ஒரு ஓடை
ஒத்தையடிப் பாதையில்
நனைந்தும் நனைத்தும்
நடந்து களைத்த
பயணத்தின் முடிவில்
எதிர்ப்பட்டது பெருவெள்ளம் .
இரண்டின் நகர்தலும்
அதனதன் போக்கில்
ஒருபுள்ளியின் சந்திப்பில்
ஓடை
தன் அடையாளத்தைத்
தொலைத்திருந்தது
ஆரவாரங்களோடு
ஓடிக்கொண்டிருந்த வெள்ளம்
ஓடைகளைப்பற்றி
சிலாகித்துக் கொண்டதேயில்லை
இருந்தபோதிலும்
ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன
ஒவ்வொரு பெருவெள்ளங்களுக்குள்ளும்
பலநூறு ஓடைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக