நேற்றைய மாநாட்டின் களைப்பும் களிப்பும் கலந்து எனது இன்றைய காலை விடிந்தது. மாநாட்டிற்கு செல்லவேண்டும் என்று அலைபேசி அலறி எச்சரித்தது. அதன் ஆணையை அசட்டை செய்தபடி அதன் வாயை என் சோம்பேறித் தனத்தால் மூடினேன்.மீண்டும் ஏகமாய் அலறி என் தூங்குமூஞ்சித் தனத்தை குத்திக்காட்டியது. ஒரு பெரு மூச்சு விட்டபடி எழுந்திருந்தேன்.இன்றைய ஆய்வரங்க ஒருங்கிணைப்பு குறித்த கவலைகள் என் மனதை ஆக்கரமித்துக் கொள்ள பரபரத்தபடி இயங்கி மின்னல் வேகத்தில் தயாரானேன்.இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து விடைபெறும்போது நேரம் காலை ஏழு மணி.சாலையில் யாரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டு சென்ற எனக்கு பெரிய ஏமாற்றம் காத்துக்கொண்டு இருந்தது.
புயல் புகுந்து வெளியேறிய பிரதேசமாய் சாலையின் இருபுறங்களிலும் நேற்றின் அடையாளங்கள் பல வடிவங்களில் இருக்கத்தான் செய்தன.நகரினுள் நுழைய நுழைய மக்கள் கூட்டம் பெருக்கெடுத்துக் கொண்டே ஒருந்ததை கண்கள் பார்த்து பரவசப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்து ஒன்றில் அழைத்து செல்லப்பட்ட சில நூறு ஆய்வறங்கப் பொறுப்பாளர்கள் நுழைவு வாயிலில் பரிசோதனைக்கு விரைவாய் உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப் பட்டார்கள். அலைபேசி, பணப்பை , கைக்குட்டை ஆகியவற்றை சுமந்துகொண்டு இரண்டு கைகளையும் தூக்கிப்பிடித்து பரிசோதனைக்கான எங்களின் ஒத்துழைப்பை வழங்கினோம் .
உள்ளே நுழைந்ததும் ஆய்வரங்க தொடக்கவிழாவில் எங்கை வருகையை வரவைத்துகொண்டோம். விழா மேடையின் எதிர் முனையின் இறுதியில் அமர்ந்திருந்த எனக்கு மேடையை அலங்கரித்த சான்றோர்கள் புள்ளி புள்ளியாய்த் தெரியவே ,
பிரத்யேக காட்சிப் பெட்டிகளில் அருகே அழகாய் காட்சியளித்தார்கள். விழிகளால் பார்த்து செவிகளால் ரசித்துக்கொண்டேன்.
போர்வைத் தேவைப்படும் அளவிற்கு பல்லாயிரம் பேர்கள் அமர்ந்திருந்த உள்ளரங்கள் குளிரால் சில்லிடச்செய்யத் தவறவில்லை. சுகமான சிம்மாசனமாய் இருக்கைகள் அருகில் பிளாஸ்டிக் குடுவையில் அடைக்கப்பட்ட குடிநீர்.இலவசம்தான் என்றாலும் தண்ணீர் தேவைப்படாததால் பலரும் அதன் மீது தீண்டாமையை மேற்கொண்டார்கள். வெளிநாட்டு விருந்தினர்கள் தமிழில் தமிழர்களை விட அழகாய் சிறப்பாய் பிழையின்றி பேசியது குறித்து பல உள்ளூர்த் தமிழர்கள் பெருமை பட்டு கொண்டனர்.
இரண்டாம் நாளில் ஆய்வரங்கள் தொடக்க விழாவைத் தொடர்ந்து ஆய்வரங்கங்கள் இருபத்திமூன்று அரங்கங்களில் பல்வேறு தலைப்புகளில் தொடங்கின. அரண்கள் என் நான்கு "கபிலர் அரங்கு"தான் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. சரியாக பண்ணிரண்டுமணிளவில் தொடங்க இருந்த அரங்கினுள் எல்லா ஏற்பாடுகளையும் முன்னதாகவே செய்து முடித்துவிட்டதால் குறித்த நேரத்தில் எவ்வித தடங்களும் இன்றி துல்லியமாய் தொடங்கியது.
முதல் இரண்டு அமர்வுகள் மொழியியல் சார்ந்தும் மூன்றாம் அமர்வு இலக்கணம் சார்ந்தும் இருந்தது.சதாசிவம்,வேல்முருகன்,சுப்பிரமணி,மனோகரன், நடனசபாபதி, வசந்த குமாரி,குமரேசன்,ஏகாம்பரம்,காசுமான்,ரோஸ் மேரி,இராஜேஸ்வரி, குமரன்,கிரிஜா,ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கோணங்களில் கட்டுரைகளை படைத்தளித்தனர்..
(தொடரும்...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக