ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
பூட்டப்பட்ட வீடு
தாளிக்கும் நறுமணத்தை
சுவாசித்திராத
நுரையீரல்
வெளிச்சம் பூசி
அலங்கரித்துக்கொல்லாத
மின்விளக்குகள்
சூடுதணிந்து
குளிர்ந்துபோயிருக்கும்
அடுப்படி
கைமாறாட்டத்தில்
வதைபடாத
ரிமோட்
நீர்த்தெளித்து
முகம் கழுவாத
முன்றில்
கோலப்புள்ளி இடாமல்
விதவையாக காட்சிதரும்
வாசல்
போர்நிறுத்தத்தை கைவிட்டு
படையெடுக்கும்
எறும்புகள்
வீட்டிற்குள் வீட்டை
நெய்துமுடித்த
சிலந்திகள்
இறக்கையை
அசைத்துப்பார்க்காத
மின்விசிறிகள்
கிழிபடாததால்
வருத்தம் தெரிவிக்கும்
நாள்காட்டிகள்
தங்களைத் தாங்களே
வாசித்துக்கொள்ளும்
புத்தகங்கள்
களைப்பு நீங்கி
இறைவன் ஓய்வெடுக்கும்
பூஜையறை
திறவுகோலின்
கலவிக்காக எங்கும்
கதவின் துவாரம்
கர்ப்பம் தரித்த
வீட்டின்
தபால்பெட்டி
தீவிர
மெளனவிரதம் இருக்கும்
இல்லம்
மலர்ந்திருந்தும்
கிள்ளப்படாமல் இருக்கும்
பூக்கள்
கலகலப்பாய்
பேசமறந்த பாத்திரங்கள்
இப்படியாய் பலவும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்களுக்கும் இந்த அனுபவங்கள் உண்டல்லவா?
பதிலளிநீக்குநீங்களும் உங்கள் அனுபவங்களை கவிதையாக எழுதுங்கள்
பதிலளிநீக்கு