செவ்வாய், 19 ஏப்ரல், 2011


தென்றல்
ரகசியமாய் தேடுகிறது
திங்கள்
ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கிறது
பூக்கள்
இலைகளுக்கிடையே உளவுபார்க்கின்றன
பறவைகள்
கலந்து ஆலோசிக்கின்றன
மேகங்கள்
ஆகாயமார்க்கமாக ஆராய்கின்றன
புற்கள்
சிலிர்த்துக்கொள்கின்றன
வண்டுகள்
ரகசியம் பேசுகின்றன
இலைகள்
பன்னீர் தெளிக்கின்றன
இன்னும் பல மாற்றங்களோடு
தரையும்
வெட்கத்தில் சிவந்துபோனது

காற்றெல்லாம்
சுகந்தமாய் மணக்க
அன்பே நீ
நடந்து போயிருக்கக்கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக