவார்கள்.காட்டப்படும் மொத்த பைசா தொகையில் பிரமாண்டமான தின்பண்டங்களை வாங்கி தோற்றவர்களும் ஜெயித்தவர்களும் சேர்ந்தே உண்பதுதான் சுவாரஸ்யம்.தேன்மிட்டாய்,கம்பர்கட்,கடலைமிட்டாய்,ஆரஞ்சுமிட்டாய்,சீரம் மிட்டாய்,என்று இவையும் இன்னபிறவும் இவர்களை உற்சாகப்படுத்தும்.



மழைத் தாயின் இடுப்பில் பிள்ளை இருப்பதைப் போல அந்த கிராமம் ஒரு மலையின் பாதிபள்ளத்தாக்கில் இருக்கும்.முதன்மை சாலைக்கு செல்லவேண்டும் என்றால் ஒரு அரை பர்லாங் தூரம் குத்துமேட்டில் மூச்சுவாங்க நடந்தாகவேண்டும்.இருந்தாலும் வெற்றிக்கொண்டாட்டங்களுக்காக இவர்கள் இந்த மலைஏற்றத்தை சிமமாகவே கருதுவதில்லை.எப்போதும் சில்லிடும் அந்த மலையூரின் தப்பத்தை தாண்டி விளையாட்டில் எல்லோரும் வியர்த்து வழிந்துகொண்டிருந்த ஒரு பகல் பொழுது. விளையாட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.அந்த மும்முரமான பரபரத்த நேரத்தில் தான் அவர்களை எப்போதும் ஈர்க்கும் அந்த ஒலி அவர்களின் காதுகளுக்குள் வந்து நுழைந்தது.ஐஸ் கிரீம் காரனின் ஹாரன் சத்தம் எல்லோருடைய வாயிலும் எச்சில் ஊறவைத்தது.



அந்த சத்தம் எல்ல்லோருடைய கவனத்தை சிதைக்கவே அன்று விளையாட்டை பாதியிலே நிறுத்திவிட்டு சேர்ந்த பைசாக்களுக்கு ஐஸ் வாங்குவது என்று முடிவெடுத்து , இறைக்கும் மூச்சுடன் முதன்மைச் சாலையை ஒருவழியாக அடைந்தார்கள்.சதுரவடிவ பேட்டியின் நடுப்பகுதியில் இருக்கும் திறப்பு கட்டையை ஐஸ் காரார் 'டப் டப்' என்று அடித்துக்கொண்டிருந்தார்.எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.'அண்ணே மொத்தமா நாலு ரூபா இருக்கு ,எங்க எல்லோருக்கும் குச்சி ஐஸ் தாங்க 'என்று அவர்களின் பிரதிநிதியாய் ஒருவன் ஆரம்பித்தான்.பன்னிரண்டு பேர்களுக்கு இந்த தொகை போதாது என்று அறிந்தபோதிலும் இவர்களுக்கு ஐஸ் கொடுப்பது என்று தீர்மானித்த ஐஸ் காரர் மேல் கட்டையை விளக்கினார்,உள்ளுக்குள்ளிருந்து வெள்ளை வெளேரென நீராவு அலை அலையாய் மேல்நோக்கி எழுந்ததை எல்லோரும் வேடிக்கைப் பார்க்க தவறவில்லை.சிவப்பு,நீளம், மஞ்சள்,ஊதா ,இப்படி பலநிறத்தில் குச்சி ஐஸ்களை ஒவ்வொன்றாக எடுக்கிறார்.உனக்கு எனக்கு என்று அல்லலுக்கு முட்டிக்கொண்டு அனைவருமே வாங்கிக்கொண்டார்கள்.



வாய்க்குள் வைத்து வெளியில் எடுக்காமல் கையிலும் பிடிக்காமல் வேடிக்கை காண்பித்தான் ஒருவன் ,சிந்தாமல் உருகும் கீழ முனைப்பகுதியை மேலாக உயர்த்தி சொட்டும் துளிகளை சுவைத்தான் மற்றுவன்.இவர்களில் ஒருவன் மட்டும் தன தம்பிக்காக வேகவேகமாக ஓடி கொண்டுவந்தான். உருகும் ஐசிற்கு ஈடுகொடுத்து ஓடினான்.அந்த ஞாபகத்திலேயே வந்ததால் அவர் ஐஸை கவனிக்கவில்லை வீடு வந்ததும் குச்சியில் கொஞ்சமாக ஐஸ் ஒட்டிக்கொண்டிருந்தது.



தம்பியிடம் சாரி சொல்வதைப்போல ஒரு சைகை செய்துவிட்டு அவன் கையில் கொடுத்தான்.தம்பி மீதமிருந்த ஐஸ் துண்டை சுவைத்தான்.அண்ணன் தன்னையே பார்ப்பதை கவனித்தவன் அவனுக்கும் ஒரு வாய் கொடுத்தான். சிலவினாடிகள் தான் அவர்கள் சுவைத்தார்கள் ஆனால் நீண்டநேரம் இனித்திருக்க கூடும்.

சனி, 21 மே, 2011

அப்பாவும் கதிரும் -சிறுகதை

ஒன்றாம் வகுப்பு படிக்கும் கதிருக்கு ஞாயிற்றுக் கிழமை ஆகிவிட்டாலே ஒரே கொண்டாட்டம் தான். வார விடுமுறை நாட்களில் ஓய்வாக வீட்டில் இருக்கும் அப்பாவை விட்டு அகலுவதே இல்லை.தன் குழந்தைக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாவிட்டாலும் சின்ன சின்ன ரசனைகளில் கதிரை ஆர்வப்படுத்தி அவனுடன் இணைந்திருப்பார். அலுவலக அலுவல்கள் மீதப்பட்டு இருந்தாலும் வீட்டில் அதை கடைவிரித்து யாரிடமிருந்தும் அவர் எப்போதும் அன்னியப்பட்டதில்லை .அவரது மனைவிக்கு வார இறுதி நாட்கள் வீட்டு வேலைகளுக்கு சரியாக இருக்கும். அதனால் இவர்கள் இருவரையும் அவர் தொல்லை கொடுப்பதேயில்லை .அப்பா- பிள்ளை விளையாட்டுகளை ரசித்துக்கொண்டே தன் வேளைகளில் மும்முரமாக இருப்பாள்.



காலை சிற்றுண்டி முடிந்ததும் அப்பா கதிரை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது அவனுக்கு பிடித்தமாதிரியான செயல்களில் ஈடுபடவைப்பது வழக்கம்.அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமையில் , 'கதிர் கண்ணா! இங்கே வா' என்று அழைத்ததும் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து சம்மனக் கால் போட்டு அமர்ந்திருந்த அப்பாவில் வலது தொடைப்பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டான்.' கதிர் இப்படியே அப்பா மடியிலே ஜம்முன்னு ராசா மாதிரி உக்காந்துகிட்டு அப்பாவோட தலையெ சீப்பு வச்சி சீவிவிடுவீங்களா, சரியா' அப்பா கதிரை அன்பால் வேண்டுகிறார்.சொன்னதும் தான் மிச்சம், குன்றிலிருந்து தாவிய ஆட்டுக் குட்டியாய் தன் மடியிலிருந்து பாய்ந்து முதலறைக்கு ஓடி ,முகம் பார்க்கும் கண்ணாடி அருகில் வைக்கப்பட்டிருந்து சீப்பு,பவுடர் தப்பா,எண்ணை, போன்ற பலவற்றையும் தன் சட்டையில் கீழ்ப்பகுதியில் வைத்து அவை தவறி கீழே விழுந்துவிடாதபடி இரண்டுகைகளால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல அடிவைத்து வந்து சேர்ந்தான்.



கொண்டு வந்த பொருட்களை தன் பிஞ்சுக்கைக்கு எட்டும் தூரத்தில் பரவலாக வைத்துவிட்டு, 'இப்ப நான் தான் பார்பர்' என்று சொல்லி 'அப்பா நீங்க நேரா உக்காருங்க,ஆடக்கூடாது,கண்ணே திறக்க கூடாது ...அப்பத்தா நான் தலை சீவிவிடுவேன்'என்று ஆணையிட்டு தன் பணியில் மும்முரமாகிவிட்டான்.இப்போது அப்பா தன் பிள்ளையின் கட்டளைக்கு இசைந்து ஆடாமல் அசையாமல் தன் ஒத்துழைப்பை வழங்கத் தொடங்கிவிட்டார்.ஆப்பிள் பழ வடிவத்தில் இருந்த நீலநிற எண்ணை பிளாஸ்டிக் டப்பாவிற்குள் தன் பிஞ்சுக் கைகளை விட்டு விரல்களால் இறுகிப் போயிருந்த தேங்காய் எண்ணையை சிரமப்பட்டு விரல்கள் நொண்டியும் தோண்டியும் எடுத்தான்.உள்ளங்கை வெப்பத்தில் எண்ணை உருகி முழங்கை வரையில் வந்திருந்ததை அவன் கவனிக்கவே இல்லை.எண்ணை பரவி இருந்த வலது கையையோடு இடது கையையும் சேர்த்து முன்னும் பின்னும் மேலும் கீழுமாக தேய்க்கத் தொடங்கினான்.'அப்பா !இப்ப நா எண்ணை தேய்க்கப்போறேன்', என்று சொல்லி கண்களை மூடி இருந்த அப்பாவின் முகத்தருகே நெருங்கினான்.தந்தை பிள்ளையின் அன்பின் அதிர்வில் நெகிழத் தொடங்கினார்.



அப்பாவின் தலைக்கு மேல் கைகளை வைத்துக்கொண்டு தன் இஷ்டம் போல கதிர் தேக்க தொடங்க அவருக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்திருக்க கூடும் .இருந்த போதிலும் அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தவே இல்லை.மனது நோகாதபடி 'அருமையா இருக்கே, நல்லா எண்ணை தேய்க்கிறீங்களே !'என்று முதல் கட்டமாக பாராட்டவே கதிருக்கு குஷி தாங்கமுடியவில்லை.



'இப்ப கதிர் தம்பி பத்து விரலையும் விரிச்சி வச்சிட்டு அப்பாவோட தலைக்குள்ளே நுளைச்சி நுளைச்சி எடுப்பீங்களா அதுக்கப்புறம் சீப்பே வச்சி சீவிவிடு வீங்களா சரியா ', சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டார் அப்பா .கதிர் அப்படியே தொடங்கினான். அந்த தீண்டல் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக சொக்கவைத்திருக்கக் கூடும்..ஒரு அசைவில் லேசாக சொக்கித் தெளிந்த அப்பா ' கதிர் தம்பி அப்பாவுக்கு எப்படி எண்ணை தெயச்சீங்கன்னு பாக்கணும் கண்ணாடி கொண்டுவருவீங்களா 'என்றார்.குதித்தான் எடுத்தான் ஓடினான் மீண்டும் முன்புபோல அமர்ந்து கொண்டு கண்ணாடியை அப்பாவின் முகம் தெரியும் படியாக வைத்தான் .கதிரின் பிடித்தலுக்கு சரியாக தனது முகத்தையும் ஆடிக்குள் கொண்டு வந்து கதிரின் பணிக்கு பாராட்டு தெரிவிப்பதைப் போல பற்கள் தெரிய சிரித்தார். 'அப்பா !எப்படி இருக்கு... நல்லா இருக்கில்லே... இன்னு கொஞ்சம் எண்ணை போடட்டுமா? என்று கேட்டார்.



'எண்ணை போட்டது போதும் ,இதுக்கு மேலே எண்ணை போட்டா அம்மா திட்டும்' என்று மெல்லிய குரலில் ரகசியமாக சொல்லி மறைமுகமாக கதிரின் முதல் கட்ட பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.'இதோ இந்த செவப்பு கலர் சீப்புலே அப்பா தலையே கதிர் தம்பி சீவுவீங்களா..அப்பா ஆடாமே இருப்பேனா சரியா..?'என்றார். பதிலுக்கு தலையை ஆட்டிவிட்டு கதிர் சீப்பை எடுத்து சீவத் தொடங்கினான் .இப்போது சீப்பு முன்னந்தலையில் இருந்து தொடங்காமல் பாதி நெற்றியிலிருந்து தொடங்கியது.சுமார் எழுபது பற்கள் இருக்கும் அந்த சீப்பு அப்பாவின் கபாலத்தை கீறிவிட்டுக்கொண்டே இருந்தது.'அப்படி செய்யாதே' என்று சொல்லாமல் வலிகளை பொறுத்துக்கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.



அழுத்தி சீவும்போதெல்லாம் வலியை கண்களை சுருக்கி வெளிப்படுத்திய அப்பா இப்போது எந்த பாவத்தையும் காண்பிக்க முடியாதவாறு தூங்கிப் போய் இருந்தார் .அப்பா தன் தீண்டலில் சொகிப்போயிருந்ததை அறியாத கதிர் .வலது இடது புறத்து பக்கவாட்டுகளில் சீவ இறங்க காதுகளில் மேல் பகுதியை சீப்பின் கூர்முனைகளால் குதற இப்போது அப்பா விழித்துக்கொண்டார்.



'இதோ பாரு கதிர் லேசா சீவுவீங்களா...இங்கே பாரு அப்பா எப்படி சீவறேனு...இப்படீ... இப்படி ...'என்று செய்துகாண்பித்தார்.பின் சீப்பை கதிரின் உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு பழையபடி கண்களை மூடிகொண்டார்.அப்பாவின் குறிப்புக்களை உள்வாங்கிக்கொண்ட கைகள் அப்படியே இயங்கின.'கதிர் ...இப்ப அப்பாவோட தலையிலே இடதுபுறம் அழகா ஒரு வகிடு போடு ..சரியா?' அப்பா சொன்ன இடதுபுறத்தை தவறாக புரிந்துகொண்ட கதிர் வலது புறத்தில் வகிடேடுக்கத் தொடங்கினான்.வகிடு நேராக வரவில்லை.பலமுறை முயற்சித்தும் வகிடுக்கு வழிவிடாமல் அப்பாவின் தலைமுடி கதிரை வென்றுகொண்டே இருந்தது. அப்பா எப்போதுமே வகிதேடுக்காமல் மேல்புறமாக சீவுவதுதான் இந்த தோல்விக்கு காரணம் காரணம்.



வலதுபுறம் முடித்து இடதுபுறம் வந்த கதிரின் விரல்கள் இன்னும் பக்குவமாய் இயங்கின.அப்பா எதுவுமே சொல்லவில்லை என்ற விஷயம் கதிருக்கு சந்தோசத்தை அளித்தது.இப்படியாய் அப்பாவும் கதிரும் ஒருமணிநேரத்தை முடித்திருந்தார்கள். கைகள் வலியெடுக்க எல்லாம் முடிந்துவிட்டு மெளனமாக அப்பாவைப் பார்க்கிறான் கதிர்.அப்பாவின் தலை லேசாக கீழ்புறமாக விழுந்து விழுது நிமிர்ந்தது. அப்பா தூங்கி விட்டார் என்பதை உறுதிசெய்துகொண்ட கதிர் ஓடிப்போய் தெருவில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த அம்மாவை கையேடு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான்.இப்போது அம்மாவும் கதிரும் அப்பாவின் முகத்தருகே வந்து பார்த்தபடியே இருக்கிறார்கள். அம்மா புன்னகைக்க கதிர் சிரிக்கிறான்,இருவரும் சிரிக்கிறார்கள் சிரிப்பு பெரும் சத்தமாய் வெடிக்கிறது.ஏதோ சத்தம் கேட்ட பரப்பரப்பில் தூக்கம் கலைந்தவராய் லேசாக கண்களை திறக்கிறார் அப்பா. இப்போது மூவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.



தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கதிருக்கும் அப்பாவிற்கும் இப்படியான இனிய அனுபவங்களோடு கழித்தன.அப்பா ஒருநாள் உடல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடப்பதை பள்ளியிலிருந்து திரும்பிய கதிர் பார்த்து அதிர்ந்தான். இதுவரையில் அவன் அப்பாவை அப்படி பார்த்ததே இல்லை.வழக்கத்திற்கு மாறாக சோர்வாக படுத்திருந்த அப்பாவைப் பார்க்க கதிருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.'அப்பா ஏம்பா படுத்திருக்கீங்க ..என்னாச்சுப்பா...எந்திரிங்கப்பா...' என்று பாசம் பொழிய அழைத்தான்.'கதிர் கண்ணா பள்ளிக்கூடம் போயி வந்துட்டீங்களா? சமத்து. அப்பாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு. நீங்க போயி கைகால் கழுவிட்டு சட்டே துணி மாத்திட்டு இங்க வா நா உனக்கு ஒரு கதே சொல்றே' என்று மனநிலையை மாற்றி அவன் சங்கடப்படாதவாறு பதலளித்தார்.



அந்த மாலை பொழுது முடித்து இரவு படரத்தொடங்கிவிட்டிருந்தது . அம்மாவும் வேலைமுடித்து உறங்க வந்திருந்தாள்.அப்பாவின் தலையில் தலைலம் போட்டிருந்ததை நாசியில் நுகர்ந்து உணர்ந்துகொண்ட கதிர் அப்பாவையே பார்த்தான்.அப்பாவிற்கு அருகில் படுத்திருந்த கதிருக்கு தூக்கமே வரவில்லை. வெகுநேரம் கண்கள் கொட்ட கொட்ட தூங்காமல் யோசித்துக்கொண்டே இருந்தான். வழக்கத்திற்கு மாறாக அப்பா பலவீனப்பட்டிருந்தது அவனுக்கு என்னமோ மாதிரி இருந்தது. அப்பாவுடன் ஆறுதலாக ஏதாவது பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அம்மாவின் தூங்கி விட்டிருந்ததை உறுதிபடுத்துக்கொண்ட கதிர் அப்பா தூங்காமல் இருப்பதையும் அறிந்தவனாய், அப்பாவின் பக்கமாக நெருங்கி வந்தான்.



அப்பா லேசான அசதியிலும் லேசான காய்ச்சலிலும் உறங்கியும் உறங்காமலும் இருக்கிறார் என்பதை அவரின் நெஞ்சில் கைவைத்து எப்படியோ ஊகித்துக் கொண்ட கதிர் இப்போது தனது ஞாயிற்றுக்கிழமைகளை நினைத்துப்பார்த்தான்.சட்டென அவனுக்கு ஏதோ ஞாபகத்திற்கு வந்தது. இப்போது கதிர் தன் தந்தையின் தலைமுடியை தன் பிஞ்சு விரல்களால் கோதிவிட தொடங்கினான். மெதுவாக மெதுவாக.மிருதுவாக மிருதுவாக. அறிந்தும் அறியாத அரைத்தூக்கத்தில் இருந்த அந்த அப்பா முழுதுமாக தூங்கியே விட்டார் என்பதை அப்பாவின் குறட்டை சத்தத்தை வைத்து உருதிபடுத்திக்கொண்டான். இப்போதுதான் கதிருக்கு ஆறுதலாக இருந்தது. கோதி கோதி களைத்த அசதியில் கதிரின் குறட்டையும் தந்தையின் குறட்டை சத்தத்தோடு சிலவினாடிகளில் ஒத்திசைத்தது.

சனி, 14 மே, 2011

குளிர் - சிறுகதை

கரும்பலகையை வாத்தியார் அழித்துக் கொண்டிருந்தார். பள்ளி முடிவதற்கு இன்னும் சிலவினாடிகள் இருக்கக்கூடும் என்பதை யூகம் செய்தவர்களாய் சிறுவர்கள் தங்கள் புத்தகங்களை சரி செய்து துணிப்பைக்குள் அடுக்கடுக்காய் திணித்துக் கொண்டார்கள்.சிலர் கடன் கொடுக்கப்பட்ட வெள்ளைநிற சிலேட்டு குச்சிகளை திரும்பப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.சிலர் நிலாவிற்கு செல்வதற்கு சிலிண்டர் மாட்டுவதைப் போல தங்கள் பைகளுக்குள் இரண்டு கைகளை திணித்து முதுகில் தொங்கவிட்டிருந்தார்கள். வகுப்பு ஓய்ந்ததால் பள்ளிச்சிறார்களின் சின்ன சின்ன உரையாடல்கள் பேரிரைச்சலாக அந்த அமைதியான மலைகிராமத்து காற்றில்கலந்துகொண்டிருந்தது.



நான்காம் வகுப்பில் எழுந்த விடைபெறும் சத்தம் பக்கத்து வகுப்புகளுக்கும் பரவுகிறது ,இப்போது அந்த கிராமத்துப் பள்ளி முற்றிலுமாக தன் அமைதியை இழந்திருந்தது . நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் கடைசி வினாடிகளுக்காக விழிப்போடிருக்கும் வீரர்களைப் போல மாணவர்களும் காத்திருந்த வேலை 'டிங் டிங் டிங் டங் டங் டங்' என்று ஒலிக்கும் பள்ளியின் மணியோசை அந்த பள்ளியை சுற்றியுள்ள பத்து மலைகிராமங்களுக்கு கேட்கிறது .இந்த மணியோசைக்கேட்டு சில பெற்றோர்கள் அவரவர்களது வீட்டில் தயாராகி இருக்கக்கூடும்.சில மாணவர்கள் காத்திருப்பார்கள் பலரும் நடையைக் கட்டிவிடுவார்கள்.அந்த பள்ளியிலிருந்து ஒவ்வொரு ஊரும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன.



வெள்ளை சட்டை காக்கி கால்சட்டை அணிந்த சிறுவர்களும் வெள்ளை மேலாடை பச்சை பாவாடை அணிந்து சிறுமிகளும் கூட்டமாக பள்ளி வளாகத்திலிருந்து நழுவும் பாதரசத்தைப் போல மெல்லென வழிகிறார்கள் .பள்ளி வெறுமையாகிறது.ஒரு கிலோமீட்டர் தூரம் மலை சரிவிலும் ஒரு கிலோமீட்டர் தூரம் சமதளத்திலும் இவர்கள் நடந்தாகவேண்டிய தொலைவில் ஊர் இருக்கிறது.



நான்காம் வகுப்பு படிக்கும் மகேஷ் வெற்றி குமார் ஆகியோர் இணைபிரியாத தோழர்கள்.வெற்றி எப்போது ஒரு அவாய் அணிந்துவருவான், மகேசும் குமாரும் வெறும் காலுடன்தான் வருவது வழக்கம்.அது அவர்களுக்கு பழகிப் போய் இருந்தது.வெயில் காலம் ஆனாலும் பனிக்காலம் ஆனாலும்.



டிசம்பர் மாதம் பனி என்றால் அந்த பனிக்கே குளிரெடுக்கும். காலை நேரத்து விடியலில் பனிக்கட்டிகளை பொடித்து வைத்ததைப் போல புல்லெங்கும் பனித் துளிகள் உறங்கிக்கொண்டிருக்கும்.மதிய வேளைகளில் அடிக்கும் பனி வெயில் சருமத்தை குதறிவிட்டுப் போகும்.சிலரின் உதடுகளுக்கு வெடிவைத்து ரத்தக் கசிவை ஏற்ப்படுத்தி இருக்கும்.இந்த பூமியில் அந்த மாதத்தில் பெரிய பயங்கரவாதி பனிதான்.



வெற்றி எப்போதும் இளவரசனைப் போல இந்த பனிக்காலத்தில் தன் தலைமீது பஞ்சு கிரீடம் வைத்துவருவான்.மகேஷிடம் எப்போது ஒரு பருத்தி பனியன் இருக்கும். குமார் ஒற்றை சட்டையும் வெறும் காலுமாக வருவதுதான் வழக்கம்.



ஈரப் பனிக்காற்று பட்டு இவர்களின் கைகளின் ரோமங்கள் எழுந்துநின்று கொண்டன.குமாரின் மேற்பல்லும் கீழ்ப் பல்லும் .குளிர்தாக்குப் பிடிக்கமுடியாமல் 'கட் கட் கட கட ' என்று இடைவிடாமல் அடிக்க தொடங்கி விட்டன. நிலநடுக்கம் பூமிக்கு வந்ததைப் போல குமாருக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்க , உள்ளங்கை இரண்டையும் அழுத்தி தேய்த்து உஷ்ணத்தை லேசாக பற்ற வைக்க முயற்சி செய்கிறான். .அப்போதைக்கு வெப்பம் எரிகிறது உடனே அணைந்துபோகிறது . சில்லிட்ட தனது உடலை இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்றாக வேண்டுமே என்ற சவால் இப்போது மூவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.



ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட சரிவு, இவர்கள் நடக்க முயற்சி செய்தும் அது உந்தி ஓடவைத்திருக்கிறது.சரிவின் கீழிலிருந்து சமவெளி தொடங்கும் பாதையெங்கும் அடர்ந்த மரங்கள் சாலைகளை வணங்குவதைப் போல அடர்ந்து படர்ந்து நிழலை இருட்டாகவே அப்பச் செய்திருக்கிறது.மலைகிராமங்களில் மாலை ஐந்துமணி ஆனாலே அமைதியும் வெளிச்சமும் ஓய்வெடுத்துக்கொள்ள தொடங்கிவிடுகிறது.அதிலும் பனிக்காலம் என்றால் கேட்கவா வேண்டும்.அந்த மூவரில் குமாருக்கு சவாலான நேரம்தான்.இரண்டு புறமும் நண்பர்கள் வர நடுவில் குளிரிலிருந்து தன்னை ஒளித்துக்கொண்டே நடந்தான்.ஒரு கட்டத்தில் மூமரும் கைகளை ஒன்றாக பிடித்துக்கொண்டு ஒருவரது வெப்பத்தை அடுத்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டார்கள்.



நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடையை கடந்து போவதற்குள் ஐந்துநிமிடம் ஆகும்.இப்போது அந்த சூழ்நிலை மூவருக்கும் சவாலாகிவிட்டிருந்தது.வேறு வழியின்றி மூவரும் முழங்காலளவு வரும் அந்த ஓடைக்குள் லேசாக கால் நனைத்தார்கள்.ரத்தம் உறையும் அளவிற்கு பனியை உணர்ந்து பின்வாங்கினார்கள்.வெற்றி அணிந்திருந்த செருப்பும் இப்போது பயன்படவில்லை என்ற ஏக்கம் அவனையும் தொற்றிக்கொண்டது.எப்படியோ கண்களை மூடிஉடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.அதுவரையில் ஏற்படாத பனியில் வலியை அப்போது உணரத்தொடங்கினார்கள். முழங்காலுக்கு கீழே உணர்வை இழந்து நின்றார்கள்.அந்த பனியின் வலி அவர்களை இன்னும் படுத்ததொடங்குகிறது.



நீரில் நனைத்ததன் எதிர்வினையாய் வெற்றி பாதையின் ஓரத்தில் ஒதுங்கினான்.'டே வெற்றி ' 'இருடா உச்சா வருது' 'எனக்கு தண்டா' 'ஆமாட எனக்கு வருது' வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் சிருநீர்க்கழிக்க எத்தனித்த நேரத்தில். பனியில் விரித்துப் போயிருந்த மரத்த அந்த குமாரின் காலில் கழித்த சிறுநீர் தெறித்தது . மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை தந்திருக்கக் கூடும்.



'டே உச்சாவே காலிலே விடுடா,,,எப்படி சூடா இருக்கு தெரியுமா' குமார் தொடங்கி வைத்தான், மற்றவர்களும் பரிசோதனைக்கு இறங்கிவிட்டார்கள்.ஆவி பறக்க ஊற்றெடுத்த அந்த சிறுநீரின் வெப்பம் குமாரை மட்டுமல்ல அனைவருக்கும் புதிய ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.இப்போது எல்லோரும் கீழி சிறுநீர்க்கழிப்பதை நிறுத்தி விட்டு மூவரும் அவரவர்களின் கால்களில் பீச்சினார்கள்.



அந்த பிஞ்சுக்கால்களில் ஊறிப்போயிருந்த குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருப்பதை அவர்கள் உணரத்தலைப்பட்டார்கள்.வியர்க்காத பொழுதானதால் சிலநிமிடங்கள் தொடர்ந்து பாய்ந்த சிறுநீரில் வெப்ப ஒத்தடத்தை வாங்கிக்கொண்டார்கள் . சிறுநீரின் ஆவி வெள்ளை வெள்ளையாய் மேலேழுந்துகொண்டிருந்தது. நன்கு குளிர்ந்துபோய் இருந்த குமார் கால் விரலில் தொடங்கி அரைக்கால் சட்டை படும் அளவிற்கு முழங்கால் வரையில் நனைத்தான்.மற்றவர்களும் வேப்பநீரில் நனைகிறார்கள்.இதமாகவும் சுகமாகவும் இருக்க இப்படியாக அந்த பனிக்காலம் முடிய .அடுத்த பனிக்காலங்கள் தொடர்ந்தன .



பிறகெல்லாம் இவர்கள் பள்ளிநேரங்களில் ரீசஸ் பீரியடில் இவர்கள் ரீசஸ் போவதே இல்லை. மாலைப் பனிக்கு சேமித்துக் கொள்கிறார்கள் .

பூவலூராரும் இசை ஆவர்த்தனமும்- இறுதிப்பகுதி

சில்லிட்ட அறையில் நிகழும் இந்த இனிய சந்திப்பில் என் கடைசி ஆசை அதுவாகத்தான் இருக்கமுடியும் என்று என் மனம் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது,ஸ்ரீஜியை இப்போது மிருதங்கம் வாசிக்க சொல்லுவோம் என்று வாயெடுத்தபோது உள்ளே ஒரு இருபத்தைந்து வயது அழகான இளைஞன் உள்ளே நுழைகிறார்,விநாடிப்பொழுதில் அறிமுகத்தை முடித்துவிட்டு ஸ்ரீஜியின் புறப்பாட்டுக்கான அனைத்து பொருட்களையும் மும்முரமாக எடுத்துவைக்கிறார்.



நவயுக இளைஞனுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் ஒருங்கே பெற்றிருந்த அந்த இளைஞனை ஸ்ரீஜியின் சகோதரிமகன் என்பதை அறிந்து வாழ்த்தினோம் இன்னொருமுறை.



நான்குவயதுமுதலாக வாய்ப்பாட்டும் மிருதங்கமும் கற்று மேடைப் பங்களிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் அந்த இளைஞன் என்பதை அறிந்து அனைவரும் புருவத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம்.ஸ்ரீஜிக்கு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எந்த பாவங்களில் மூலமும் இதுவரையிலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததை எண்ணி அவரின் பண்பிற்கும் அன்பிற்கும் மனதிற்குள் வணக்கம் சொல்கிறேன்.



அந்த அறைமுழுவதும் இருந்த பொருட்கள் இப்போது பயண பெட்டிக்குள்ளாக பத்திரமாகும் அந்த நேரத்தில் என் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவனாய் இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று முடிவேடுத்தபடியே.'ஸ்ரீஜி நீங்க எங்களுக்காக கொஞ்சம் மிருதங்கம் வாசிக்க முடியுமா' கேள்வியின் ஆர்வத்தை அவர் உணர்ந்திருக்க கூடும்.



பாலாடையைப் போல வெள்ளையை பூசியிருக்கும் கட்டிலின் மேற்பரப்பில். பழுப்பு நிறத்தில் பைஜாமாவும் வெள்ளை வேட்டியுமாக சமமான காலிட்டு அமர்கிறார்.'கொஞ்சம் அதை என்னன்னு பாரு' என்று தன் சகோதரி மகனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.முதன்மை அறையை ஒட்டி இருந்த ஒரு குட்டி அறையில் முருதங்கம் முறையாக வாசிக்க தயாராகிறது என்பதை சில ஒலிக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.



சில வினாடிகளில் தயாராய் ஸ்ரீஜியின் விரல்களால் ஆராதனை செய்யப்பட்ட அந்த மிருதங்கம் அரியணை ஏறுகிறது.எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் மிருதங்கத்தின் இடதுபுற மேல்பகுதியில் தன் இடது காலை எடுத்து அணைக்கிறார்.விரல்கள் மிருதங்கத்தின் கன்னத்தில் லேசாய் தொட்டுத் தடவ மிருதங்கம் சிலிர்த்திருக்க கூடும்.இப்போது விரல்கள் இருபுறமும் தோலின் கன்னத்தை அழுத்தி இரண்டுமுறை அழுந்த சுற்று நிற்கின்றன.



ஒரு மிருதங்க சக்கரவர்த்தியில் கைகள் இசைக்கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டன.மெதுவாய் தொடங்கி மிருதங்கத்தில் இதுவரையிலும் கேட்டிராத புதிய புதிய இசை ஓசைகளை விதவிதமாய் எழுப்ப அறை இசையால் நிறைகிறது.காதுக்குள் நுழைந்து உடல் கோப்பையும் வழிகிறது.ஒத்திசை தேசைப்படவே தன் சகோதரை மகனை பார்த்து கண்ணசைக்கிறார்,இப்போது அந்த இசை இளவரசன் ஸ்ரீஜியின் வாசிப்பிற்கு சரியாக கைகளை தாளம் தப்பாமல் தட்டுகிறார்.நானும் சேர்ந்து கைகளைத் தட்டுகிறேன்.உடல் செல்கள் ஒவ்வொன்றும் சலவைசெயயப்படுவதைப் போன்ற உணர்வை பெறுகிறேன்.



எங்கள் ஆர்வத்திற்கு வஞ்சகம் செய்யாமல் நிறைவாக தொடர்ந்து வாசிக்கிறார்.இசைக்கலையை இத்தனை ஆண்டுகள் எத்தகைய விதத்தில் நேசித்தார் என்பதை வாசிப்பு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.



ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது ,சட்டென்று வாசிப்பை நிறுத்தி விட்டு பேசுவார் என்று நினைத்திருந்த அனைவரின் எண்ணத்தை தகர்த்தார்,தொலைப் பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை பெருட்படுத்தவில்லை என்று சொல்லிவிடமுடியாது, ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல இசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசிப்பை முடித்துவைத்தார்.



சிலிர்த்து போனோம்.கிட்டத்தட்ட ஒரு மிருதங்க சபாவில் கலந்துகொண்டைதை போல நிறைவில் எங்களை அறியாமலேயே கைகளைத் தட்டி ஆரவரிக்கிறோம்.அதற்கும் லேசான புன்னகையைத் தான் பதிலாகத்தருகிறார்.ஞானிகள் பேசுவதில்லைதானே .



மிருதங்கம் பயணத்திற்காய் பயணப் பைக்குள் அமர்ந்துகொள்கிறது.மிருதங்கம் செய்யும் மூலப்பொருள் பற்றிய விவாதத்தை நான் லேசாக பற்ற வைக்கிறேன். முன்பெல்லாம் நல்ல மரத்தில் கனமான மிருதன்கங்கள் செய்யப்பட்டன. இப்போதெல்லாம் பைபரில் கூட மிருதங்கம் செய்கிறார்கள்,காரணம் எடைக்குறைவான மிருதங்கத்தையே மேலைக் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.



புதிய இசைக்கலைஞர்களும் விரும்புகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து இந்த மிருதங்கங்கள் செய்யப்பட்டன.இலங்கையில் இத்தகைய மிருதங்கங்களுக்கான மரங்கள் மிகுதியாக இருந்தன.தமிழின படுகொலையில் நடந்த கோரத்தில் அக்குறிப்பிட்டவகை மரங்களை இழந்து நிற்கிறோம், என்ற அந்த தகவலோடு அதை மட்டுமா இழந்தோம் ...???'என்று இன்ன பிறவற்றையும் சொல்லி வருத்தம் கொள்கிறார்.இப்படியாய் சந்திப்புகம் நிறைய சிந்திப்புகளை என்னுள் விதித்துள்ளன.அந்த சந்திப்பிற்காய் பலமுறை நன்றிசொல்லி இருக்கிறேன்.



(ஸ்ரீஜியின் நண்பர் வாக்குமூலம்: சார், இந்தியன் கிளாசிகல் மியுசிக்கில் ஸ்ரீஜி ஒரு முக்கியஸ்தர்.இன்னிக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய இசைக்கலைஞர்களைக் காட்டிலும் இசை அனுபவத்திலே இவரு கொஞ்சம் ஒசத்தி.விமானத்துலே பறந்துகிட்டே இருப்பார்,உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துகிறார்,எவ்வளவோ ஸ்டூடெண்ட்ஸ்.வருஷம் முழுக்க நிகழ்சிகளில் கலக்குகிறார்.ஆனா ஒரு விஷயம் சார்.ஒரு டீ ஸ்பூன் அளவுகூட பந்தா பண்னத் தெரியாத மனுஷன் சார்.விளம்பரம் கொஞ்ச கூட புடிக்கவே புடிக்காது.கட் அவுட் ,பேனர், போஸ்டர்,மீடியா விளம்பரம் சொஞ்சிகறதே இல்லே,இவரே கூப்பிடுறவங்களுக்கு கண்டிசனே அதுதான்.நெறைய பணம் இருக்கு இவருகிட்டே ,எவ்ளோ சிம்பிள் பாத்தீங்களா.நம்மளாலே இருக்கமுடியாது.பொய் பேச தெரியாது எதார்த்தம். ஸ்ரீஜி ரொம்ப இட்டிலிஜென்ட் சார் அப்பா இருந்து இப்ப வரைக்கும் அப்படித்த அப்படியேதான்..பிரெண்ட் ன்னா அப்படி ஒரு பிரெண்ட்.)



இந்த கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? அந்த மனிதருக்கு இப்படி ஒரு நண்பரா?..ஆச்சர்யங்களோடு முடிக்கிறேன்.

பூவலூராருடன் ஒருநாள் -பகுதி 4

சேப்பாக்கத்தில் கடந்த ஒருவாரகாலம் வாங்கிய உப்புக்காற்றின் எதிரொலி என் நுரையீரலுக்குள் இருமல் எதிரொலியாக இடைவிடாமல் கேட்கிறது.எரியும் வெயிலுக்கு ஆறுதல் சொல்ல குடித்து தீர்த்த பலநூறு லிட்டர் தண்ணீர் மேனியெங்கும் வியர்வையாய் வழிகிறது.கனவுகளைக் காயப்படுத்தி தவணை முறையில் தூக்கம் வந்துவந்து போகிறது. மின்விசிறி என்னை ஆசுவாசப்படுத்த இரவெல்லாம் முயற்சித்து தோற்று களைத்துப் போயிருக்கிறது.லேசாக விழிக்கிறேன்,மைக்ரோ ஓவனிலிருந்து எடுக்கப்பட்ட ரொட்டித் துண்டைப்போல நான் சூடாக இருப்பதை உணர்கிறேன்.



இன்று ஸ்ரீஜியுடன் சந்திப்பு இருக்கிறது என்று மூளை எனக்கு அறிவுறுத்தும் அந்த நொடியில் தான் செல்வாவின் அலைபேசி அழைக்கிறது.'வணக்கம் மணி,நாங்க வந்தாச்சு' ,இதோ கிளம்புகிறேன்'என்று பதில்சொல்லிவிட்டு ஆயத்தமாகிறேன். இப்போது நான் பயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோ மைலாபூரை நோக்கி பறக்கிறது.என்னை வெளியூர்க்காரன் என்று தெரிந்திருந்த ஒரு டிரைவர் பேசிய கட்டணத்தை பேரம் பேசாமல் நான் குறிப்பிட்ட ஸ்ரீஜி தங்கி இருக்கும் கட்டிடத்தின் வாசலில் வந்து நிறுத்தி இருக்கிறார்.தூக்கம் தெளிந்து பெயரை உறுதிப்படுத்திக்கொண்டு இறங்குகிறேன் அவருக்கும் மனத்தால் நன்றி சொல்லிக்கொண்டே.



நிமிர்ந்து பார்க்கச் செய்கிற கம்பீரமான கட்டடம்.வெளியில் பகட்டும் ஆரவாரமும் இல்லாத சாந்தம்.முகம்மட்டும் தெரியும் அளவிற்கு ஆடைகளால் தன்னை மூடியிருந்த வாயில் காப்போன் என்னை வரவேற்கும் விதமாக மூன்று அங்குலம் கனமுள்ள கண்ணாடி கதவை இதமாய் திறந்துவிடுகிறார். ஒரு பனி பிரதேசத்திற்குள் திடீரென நுழைவதைப் போன்ற உணர்வை பெற்றவனாய் வரவேற்பினரிடம் நெருங்குகிறேன் .



ஸ்ரீஜி எந்த அறையில் தங்கி இருக்கிறார் என்று கேட்கிறேன்.சற்று யோசித்துவிட்டு 'பூவலூரார்' என்று திரும்பவும் என்னை கேட்டு நான் தேடிவந்த நபர் அவர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்.ஆம் என்பது போல தலை அசைக்கிறேன்.அவர் நினைவில் வைத்து கூறிய அந்த அறையைநோக்கி செல்வதற்கு லிப்டை தேடுகிறேன்.ஒரு சமயத்தில் நான்குபேர் ஏறிக்கொள்ளும் அளவிற்கு சின்னதான அந்த நகரும் அறைக்குள் நான் நுழைகிறேன் ,எல்லா தளங்களிலும் நின்று நின்று ஏறும் லிப்ட் என்னையும் மூன்றாவது தளத்தில் வந்து விட்டுவிட்டு போகிறது.



அழைப்பு மணிக்கான எந்த கருவிகளும் அந்த அறைக்கதவருகில் தென்படவில்லை.சில வினாடிகள் யோசித்த படி முழிக்கிறேன்.இறுதியாய் வலிக்காமல் என் வலதுகை நடுவிரலின் கணுக்களால் லேசாக சிலமுறை தட்டுகிறேன்.தட்டிமுடிப்பதர்க்கும் கதவு திறக்கிறது.உள்ளே ஸ்ரீஜியை சுற்றி வட்டமாய் நமது முகநூல் தோழமைகள்.



இள நிறத்தில் முழுக்கை சட்டையும் கருநீல நிறத்தில் பேண்டும் அணிந்து ஒரு தேர்ந்த அதிகாரியின் தோற்றத்தின் கிளீன் சேவுடன் ஒருவர் மெல்லிய குரலில் இனிதாய் வரவேற்று ஸ்ரீஜியில் அருகிலேயே அமர்ந்திருந்தார்.என் யூகம் சரியாக இருந்திருக்கிறது என்பதை அவரை எனக்கு ஸ்ரீஜி அறிமுகம் செய்துவைக்கும் போது அறியமுடிந்தது. செல்வா,ஜெயராஜ்,அன்பு, கயல், என்று நால்வரும் சுற்றிலும் அமர்ந்திருந்து கலகலத்தார்கள்.



அவரோடு உரையாடவேண்டும் என்ற ஆசையால் ஸ்ரீஜியிடம் நான் சின்ன சின்ன விதைகளை வீசுகிறேன்.அவர் அந்த விதைகளை மனதில் போட்டுக்கொண்டு மலரும் நினைவுகளை ஆலமரம் அளவிற்கும் அழகழகாய் மலர்த்துகிறார்.



கல்லூரி படிக்கும் காலத்தில் அருகிலிருந்த குப்பத்திற்குள் சென்று இரவு வெகுநேரம் வரை நாடகம் கூத்து பார்த்த ஞாபகங்களை கிளறுகிறார்.நான்கைந்து நண்பர்கள் கைலி கட்டிக்கொண்டு சுவாச மண்டலங்களில் புகை மண்டலங்களை விட்டுக்கொண்டும் வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் களைகட்டி இருக்கும் குப்பத்திற்க்குள் சென்று நிகழ்த்துக்கலைகள் பார்ப்பது ஒரு வேலையாக கொண்டிருந்திருன்தார்களாம் .அதை சொல்லிவிட்டு இப்போது தெருக்கூத்து என்ற தமிழர்களின் நாடக பிரச்சார வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோயவிட்டதை சொல்லி வருத்தப்படுகிறார்.தெருக்கூத்து என்ற ஆதி கலையை எந்த அளவிற்கு ஸ்ரீஜி நேசிக்கிறார் என்பதை அந்த நினைவுகூறலில் முலமாக தெரிந்துகொண்டேன்.அந்த நாடகக் கலையின் நவீன வடிவமாக இருக்கும் திரைக்கலையில் இருக்கும் எதார்த்தமற்ற போக்குகள் குறித்தும் வருத்தமும் தெரிவித்தார்.



மேலைநாடுகளில் இருக்கும் ஒவொருவரும் தங்கள் நாட்டு நடனம் இசை வாத்தியம் வாய்பாட்டு ஏதாவது ஒரு கலையையை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதும்,அதற்காக அதிகப்படியான தொகையையும் நேரத்தையும் செலவிடுவதையை சுட்டிக்காட்டிய ஸ்ரீஜி ,தமிழகத்தில் அந்த அடையாளம் தகர்ந்துவருவதை வருத்தம் தொனிக்க வாதமாக முன்வைக்கிறார்.ஊடகங்களின் பாதிப்புகளால் பழைய கலை அடையாளங்களை பாதுகாக்க முடியாதவர்களாகவும் அவைகளை தொடரும் திராணி அற்றவர்களாகவும் மாறிப்போயிருக்கும் அபத்தத்தை தனக்கே உரிய பாணியில் ஜில்லென விவாதப் பொருளாக்குகிறார்.



மைலாப்பூரில் ஒரு உணவகம் இருக்கிறதாம் ,இளம் வயதில் அங்கு சென்றுதான் ஸ்ரீஜி உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.சின்ன சிம்மினி விளக்கில் காய்கறிகளை நறுக்குவார்கலாம் தூக்ககலக்கத்தில் அந்த உணவகத்தின் பணியாளர்கள்.அவர்களின் விடியற்காலையில் பணிகள் முடியும்போதுதான் முற்றிலுமாக அவர்கள் தூக்கத்திலிருந்து விடுபட்டிருப்பார்கலாம். நண்பர் ஒருவர் ஒரு நாள் ஸ்ரீஜியைப் பார்த்து கேட்டிருக்கிறார்.ஸ்ரீஜி நீ சைவமா இல்லை அசைவமா? அதற்க்கு சைவம்தான் பதிலளித்திருக்கிறார்.அப்படிஎன்றால் இத்தனை நாட்கள் ஏன் அசைவம் சாப்பிட்டு வந்திருக்கிறார் என்று அதிரவைத்திருக்கிறார். ஸ்ரீஜிக்கு ஒன்றுமே புரியவில்லை.'பின்னே என்ன காய் கறியிலே இருக்கிற பூச்சி எல்லாத்தையும் வெட்டி வேட்டிதான் போடுறாங்களே ஒழிய வெட்டி எங்கே வெளியிலே போட்டாங்க.அந்த தூங்கு மூஞ்சி பசங்க'என்று சொன்னபிறகுதான் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.அன்றிலிருந்து அந்த உணவகத்திற்கு ஸ்ரீஜி சென்றதே இல்லையாம்



இன்னொரு உணவகம் 1980௦-களிலிருந்து இன்று வரையில் ஒரே எண்ணையில்தான் பலகாரங்களை சுடுவார்களாம்.அப்படியான ஒரு ஏற்பாட்டை ஒரு உணவகம் கொண்டிருக்கிறதாம். அவர்கள் பழயதை மறக்கும் கெட்டகுணம் இல்லாதவர்கள் என்று நகைக்கவைக்கிறார்.அதில் பலகாரங்கள் சுவையாக இருப்பதாகவும் தன சம்மதத்தையும் சொல்கிறார்.சுட்ட என்னையையே சுடும் கலையை அவர்கள் மட்டுமே தெரிந்திருந்தார்கள்.



இப்படியாக பலவற்றைப்பற்றியும் விவாதிக்கிறோம் ...பலமணி நேரங்கள் அவரது பசுமையான அனுபவங்களால் களவு போயிருந்ததை கடிகாரத்தைப் பார்த்த பிறகே தெரிந்துகொண்டோம்.என் இறுதி கேள்வி மனதில் தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது ...சின்ன இடைவெளி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.சமயமும் அமைகிறது...



ஸ்ரீஜி எங்களுக்காக நீங்கள் உங்கள் மிருதங்கத்தை வாசித்து காட்ட வேண்டும் என்கிறேன்.சம்மதத்தை புன்னகையோடு சொல்கிறார்.

பூவலூராருடன் ஒரு நாள் - பகுதி 3

சின்னச் சின்ன உரையாடல்களால் கோடி தீக்குச்சிகள் கிழித்த மருந்துகிடங்கைப் போல குளிரூட்டப்பட்ட அந்த உணவு அறை சூடாகிக்கொண்டிருந்தது. இரைப்பை நிரப்புவதும் இதயம் நிரப்புவதும் ஒரு சேர நிகழ்ந்துகொண்டிருந்த அந்த விருந்தில் முதன்மை உணவை ஆர்டர் செய்யும் தருணத்தில் வெள்ளைச் சிரிப்போடும் குழிவுழுந்த கன்னத்தொடும் கனத்த கண்ணாடியின் வழியாக எங்களை உன்னிப்பாய் ஊடுருவி பார்த்தபடி உள்ளே நுழைகிறார் செல்வா.



நான் அங்கு இருப்பதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அவரின் விழியுயர்த்திய விசாரிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.உடன் அன்பும் கயலும் இணைகிறார்கள்.இப்போது எங்கள் அனைவரது மொய்த்தலும் ஸ்ரீஜியை மையமிட்டே இருந்தது.



சைவக்காரர்களும் அசைவக்காரர்களும் உணவுக்கலவரங்கள் நேராமல் விருப்பம்போல ஆர்டர் செய்கிறார்கள்.பசியோடும் விவாத ருசியோடும் நேரம் வழிந்துகொண்டே இருந்தது. வெளிச்ச உலகத்தில் இருப்பதால் கருத்த இரவை மறந்து போயிருந்தார்கள் ஒவ்வொருவரும் .பிரியமான நண்பர்களோடு இணைந்திருக்கும் பொழுதுகள் ஒரு இனிய தியானவகுப்புகள் தான்.அந்த விருந்து உணவை எடுத்து சுவைக்க ஐந்துவிரல்களும் உள்ளங்கையும் யாருக்கும் பயன்படவில்லையே என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.



மனித விரல்களோடு உலோக விரல்களை இணைத்துக்கொண்டு கலியுக ரோபோக்களாக நாங்கள் கருவிகளின் துணையோடு அசைபோட்டோம். உணவின் சுற்று முடிந்தும் முடியாமல் மேசையை நோக்கி வண்ணவண்ண ஆடையணிந்து அலங்காரங்கள் ஆயிரம் செய்து ஐஸ்கிரீம் தேவதைகள் படையெடுக்கிறார்கள்.அதில் ஒரு கோப்பையில் வானத்து 'வெண்ணிலாவும்' வழுக்கி விழுந்திருந்தது.



இந்த எல்லா நிகழ்வுகளையும் கோணங்களுக்கு தகுந்தாற்போல இடம்மாறிக்கொண்டு கேமராவின் ஆடியை தன் இடது விழியோடு முத்தம் வைத்துக்கொண்டு .கேமராவின் உடல் பாகம் அவரது கன்னத்தில் மெல்ல பதிய அடிக்கடி ஜூம் லென்சை மாற்றி பிளாசில் வெளிச்சம் விதைத்து படங்களை அறுவடை செய்துகொள்கிறார் பதட்டமில்லாமல் ஒரு படக்கலைஞர்.அவர்தான் ஜெயராஜ் .



அந்த உணவகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சுவைமறந்து எங்களை நோக்கி விழி திருப்புகிறார்கள்.நிஜ நாயகன் ஸ்ரீஜி நடுவில் நிற்கிறார்.அனைவரும் இணைந்து இணைந்து சிரித்து பெருமிதம்கொண்டு நெகிழ்ந்து படங்களை பதிகிறார்கள்.எல்லோரையும் பதிந்த ஜெயராஜை இறுதியாய் நான் வாங்கி பதிந்தேன். அது சரியான பதிவுதான என்று டிஜிட்டல் தோற்றத்தை பார்த்து விட்டு தலையாட்டினார்.சரியாக எடுத்திருக்கிறேன் என்று நான் சந்தோசப்பட்டுக்கொண்டேன்.



இப்போது பில் கட்டும் ஓலை வருகிறது..அன்பு முந்துகிறார் ..நானும் என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்..பிறரும் முன்வருகிறார்கள்.இறுதியில் ஸ்ரீஜி மட்டுமே வள்ளலாகிறார்.பைஜாமாவின் இடது பைக்குள் தன் வலது கையைத் திணித்து கத்தியை மடித்துவைத்திருந்த பணத்தை சிதறாமல் அள்ளுகிறார். அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.அதில் பலவற்றை அந்த வசூல் குறிப்பேட்டுக்குள் திணித்து விருந்தை முடித்துவைக்கிறார்.

.

உணவு முடித்து பல்குத்தி தீர்த்திருந்த அந்த கிளைமாக்சில் ஸ்ரீஜியின் சந்திப்பிற்காக விரைந்து தன் குறும்படத்தை முடித்து அதை வெளி இடுவதற்காக டிவிடி யாக செல்வா கொண்டுவந்திருப்பதை அறிந்து அனைவரும் ஆனந்தப்பட்டோம்.அதை வெளி இடுவதற்கு அந்த இடம் பொருத்தமில்லை என்று சொல்ல அனைவரும் வரவேற்பு அறையை நோக்கி நகர்கிறோம்.



ஸ்ரீஜி வலதுபுற வண்ணச்சுவரின் நடுவில் நிற்கிறார் செல்வா தன் முத்திரைப் படைப்பான 'யாதுமானவள்' என்ற குறும்படத்தை நிறைவோடு வெளியிடுகிறார்.ஸ்ரீஜி புன்னகையோடு பெற்றுக்கொள்கிறார்.பிறகு அனைவரும் கேமராவின் செவ்வகத்திற்குள் வந்துவிடுகிறோம் ,இப்போது ஜெயராஜ் ஒரே தோட்டாவில் அனைவரையும் சுட்டுமுடிக்கிறார்.



முகநூல் தோழமைகளின் கூட்டம் கண்ணாடி வாசலைத் தாண்டி சப்த உலகத்திற்குள் சங்கமிக்க வெளியேறுவதற்கு முன்பாக அனல்காற்று அனைவரையும் இன்னொருமுறை வரவேற்க அனைவரும் முகம் சுளிக்கிறார்கள்.களிப்பும் கதகதப்பும் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தில் விடை பெறலுக்கான அனைத்து முகாந்தரங்களும் தொடங்குகின்றன.



மீண்டும் சிந்திப்போம் என்ற நம்பிக்கையோடு வேறுவேறு எல்லைகளை நோக்கி நகர்கிற ராணுவ வீரர்களைப் போல தோழமைகள் பிரிகிறார்கள்.கலகலத்த அந்த கடையில் வாசல் வெறுச்சிடுகிறது. எல்லோருக்கும் கையசைத்து அவர்கள் போகும்வரை காத்திருக்கிறார் ஸ்ரீஜி. இறுதியாய் அந்த முகப்பில் நானும் அவரும் மட்டுமே.



ஸ்ரீஜி என்னை அழைத்துக்கொண்டு அவருக்காக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்த ஆட்டோவை நோக்கி அழைத்துக்கொண்டு போகிறார்.'இவரை சேப்பாக்கத்தில் இறக்கிவிட்டுட்டு அப்படியே நாம் மைலாபூர் போயிறலாம்'என்று தனது ஆடோ ஓட்டுஞருக்கு கட்டளையைப் பாய்ச்சுகிறார்.டிரைவர் பாபு பதிலுக்கு தலையசைத்தபடி முறுக்குகிறார்.



இப்போது இருபுறத்து குளிர்காற்று அருகிலிருக்கும் சங்கீத சுரத்திற்கும் (ஸ்ரீஜி) அவரின் அருகிலிருக்கும் ஒரு தப்புத் தாளத்திற்கும் (நான்) பாரபட்சமிலாமல் வீசுகிறது. நன்றி அன்பு பாசம் பகிர்வு ....இவைகளோடு அந்த நீண்ட பயணம் விரைவாய் முடிந்தது ஏக்கத்தை மிச்சம் வைத்தது.இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

பூவலூராருடன் ஒருநாள் - பகுதி 2

சகாராவிலிருந்து காஸ்மீரம் வந்து சேர்ந்ததைப் போன்ற உணர்வை ஏசியின் குளிர் ஒத்தடம் ஏற்படுத்த தொடங்கி விட்ட அந்த நேரம்,தொண்டை கரகரத்து பேசமுடியாமல் போயிருந்ததை யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் என் சக்திக்கு ஏற்றார்போல இரண்டுமூன்று வார்த்தைகளில் அனைவரிடமும் அறிமுகத்தை மரியாதை நிமித்தமாய் முடித்துக்கொண்டு புதிதாக அன்று சந்திக்கும் தமிழிடம் சிறப்பு விசாரிப்புகளை வைத்துவிட்டு சிலபடங்களில் நடித்திருந்தாலும் கச்சிதமான கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரைப் பதித்த நிகோலஸ் அவர்களை நெஞ்சார வாழ்த்திவிட்டு முடிக்கிறேன்.பின் மனமும் கண்களும் ஸ்ரீஜி இருக்கும் திசையில் நிலை குத்துகிறது.



அவர் மொழிகளற்ற மேலான புன்னகையால் என்னை விசாரிப்பதை நான் கூர்ந்து கவனிக்கிறேன்.முகத்தின் இரண்டு புறமும் காதோரம் தொடங்கி கன்னத்தின் கீழ் தாடைப்பகுதிவரை நீண்டிருந்த கிர்தாவை வீச்சரிவாளாய் முருக்கிவிடப்பட்டிருந்த மீசையின் நுனிப்பகுதிகள் தொட்டுவிளையாடிக்கொண்டிருந்தன.அகலவிரித்து இந்த பூமி கிரகத்தை விழுகுவதைப் போல பார்க்கும் இருவிழிகளில் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது.அகன்று பரந்திருந்தது ஒளிவீசும் நெற்றி.இப்படியான தோற்றத்தில் கம்பீரமாக காட்சித்தரும் ஸ்ரீஜியில் முகத்தில் இடைவிடாமல் தவழும் புன்னகை அவரது மெல்லிதயத்தை பிரதிபளித்துக்கொண்டிருன்தது .மாலைநேரத்து மஞ்சள் நிலா நிறத்தில் ஒரு அழகான குர்தா முழங்காலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது ,உடன் நீலம் பாரித்த வெள்ளைநிறத்தில் வேட்டி.



ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இங்கு மொத்த அடையாளங்களோடு ஒரு முழுமையான தமிழனாய் ஸ்ரீஜி அமர்ந்திருந்தது, ஆச்சர்யத்தை அனைவரிடமும் பற்றவைக்கவே செய்திருந்தது.



மேலை மண்ணில் இசைத்தமிழனாக,எழுசுர பிரியர்களின் நாயகனாக நீண்ட வருடங்களாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் ஆடையிலும் மொழியிலும் பச்சைத் தமிழனின் பாசமுகவரி இருந்ததை பார்த்து பார்த்து பூரித்தேன். அவசரகதியில் ஜீன்ஸ் அணித்து சென்றிருந்த என்னை பார்த்து அவர் பேசும்போதெல்லாம் மனதிற்குள் சுருக்கென்று வலிகொண்டேன். ஆடை என்பதை வெறும் உடல் மறக்கும் நாகரீகத்தின் பொருளாக சமூக விஞ்ஞானிகள் கருதுவது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று உணரலானேன்.ஒரு இனத்தின் பண்பாட்டு ,கலாசாரம்,சுற்றுச்சூழல்,தொழில்முறை,உற்பத்தி போன்ற பலவற்றோடும் நாம் அணியும் ஆடை சம்மந்தப்பட்டிருக்கிறது என்கிற ஞானம் அன்று உதயமானது.



பேசும்போது இடையில் ஆங்கில வார்த்தைகளை குழைத்து ஒரு கலவைமொழியாக எப்படி பேசப்போகிறார் என்ற என் எதிர்ப்பார்ப்பிற்கு ஸ்ரீஜியில் எதார்த்த தமிழ் ஆப்பு வைத்தது. லேசான சென்னை செந்தமிழின் உச்சரிப்போடு இயல்பான தமிழ் விவாதத்தை இன்னும் இலகுவாக்கியது.கர்வம் தொலைத்த ஒரு கம்பீரமான மனிதரை அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.



முகநூலில் அறிவார்ந்த தகவல்களையும் பதிவதிலும் ,நடப்பு நிகழ்வுகளை சுடச்சுட முன்வைப்பதிலும்,இந்திய தேசத்தின் சமூக அரசியல் நிலைகளை அலசுவதிலும் ,நகைச்சுவை உணர்விலும் ,சமயோசிதத அறிவிலும் வல்லமையைக் காட்டிய அந்த பேராளுமையை நேரில் பார்க்கிற காட்சி இன்னும் எனக்குள் நம்பமறுக்கும் நினைவுச் சூறாவளியை ஏற்படுத்துகிறது.ஸ்ரீஜியைப் பார்த்து நானும் புன்னகைக்கிறேன்.



'இவர்த எனக்கு ,முகநூலில் நல்ல தமிழில் சிறப்பான பதிவுகளை பதிய தூண்டுதலாக இருந்தவர்' என்று அருகிலிருந்த தோழமைகளிடம் என்னை பற்றி பெருந்தகைமையோடு எடுத்துச் சொல்லி என்னை கெளரவித்தார்.ஏசியின் அளவு திடீரென அடர்த்தியானத்தை அந்த வினாடியில் உணரலானேன்.அந்த பாதிப்பிற்கு உங்கள் பதிவுகளே காரணம் என்று நான் அவரது பாராட்டை அவரிடமே திருப்பித்தர முயற்சிக்கிறேன்.மறுக்கிறார்.நெகிழ்கிறேன்..மற்றவர்களும்.



மிருதங்கத்தில் உலகறிந்த கலைஞராக உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்து ஆசிய நாட்டில் பெருமையை அகில உலகிற்கே உணர்த்திக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் கலைஞானமும், செழிப்பான செல்வமும், மெத்தப்படித்த மேதமையும் கொண்ட ஒரு பேராளுமை மிக சாதாரணமாக என் முன்னே அமர்ந்திருந்த காட்சி என்னை இன்னும் ஒருமுறை மெய்சிலிர்க்கவே செய்தது .ஒரு ஜென் துறவியைப் போல அமைதியாக காட்சியளித்துக்கொண்டே கடினமான ஞான பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார்.பார்க்கிறேன் படிக்கிறேன் கற்றுக்கொள்கிறேன் ...இப்படியாய் எல்லாம் நடக்கிறது.



வெளிச்சங்களால் நனைந்துகொண்டிருக்கும் அந்த ஆப்ப கடையின் எல்லா திசைகளிலும் சில மெளன இடைவெளிகளில் கண்களை வட்டமிடுகிறேன்.குடும்பத்துடன் கொத்துகொத்தாக வந்து அவரவர்களுக்கென மேசைகளை ஆக்கிரமித்துக்கொண்டு வகைவகையாய் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சிலர் ஆர்டர் செய்துவிட்டு வெகுநேரம் காத்திருப்பது விரக்தி வியாபித்த அவர்களின் முகத்தில் தெரிகிறது.



சிலர் அந்த காத்திருப்பில் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்து காலி இருக்கைகளில் கண்களை ஓடவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறுகிறார்கள்.பரிமாறுவதற்காகவும் ,ஆர்டர் எடுப்பதற்காகவும் வடக்கத்திய பெண்களும் ஆண்களும் எல்லா இருக்கைகளுக்கும் சென்று பணிவோடும் மரியாதையோடும் ஏதோ ரகசியம் பேசுவைதைப் போல பேசி நகர்கிறார்கள்.இறுதியாய் எங்கள் மேசை அவர்களால் உளவு பார்க்கப்படுகிறது.



இன்னும் வரவேண்டியவர்கள் வந்து இணைத்துகொள்ளட்டும் அதுவரையில் நாம் ஏதாவது ஆர்டர் செய்து தொடங்கலாமே என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்க ,ஸ்ரீஜியில் விருந்தோம்பல் தொடங்குகிறது.அவர் கேட்ட முதல் கேள்வி வெகுநேரம் அங்கு பட்டிமன்றத்தை ஏற்படுத்தவில்லை.சைவமா? அசைவமா?என்பதுதான் அது.ஸ்ரீஜியில் தீர்ப்பு வாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லப்பட்டதால் அந்த இரண்டும் கலந்த உணவுக்கலவைகள் மேசையை அலங்கரிக்கின்றன.டொமேடோ சூப்பில் தொடங்கி சில்லி கோபி பிஷ் பிரை மஸ்ரூம் பிரை வெஜிடபுள் கட்லெட் என்று முதல்கட்ட பதார்த்தங்கள் வந்து சேருகின்றன.இப்போது மேஜையில் கைவைப்பதற்கு இடமில்லை.



ஆனால் எனக்கு உணவைவிட உரையாடல் பிரதானமாக தெரிந்தது.பேசிக்கொண்டே அசைபோட்டோம் உணவையும் உணர்வையும்.ஒரு கேள்வியை ஸ்ரீஜியின் மீது வீசிவிட்டு அவரின் நூறு பதிலுக்காக எதிர்ப்பார்த்திருந்தேன். என் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செய்கிறார்.

சூடான சமையலையும் சுவையான விவாதத்தையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் எல்லோரும் கண்ணாடி சாளரத்தை திரும்பிப்பார்த்து விழியுயர்த்தி வரவேற்கிறார்கள்...

பூவலூராருடன் ஒருநாள் - பகுதி I

நெருப்பை கொளுத்திவிட்டு சன்னலுக்குள் கொலைவெறியோடு எட்டிப்பார்க்கும் சூரியனை அடிக்கடி முறைத்துக்கொண்டே , கூடவே சென்னையை செல்லமாக மனதிற்குள் சலித்துக்கொண்டு ஒரு கையில் கைக்குட்டையால் இடைவிடாது வழியும் வியர்வை நதிகளை ஒற்றி எடுத்துக்கொண்டும் மறுகையால் வகுப்பு முடிவதற்கு இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக அலைபேசியை ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் பார்க்காததைப் போல பார்த்தேன்.



சைலெண்டில் வைத்திருந்த அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராததை உறுதிபடுத்திக்கொண்டு,வழக்கம் போல வந்து குவியும் எஸ் எம் எஸ்-களை அசட்டை செய்யும் பரபரப்பில் ஒவ்வொன்றாக டெலீட் செய்வதற்காக எனது விரல்கள் விரையும் போது அன்பழகனிடமிருந்து வந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சந்தோசம் மேலிட எப்போது இந்த வகுப்பு முடியும் என்ற எரிச்சலும் தலைத்தூக்கியது.என் ஏக்கம் பயிற்சியாளரின் மனதிற்குள் உள்ளுணர்வை ஊடுருவி இருக்கக்கூடும்.வகுப்பு முடிந்தது.



எல்லோரும் வெளி ஏறுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.சூரிய நெருப்பு என் வருகைக்காக காத்திருந்து வார்ம் வெல்கம் கொடுத்தது.என்னை வரவேற்ற சூரியன் தன் அணைப்பை விளக்கி கொள்ளவே இல்லை.சூரியனின் இந்த அசௌகர்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வழியே குறுக்கிட்ட ஆட்டோவில் இடது கையை குறுக்கே நீட்ட நின்ற ஆட்டோவிற்குள் குனிந்து அமர்ந்து நிமிர்ந்ததும்தான் ஆசுவாசமாக இருந்தது. சூரியனிடமிருந்து தப்பித்தது போர்க்களத்திலிருந்து பகையாளியிடமிருந்து பிழைத்து வந்ததைப் போன்ற உணர்வை என்னுள் ஏற்படுத்த.ஆட்டோவின் இருவழி சாளரம் எனக்கு விசிறி வீசிக்கொண்டிருந்தது.நான் அந்த சில வினாடிகளில் அரசனாக சக்கர பல்லக்கில் பயணப்பட்டேன்.



அறைவந்து சேர,நான் மின்னல் வேகத்தில் தயாரானேன்.குளியல்,உடைமாற்றம்,புறப்பாடல் எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட காலத்திற்கும் சேப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆடோவா? பேருந்தா? என்ற மனசலனங்களுக்கு இடையே காத்திருந்த அந்த முன்னிரவுப் பொழுதில் குட்டி பேருந்தைப் போல ஒரு சேர் ஆட்டோ வந்து நின்றது.'வடபழனி போகுமா' கேள்விக்கு 'போகும் ,பாண்டி பஜாரிலிருந்து பக்கம்'பதில் திருப்தி அளிக்க சம்மதத்தோடு உள்ளே அமர்துகொண்டேன்.புது வாகனம் போலிருக்கக்கூடும் மெதுவாகவே நகர்கிறது.



குறிப்பிட்ட அந்த சந்திப்பிற்கு நாம் காலதாமதமாக போகிறோமே என்ற குற்ற உணர்வோடு விரைவாக ஓட்டுமாறு டிரைவருக்கு மனத்தால் இடைவிடாமல் எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.அவர் விரைய முடியாத அளவிற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் எங்கள் வாகனத்தை அணைத்துக்கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.



காற்றில்லாத உலகத்தில் வசிப்பவனைப் போல துடித்து வழியும் வியர்வைத் துளிகளை துடைக்கிறேன் .கைக்குட்டை மேலும் துடைக்க முடியாத அளவிற்கு முழுதுமாக நனைந்தே போனது.புதிய நகரத்தில் இரவு நேரத்தில் எப்படிப் போகப்போகிறோமோ என்று நினைத்திருந்த வேளையில்தான் வாகனம் நிற்கிறது.எல்லோரும் இறங்குகிறார்கள். 'வடபழனி வந்துருச்சா' என்று கேட்ட கேள்வி என்னை வெளியூர்க்காரன் என்பதை டிரைவருக்கு அறிவித்திருக்கக்கூடும்.'இங்கே எறங்கி பஸ் புடிச்சா ரெண்டாவது ஸ்டாப்'. பத்து ரூபாயை அவருடைய உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு ஒரு குறுக்கு சாலைக்குள் அடுத்த பேருந்திற்காக நகர்கிறேன்.அந்த நிறுத்தத்தில் காத்திருப்பில் சுமார் நாற்பது பேர் ,அந்த ஜன சங்கமத்தில் நான் கலந்துகொண்டேன்.



'வடபழனி போறதுக்கு பஸ் வருமா?' '12B என்ற பதில் மட்டும் தெறிக்கிறது .அதற்காய் காத்திருந்து அந்த வழியாக வரும் ஒவ்வொரு பேருந்தின் நெற்றிப் பொட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிறுத்தங்களை அந்த குறைந்த இருட்டில் விழிப்புணர்வோடு வாசிக்க தொடக்கி ஒரு பத்துநிமிடம் வழிந்தோட இறுதியாய் அந்த எண் குறிப்பிட்ட ஒரு நீளமான பேருந்து மனித தொங்கும் தோட்டத்தை சுமந்துகொண்டு திணறிக்கொண்டு நிற்கிறது.கூட்டத்தின் நெரிசலோடு நான் ஐக்கியமாகிறேன்.



சிலவினாடிகளுக்குள் முழுதுமாக நான் நனைந்துபோய் இருந்தேன்.பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது.வடபழனி எனது அடுத்த கண்டுபிடிப்பு உலகமாக என் எண்ணத்தில் விரிந்தது. பூசைப்பொருட்களோடு சில தாய்மார்கள் அமர்ந்திருந்ததை பார்த்த நான் அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கினால் வடபழனி கோயில் வரும் என்று நானே முடிவுசெய்துகொண்டேன். இறங்கிக்கொண்டேன் அப்படியே நடந்தது. ஆனால் எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் நடக்கவேண்டி இருக்கிறது என்பதை மீண்டும் கேட்டு முடிவு செய்துகொண்டவனாய் நடக்கலானேன்.



ஒரு அழகான திருப்பத்தில் விளக்குகளால் மின்னும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த கடை.முகப்புக் கண்ணாடியில் மேலிருந்து கீழாக தண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் போன்ற காட்சியை என் கண்ணின் நிறுத்தி நானும் மனத்தால் குளிர்ந்துகொண்டேன். ஆனால் உடல் கொதிப்பை நிறுத்திய பாடில்லை.வாசல் வரையில் வந்துநிற்கவும் கதவை ஒருவர் திறக்கிறார்,நிதானமாக நுழைகிறேன்.



மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் வலது மூலையில் திறந்திருந்த வாசல் வழி பார்ப்பதற்குள் என்னை குளிரூட்டப்பட்ட அந்த முதல் வரவேற்பறை எனக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க தொடங்கி விட்டது.எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கும் இந்த விடுதியில் எங்கே அமர்ந்திருப்பார்கள் என்று தேடலோடு நுழையும் போது எதிரில் தேனம்மை என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டவராய் புன்னகைத்து வரவேற்கிறார்.இருகரம் வணங்கிக்கொண்டே நெருங்குகிறேன் முதுகைக் காண்பித்தபடி அமர்ந்திருந்த நால்வரில் ஆல்மார்க் தங்க நிறத்தில் கருப்பு மல்லிகைகளை கணத்தில் தாடியை வளர்த்தி இருந்த அந்த விருந்தினர் திருப்பிப் பார்க்கிறார்.சந்தோசம் என் வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறது.அவரது ஆச்சர்யம் சிரிப்பின் வரவேற்பு என்னை இதயத்தை நிறைக்கிறது.அவர்தான் முகநூலில் எழுத்துக்களால் தோழமையான அறிவுஜீவி ஸ்ரீஜி.ஆச்சர்யம்,ஆனந்தம்,மனதிற்குள் ஆரவாரம்..இவற்றின் கலவையால் நிறைகிறேன்.



வரிசையாக தமிழ்ச்செல்வி, துணைவனார் நிக்கோலஸ்,தன் கேமரா குழந்தையோடு வருகைதந்திருந்த ஜெயராஜ் பாண்டியன்மற்றும் பலர் வட்டமேஜையில் இணைந்திருந்தனர்.அருகில் சில நண்பர்கள் எல்லோரையும் வணங்கி முடித்துவிட்டு அமரலானேன்.செய்தி அனுப்பிய அன்பையும் கயலையும் காணவில்லை.செல்வா வருவதாக தலைப்பு செய்தி சொன்னார்கள். சின்ன சின்ன விவாதங்கள் விசாரிப்புக்கள்...

திங்கள், 2 மே, 2011

துணிப்பந்து -சிறுகதை

புத்தகச் சிலுவைகளை வாரம்தோறும் தூக்கி தூக்கி ரணமாகிப்போன பள்ளி செல்லும் பிள்ளை ஏசுகள், ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் தங்கள் பாரங்களை எல்லாம் தற்காலிகமாய் இறக்கிவைத்துவிட்டு கல்வி கிரகத்திலிருந்து விளையாட்டு கிரகத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக கால்பதித்துக்கொண்டிருந்தனர். அந்த குழந்தைகளின் பாதம் பட்டதும் பூமாதேவி சந்தோசத்தில் சிலிர்த்துக்கொண்ட ஈரம் முற்றிலுமாக காயாமல் இருந்த அந்த ஒரு பொழுதில் விளையாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தேறிக்கொண்டிருந்தன.

திருநீரை முகப்பவுடராக பூசிக்கொண்டு ஒரு சிறுவன்; கால் சட்டையில் தபால் ஆபீஸ் வைத்துக்கொண்டு வந்த இன்னொருவன்; இளவரசன் மணிமுடி சூடியதைப் போல இலவம் பஞ்சு குல்லாய் அணிந்துகொண்டு வந்த மற்றொருவன்;சட்டையில் மேல் பொத்தானுக்கு பதிலாக குத்தப்பட்டிருந்த பின்னூசியை கைகளால் மறைத்தபடி ஒருவன்;இப்படியாய் ஒவ்வொருவரும் அந்த மலைகளின் தேசத்தில் வனங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அந்த சிற்றூரில் எல்லா வீடுகளுக்கும் ஒரே முற்றமாக இருந்த வீதியில் திரண்டிருந்தனர்.

மட்டைப்பந்து விளையாட்டுக்கு அந்த வீதி தயாராக இருந்தது. இவர்களும் விளையாட்டுக்கு தயாராய்.ஆனால் மட்டையும் பந்தும் இன்னும் தயாராகவில்லை.

நேற்றைய விளையாட்டில் மட்டை முறிந்து போனதற்கு மாற்றாக புதிய மட்டையை தேடிக்கொண்டிருந்தனர். 'எல்லா சரிடா, இப்ப பேட்டுக்கு என்ன பண்றது' என்று கேட்ட அந்த சிறுவனின் குரலில் விளையாடப்போகிறோம் என்ற குஷியும் மட்டை இல்லையே என்ற ஏக்கமும் நன்றாக தெரிந்தது.'டே எங்க வீட்டுலே ஒரு பேட்டு இருக்குதுடா ,நா எடுத்துட்டு வர்றே 'என்று அங்கிருந்து அகன்ற அந்த சிறுவன் அவர்கள் உள்ளத்திலும் உற்சாக நெருப்பை பற்றவைத்தான்.

பேட்டுடன் வரவிருக்கும் அவனது வருகையை ஆவலுடன் வீதியில் கடைசியில் உள்ள செமெண்டு திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். 'டே இவனே ,அவங்க வீட்லே பேட் உண்மையிலே இருக்கா' என்று ஒருவன் சந்தேகத்தை எழுப்பினான்.'இப்ப பாரு ,இத்தனே நாளா ஒளிச்சி வச்சிருந்த புது பேட்டிலே நம்ம விளையாடத்த போறோம்' 'ஹையா..ஜாலி..இன்னிக்கு கடலைமிட்டாய் பெட்டு கட்டி விளையாடுவோமா... ?என்கிட்டே இருபத்தஞ்சி பைசா இருக்கு' இப்படியாய் இவர்களின் கேள்விகளும் பதில்களும் எதிர்ப்பார்ப்புகளும் சந்தோஷ நெருப்பை கொழுந்துவிட்டு எரியவைத்த அந்த உற்சாக தருணத்தில் தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மட்டை கொண்டுவரச் சென்ற சிறுவனின் வீட்டு வாசலை இவர்கள் அனைவரின் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.முதுகிற்குப் பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டு ஏதோ கொண்டுவந்தான் அந்த சிறுவன் .'டே அவே வராண்டா' 'சட்டைக்குப் பின்னாலே ஒளிச்சிகொண்டுவரா பாத்தியா' மற்ற பலரும் ஆளுக்கொரு யூகங்களை அவரவர்கள் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் உரையாடல் முடிவதற்கு முன்பாகவே புன்னகையுடனும் பெருமிதத்துடனும் அவர்களின் முன்னே வந்து நின்றான் போர்முடித்து வென்ற மாவீரனாய்.

'டே காட்டுடா.' 'ஏண்டா ஒளிக்கிரே' 'வா உடனே விளையாடுவோம்' 'என்று பலரும் பலவாறு கேட்க அதிலொருவன் அவனது முதுகிற்குப் பின்னால் ரகசியமாய் சென்று அவனுக்கு அறியாமலேயே பார்த்துவிட்டு கிண்டலாய் கேலியாய் சிரிப்பிற்கு பதிலாக காற்றைமட்டுமே வெளியேற்றி 'கெக்கே கெக்கே உஷ் உஷஸ் புஷ் புஷ் ' என்று சிரித்தது அனைவருக்கும் புதிரை ஏற்படுத்தினான் .சிலிண்டர் வடிவிலான மரத்துண்டை கோடரியால் நான்காக பிளந்ததில் ஒரு பகுதியை பேட்டுக்கு பதிலாக அவன் கொண்டு வந்ததை அனைவரும் உறுதி செய்தார்கள்.கிண்டலில் அந்த இடம் அதிர்ந்தது.

'ஏண்டா கிண்டல் பண்றீங்க,இது எங்கம்மா சமைக்கறதுக்காக எடுத்து வச்ச காஞ்ச மரக்கட்டை ,விளையாடனும்னு உங்களுக்காகத்தான் தெரியாமே கொண்டு வந்தே' என்று அவன் நியாயப்படுத்தியதில் இருக்கும் அன்பையும் நட்பையும் புரிந்துகொண்ட ஒருவன் உடனே ஓடி ஒரு அரிவாளை கொண்டுவந்தான்' இதோ பாருங்கடா...இந்த மரக்கட்டையை அப்படியே புடிச்சு விளையாடுறதுக்கு கைப்பிடி இல்லே, இந்த கத்தியாலே முதல்லே கொஞ்சகொஞ்சமா சீவி கைப்பிடி செய்வோம்,பிறகு குத்தாத மாதிரி நைசா சீவி பேட் பண்ணிரலாம் ' என்று நம்பிக்கை தெரிவிக்க அதற்கான முயற்சியில் அனைவரும் இறங்கினார்கள்.

சில நிமிடங்களுக்குள் குத்திக் கிழிக்கும் மரச் செதில்கள் நிறைந்த அந்த மரக்கட்டை வழுவழுப்பாக மாறியிருந்தது,கூடவே கைப்பிடியும்.' விளையாடறதுக்கு பேட்டு ரெடியாயிடுச்சு பந்துக்கு எங்கடா போறது?' என்று மற்றொருவன் கேள்வி கேட்க ,துணிப்பந்து செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.அதற்க்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து சின்ன சின்ன துணிகளை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.



கேரட் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாத படி வேலியில் கட்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் பனியிலும் இற்றுப் போயிருந்த துணியும் , சூடான பாத்திரங்களை இறக்கிவைப்பதற்காக சமையல் கட்டில் பயன்படுத்தும் கரிபடிந்த துணியும்,சமைத்த சமையல் பாத்திரத்திற்கும் வடிக்கும் கஞ்சிப்பாத்திரத்திர்க்கும் இடையில் முட்டுக்கொடுக்கும் ஈரம் தோய்ந்த துணியும், தினைக்கொல்லை பொம்மையை நிர்வாணமாக்கி கிழித்து கொண்டுவந்த துணியும், கிழிந்த சில சீருடை கால்சட்டைத் துணிகளும்,...என்று இன்ன பிற துணிகளும் வகை வகையாய் விதவிதமாய் வண்ண வண்ணமாய் பந்திற்காக வரிசையாக சேர்ந்துகொண்டே இருந்தன.

சிறார்களில் அழகாக துணிப்பந்தை வழக்கமாக செய்யும் அந்த சிறுவன் தொடக்கமாக கோலிகுண்டு ஒன்றை இடதுகை பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் பிடித்திருந்தான். துணிகளில் பலவற்றை சிலர் பல்லைக் கடித்துக்கொண்டு பட்டை பட்டையாக கிழித்துக்கொண்டுத்துக்கொண்டிருன்தனர்.கெட்டியான துணிகளை சில குண்டு பையன்கள் நார் நாராக எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் எடுத்துக்கொடுக்க துணிப்பந்து வல்லுஞன் கோலி குண்டுக்கு மேல் சுருள்விழாதவாறு வட்டவட்டமாய் சுற்றிக்கொண்டே இருந்தான்.இப்போது பந்து எலுமிச்சை பழ வடிவிற்கு வந்திருந்தது.

'டே இன்னு சுத்தணும்,பந்து பொடிசா இருக்கு' என்று ஒருவன் தங்களின் தகுதியை தரம் உயர்த்தவே,மீண்டும் துணி அந்த சிறு பந்தை பருக்கவைத்துக்கொண்டே வந்தது. மெதுமெதுவென்று இருந்த அந்த துணிப்பந்து இப்போது கெட்டியான ஒரு கிரிக்கெட் பந்தைப் போல மாறியிருந்தது.துணி தைக்கும் ஊசிநூலுடன் வந்த ஒரு சிறுவன் அந்த பந்திற்கு காப்பீடு செய்வதைப் போல ஒரு நல்ல காரியத்தை இறுதியாய் செய்து முடித்தான்.இப்போது பந்து தயார்.

இரண்டுமணிநேர ஆயத்தத்திற்கு பின் ஆரவாரமாக தொடங்கிய அந்த விளையாட்டின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக விளையாட்டு முடிவிற்கு வந்ததுதான் சோகம்.அப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழும் என்று ஒருவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பந்து வீசுவதற்காக ஓடிவந்த அந்த வேளையில்தான் ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய அடைமழை இவர்களை விளையாட விடாமல் அவரவர்களது வீட்டில் அனைவரையும் சிறை வைத்தது. தங்களை விளையாட விடாமல் இடையூறு செய்த மழையை அவர்கள் நொந்துகொண்டிருக்கக்கூடும் .கதவு திறந்திருக்க வாசலில் நின்று அவரவார்களது வீட்டு வாசலில் நின்று மழையை வேறு வழியின்றி வெகுநேரமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் நனைந்தபடி.

மழை நின்றபின்னும் சேற்றை அள்ளிக்கொண்டு ஆறாக ஓடிக்கொண்டிருந்த அந்த வீதியில் கிரிக்கெட் விளையாடாமல் தவித்த அந்த சிறுவர்களின் நினைவில் அந்த இனிய மழை ஒரு விளையாட்டை ஞாபகப்படுத்தவே செய்தது.

சிறிது நேரம் கழித்து எல்லோரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் காதிதத்தில் கப்பல் செய்து.