செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பளார் பளார்

தண்ணீரை
கொஞ்சம் கொஞ்சமாய்
வீசம்வைத்து கொன்றதால்
எதிர்படுகிற
அனைவரின் கன்னங்களில்
ஓங்கி அறைந்தபடி
கொலை வெறிபிடித்து
ஓடிக்கொண்டே இருக்கிறது...

அதன் தோழனான
ஆடிக்காற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக