வியாழன், 13 ஜனவரி, 2011

ஒரு ஓடையின் கதை

ஒரு ஓடை

ஒத்தையடிப் பாதையில்

நனைந்தும் நனைத்தும்

நடந்து களைத்த

பயணத்தின் முடிவில்

எதிர்ப்பட்டது பெருவெள்ளம் .



இரண்டின் நகர்தலும்

அதனதன் போக்கில்



ஒருபுள்ளியின் சந்திப்பில்

ஓடை

தன் அடையாளத்தைத்

தொலைத்திருந்தது



ஆரவாரங்களோடு

ஓடிக்கொண்டிருந்த வெள்ளம்

ஓடைகளைப்பற்றி

சிலாகித்துக் கொண்டதேயில்லை



இருந்தபோதிலும்

ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன

ஒவ்வொரு பெருவெள்ளங்களுக்குள்ளும்

பலநூறு ஓடைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக