செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழனின் தாய்நிலம் ஆப்பிரிக்கா

இந்த பிரபஞ்சத்தின் ஆதி மனிதன் கறுப்பனாக இருந்தான்.அந்த கறுப்பர்களின் தாய் நிலமாக இருந்தது ஆப்பிரிக்க கண்டமாகும். அந்த அப்பிரிக்கா கண்டத்தில் இருந்த கருப்பனே தமிழன்.ஆம் இந்த வையத்தின் ஆதி குடியாகவும் பூர்வ தோற்றமாகவும் இருந்தவன் தமிழனே.இக்குரிப்பிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் இருந்து உரேனியம் கதிவீச்சு பெரளவும் வெப்பத்தை கக்கியபடி வெளிப்பட்டபோது அந்த வெப்பத்தி தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கடற்கரை ஓரமாக வெளியேறினான்.அப்பிரிக்கா கண்டத்திலிருந்து வெளியேறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் நுழைந்த கண்டம் ஆசியா.இவர்களில் பலர் கடற்கரையை ஒட்டி நகர்ந்து வெளியேறினார்கள். சிலர் கிடைத்த மரக்கட்டைகளில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடல்வழியாக செய்வதறியாது சோதனை முயற்சியாக வெளியேறி இருக்கக்கூடும்.அப்படி வெளியேறிய தமிழர்கள் வாழ்ந்த கண்டம் லெமுரியா என்று சொல்லப்பட்டிருக்கவேண்டும். உரேனியம் வெப்பத்திற்கு மாற்றாக கடலில் குளிர்ச்சி அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்க கூடும்.கடற்கரையை ஒட்டி தரைவழியாக வந்தவர்கள் ஆசியாவிர்க்குள் நுழைந்து இந்தியாவிற்குள் புகுந்து கடல் இருக்கும் தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். தெற்கில் அவர்களுக்கு சில்லென்ற கடலும் ஒளிந்து கொள்வதற்கு மலைகளும் சாதகமாகவே இருந்தன.

மனித நாகரீகம் நதிக்கரைகளில் தோன்றியது என்று சொல்வதற்கு காரணம் உரேனியம் என்னும் வெப்பக்கதிர் வீச்சின் எதிர்வினைதான். உயரமான மலைகள் வெப்பக் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து அவர்களை பாதுகாத்தன. குகைக்குள் ஒளிந்துகொண்டு ஆதிமனிதன் தன்னை தற்காத்துக் கொண்டதற்கும் அதுவே காரணம்.இன்றைக்கும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களில் வாழ்வியலில் தொன்மக் கூறுகளை காண முடிகிறது.தங்கள் மொழிகளுக்கு வரிவடிவம் இல்லாதவர்களாகவும் இருப்பதும் அவர்கள் பூர்வ குடிகள் என்பதற்கு நல்ல ஆதாரமாகும்.மேலும் எல்லா மலைவாழ் மக்கள் வாழ்வியலில் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது.மலையிலிருந்து சமவெளிக்கு வந்த பிறகே தமிழினத்தில் கலப்பு நேர்ந்திருக்க கூடும். போர்கள்,வர்த்தகங்கள், போன்ற சமூகவியல் காரணங்களால் மொழியிலும் இனத்திலும் கலப்பு நிகழ்ந்துள்ளது. ஆதிமனிதனின் எச்சங்களாக ஒவ்வொருவரிடமும் மச்சங்கள் இருக்கின்றன. ஒரு கறுத்த மனிதனின் கறுமை நிறம் வெளுப்பதற்கு பத்து லட்சம் ஆண்டுகள் ஆகின்றனவாம்.அப்படியே கறுத்த தமிழனின் கறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து மச்ச்சமாகவும் மிச்சமாகவும் நின்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக